logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பாண்டிக்கொடுமுடி

இறைவர் திருப்பெயர்: கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர்.

இறைவியார் திருப்பெயர்: பண்மொழிநாயகி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : காவிரி, பிரமதீர்த்தம், தேவதீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், பரத்வாஜர், அகத்தியர் முதலியோர்

Sthala Puranam

thirupandi kodumudi temple

  • ஆதிசேஷனுக்கும்,வாயுவிற்கும் நடந்த வல்லமைப் போட்டியில்,ஆதிசேஷனால் முழுமையாக மூடப்பட்டிருந்த மேருமலையிலிருந்து ஐந்து மணிகள் சிதறிச் சிகரங்களாக விழுந்தன.அவற்றுள், வைரம் இத் தலமாகும்.ஏனயவை1.சிவப்பு மணி-திருவண்ணாமலை,2.மரகதம்-திரு ஈங்கோய்மலை,3.மாணிக்கம்-திரு வாட்போக்கி,4.நீலம்-பொதிகை மலை.

     

  • பரத்வாஜருக்கு, ஈசன் முயலகன் இல்லாமல் நடனக் காட்சி அருள் புரிந்த தலம்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -	1. பெண்ணமர் மேனியினாரும் (2.69);

                      அப்பர்      -	1. சிட்டனைச் சிவனைச் (5.81);

                      சுந்தரர்     -	1. மற்றுப் பற்றெனக் கின்றி (7.48); 

பாடல்கள்      :      அப்பர்     -        கடுவெளியோ (6.82.7); 

                     சேக்கிழார்   -        அப்பதியின் கண் (12.28.337 & 338) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                            பரவி அப்பதிகத் (12.29.85,86 & 87) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

Specialities

 

  • இத்தலம் மும்மூர்த்தித் தலம் என்பர்.

     

  • இக்கோவிலில் எட்டு கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் திருச்சி - ஈரோடு இரயில் பாதையில் உள்ள முக்கிய இரயில் நிலையமாகும். கொடுமுடி என தற்போது வழங்கப்படுகின்றது. இரயில் நிலையத்திலிருந்து 1-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. திருச்சி, கரூர் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 04204 - 222375

Related Content