logo

|

Home >

information-to-know >

paani-thirumurai-musical-instruments

பாணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)

Paani - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.Here is the list of the instruments.

 

Instrument Reference
பாணி துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.6 

அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்
பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்
சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே. 1.43.2. 

பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின்
எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர்
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக்
கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே. 1.101.3 

பாரிடம் பாணிசெய்யப் பறைக்கட்செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடலாடல் இலயஞ்சிதை யாதகொள்கைத்
தாரிடும் போர்விடையன் தலைவன்றலை யேகலனா
ஊரிடும் பிச்சைகொள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே. 3.57.2 

விலகினார் வெய்யபாவம் விதியாலருள் செய்துநல்ல
பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசிநீர்கொண் டடிமேல்அல ரிட்டுமுட்டா
துலகினா ரேத்தநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே. 3.57.5 

கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக மேத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட ஆடவல பால்மதியினான்
மண்ணின்மிசை நேரில்மழ பாடிமலி பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுட னாதலது மேவலெளிதே. 3.73.4 

உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு வுமையோ டுடனாகிச்
சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச் சுடர்ச்சோதி நின்றிலங்கப்
பண்ணவண் ணத்தன பாணிசெய்யப் பயின்றா ரிடம்போலும்
வண்ணவண் ணப்பறை பாணியறா வலம்புர நன்னகரே. 3.103.6 

ஓருடம் பிருவ ராகி 
ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
பாரிடம் பாணி செய்யப் 
பயின்றஎம் பரம மூர்த்தி
காரிடந் தில்லை தன்னுட் 
கருதுசிற் றம்ப லத்தே
பேரிடம் பெருக நின்று 
பிறங்கெரி யாடு மாறே. 4.22.6 

சூடினார் கங்கை யாளைச் 
சூடிய துழனி கேட்டங்
கூடினாள் நங்கை யாளும் 
ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம் 
பாடிய பாணி யாலே
ஆடினார் கெடில வேலி 
அதிகைவீ ரட்ட னாரே. 4.27.2 

பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும் 
பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக் 
கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே 
றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப் 
பருப்பத நோக்கி னாரே. 4.58.8 

கொக்கரை தாளம் வீணை 
பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் 
ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் 
மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் 
நாகஈச் சரவ னாரே. 4.66.9 

பழகவோ ரூர்தி யரன்பைங்கட் 
பாரிடம் பாணிசெய்யக்
குழலும் முழவொடு மாநட 
மாடி உயரிலங்கைக்
கிழவன் இருபது தோளும் 
ஒருவிர லாலிறுத்த
அழகன் அடிநிழற் கீழதன் 
றோவென்றன் ஆருயிரே. 4.84.11 

அட்டுமின் இல்பலி யென்றென் 
றகங்கடை தோறும்வந்து
மட்டவி ழுங்குழ லார்வளை 
கொள்ளும் வகையென்கொலோ
கொட்டிய பாணி யெடுத்திட்ட 
பாதமுங் கோளரவும்
நட்டநின் றாடிய நாதர்நல் 
லூரிடங் கொண்டவரே. 4.97.1 

கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார்
ஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே. 5.5.7 

பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர்
தூணி யார்விச யற்கருள் செய்தவர்
மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்
பேணி யாரவர் பேரெயி லாளரே. 5.16.10 

ஊனி லாவி இயங்கி உலகெலாம்
தானு லாவிய தன்மைய ராகிலும்
வானு லாவிய பாணி பிறங்கவெங்
கானி லாடுவர் கச்சியே கம்பரே. 5.47.3 

கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப் 
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல் 
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக் 
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே. 5.92.1 

கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி. 6.6.2 

விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
பலபலவும் பாணி பயின்றான் றானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
என்னுச்சி மேலானாம் எம்பி ரானாங்
கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.9

முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
மூவுலகுந் தாமாகி நின்றார் போலுங்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங்
கல்லலகு பாணி பயின்றார் போலுங்
கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர் 
குற்றேவல் தாமகிழ்ந்த குழகர்போலும்
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.1.

சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்
தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்
அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்
அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்
பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்
பலபலவும் பாணி பயில்கின் றான்காண்
மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. 6.49.1 

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்
பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்
கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண்
கட்டங்கள் காண்கையிற் கபால மேந்திப்
பறையோடு பல்கீதம் பாடி னான்காண்
ஆடினான் காண்பாணி யாக நின்று
மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. 6.49.6

கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறைப டாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்
கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
ஓண காந்தன் றளியு ளீரே. 7.5.5 

எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பென்னும் 
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் 
நண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடை முதற்கதியில் 
பண்ணமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார் 12.0953 

தான நிலைக் கோல் வடித்துப் படி முறைமைத் தகுதியினால் 
ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை 
மான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்க 
ஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார் 12.2033 

ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று 
பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கிக் 
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து 
ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார் 12.4216 
 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்