திற்பரப்பு என்னும் சொல் ஸ்ரீவிசாலம் என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்ததாகச் சொல்கின்றனர். ஸ்ரீ - திரு; விசாலம் - பரப்பு சிறப்பாக அமைந்த பரந்த இடம் என்பது இதன் பொருள்.
வீரபத்திரரும் காளியும் தட்சனை வதை செய்த பிறகு இயற்கை எழில் கொஞ்சும் திற்பரப்பு ஊரில் அமர்ந்தனர்.
Specialities
பன்னிரு சிவாலய ஓட்ட ஆலயங்களில் மூன்றாவது திற்பரப்பு.
குமரியில் உள்ள அருவி விழும் இயற்கை எழில் கொஞ்சும் இடம்.
இக்கோயில் பிரதோஷ பிரசாதத்திற்காக திருவிதாங்கூர் அரசர் காத்திருப்பார்.
அருவிபாயும் பகுதியில் ஒரு குகை உள்ளது. உள்ளே இரண்டு சிறிய அறைகள் உள்ளன. ஒன்று பத்ரகாளி கோயில், இங்கு காளி புடைப்பு சிற்பமாக இருக்கிறாள்.
கல்வெட்டுக்கள்: இக்கோயிலில் இரண்டு கல்லெடுக்கள் கிடைத்துள்ளன. கல்வெட்டு, மதுரையைச் சார்ந்த கவிஜடாதரன் இக்கோயிலுக்கு வந்திருக்கிறான் என்பதையும், அவன் விளக்குகள் நிபந்தம் அளித்ததையும் கூறும்.
ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. செப்பேடு கி.பி. 9 ஆம் நூற்றாண்டினது. ஆய் அரசன் கோக்கருநந்தடக்கன் வரலாற்று நிகழ்ச்சியை விளக்கும் செப்பேடு.
திருவிழா பங்குனி மாதம் 10 நாள் திருவிழா. திருவிழாவில் திருவாதிரையில் பாட்டும், முளைப்பாரி சடங்கும் உண்டு. மகாசிவராத்திரி விழாவும் நடக்கிறது.
Contact Address
Related Content
Pannippagam Sri Krathamurthi temple
Thirparappu Virabadhreswarar temple
திருவிடைக்கோடு சடையப்பர் (மகாதேவர்) ஆலயம்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் திருக்கோயில் (Kanyakumari Guhanat