logo

|

Home >

to-know >

kuzhal-thirumurai-musical-instruments

குழல்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

Kuzhal - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. Here is the list of the instruments.

Thirumurai isaikkaruvi - Kuzhal

 

Instrument Reference
குழல் கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற் 
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர் 
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும் 
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6 

தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங் 
களையவி ழுங்குழ லார்கடியக் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித் 
துளைபயி லுங்குழல் யாழ்முரல துன்னிய இன்னிசை யால்துதைந்த 
அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க் காட்செய அல்லல் அறுக்கலாமே. 1.5.6 

மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து 
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி 
ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற 
சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.5 

பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே 
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார் 
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண் 
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.6 

குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக் 
கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ் 
சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப் 
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 1.65.6 

சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக் 
கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே 
பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார் 
ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே. 1.70.2 

மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங் 
குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப் 
பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும் 
இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.4 

பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார் 
மறையும் பலபாடி மயானத் துறைவாரும் 
பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங் 
கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.8 

கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர் 
ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார் 
பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே 
ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே. 2.6.1 

பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி 
சீராலே பாடலா டல்சிதை வில்லதோர் 
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச் 
சேராதார் இன்பமா யந்நெறி சேராரே. 2.12.3 

பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும் 
முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும் 
அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங் 
குழகன் னகர்போல் குரங்காடு துறையே. 2.35.7 

பழைய தம்மடி யார்துதி செயப் 
பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக் 
குழலும் மொந்தை விழாவொலிசெய்யுங் கோட்டாற்றில் 
கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக் 
கானி டைக்கண மேத்த ஆடிய 
அழக னென்றெழுவா ரணியாவர் வானவர்க்கே. 2.52.5 

நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக் 
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி 
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை 
பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 2.69.4 

தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில் 
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார் 
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை 
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 2.94.06 

கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த்
திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர்
குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே. 2.100.2 

மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன் 
முழவொலி யாழ்குழல் மொந்தைகொட் டம்முது காட்டிடைக் 
கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வூர்தனுள் 
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே. 3.8.4 

காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர் 
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான் 
தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப் 
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. 3.72.3 

கல்லவடம் மொந்தைகுழல் தாளமலி கொக்கரைய ரக்கரைமிசை 
பல்லபட நாகம்விரி கோவணவர் ஆளுநகர் என்பரயலே 
நல்லமட மாதரரன் நாமமும் நவிற்றிய திருத்தமுழுகக் 
கொல்லவிட நோயகல்த ரப்புகல்கொ டுத்தருளு கோகரணமே. 3.79.7 

சல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக் 
கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து 
அல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர் 
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே. 3.81.2 

கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடும்இசை செய்யப் 
பீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடுங் 
காடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடி 
ஆடரவம் ஆர்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே. 3.82.7 

அக்கினோ டரவரை யணிதிகழ் ஒளியதோ ராமைபூண் 
டிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர் 
கொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதோர் சரிதையர் 
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே. 3.85.7 

அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதோர் அரவொடு 
செங்கதி ரெனநிற மனையதோர் செழுமணி மார்பினர் 
சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர் 
வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே. 3.88.3 

நாமம் எனைப்பல வும்முடையான் நலனோங்கு நாரையூர் 
தாமொம் மெனப்பறை யாழ்குழ றாளார் கழல்பயில 
ஈம விளக்கெரி சூழ்சுடலை யியம்பு மிடுகாட்டிற் 
சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே. 3.102.8 

ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப வோசையால் ஆட லறாத
கலிசெய்த பூதங் கையினா லிடவே காலினாற் பாய்தலும் அரக்கன்
வலிகொள்வர் புலியின் உரிகொள்வ ரேனை வாழ்வுநன் றானுமோர் தலையிற்
பலிகொள்வர் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 3.121.8 

குழல்வலங் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணி தன்னைக் 
கழல்வலங் கொண்டு நீங்காக் கணங்களக் கணங்க ளார 
அழல்வலங் கொண்ட கையான் அருட்கதிர் எறிக்கும் ஆரூர் 
தொழல்வலங் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றி னாரே. 4.53.1 

பழகவோ ரூர்தி யரன்பைங்கட் 
பாரிடம் பாணிசெய்யக்
குழலும் முழவொடு மாநட 
மாடி உயரிலங்கைக்
கிழவன் இருபது தோளும் 
ஒருவிர லாலிறுத்த
அழகன் அடிநிழற் கீழதன் 
றோவென்றன் ஆருயிரே. 4.84.11 

பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க் 
கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள் 
நீடுங் குழல்செய்ய வையம் நெளிய நிணப்பிணக்காட் 
டாடுந் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே. 4.92.9 

காளங் கடந்ததோர் கண்டத்த ராகிக் கண்ணார்கெடில 
நாளங் கடிக்கோர் நகரமு மாதிற்கு நன்கிசைந்த 
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு மியாழ்கொண்டுந் தாமங்ஙனே 
வேடங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர் வீரட்டரே. 4.104.7 

விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு 
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை 
வடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந் 
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 4.111.8 

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி 
பக்க மேபகு வாயன பூதங்கள் 
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய் 
அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே. 5.7.1 

குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்
உழலை யாக்கையை யூணும் உணர்விலீர்
தழலை நீர்மடிக் கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி சாரவிண் ணாள்வரே. 5.12.6 

குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை 
குறட்பூதம் முன்பாடத் தானா டும்மே 
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து 
கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே 
எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே 
ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும் 
அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே 
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.7 

காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார் 
களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக 
ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார் 
உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணாற் 
பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை 
குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப் 
பாடலா ராடலார் பைங்க ணேற்றார் 
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 6.10.2 

திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் 
தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற் 
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை 
கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப் 
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப் 
பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும் 
அருமணியை ஆரூரி லம்மான் றன்னை 
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.1 

அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும் 
அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த 
மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு 
வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே 
கறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக் 
கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம் 
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே 
என்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.2 

வானவனை வானவர்க்கு மேலா னானை 
வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க 
தேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச் 
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக் 
கோனவனைக் கொல்லைவிடை யேற்றி னானைக் 
குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல 
கானவனைக் கற்குடியில் விழுமி யானைக் 
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 6.60.8 

எந்தம் அடிகள் இமையோர் பெருமான் 
எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன் 
அந்தண் கடலங் கரைமேல் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை 
மந்தம் முழவுங் குழலு மியம்பும் 
வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன 
சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண் 
டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே. 7.4.10 

குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம் 
மழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக் 
கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும் 
மிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே. 7.12.5 

பறையுங் குழலும் ஒலிபாட லியம்ப 
அறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே 
குறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா 
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே. 7.32.7 

பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய் 
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய் 
தண்ணா ரகிலுந் நலசா மரையும் 
அலைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல் 
மண்ணார் முழவுங் குழலும் இயம்ப 
மடவார் நடமாடு மணியரங்கில் 
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல் 
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.4 

காடும் மலையுந் நாடு மிடறிக் 
கதிர்மாமணி சந்தனமும் அகிலுஞ் 
சேட னுறையும் மிடந்தான் விரும்பி 
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற் 
பாடல் முழவுங் குழலு மியம்பப் 
பணைத்தோளியர் பாடலோ டாடலறா 
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல் 
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.8 

பேணா முனிவன் பெருவேள் வியெலாம் 
மாணா மைசெய்தான் மருவும் இடமாம் 
பாணார் குழலும் முழவும் விழவிற் 
சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே. 7.93.9 

எழில்வாய் இளவஞ்சி யும்விரும் பும்மற்று இறைகுறையுண்டு 
அழல்வாய் அவிரொளி அம்பலத்து ஆடும்அம் சோதி அம்தீம் 
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப் 
பொழில்வாய் தடவரை வாயல்ல(து) இல்லைஇப் பூந்தழையே 8.கோவை.94 

விசும்புற்ற திங்கட்(கு) அழும்மழப் போன்(று)இனி விம்மிவிம்மி 
அசும்புற்ற கண்ணோ(டு) அலறாய் கிடந்(து)அரன் தில்லையன்னாள் 
குயம்புற் றர(வு)இடை கூர்எயிற்(று) ஊறல் குழல்மொழியின் 
நயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நன்னெஞ்சமே. 8.கோவை.198 

மணிகடல் யானை வார்குழல் மேகம் 
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ் 
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் 
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே 10.606 

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே 10.607 

வந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே 10.634 

கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று 
ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன 
நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள் 
பாடிய வாறுஒரு பாண்டரங் காமே. 10.2776 

மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட வயற்கடைஞர் 
பறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல் 
துறைமுழங் குங்கரி சீறி மடங்கல் சுடர்ப்பளிங்கின் 
அறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே 11.1267 

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் 
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும் 
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம் 
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத் 
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை 
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் 
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் 
இடமாந் தடாரி படகம் - இடவிய 
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் 
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே 
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் 
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300 

பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும் 
வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும் 
தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும் 
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் 12.0082 

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் 
எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் 
திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக் 
கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள் 12.0687 

ஆவின் நிரைக் குலம் அப்படி பல்க அளித்தென்றும் 
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும் 
காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின் 
மேவு துளைக் கருவிக் குழல் வாசனை மேற்கொண்டார் 12.0937 

முந்தை மறை நூன்மரபின் மொழிந்த முறை எழுந்தவேய் 
அந்த முதல் நாலிரண்டில் அரிந்து நரம்புறு தானம் 
வந்ததுளை நிரையாக்கி வாயு முதல் வழங்கு துளை 
அந்தமில் சீர் இடை ஈட்டின் அங்குலி எண் களின் அமைத்து 12.0938 

எடுத்த குழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும் 
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து 
அடுத்தசரா சரங்களெலாம் தங்கவருந் தங்கருணை 
அடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார் அங்கு ஒரு நாள் 12.0939 

சேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும் 
மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும் 
காவல்புரி வல்லாயர் கன்றுடை ஆன் நிரை சூழப் 
பூவலர் தார்க் கோவலனார் நிரை காக்கப் புறம் போந்தார் 12.0943 

அன்பூறி மிசைப் பொங்கும் அமுத இசைக் குழல் ஒலியால் 
வன்பூதப் படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தித் தாம் 
முன்பூதி வரும் அளவின் முறைமையே எவ்வுயிரும் 
என்பூடு கரைந்து உருக்கும் இன்னிசை வேய்ங் கருவிகளில் 12.0947 

ஏழு விரல் இடை இட்ட இன்னிசை வங்கியம் எடுத்துத் 
தாழுமலர் வரிவண்டு தாது பிடிப்பன போலச் 
சூழுமுரன்று எழ நின்று தூய பெரும் தனித் துளையில் 
வாழிய நந்தோன்றலார் மணி அதரம் வைத்தூத 12.0948 

முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்து 
வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி 
ஒத்த நிலை உணர்ந்து அதற்பின் ஒன்று முதல்படி முறையாம் 
அத்தகைமை ஆரோசை அமரோசைகளின் அமைத்தார் 12.0949 

மாறுமுதற் பண்ணின் பின் வளர் முல்லைப் பண்ணாக்கி 
ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடுந்தானம் 
ஆறுலவுஞ் சடை முடியார் அஞ்செழுத்தின் இசை பெருகக் 
கூறிய பட்டடைக் குரலாங் கொடிப் பாலையினில் நிறுத்தி 12.0950 

ஆய இசைப் புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து 
மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையிற் 
சேய வொளியிடை அலையத் திருவாளன் எழுத்தஞ்சும் 
தூய இசைக் கிளை கொள்ளுந் துறையஞ்சின் முறை விளைத்தார் 12.0951 

மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால் 
தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும் 
அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்தியக்கிச் 
சுந்தரச் செங்கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண 12.0952 

எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பென்னும் 
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் 
நண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடை முதற்கதியில் 
பண்ணமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார் 12.0953 

வள்ளலார் வாசிக்கும் மணித் துளைவாய் வேய்ங் குழலின் 
உள்ளுறை அஞ்செழுத்தாக ஒழுகி மதுர ஒலி 
வெள்ளநிறைந்து எவ்வுயிர்க்கும் மேல் அமரர் தருவிளை தேன் 
தெள்ளமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது எனத் தேக்க 12.0954 

இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய் 
மெய் வாழும் புலன் கரண மேவிய ஒன்று ஆயினவால் 
மொய்வாச நறுங்கொன்றை முடிச் சடையார் அடித் தொண்டர் 
செவ்வாயின் மிசை வைத்த திருக்குழல் வாசனை உருக்க 12.0961 

மெய்யன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை 
வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயமாக்கிப் 
பொய் அன்புக்கு எட்டாத பொற் பொதுவில் நடம் புரியும் 
ஐயன் தன் திருச் செவியின் அருகணைய பெருகியதால் 12.0962 

ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை 
தானாய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன் 
கானாதி காரணராம் கண்ணுதலார் விடையுகைத்து 
வானாறு வந்தணைந்தார் மதி நாறுஞ் சடை தாழ 12.0963 

திசை முழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி 
மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே 
அசைய எழுங்குழல் நாதத்து அஞ்செழுத்தால் தமைப் பரவும் 
இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர் நின்றார் 12.0964 

முன் நின்ற மழவிடை மேல் முதல்வனார் எப்பொழுதும் 
செந்நின்ற மனப் பெரியோர் திருக் குழல் வாசனை கேட்க 
இந்நின்ற நிலையே நம்பால் அணைவாய் என அவரும் 
அந்நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார் 12.0965 

விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகமிசை விளங்க 
எண்ணில் அருமுனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த 
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்லப் 
புண்ணியனார் எழுந்து அருளிப் பொற் பொதுவின் இடைப் புக்கார் 12.0966 

குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி 
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை 
மழலை மென் கிளி மருதமர் சேக்கைய மருதம் 
நிழல் செய் கைதை சூழ் நெய்தலங் கழியன நெய்தல் 12.1087 

 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்