logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வெள்ளியங்கிரி வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)

இயற்றியவர் சிரவையாதீனம் தவத்திரு . கந்தசாமி சுவாமிகள்

அத்திஅணி யால்அம் பரவதின்மைக் கண்டத்தால்
ஒத்திறைவன் ஆகும்வெள்ளி ஓங்கலே - பத்தித்
துறைமருவும் தீரத்தார் சோர்வறுக்கும் கொன்றை
நறை மருஉந் தீரத்தார் நாடு.   (1)

குளத்தடங்கண் வாய்த்துவரங் கொண்டல் படிஓதி
வளத்துமைநேர் வெள்ளி வரையே - சளத்தமயற்
போகமதிப் புன்குடிலர்  பொன்றுநகை யொன்றுகொன்றை
நாகமதிப் புன்குடிலர் நாடு  (2)

வாலிபம்மிக் கம்பரக்கண்  மாதருக்கா வற்றருமால்
மேலிசைந்து மால்நிகர்க்கும் வெள்ளிவெற்பே - மால் இயைந்த
கொன்றைச் சடையார் குழகாவென் பார்ஏவு
ஒன்றைச் சடையார்தம் ஊர் (3)

நால்வாயி னங்கலைமா னாமிசைபுல் ஆர்தலிற்பூ
மேல்வாழ்வான் ஒக்கும்உயர் வெள்ளிவெற்பே - போல்வார்இல்
மாதவத்தர் ஆரும் மருவும் திருமறையின் 
போதஅத்தர் ஆகும் புகல்  (4) 

வாஞ்சித்த சித்திபுத்தி வல்லவையோர் தோய்ந்துசுக 
மீஞ்சித்தஞ் செய்கரிநேர் வெள்ளிவெற்பே - காஞ்சி
உதிக்கும்மரன் றான்ஆகி ஓங்கிஅருள் ஞான
மதிக்குமரன் தாதை மருவு  (5)

ஆறுமுகம் வேடர் அணிக்காதற் கொள்மயில் ஊர்
வேறுதையும் கந்தன்ஒக்கும் வெள்ளிவெற்பே - மாறு
பட்ட புரத் தானவரைப் பல்ஓர் நகையால்
அட்ட புரத்தான் அமர்வு  (6) 

தானவரை யங்கிளைக்கத் தண்டங்கண் டம்பரந்தோய்
வேனயக்கும் கையன்நிகர் வெள்ளிவெற்பே- ஞான அருட்
கற்புடையாள் வான்தலத்தைக்  காத்தருள்சேய்  நல்குமையாள்
தற்புடை யான்வான் தலம்  (7) 

மாலணையுங் காமருவி வாரமிக்குப் பூவிழித்து
மேலமையும் பொன்நேரும் வெள்ளிவெற்பே- காலன்அகம்
சிந்தத் திருப்பத்தர் சீர்மார்க்கண் டன்கொள்அர
விந்தத் திருப்பதத்தர் வீடு (8) 

கஞ்சத் தவளமொன்றிக் கானவரம் பைப்பெறலால்
விஞ்சக் கலைமானாம் வெள்ளிவெற்பே- வஞ்சத்து
இருப்பு மரன்நேர் இதயரும் முன்எய்திற்
றிருப்பும் அரன்நேர் செறிவு (9)

வெள்வா ரணம்கருமை  மேற்கொண் டெறிந்துவைரம்
விள்வா சவன்கடுக்கும்  வெள்ளிவெற்பே-  உள்வார்
இடர்அகல நீற்றும் உமையாளின் கொங்கை
படர்அகல நீற்றுவார் பற்று.  (10)

வேழத் திருக்கைஅம்பு மீனத் துவசத்தின் 
வீழ்அனங்க வேள்புரையும் வெள்ளிவெற்பே-  மேழகத்தின்
வத்திரத்தல் நந்தரக்கி மெய்த்துணைஆ னாரைக்கொல்
சத்திரத்தன் அத்தர்அமை சார்வு  (11)

ஆறுபடிந் தினனேர்அம் பிறைந்துண்டாந் தரத்தால்
வீறும்அந்த ணர்க்கடுக்கும் வெள்ளிவெற்பே-  சீறு
அரவப் பணித்தார் அகலத் துமையாள்
விரவப் பணித்தார்அம் வீடு (12)

தானக்கை வாய்த்திரட்சித் தண்டம் பலசமைந்து
வேணற்கை வேந்தர்ஒக்கும் வெள்ளிவெற்பே-  மீனத்
துவசத்தன் அங்கண் தொலைய விழித்த
தவசத்தன் அங்குஅண் தலம்  (13)

பத்திப் பொருள்ஏற்று பாசமுற்ற வீத்தொளியுள்
வித்திசைசால் வைசியர் நேர் வெள்ளிவெற்பே-  மொய்த்த
பார்உரிமை வேடர் பரிவால் அமையானை
ஈர்உரிமை வேடர் இடம் (14)

வேளாண்மை கண்டுகளி மிக்குப் புலவர்கலி
மீளா தருள்வார்நேர் வெள்ளிவெற்பே-  நீளாமுடி
பத்துத் தரித்தான் பவிசழித்தான் மேற்கருணை
வைத்துத் தரித்தான் பதிவு  (15)

நன்றமிழ்த நாவமைந்து நாகவரம் பைக்கனியை
மென்றளிதோ யும்புலவர் வெள்ளிவெற்பே-  ஒன்றசலம்
தூக்கும் கொடியன்அகம் சோரவிரல் ஊன்றியசே
ஆக்கும் கொடியன் அகம் (16)

வேடுவரங்க கங்கதிர்கால் வேழமொரு வக்கணையில்
வீடுறுத்தும் வள்ளிஒக்கும் வெள்ளிவெற்பே-  கூடற்
பதிக்கா வலன்புடையார் பார்க்கஅடி கொண்டாள்
துதிக்கா வல்அன்புடையார் தோய்வு  (17)

ஈரப் படர்ச்சியின்முன் எய்தவர்க்கு வான்தரலில்
வீரர்க் கிணைஆகும் வெள்ளிவெற்பே-  ஊரற்குச் 
சந்தாயும் மானார் தணியாச் சினம்தவிர்த்த
நந்தாயும் ஆனார்தம் நாடு  (18)

மாறா நிலையாற்கண் மாரியினாற் றொண்டகத்தால்
வீறார்நா வுக்கரசேய் வெள்ளிவெற்பே-  கூறார்
மதிக்கோடீ ரத்தளகவான் வண்ணம்உணர் வித்தென் 
விதிக்கோள்தீ ரத்தகைவான் வீடு  (19)

முத்தியற்பந் தற்கணிலாய் முத்தியற்பந் தர்க்கருள்மாண்
மெத்தியற்சம் பந்தன்நிகர் வெள்ளிவெற்பே-  சத்திக்கு
இடப்பால் அளித்தார் இயன்மறைகட் கெட்டாக்
கடப்பா லளித்தாரன் காப்பு  (20)

மாணிக்க வாசகத்தின் மன்னிரண மாற்றிடலின்
மீள்நிலைநீர்  வாசகன்நேர்  வெள்ளிவெற்பே-  பாணித்தே
யாகும் பரசு கத்தர்; ஆர்வம்மலி தொண்டர்மனம் 
ஆகும் பரசுகத்தர் ஆர்வு  (21)

நாவல்அர சாய்இருமோ னங்கையர்ஆகம் பொருந்தி
மேவழிகாற் சுந்தரன்ஆம் வெள்ளிவெற்பே-  கா அகத்தர்
துக்கம் இகஅயில்வான் தோன்றல்அளித் தார்கலிநஞ்சு
ஒக்கமிக அயில்வான் ஊர் (22)

வானத் தமைவால்விண் மாதர்உவந் தாடலினால்
மீனத் தலைத்தடம்நேர் வெள்ளிவெற்பே-  கான 
மறையோன்  சிரத்தை மருள்அறச்சே தித்த
நிறையோன் சிரத்தை நிலை  (23)

வானரங்கு லாய்விடர்க்குள் வாய்ப்பவளம் ஆரநல்கி
வேனரமா தர்க்கிணைஆம் வெள்ளிவெற்பே-  ஈனர்
இகத்திருப்பு மையல் இதயமு (ம்வ) ரிற்றாட்
புகத்திருப்பும் ஐயன் புகல் (24)

செய்யுள் மிகுத்தெழுந்து சீர்க்கலைமா னாட்டமுற்று
மெய்உள் புலவர்நிகர் வெள்ளிவெற்பே-  பொய்உலகிற் 
தாம்மசரம் அன்னர்  தம்முள் உணர்வரிய
நேமசக மன்னர் நிலை  (25)

பூத்தண் டலையகலப் பொற்பாரங் காட்டியமை
மேய்த்தண்கடல் புரையும் வெள்ளிவெற்பே-  காத்தலம் சார்
உம்பர்அமு சுற்றலைவ தோவவிடம்  உண்டருளும்
நம்பர்; அமு தற்றலைவன் நாடு  (26)

அம்மை இடம்பெற்  றமைவா னரங்குதித்து
மெய்ம்மைநட ராசனிகர் வெள்ளிவெற்பே-  அம்மை
அலைக்கங்கை தம்தாரம் ஆக்கி உமைஅ
மலைக்கங்கை தந்தார்அம் வாழ்வு  (27)

சத்தவிசைப் பாடலத்திற் சாரிரத மூர்ந்தொளிக்கும்
வித்தகமார் பானு ஒக்கும் வெள்ளிவெற்பே-  நித்தம்
வழுத்தைத் தவிரா அடியர்க்கு வேதன்
எழுத்தைத் தவிரான் இடம் (28)

பன்னாறங் கத்தினொளிப் பாவையர்க்கின் பந்தரலின் 
மின்னார்  சசியைஒக்கும் வெள்ளிவெற்பே-  கொன்ஆர்வை
வேல்அம்கை ஏற்றான் வியன்தாதை வேதன்க
பாலம்கை ஏற்றான் பதி  (29)

கோவளம்கா ராமணிகள் கொள்கடலை எள்வளத்தால்
மேவரிசால் முல்லைஒக்கும் வெள்ளிவெற்பே-  நாவரசென்
மெய்த்தாண் டகம்புகல்சீர் வித்தகரை அன்பாழி 
உய்த்தாண் டகம்புகலான் ஊர் (30)

        முற்றும் .

 

Related Content

கோயில்பாளையம் என்னும் கௌசைத் தல புராணம் (கந்தசாமி சுவாமிகள் 

வெள்ளியங்கிரி  விநாயக மூர்த்தி பதிகம்