logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-marudha-tree

Om symbol

temple-trees-தலமர சிறப்புகள் மருத மரம்

Om symbol

தலமர சிறப்புகள்


மருதம் Terminalia arjuna, W & A.; Combretaceae.

மருதம் / marudham / Terminalia arjuna
மருதம்

மருந்தவன் வானவர் தானவர்க்கும் 
பெருந்தகை பிறவினொ டிறவுமானான் 
அருந்தவ முனிவரொ டால்நீழற்கீழ் 
இருந்தவன் வளநகர் இடைமருதே.

                                                                                    - திருஞானசம்பந்தர்.

திருவிடைமருதூர், திருஇடையாறு , திருஅம்பர் பெருந்திருக்கோயில்திருஅம்பர் மாகாளம் , திருப்பருப்பதம்  ஆகிய திருத்தலங்களில் மருதம் தலமரமாக விளங்குகின்றது. இது குறுகலான நீள்சதுர இலைகளையும் சாம்பல்நிற வழுவழுப்பான பட்டையையும் உடைய உயர்ந்து வளரும் பெரிய இலையுதிர் மரமாகும். பட்டை சதைப்பற்றாக இருக்கும். தமிழக ஆற்றங்கரைகளில் தானே வளர்ந்து காணப்படும். சாலையோரங்களில் நடப்பட்டுள்ளன. இதில், கருமருது, கலிமருது, பூமருது என பல்வேறு இனங்கள் காணப்படுகின்றன. இலை, பழம், விதை, பட்டை முதலியன மருத்துவக் குணங்கொண்டவை.

இலை, பழம், விதை ஆகியவை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பட்டை உடலுரமாக்கும்; இதய பலவீனம் தீர்க்கும்; இசிவு நீக்கும்.

திருமுறைகளில் மருத மரம் பற்றிய குறிப்பு :-

இலைமரு தேயழ காகநாளு    
         மிடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்    
   நிலையமண் தேரரை நீங்கிநின்று2    
         நீதரல் லார்தொழு மாமருகல்    
   மலைமகள் தோள்புணர் வாயருளாய்    
         மாசில்செங் காட்டங் குடியதனுள்    
   கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்    
         கணபதி யீச்சரங் காமுறவே. 1.006.10

1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்

1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்

1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்

1.121 - திருவிடைமருதூர் - நடைமரு திரிபுரம்

1.122 - திருவிடைமருதூர் - விரிதரு புலியுரி

தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத் 
 தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க் 
 கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும் 
 போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற் 
 காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.  1.126.10 

மனவஞ்சர்மற் றோடமுன் மாதராரும்
 மதிகூர்திருக் கூடலில் ஆலவாயும்
இனவஞ் சொலிலா இடைமா மருதும்
 இரும்பைப்பதி மாகாளம் வெற்றியூருங்
கனமஞ்சின மால்விடை யான்விரும்புங்
 கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தனமென் சொலிற்றஞ்ச மென்றே நினைமின்
 தவமாம்மல மாயின தானறுமே.  2.039.6 

2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்

இலவ ஞாழலும் ஈஞ்சொடு
 சுரபுன்னை இளமரு திலவங்கம்
கலவி நீர்வரு காவிரி
 வடகரை மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி
 மத்தமும் ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை
 யல்லது வணங்குதல் அறியோமே.  2.110.4 

பெருகு சந்தனங் காரகில்
 பீலியும் பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை
 மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும்
 மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு
 மலரடி வணங்குதல் செய்வோமே.  2.110.6 

மண்ணுமா வேங்கையும்
 மருதுகள் பீழ்ந்துந்தி
நண்ணுமா முகலியின்
 கரையினில் நன்மைசேர்
வண்ணமா மலரவன்
 மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி
 ஆங்கணைந் துய்ம்மினே.  3.036.9 

4.035 - திருவிடைமருது - காடுடைச் சுடலை

ஏறுகந் தேற வைத்தார் 
 இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார் 
 நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார் 
 கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார் 
 ஐயனை யாற னாரே.  4.038.8 

5.014 - திருவிடைமருதூர் - பாச மொன்றில ராய்ப்பல

5.015 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பறையின் ஓசையும்

தீர்த்தப் புனற்கெடில வீரட்டமுந்
திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீர் அண்ணாமலை 
அறையணி நல்லூரும் அரநெறியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்றஈசன்
இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமுங்
கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே.  6.007.2 

6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்

6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்

நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா 
இறையவனை எனையாளுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  6.054.7

அனலொருகை யதுவேந்தி அதளி னோடே 
ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்
புனல்பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல் மேனிப் 
புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்
சினவிடையை மேற்கொண்டு திருவா ரூருஞ்
சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல
மனமுருக வளைகழல மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.  6.058.5 

பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்
புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை
எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை
ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை
அழலாடு மேனியனை அன்று சென்றக் 
குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்
கழலானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  6.060.10

நசையானை நால்வேதத் தப்பா லானை
நல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னை
இசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னை
இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்
மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்
மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்
திசையானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  6.063.9 

அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்
ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள் 
பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந் 
தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி 
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  6.064.6 

இடைமரு தீங்கோ யிராமேச் சுரம்
இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்
சடைமுடி சாலைக் குடிதக் களூர்
தலையாலங் காடு தலைச்சங் காடு
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு
கடைமுடி கானூர் கடம்பந் துறை
கயிலாய நாதனையே காண லாமே.  6.070.3 

இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்
இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார்
அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர்
அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர்
தணல்முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்
தத்துவனைச் சாந்தகிலி னளறு தோய்ந்த
பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.  6.083.7 

படமூக்கப் பாம்பணையா னோடு வானோன்
பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார்
குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்
கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார்
நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்
நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்
இடமாக்கி இடைமருதுங் கொண்டார் பண்டே
என்னையிந்நா ளாட்கொண்ட இறைவர் தாமே.  6.096.8 

குருதி சோர ஆனையின் றோல்
 கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன
 மாலய னும்மறியாச்
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்
 சோதியெம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி
 என்ப தடைவோமே.  7.007.10 

7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்

கருது நீமனம் என்னொடு
 சூளறும் வைகலும்
எருது மேற்கொளும் எம்பெரு
 மாற்கிட மாவது
மருத வானவர் வைகும்
 இடம்மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல
 றாப்புன வாயிலே.  7.050.2 

7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்

கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
 கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
 மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
 குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
 பழவினை உள்ளன பற்றறுத் தானை.  7.074.2 

இடைமருது அதனில் ஈண்ட இருந்து 
படிமப் பாதம் வைத்த அப்பரிசும்  8.002

இடைமருது உறையும் எந்தாய் போற்றி 8.004

எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ.  8.013.2

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ.  8.016.2  

மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமாறு
அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே.  8.038.9 

குன்றங் கிடையுங் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து
மின்தங் கிடைநும் மையும்வந்து மேவுவன் அம்பலஞ்சேர்
மன்தங் கிடைமரு தேகம்பம் வாஞ்சியம் அன்னபொன்னைச்
சென்றங் கிடைகொண்டு வாடாவகைசெப்பு தேமொழியே.  8.கோவை.268

திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
 சிறியனுக்(கு) இனியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்
 பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி
 வரைவளங் கவர்ந்திழி வைகைப்
பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப்
 பூவணங் கோயில்கொண் டாயே.  9.14.1

9.017 - திருவிடைமருதூர் - வெய்யசெஞ்சோதி திருவிசைப்பா

உளைப்பூ மருதின் 
 ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு 
 கீழ்நீர்ச் செவ்வரும்பு 11.018

தேங்கமழ் மருதிணர் 
 கடுப்பக் கோங்கின் 11.018

நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே
நீயேயா ளாவாயும் நீள்வாளின் -நீயே
ஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதா
ஏறூர் புனற்சடையா என்று.  11.024.4 

ஊர்வதுவும் ஆனே றுடைதலையில் உண்பதுவும்
ஊர்வதுவு மெல்லுரக 
 மூடுவர்கொல் - ஊர்வதுவும்
ஏகம்ப மென்றும் 
 இடைமருதை நேசித்தார்க்
கேகம்ப மாய்நின்ற ஏறு.  11.24.56 

காவார் பொழிற்கயிலை ஆதீ கருவேஎம்
காவாய்ப் பொலிந்த கடுவெளியே - காவாய
ஏறுடையாய் என்னை இடைமருதி லேயென்றும்
ஏறுடையாய் நீயே கரி.  11.24.81 

11.029 - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த் 
 தானம் துருத்தியம்பேர்
தேறுமின் வேள்விக் குடிதிருத் 
 தோணி புரம்பழனம்
ஆறுமின் போல்சடை வைத்தவன் 
 ஆரூர் இடைமருதென்
றேறுமின் நீரெம் பிரான்கச்சி 
 ஏகம்பம் முன்நினைந்தே.  11.030.60

மாயவன் முந்நீர்த் துயின்றவன் 
 அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல் 
 நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின் 
 றாடுங் கழல்எவர்க்கும்
தாயவன் தன்பொற் கழல்என் 
 தலைமறை நன்னிழலே.  11.033.9 

ருதத் தவஅருள் ஈந்தருள் 
 ஞானசம் பந்தன்சண்பை
இரதக் கிளிமொழி மாதே 
 கலங்கல் இவர்உடலம்
பொருதக் கழுநிரை யாக்குவன் 
 நுந்தமர் போர்ப்படையேல்
மருதச் சினையில் பொதும்பருள் 
 ஏறி மறைகுவனே.  11.037.51

வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு 
 உறக்கும் நிழல் மருதும்
தன் சினை மென் பெடையொடுங்குந் 
 தடங்குழிசிப் புதை நீழல்
மென் சினைய வஞ்சிகளும் விசிப் 
 பறை தூங்கின மாவும்
புன்றலை நாய்ப் புனிற்று முழைப் 
 புடைத்து எங்கும் உடைத்து எங்கும்.  12.024.8 

எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் 
 பொன்னி இடைமருதைச் சென்று எய்திஅன்பினோடு 
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி 
 வண்தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப் 
பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் 
 போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து 
செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு 
 எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார்.  12.027.192 

ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் 
 என்று எடுத்தருளித் 
தாங்க அரிய பெருமகிழ்ச்சி 
 தலை சிறக்கும் தன்மையினால் 
ஈங்கு எனை ஆளுடைய பிரான் 
 இடை மருது ஈதோ என்று 
பாங்கு உடைய இன் 
 இசையால் பாடி எழுந்தருளினார்.  12.034.413 

சாத்தி அங்கு வைகு நாள் 
 தயங்கும் அன்பருடன் கூடப்
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றுப் 
 பெண்ணோர் பாகத்து அண்ணலார்
தீர்த்தப் பொன்னித் தென் கரைமேல் 
 திகழும் பதிகள் பல பணிந்து
மூர்த்தியார் தம்இடை மருதை அடைந்தார் 
 முனைப் பாடித் தலைவர்.  12.035.64 

மன்னு மருதின் அமர்ந்த வரை 
 வணங்கி மதுரச்சொல் மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் 
 பரவிப்போந்து தொண்டர் உடன்
அந்நல் பதியில் இருந்து அகல்வார் 
 அரனார் திருநாகேச்சரத்தை
முன்னி புக்கு வலம் கொண்டு 
 முதல்வர் திருத்தாள் வணங்கினார்.  12.035.65 
 

< PREV <
மந்தாரைச்செடி
Table of Content> NEXT >
மாதவி

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)