1. | அகளமா யாரு மறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென் றுந்தீபற. |
2. | பழக்கந் தவிரப் பழகுவ தன்றி உழப்புவ தென்பெணே யுந்தீபற ஒருபொரு ளாலேயென் றுந்தீபற |
3. | கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர் (1)பிண்டத்தில் வாராரென் றுந்தீபற பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற. |
4. | (2)இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அங்ங னிருந்ததென் றுந்தீபற அறிவு மறிவதென் றுந்தீபற. |
5. | ஏகனு மாகி யநேகனு மானவன் நாதனு மானானென் றுந்தீபற நம்மையே யாண்டனென் றுந்தீபற. |
6. | நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன் தன்செய றானேயென் றுந்தீபற தன்னையே (3)தந்தானென் றுந்தீபற. |
7. | உள்ள முருகி (4)லுடனாவ ரல்லது தெள்ள வரியரென் றுந்தீபற. சிற்பரச் செல்வரென் றுந்தீபற. |
8. | ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று மீதானத் (5)தேசெல்க வுந்தீபற விமலற் கிடமதென் றுந்தீபற. |
9. | ஆக்கிலங் கேயுண்டா யல்லதங் கில்லையாய்ப் பார்க்கிற் (6)பரமதென் றுந்தீபற பாவனைக் கெய்தாதென் றுந்தீபற. |
10. | அஞ்சே யஞ்சாக வறிவே யறிவாகத் துஞ்சா துணர்ந்திருந் துந்தீபற துய்ய பொருளீதென் றுந்தீபற. |
11. | தாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரன் நோக்கிற் குழையுமென் றுந்தீபற நோக்காமல் நோக்கவென் றுந்தீபற. |
12. | மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரியரென் றுந்தீபற தவத்திற் றலைவரென் றுந்தீபற. |
13. | ஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித் தேட்டற் றிடஞ்சிவ முந்தீபற தேடு மிடமதன் றுந்தீபற. |
14. | பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றிலப் பற்றை யறுப்பரென் றுந்தீபற (7)பாவிக்க வாராரென் றுந்தீபற. |
15. | கிடந்த கிளவியைக் கிள்ளி யெழுப்பி உடந்தை யுடனேநின் றுந்தீபற உன்னையே கண்டதென் றுந்தீபற. |
16. | உழவா துணர்கின்ற யோகிக ளொன்றோடுந் (8)தழுவாமல் நிற்பரென் றுந்தீபற (9)தாழ்மணி நாவேபோ லுந்தீபற. |
17. | திருச்சிலம் போசை யொலிவழி யேசென்று நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற நேர்பட வங்கேநின் றுந்தீபற. |
18. | மருளுந் தெருளு மறக்கு மவன்கண் அருளை மறவாதே யுந்தீபற அதுவேயிங் குள்ளதென் றுந்தீபற. |
19. | கருது (10)வதன்முன் கருத்தழியப் பாயும் ஒருமகள் கேள்வனென் றுந்தீபற உன்ன வரியனென் றுந்தீபற. |
20. | இரவு பகலில்லா வின்ப வெளியூடே விரவி விரவிநின் றுந்தீபற விரைய விரையநின் றுந்தீபற. |
21. | சொல்லும் பொருள்களுஞ் சொல்லா தனவுமங் கல்லனா யானானென் றுந்தீபற அம்பிகை பாகனென் றுந்தீபற. |
22. | காற்றினை மாற்றிக் கருத்தைக் (11)கருத்தினுள் ஆற்றுவ தாற்றலென் றுந்தீபற அல்லாத தல்லலென் றுந்தீபற. |
23. | கள்ளரோ டில்ல முடையார் கலந்திடில் வெள்ள வெளியாமென் றுந்தீபற வீடு மெளிதாமென் றுந்தீபற. |
24. | எட்டுக்கொண் டார்தமைத் தொட்டுக்கொண் டேநின்றார் விட்டா ருலகமென் றுந்தீபற வீடேவீ டாகுமென் றுந்தீபற. |
25. | சித்தமுந் தீய கரணமுஞ் சித்திலே ஒத்ததே யொத்ததென் றுந்தீபற ஒவ்வாத தொவ்வாதென் றுந்தீபற. |
26. | உள்ளும் புறம்பும் நினைப்பறி னுன்னுள்ளே மொள்ளா வமுதாமென் றுந்தீபற முளையாது பந்தமென் றுந்தீபற. |
27. | அவிழ விருக்கு மறிவுட னின்றவர்க் கவிழுமிவ் வல்லலென் றுந்தீபற. அன்றி யவிழாதென் றுந்தீபற. |
28. | வித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர் பித்தேறி னார்களென் றுந்தீபற பெறுவதங் கென்பெணே யுந்தீபற. |
29. | சொல்லு மிடமன்று சொல்லப் புகுமிடம் எல்லை சிவனுக்கென் றுந்தீபற என்றானா மென் (12)சொல்கோ முந்தீபற. |
30. | வீட்டி லிருக்கிலென் னாட்டிலே போகிலென் கூட்டில்வாட் (13)சாத்திநின் றுந்தீபற கூடப்ப டாததென் றுந்தீபற. |
31. | சாவிபோ மற்றச் சமயங்கள் புக்குநின் றாவி யறாதேயென் றுந்தீபற அவ்வுரை கேளாதே யுந்தீபற. |
32. | துரியங் கடந்தவித் தொண்டர்க்குச் சாக்கிரந் துரியமாய் நின்றதென் றுந்தீபற துறந்தா ரவர்களென் றுந்தீபற. |
33. | பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே முற்ற வரும்பரி சுந்தீபற முளையாது மாயையென் றுந்தீபற. |
34. | பேரின்ப மான பிரமக் கிழத்தியோ டோ ரின்பத் துள்ளானென் றுந்தீபற உன்னையே (14)யாண்டானென் ருந்தீபற. |
35. | பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக் கண்டாரே கண்டாரென் றுந்தீபற காணாதார் காணாரென் றுந்தீபற. |
36. | நாலாய பூதமு நாதமு மொன்றிடின் நாலா நிலையாமென் றுந்தீபற நாதற் கிடமதென் றுந்தீபற. |
37. | சென்ற நெறியெல்லாஞ் செந்நெறி யாம்படி நின்ற பரிசறிந் துந்தீபற (15)நீசெயல் செய்யாதே யுந்தீபற. |
38. | பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென் அக்கொழு நீயறிந் துந்தீபற அறிந்தறி யாவண்ண முந்தீபற. |
39. | அதுவிது வென்னா தனைத்தறி வாகும் அதுவிது வென்றறிந் துந்தீபற அவிழ்ந்த (16)சடையாரென் றுந்தீபற. |
40. | அவனிவ னான தவனரு ளாலல்ல திவனவ னாகனென் றுந்தீபற என்று மிவனேயென் றுந்தீபற, |
41. | முத்தி (17)முதலுக்கே மோகக் கொடிபடர்ந் தத்தி பழுத்ததென் றுந்தீபற அப்பழ முண்ணாதே யுந்தீபற. |
42. | அண்ட முதலா மனைத்தையு முட்கொண்டு கொண்டத்தைக் கொள்ளாதே யுந்தீபற குறைவற்ற செல்வமென் றுந்தீபற. |
43. | காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே மாயக்கள் ளுண்டாரென் றுந்தீபற வறட்டுப் பசுக்களென் றுந்தீபற. |
44. | சிந்தையி னுள்ளுமென் சென்னியி னுஞ்சேர வந்தவர் வாழ்கவென் றுந்தீபற மடவா ளுடனேயென் றுந்தீபற. |
45. | வைய முழுது மலக்கயங் கண்டிடும் உய்யவந் தானுரை யுந்தீபற உண்மை யுணர்ந்தாரென் றுந்தீபற. |
திருச்சிற்றம்பலம்
திருவுந்தியார் முற்றும்