logo

|

Home >

information-to-know >

kinnaram-thirumurai-musical-instruments

கின்னரம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

Kinnaram - Ancient music instruments mentioned in thirumurai

Thirumurais composed in the first millenium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today. Here is the list of the instruments.

 

Instrument Reference
கின்னரம் மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி 
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து 
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்ன 
கின்னரங் கேட்டு கந்தார் கெடிலவீ ரட்ட னாரே. 4.28.10 

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி யோதப் 
பண்ணினார் கின்ன ரங்கள் பத்தர்கள் பாடி யாடக் 
கண்ணினார் கண்ணி னுள்ளே சோதியாய் நின்ற எந்தை 
மண்ணினார் வலங்கொண் டேத்தும் மாமறைக் காட னாரே. 4.33.5 
கீதராய்க் கீதங் கேட்டுக் கின்னரந் தன்னை வைத்தார் 
வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார் 
ஏதராய் நட்ட மாடி இட்டமாய்க் கங்கை யோடு 
மாதையோர் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே. 4.33.7 

பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார் 
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார் 
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் 
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே. 4.38.9 

விண்ணிடை விண்ண வர்கள் விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப் 
பண்ணிடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்டார் 
கண்ணிடை மணியி னொப்பார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் 
எண்ணிடை யெழுத்து மானார் இலங்குமேற் றளிய னாரே. 4.43.3 

தளருங் கோளர வத்தொடு தண்மதி 
வளருங் கோல வளர்சடை யார்க்கிடங் 
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக் 
களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே. 5.19.1 

தளரும் வாளர வத்தொடு தண்மதி 
வளரும் பொற்சடை யாற்கிட மாவது 
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறாக் 
களரி யார்கடம் பூர்க்கரக் கோயிலே. 5.20.7 

ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை 
கீதங் கின்னரம் பாடக் கெழுவினான் 
பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர் 
ஆதி யாயிடும் ஆனைக்கா அண்ணலே. 5.31.10 

முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவே 
இரவி னின்றெரி யாடலு நீடுவான் 
நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக் 
கரவும் பூணுதல் அம்ம அழகிதே. 5.55.9 

விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப் 
படுத்த போது பயனிலை பாவிகாள் 
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை 
எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே. 5.86.2 

வந்து எழும் மங்கலமான வான் அகத் துந்துபி முழக்கும் 
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும் 
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசைமுழக்கும் 
அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க 12.1979 

விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர் 
அஞ்சனம் நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர் 
தஞ்சுடர் விமானம் ஏறித் தழைத்த ஆதரவின் ஓடு 
மஞ்சுறை விசும்பின் மீது மாண அணி காணச் சென்றார் 12.3102 

 

Related Content

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

ஆகுளி-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இடக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

இலயம்-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்

உடுக்கை-திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்