logo

|

Home >

information-to-know >

kokkarai-thirumurai-musical-instruments

கொக்கரை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

Kokkarai - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. Here is the list of the instruments.

Kokkarai kokarai music instrument

Instrument Reference
கொக்கரை மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துமை யாள்வெருவ 
அக்கர வாமையேன மருப்போடவை பூண்டழகார் 
கொக்கரை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா 
எக்கரை யாருமேத்த இருந்தானவன் எம்மிறையே. 3.59.4 

கல்லவடம் மொந்தைகுழல் தாளமலி கொக்கரைய ரக்கரைமிசை 
பல்லபட நாகம்விரி கோவணவர் ஆளுநகர் என்பரயலே 
நல்லமட மாதரரன் நாமமும் நவிற்றிய திருத்தமுழுகக் 
கொல்லவிட நோயகல்த ரப்புகல்கொ டுத்தருளு கோகரணமே. 3.79.7 

அக்கினோ டரவரை யணிதிகழ் ஒளியதோ ராமைபூண் 
டிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர் 
கொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதோர் சரிதையர் 
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே. 3.85.7 

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் 
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும் 
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும் 
நக்கரை யுருவர் போலும் நாகஈச் சரவ னாரே. 4.66.9 

விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு 
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை 
வடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந் 
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 4.111.8 

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி 
பக்க மேபகு வாயன பூதங்கள் 
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய் 
அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே. 5.7.1 

குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை 
விரவி னார்பண் கெழுமிய வீணையும் 
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம் 
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே. 5.51.7 

குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை 
குறட்பூதம் முன்பாடத் தானா டும்மே 
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து 
கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே 
எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே 
ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும் 
அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே 
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.7 

நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி 
நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு 
கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட் டியுங் 
குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை 
நல்லாலை நல்லூரே தவிரே னென்று 
நறையூரிற் றாமுந் தவிர்வார் போலப் 
பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப் 
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.8 

திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் 
தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற் 
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை 
கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப் 
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப் 
பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும் 
அருமணியை ஆரூரி லம்மான் றன்னை 
அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.1 

ஆறேறு செஞ்சடையெம் ஆரூ ரன்காண் 
அன்பன்காண் அணிபழனம் மேயான் றான்காண் 
நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண் 
நிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண் 
கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண் 
கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண் 
மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண் 
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. 6.49.4 

தக்கனது வேள்விகெடச் சாடி னானைத் 
தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக் 
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக் 
கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை 
அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை 
அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை 
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை 
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.7 

குழையார் திருத்தோடு காதிற் கண்டேன் 
கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன் 
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன் 
ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன் 
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன் 
தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன் 
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன் 
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.7 

தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி 
கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர் 
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால் 
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.9 

விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங் 
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர் மகிழ்வீர் 
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் 
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.6 

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் 
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும் 
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம் 
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத் 
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை 
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் 
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் 
இடமாந் தடாரி படகம் - இடவிய 
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் 
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே 
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் 
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300 

 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்