logo

|

Home >

saiva-siddhanta >

pandara-sathiram-arultiru-ampalavaana-desigar-arulisseyta-sanmarga-sithiyar

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சன்மார்க்க சித்தியார்

சன்மார்க்க சித்தியார்


           (நேரிசை வெண்பா)

சிறியேன் அறியாமை தீர்ப்பதற்க்குப் புத்தி
அறியேன் எனினும் அருளின் - நெறியே 
முளைத்தார்கள் நீர்மை முதிரவினா வுற்றேன் 
அளித்தால் நமச்சிவா யா.	        (௧)

கள்ளத் தலைவர் துயர்கருதித் தனெங்கருணை
வெள்ளத்(து) அலைவர் மிக.

பாசமாய்ச் சுத்தப் பசுவாய்ப் பதியாகித்தே
தேசுற்ற ஆவிச் சிறப்பென்றான் - நேசம்
உடைத்தாய்த் தனுவற் றுணராமல் கண்ணை
அடைத்தாய்வ தேதாம் அறை.			          (௨)

அறிவாய்ப் பரிபூ ரணமாய் அகண்ட
செறிவாய் உளமொளித்த தேசா - பிறிவாகி
உன்னிற் றனுவாய் உறுங்கண் இமைநீக்கில்
அந்நிய்மேன் ஆவாய் அறை.         			(௩)

உளக்கண் விழித்தார்க் குறுங்கதிராய் உன்னை
விளக்கிச் செக இருளை வேறாய் - ஒளிப்பைஎன
மாயும் செகமுல்ளத்து மன்னுமெனக் கண்ணைமறைத்
தாயுமருள் ஏதாம் அறை.			(௪)

அம்பகத்தை மூடியருள் ஆய்வது நூலோதிச்            
செம்பொருளை கேட்டுத் தெளிவதுவோ - நம்பனருட்(கு)
ஏற்ற உ பாயநிட்டை ஏதாகும் மும்மலத்தைப்
பாறறுவாய் ஒன்றைப் பகர்		(௫)

அணியாய்த் திருநீ றணிவார்கள் கண்ணின்	
மணியே உனைவேண்டி வந்து - பணியத்
தொடும்போது மூர்ச்சை துயரகல நீற்றை
இடும்போ தகல்வாய் இதென்.			(௬)

நினைத்தார்தம் நெஞ்சத்(து) அமுதாகும் உன்னைத் 
தனைத்தான் அறிவாரே சார்வார் - எனத்தலோ 
ஞானஞ் சுழுமுனையால் நல்குமென வாய்நீரைப்
பானம் பணல் என் பகர்.			(௭)

சன்மார்க்க மென்னத் தகுமார்க்கம் ஓரியல்பாம்         
பன்மார்க்க மென்னப் படாததனால் - நன்மார்க்கம்
காயம்ற ஆவி கருதானாம் கண்மூடும்
மாயமென் மாணா வரும். 		(௮)

நேத்திரத்தை உற்ற பொருள் நேத்திரத்தை நீங்கின்மன
மாத்திமே அன்றிஉளம் மன்னாதால் - நீத்துடலை
அவிப் பயனறிவார் அம்பகத்தை மூடியருள்
பாவிப்பர் அல்லரெனப் பார்.			(௯)

காயமனத் தால்சிவனைக் காணலாம் என்பதனுக்(கு)	
ஆய மறையும் அறையாதால் - ஞாயத்
தனுமாய ஆவி தனுவாம் இறைவர்க்(கு)
இனிமாய மில்லையென எண்.			(௧0)

அறிவாய்த் தனுவை அறிவார் மலத்தைப்			
பிறிவார் உளம்பே ரறிவாய்ச் - செறிவாந்
தனுவால் அறிவார் உளமே தனுவாய்
உனுவார் திருவுருவென் றோர்.			(௧௧)

ஊனாய் உயிராய் உணர்வாய் உரையிறந்த				
தேனாய் உளமறைந்த சிற்பரத்தை - வானாய்
ஒளியாய் உருவாய் ஒலியாய் உணர்வார்
தெளியாய் தமையென்னத் தேர்.		(௧௨)

தனைத்தான் இவ் வாறென்னத் தானறியார் சம்பு		
வினைத்தான் எவ் வாறறிந்து மேவ - நினைத்தார்
உறுமோ மனமதனில் ஒன்கணிமை நீக்க
அறுமோ நமையாள் அருள்.			(௧௩)

சட்டகத்தை நீக்கச் சதுரறியார் கண்மூடி			
நிட்டையெனப் பாவித்து நிற்பதனால் - சுட்டிப்
பத்மடைவ தல்லால் பரசிவத்தோ டத்து
விதமடைவ தின்றாம் வினை.		(௧௪)

சிந்திப்பார் அர்ச்சிப்பார் சேர்ந்திமையால் அம்பகத்தைப்	
பந்தித் திதயத்தில் பாவிப்பார் - பெந்தித்த
சாலோ மாதிப் பயனோக்குச் சற்குருவால்
நூலோதி னார்க்கறிவே நோக்கு.		(௧௫)

புரையேய் செவிதா ரகமாப் புகுமால்
வரையேய் அருணூலின் மாண்பவ் - வுரையே
பதிபசுபொய்ப் பாசத்தின் பண்புதேர் வித்துக் 
கதிசேர்க்குஞ் சன்மார்க்கக் கற்பு.	(௧௬)

அறிவால் உணர்த்தி அறியாமை நீக்கிப்
பெறுமாறே அத்துவிதம் பேரா - மறுமாற்றி
ஆவியே ஈசன் அருவினையைக் காட்டாமல்
பாவியென்பார் சற்குருவோ பார்.		(௧௭)

உன்னைத் தனுவை உயிர்க்குயிரை உள்ளத்துப்
பின்னமற நிற்குமலப் பெற்றியையுஞ் - சொன்ன
சுருதிகுரு வாக்குச் சுவானுபவம் ஒன்றத்
தெரிவிப்பான் தேசிகனாய்த் தேர்.		(௧௮)

எங்கும் அறிவாய் எழுந்தசிவா னந்தத்தைத்
தங்குநய னத்தடக்கித் தான்விழிக்கப் - பங்கமுறக்
கற்குநிட்டை யாகுங் கருதியறி வாய்நிறைந்து
நிற்குநிட்டை யல்லவென நில்.		(௧௯)

அகக்கண் திறந்தார்க் கறிவல்ல்ணால் ஒன்றும்
புகத்தக்க தில்லையெனும் பொற்பான் - முகக்கண்
நிறைத்தார்மற் றோரகத்தின் நீடிருளாற் கண்ணை
மறைத்தார் செகத்தஞ்சு வார்.		(௨0)

அகத்திமிரத் தாலாவி ஆகமாய்த் தீய
செகத்துமய லாமூர்ச்சை செய்யா - இகத்தரனைப்
பெற்றார்தங் காயமதும் பேரறிவாம் மெய்மூர்ச்சை
உற்றார் பொய்த் தீவினையென் றோர்ச்.		(௨௧)

உரையே அகவிருளுக் கொண்க்திரே யாமால்
வரையார் அறிவையோர் மாண்பைப் - பரஞானம்
சாதிப்பா ரும்கேட்டல் சிந்தனையைச் சார்ந்துமலஞ்
சேதிப்பா ரென்னத் தெளி.			(௨௨)

மனுவே திருநீற்றை மன்னுமால் ஞானத்
தனுவே தவிர்க்கத் தகாதே - துனவே
அருள்மால் திருநீ றணிய அகலும்
மருள்மால் எனவே மத்			(௨௩)

வன்னமுற்ற காயத்தை மாற்றி அறி வேஎன்னத்
தன்னையுற்றார்க் கின்பாகுந் தாணுவற்ப் - பீன்னமுற்றா 
ஊனீர்மை தானாய் உணரும்பொய் மக்கட்கு
வாய்நீர் அமுதாய் வரும்.			(௨௪)

அருந்துமனம் வாயால் அகற்றி அற்க் கோழை
திருந்தாருள் சேருமெனுஞ் சேயாய்ப் - பொருந்தும் 
தனுக்கோழை நீங்காது தாதனறி ஞானம்
உனக்கோழை எந்நாள் உறும்		(௨௫)

செகத்திமிரம் தீர்க்கும்வான் செலதிர்போல் ஆவி
அகத்திமிரம் தீர்க்கும் அருள்நூல் - பகுத்தறியப்
புத்தியில்லார்க்(கு) எல்லாம் பொருளாகுங் கண்ணற்றார்
அத்திகண்டாற் போலென் றறி.			(௨௬)

நன்மார்க்க நற்குரவோர் நாட்டுமரு ணூனோக்கிச்
சன்மார்க்க சித்தியெனத் தானுரைத்தேன் - புன்மார்க்கம்
அற்றார்தம் நெஞ்சத் தமுதாகுஞ் செகமார்க்கம்
பெற்றார்க் கிதுபேத மாம்.		(௨௭)

காயமெனக் குள்ளடங்கி காதலித்த யான்கருணை
நேயநீ யாயடங்கி நிற்பதனுக் - காயநிட்டை
வைத்தாய் சிவஞான வாரியருள் மல்லேறே
அத்தா நமச்சிவா யா.			(௨௮)

- சன்மார்க்க சித்தியார் முற்றிற்று - 

சன்மாக்க சித்தியெனச் சாற்றுமிரு பானெட்டைப்
புன்மார்க்கஞ் சென்ரோர்க்குப் போக்கினான் - நன்மார்க்கம்
காட்டா வடுதுறையில் கண் அம் பலவாணன்
தாட்டா மரையெனக்குத் தந்து.

 


See Also:
1. சித்தாந்த சாத்திரம் - 14

Related Content

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த

Pandara sattiram arultiru ampalavaana tesikar arulis seyta -

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த

Pandara-sattiram arultiru-ampalavaana-desigar-arulisseyta-na

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த