logo

|

Home >

information-to-know >

thooriyuam-thirumurai-musical-instruments

தூரியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Thooriyuam - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

 

Instrument Reference
தூரியம் பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மால்அயற்கும்
காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் திலலையன்ன
வாரண வும்முலை மன்றலென்(று) ஏங்கும் மணமுரசே. 8.கோவை.296 

தூரியத் துவைப்பும் முட்டுஞ் சுடர்ப் படை ஒலியும் மாவின் 
தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர்ச் சீரும் 
வீரர் தஞ்செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக் 
காருடன் கடைநாள் பொங்கும் கடல் எனக் கலித்த அன்றே 12.0582 

பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்பச் 
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்கத் தேவர் பிரான் 
அறந்தலை நின்று அவர்க்கெல்லாம் அளவில் வளத்து அருள் பெருக்கிப் 
புறந்தருவார் போற்றி இசைப்ப பொன் கொடியை வளர்க்கின்றார் 12.0877 

அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார் தமை முன்னம் அளித்த தாயார் 
முன் உதிக்க முயன்ற தவத் திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் 
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதிக் 
கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார் 12.2007 

மங்க தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதிச் சடையார் கோயில் 
பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்து ஆக புனை முத்தின் சிவிகை நின்றும் 
அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணிவாயில் பணிந்து புக்கு 
தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு திருமுன் வணங்கச் சாரும் காலை 12.2214 

தேமருவு மலர்ச் சோலைத்திரு குடமூக்கினில் செல்வ 
மாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருளத் 
தூமறையின் ஒலி பெருகத் தூரிய மங்கலம் முழங்க 
கோ முறைமை எதிர் கொண்டு தம்பதி உள் கொடு புக்கார் 12.2304 

பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் 
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் 
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் 
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப 12.2518 

துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே 
அந்தணராம் மாதவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப 
வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்கச் 
செந்தமிழ் மாருதம் எதிர் கொண்டு எம்மருங்கும் சேவிப்ப 12.2547 

மங்கல தூரிய நாதம் மறுகு தொறும் நின்று இயம்பப் 
பொங்கிய நான்மறை ஓசை கடல் ஓசை மிசைப் பொலியத் 
தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன் 
செங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வ விரை மணம் பெருக 12.3075 

ஆண்ட நம்பி எதிர் கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி 
நீண்ட மதில்கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து 
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப 
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார் 12.3340 

புக்க பொழுது அலர் மாரி புவி நிறையப் பொழிந்து இழிய 
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப 
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின் 
அக்கருணைத் திருநிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் 12.3981 

பன்னு திருப்பதிக இசைப் பாட்டு ஓவா மண்டபங்கள் 
அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு 
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி 
செம் நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திருமடங்கள் 12.4024 
 

 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்