logo

|

Home >

information-to-know >

tharai-thirumurai-musical-instruments

தாரை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Tharai - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

Tharai Tarai Pipe music instrument

தாரை எனப்படுவது 12 அடி வரையான நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ் ஊதுகருவி.  இக்கருவி சீரான, இடை நிற்காத இசை தருவது.

Instrument Reference
தாரை சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி 
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி 
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் 
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581 

அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச் 
சங்கம் படகம் கருவி தாரை முதலான 
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் 
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் 12.1931 

சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் 
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ 
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் 
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 12.2101 

புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே 
இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலங்கிளர் தாரை 
அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது 
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத 12.2121 

சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார் 
என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற 
முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப 
மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க 12.2181 

பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் 
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் 
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் 
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப 12.2518 

பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி 
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன 
வில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு 
எல்லையில் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத 12.2641 

சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து சிவபெருமாள் தனைப் பரவிச் செல்லும் போது 
சார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்கை சார்தலும் மற்ற அது அறிந்த சைவர் எல்லாம் 
ஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தாரை அளவு இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப் 
பார் குலவு தனக் காளம் சின்னம் எல்லாம் பர சமய கோள் அரி வந்தான் என்று ஊத 12.2802 

சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம் 
வங்கியம் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம் 
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம் 
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே 12.3097 

சீரணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின் 
ஏரணி காளம் சின்னம் இலங்கு ஒளித் தாரை எல்லாம் 
பேரொலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு 
தாரணி உய்ய ஞான சம்பந்தன் வந்தான் என்று 12.3118 
 

See Also:

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்