logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பரங்குன்றம்

இறைவர் திருப்பெயர்: பரங்கிரிநாதர்.

இறைவியார் திருப்பெயர்: ஆவுடைநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சரவணப்பொய்கை, இலட்சுமி தீர்த்தம், பிரமகூபம். காசி தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், பராசரமுனிவரின் புதல்வர், நக்கீரர், சிபிமன்னன், பிரம்மா ஆகியோர்.

Sthala Puranam

Tirupparankunram temple

  • இத்தலம் சிவத்தலமாயினும், இன்றைய நடைமுறையில் முருகனுக்குரிய சிறப்புதலமாகவே வழிபடப்படுகின்றது.

     

  • முருகப்பெருமான் தெய்வயானையை மணம் புரிந்த பதி.

     

  • 11 கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. ஐரோப்பிய படைகளின் இடிபாடுகளிலிருந்து கோயிலை காப்பதற்காக முத்துக் கருப்பன் மகன் செட்டி என்பவன், கோபுரத்திலிருந்து விழுந்து இறந்துவிட, அவன் குடும்பத்தாருக்கு இறையிலியாக நிலங்கள் அளித்த செய்தியை கல்வெட்டு கூறகிறது.

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -	1. நீடலர்சோதி வெண்பிறையோடு (1.100); 

                      சுந்தரர்      -	   கோத்திட்டையுங் கோவலுங் (7.002); 

பாடல்கள்      :    சம்பந்தர்     -       அண்ணாமலை (2.39); 

                      அப்பர்       -       திண்குணத்தார் (6.16.4); 

        பட்டினத்துப் பிள்ளையார்  -       பருப்பதம் (11.30.58) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;  

                    சேக்கிழார்     -       தேன் நிலவு பொழில் (12.28.884) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                            பரமர் திருப்பரம் குன்றில் (12.37.102 & 103) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.

Specialities

 

  • முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளுள் முதலாவதாக விளங்கும் தலம்

 

  • நக்கீரர் வாழ்ந்த தலம்.

 

  • முருகப்பெருமானின் (ஞான) வேலுக்கு பாலபிஷேகம் செய்வது தனிச்சிறப்பு.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மதுரைக்குப் பக்கத்தில் உள்ளது. மதுரையிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன. தொடர்புக்கு :- 0452 - 2482248.

Related Content