logo

|

Home >

hindu-hub >

temples

திருவாழ்கொளிப்புத்தூர்

இறைவர் திருப்பெயர்: மாணிக்க வண்ணர், இரத்தினபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: வண்டமர் பூங்குழலி, பிரமகுந்தளாம்பாள்.

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், திருமால், அர்ச்சுனன், துர்க்கை, வண்டு, வாசுகி முதலியோர்

Sthala Puranam

entrance of the temple

 

இறைவன் அர்ச்சுனனை ஆட்கொள்ளவேண்டி, அவன் தன் வாளாயுதத்தை ஒளித்துவைத்திருந்த இடத்தில் வாசுகியை ஏவி, அவ்வாளை ம¨றக்கும்படிச் செய்தார். அர்ச்சுனன், அவ்வாள் வேண்டி இறைவனையும், வாசுகியையும் வழிபட்டு வாளைப்பெற்றான். வாசுகி இருந்த இடம் புற்றாதல¡ல், இது வாளளிபுற்றூர் எனப்படுகிறது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. பொடியுடை மார்பினர் (1.40),                                         2. சாகை ஆயிரமுடையார் (2.94);                      சுந்தரர்       - 1. தலைக்கலன் தலைமேல் (7.57); பாடல்கள்      :     அப்பர்       -      மறைக்காட்டார் (6.51.7),                                           மண்ணிப் படிக்கரை (6.70.6);                     சேக்கிழார்     -      மற்ற நற்பதி (12.28.251) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                            கண் நுதலார் விரும்பு (12.29.118 & 119) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

தல மரம் : வாகை மரம்

Specialities

 

துர்க்கைக்கு வழிபாடு இத் தலத்தில் சிறப்பாகும்.

 

வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிஷேகம் நடைபெறுகிறது.

Contact Address

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு இது, இன்று திருவாளப்புத்தூர் எனப்படுகிறது. மயிலாடுதுறை - சிதம்பரம் இரயில் பாதையில், நீடூர் இரயில் நிலையத்திற்கு வடக்கே 9-கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை, மணல்மேடு ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்புக்கு :- 98425 38954 , 04364 - 254 879.

Related Content