இறைவர் திருப்பெயர்: அசலதீபேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: மதுகரவேணி
தல மரம்:
தீர்த்தம் : குமரித்துறை எனப்படும் அகண்ட காவிரி.
வழிபட்டோர்:
Sthala Puranam
1. "அகண்ட காவிரியின் கரையில் சிவாலயம் உள்ளது இதுவே குமரிக் கொங்கு என்று அப்பர் க்ஷேத்திரக் கோவையில் குறிப்பிடும் தலம்" என்றும், "மோகனூர் சிவபெருமானுக்குக் "குமரீசர்" என்று பெயராதலால் இவ்வூர் மோகனூராக இருத்தல் வேண்டும்" என்றும் சொல்லப்படுகிறது.
எனவே, "குமரிக் கொங்கு", "கொங்கு குமரித்துறை" ஆகிய இரண்டும் ஒன்றே என்பதும், அது இன்று வழங்கும் 'மோகனூரே' என்பதும் புலனாகிறது.
'ஞானப் பழம்' கிடைக்கவில்லை என்று கோபித்து வந்த முருகனைத் தேடி, சுவாமியும் அம்பிகையும் வந்தபோது, இவ்வூரில் முருகனைக் கண்டு மகிழ்ந்தனராம். ஆதலின் இது "மகனூர்" என்பது மருவி "மோகனூர்" என்றாயிற்று என்பது ஒரு செவி வழிச் செய்தியாகவுள்ளது.
Specialities
மூலத்தானத்தில் - சுவாமிக்கு முன்னிலுள்ள தீபம், எவ்வளவு காற்றடித்தாலும் அசைவதில்லை. எனவே சுவாமிக்கு 'அசலதீபேஸ்வரர்' என்று பெயருண்டாயிற்று.
Contact Address