logo

|

Home >

information-to-know >

sangu-conch-thirumurai-musical-instruments

சங்கு-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

Sangu (Conch) - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. Here is the list of the instruments.

Thirumurai isaikkaruvi - Sangu

 

InstrumentReference
சங்குசங்கொலி இப்பிசு றாமகரந் தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற் 
பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே 
எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான் எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் 
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.6 

பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும் 
நணுகல் அரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் 
மணியொலி சங்கொலி யோடுமற்றை மாமுர சின்னொலி என்றும்ஓவா 
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.9 

பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார 
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை 
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில் 
உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே. 1.18.3 

பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ டாமைவெண் ணூல்புனை கொன்றை 
கொங்கிள மாலை புனைந் தழகாய குழகர்கொ லாமிவ ரென்ன 
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற 
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச் சதிர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.7 

வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப 
ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச் 
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள் 
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. 1.61.2 

பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய் 
உறையுமயான மிடமாவுடையார் உலகர்தலைமகன் 
அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய் 
பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழனநகராரே. 1.67.3 

வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா 
மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியாமதிளெய்தார் 
ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின் 
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழனநகராரே. 1.67.6 

காலைநன் மாமலர் கொண்டடி பரவிக் கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன் 
ஓலம திடமுன் உயிரொடு மாள உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான் 
மாலைவந் தணுக ஓதம்வந் துலவி மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி 
வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.1 

சங்கொளிர் முன்கையர் தம்மிடையே 
அங்கிடு பலிகொளு மவன்கோபப் 
பொங்கர வாடலோன் புவனியோங்க 
எங்குமன் இராமன தீச்சுரமே. 1.115.1 

அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும் அடக்கிஞானப் 
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்கோயில் 
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத்தீயுள் 
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ்செய்யும் மிழலையாமே. 1.132.6 
மறையுமோதுவர் மான்மறிக்கையினர் 
கறைகொள்கண்ட முடையவர் 
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை 
அறையநின்ற அடிகளே. 1.135.6 

கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன் 
திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர் 
உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர் 
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே. 2.4.1 

சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக 
ஆடும் பறைசங் கொலியோ டழகாக 
நாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப் 
பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே. 2.46.2 

மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் 
மோதி மீதெறி சங்கம் வங்கமுங் 
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி 
வண்ட லம்பிய கொன்றை யானடி 
வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை 
விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே. 2.49.2 

நாடெ லாமொளி யெய்த நல்லவர் 
நன்று மேத்தி வணங்கு வார்பொழிற் 
காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி 
தோடு லாவிய காது ளாய்சுரி 
சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும் 
வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே. 2.49.3 

நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதஞ் 
சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லால் கருதாதீர் 
குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலுந் 
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே. 2.55.1 
துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர் 
மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர் 
பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை 
அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. 2.55.02 
சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர் 
நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத் 
தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை 
ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே. 2.55.03 
வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள் 
ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக் 
கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசல் கொடித்தோன்றும் 
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 2.55.04 
சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர் 
நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர் 
ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னுந் தலைச்சங்கைக் 
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே. 2.55.05 
நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து 
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார் 
சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை 
நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே. 2.55.06 
அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக் 
கொடிபுல்கு மென்சாயல் உமையோர்பாகங் கூடினீர் 
பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக் 
கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே. 2.55.07 
திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை 
வரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர் 
அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை 
நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே. 2.55.08 
பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும் 
போயோங்கிக் காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார் 
தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச் 
சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 2.55.09 
அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர் 
தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர் 
தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை 
நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே. 2.55.10 
நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன் 
குளிருந் தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை 
ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார் 
மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே. 2.55.11 

ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து 
காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி 
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று 
பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே. 2.59.2 

பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர்நெடு மாடங் 
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில் 
மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும் 
பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே. 2.68.4 

கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச் 
சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப் 
பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள் 
அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே 2.121.7 

திருவளர் தாமரை மேவினா னுந்திகழ் பாற்கடற் 
கருநிற வண்ணனுங் காண்பரி யகட வுள்ளிடம் 
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நலம் மல்கிய 
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே. 3.11.9 

காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர் 
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான் 
தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப் 
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. 3.72.3 

அங்கம்விரி துத்தியர வாமைவிர வாரமமர் மார்பிலழகன் 
பங்கயமு கத்தரிவை யோடுபிரி யாதுபயில் கின்றபதிதான் 
பொங்குபர வைத்திரைகொ ணர்ந்துபவ ளத்திரள்பொ லிந்தவயலே 
சங்குபுரி யிப்பிதர ளத்திரள்பி றங்கொளிகொள் சண்பைநகரே. 3.75.2 

காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார் 
நாரியொரு பால்மகிழும் நம்பருறை வென்பர்நெடு மாடமறுகில் 
தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால் 
வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே. 3.76.3 

மாலைமதி வாளரவு கொன்றைமலர் துன்றுசடை நின்றுசுழலக் 
காலையி லெழுந்தகதிர் தாரகைம டங்கஅன லாடும்அரனூர் 
சோலையின் மரங்கடொறும் மிண்டியின வண்டுமது வுண்டிசைசெய 
வேலையொலி சங்குதிரை வங்கசுற வங்கொணரும் வேதவனமே. 3.76.6 

அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதோர் அரவொடு 
செங்கதி ரெனநிற மனையதோர் செழுமணி மார்பினர் 
சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர் 
வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே. 3.88.3 

பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி 
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார் 
இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும் 
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பருதிந் நியமமே. 3.104.7 

புற்றில்வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனிமலர்க் கொன்றை 
பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த படிறனார் பயின்றினி திருக்கை 
செற்றுவன் றிரைகள் ஒன்றொடொன் றோடிச் செயிர்த்துவண் சங்கொடு வங்கங் 
கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங் கழுமல நகரென லாமே. 3.118.6 

நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப் 
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங் 
கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந் 
தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.5 

அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உனக்கே தந்து 
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச் 
சங்கொத்த மேனிச் செல்வா சாதல்நாள் நாயேன் உன்னை 
எங்குற்றாய் என்ற போதா இங்குற்றேன் என்கண் டாயே. 4.75.8 

சங்கொலிப் பித்திடு மின்சிறு காலைத் தடவழலில் 
குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங் காட்டி இருபதுதோள் 
அங்குலம் வைத்தவன் செங்குரு திப்புன லோடஅஞ்ஞான் 
றங்குலி வைத்தான் அடித்தா மரையென்னை ஆண்டனவே. 4.102.10 

கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் கைவிளக்கோ 
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர் எய்தியும் ஊனமில்லா 
அடிகளும் ஆரூர் அகத்தின ராயினும் அந்தவளப் 
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு நந்தி புறப்படிலே. 4.103.6 

சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய் 
வங்க மார்வலங் கொண்மறைக் காடரோ 
கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே 
அங்கை யில்லனல் ஏந்தல் அழகிதே. 5.9.9 

மங்க லக்குடி ஈசனை மாகாளி 
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணுநேர் 
சங்கு சக்கர தாரி சதுர்முகன் 
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே. 5.73.3 

சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன் 
வெங்கு லாமத வேழம் வெகுண்டவன் 
கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென 
எங்கி லாததோர் இன்பம்வந் தெய்துமே. 5.78.1 

கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர் 
விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர் 
அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக் 
கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே. 5.95.10 

மங்குல் மதிவைப்பர் வான நாடர் 
மடமா னிடமுடையர் மாத ராளைப் 
பங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர் 
பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர் 
சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர் 
சரிதை பலவுடையர் தன்மை சொல்லின் 
எங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார் 
இடைமருது மேவி யிடங் கொண்டாரே. 6.17.2 

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி 
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி 
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி 
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி 
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி 
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி 
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி 
திருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.9 

ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும் 
இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண் 
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந் 
துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம் 
மாடேறி முத்தீனுங் கானல் வேலி 
மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி 
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில் 
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. 6.76.4 

திருக்கோயி லில்லாத திருவி லூருந் 
திருவெண்ணீ றணியாத திருவி லூரும் 
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும் 
பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும் 
விருப்போடு வெண்சங்க மூதா வூரும் 
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும் 
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும் 
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே. 6.95.5 

பிடித்தாட்டி யோர்நாகத் தைப்பூண்ட தென்னே 
பிறங்குஞ் சடைமேற் பிறைசூடிற் றென்னே 
பொடித்தான்கொண் டுமெய்ம்முற் றும்பூசிற் றென்னே 
புகரே றுகந்தேறல் புரிந்த தென்னே 
மடித்தோட் டந்துவன் றிரையெற் றியிட 
வளர்சங்கம் அங்காந்து முத்தஞ் சொரிய 
அடித்தார் கடலங் கரைமேன் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.02 

இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே 
இறந்தார் தலையிற் பலிகோட லென்னே 
பரவித் தொழுவார் பெறுபண்ட மென்னே 
பரமா பரமேட் டிபணித் தருளாய் 
உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தங் 
கொணர்ந்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் 
டரவக் கடலங் கரைமேல் மகோதை 
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.06 

சங்கேந்து கையானுந் தாமரையின் மேலானுந் தன்மை காணாக் 
கங்கார்ந்த வார்சடைகள் உடையானை விடையானைக் கருப்ப றியலூர்க் 
கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் பலவுதிர்க்குங் கொகுடிக் கோயில் 
எங்கோனை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. 7.30.9 

நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார் 
துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர் 
பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள் 
முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே. 7.43.1 

சங்கலக்குந் தடங்கடல்வாய் விடஞ்சுடவந் தமரர்தொழ 
அங்கலக்கண் தீர்த்துவிடம் உண்டுகந்த அம்மானை 
இங்கலக்கும் உடற்பிறந்த அறிவிலியேன் செறிவின்றி 
எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.3 

கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே 
கட்டி யேபலர்க் குங்களை கண்ணே 
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே 
அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன் 
சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல 
வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி 
ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும் 
ஒற்றி யூரெனும் ஊருறை வானே. 7.54.3 

அங்கங்களும் மறைநான்குடன் விரித்தானிடம் அறிந்தோம் 
தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ்மணற் படப்பைச் 
சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி 
வங்கங்களும் உயர்கூம்பொடு வணங்கும்மறைக் காடே. 7.71.3 

அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப் 
பிறையுங்கங் கையுஞ்சூடிப் பெயர்ந்தாடும் பெருமானார் 
பறையுஞ்சங் கொலிஓவாப் படிறன்றன் பனங்காட்டூர் 
உறையுமெங்கள் பிரானாரை உணராதார் உணர்வென்னே. 7.86.2 

கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும் 
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும் 
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை 
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ 
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் 
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ 
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை 
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 8.திருவா.162 

சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத் 
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் 
செங்கனி வாயிதழுந்துடிப்பச் 
சேயிழை யீர் சிவலோகம் பாடிக் 
கங்கை இரைப்ப அராஇரைக்குங் 
கற்றைச் சடைமுடி யான்கழற்கே 
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப் 
பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 8.திருவா.208 

கூவின பூங்குயில் கூவின கோழி 
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் 
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து 
ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் 
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் 
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே 
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் 
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 8.திருவா.370 

சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே 
சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே 
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே 
ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே 
செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே 
சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே 
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே 
ஈறறி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே. 8.திருவா.642 

சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப் 
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகழிப் பாறுலவு 
துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா 
வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே. 8.கோவை.85 

உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட் 
கொள்ளும் அவரிலோர் கூட்டம்தந் தான்குனி கும்புலியூர் 
விள்ளும் பரிசுசென் றார்வியன் தேர்வழி தூரல்கண்டாய் 
புள்ளும் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே. 8.கோவை.185 

கரும்பிவர் சந்தும் தொடுகடல் முத்தும்வெண் சங்கும்எங்கும் 
விரும்பினர் பாற்சென்று மெய்க்(கு)அணி யாம்வியன் கங்கையென்னும் 
பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலம்அனைய 
கரும்பன மென்மொழி யாரும்அந் நீர்மையர் காணுநர்க்கே. 8.கோவை.248 

வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்கள் அன்பில் 
செல்லிகைப் போதின் எரியுடை யோன்தில்லை அம்பலம்சூழ் 
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்(டு) ஊதவிண் தோய்பிறையோ(டு) 
எல்லிகைப் போதியல் வேல்வயல் ஊரற்(கு) எதிர் கொண்டதே. 8.கோவை.364 

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே 10.607 

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம் 
எண்டிசை யோகி இறைவி பராசக்தி 
அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி 
புண்டரி கத்தினுள் பூசனை யாளே. 10.1085 

கூவிய சீவன் பிராணன் முதலாகப் 
பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை 
மேவிய மாயை விரிசங்கு முத்திரை 
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே 10.1096 

சூலம்தண்டு ஓள்வாள் சுடர்பறை ஞானமாய் 
வேல்அம்பு தமருகம் மாகிளி விற்கொண்டு 
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு 
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே 10.1398 

அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச் 
சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று 
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப் 
பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே 10.2356 

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில் 
விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக் 
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும் 
அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே 10.2924 

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் 
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும் 
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம் 
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத் 
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை 
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் 
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் 
இடமாந் தடாரி படகம் - இடவிய 
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் 
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே 
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் 
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300 

பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர் 
விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க 
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி 
அரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி 12.0106 

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி 
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி 
பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் 
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581 

பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து 
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் 
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் 
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341 

அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச் 
சங்கம் படகம் கருவி தாரை முதலான 
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் 
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் 12.1931 

தம் திரு மாளிகையின் கண் எழுந்து அருளிப் புகும் பொழுது சங்க நாதம் 
அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் 
சுந்தரப் பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் 
பைந்தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழிப் பவள வாயார் 12.1996 

திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப் 
பெரு மறை ஓசை மல்கப் பெரும் திருக் கோயில் எய்தி 
அரு மறைப் பொருள் ஆனாரைப் பணிந்து அணிநல் சங்கத்தின் 
தரு முறை நெறி அக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார் 12.2017 

சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் 
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ 
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் 
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 12.2101 

சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க 
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத் 
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று 
பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார் 12.2182 

பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் 
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் 
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் 
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப 12.2518 

சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழைக் கரும்பு எங்கும் 
கொங்கு எங்கும் நிறை கமலக் குளிர் வாசத் தடம் எங்கும் 
அங்கு அங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும் 
எங்கும் எங்கும் மலர்ப் படுகர் இவை கழிய எழுந்து அருளி 12.2524 

பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி 
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன 
வில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு 
எல்லையில் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத 12.2641 

சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து சிவபெருமாள் தனைப் பரவிச் செல்லும் போது 
சார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்கை சார்தலும் மற்ற அது அறிந்த சைவர் எல்லாம் 
ஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தாரை அளவு இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப் 
பார் குலவு தனக் காளம் சின்னம் எல்லாம் பர சமய கோள் அரி வந்தான் என்று ஊத 12.2802 

சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம் 
வங்கியம் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம் 
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம் 
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே 12.3097 

எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும் 
பொழிந்தன விசும்பில் விண்ணேர் கற்பகப் புதுப்பூ மாரி 
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கி 
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம் 12.3116 

பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப 
மன்னிய தரளப் பத்தி வளர் மணிச் சிவிகை நின்றும் 
பன் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது 
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார் 12.3124 
 

 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்