logo

|

Home >

hindu-hub >

temples

கருந்திட்டைக்குடி / கரந்தட்டாங்குடி (கரந்தை) Karundhittaikkudi / Karandhattangkudi (Karandhai)

இறைவர் திருப்பெயர்: வசிஷ்டேஸ்வரர் என்கின்ற கருணாசுவாமி.

இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி

தல மரம்:

தீர்த்தம் : வசிஷ்ட தீர்த்தம்.

வழிபட்டோர்:வசிஷ்டர்

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் 'கரந்தட்டாங்குடி' என்று வழங்குகிறது. தஞ்சையின் ஒரு பகுதியாகிய 'கரந்தை' என்பதே இவ்வாறு பெயர் மாறியுள்ளது.

     

  • கோயிலுக்கு எதிரில் உள்ள குளத்தில் நீராடி கரிகாலன் கருங்குஷ்டம் நீங்கப் பெற்றதால் அவனுக்கு அருள்புரிந்த இறைவனுக்கு கருணாசுவாமி என்ற பெயரும் வழங்கலாயிற்று.

  • வைப்புத்தலப் பாடல்கள்	: அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3).

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • கருங்கல் கோயில்; வாவல் நெற்றி மண்டப அமைப்பில் உள்ளது; கரிகாற் சோழன் திருப்பணி; சிற்பச் செறிவுடன் விளங்குகிறது.

     

  • சந்நிதிக்கு எதிரில் வசிஷ்ட தீர்த்தம் உள்ளது.

     

  • கருவறைச் சுவரில் கல்வெட்டுக்கள் நிரம்பவுள்ளன.

     

  • இக்கோயில் கல்வெட்டுக்களில் 'கருந்திட்டைக்குடி' என்றும்; 'கருவிட்டக்குடி மகாதேவர்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

     

  • வசிஷ்ட தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாள்கள் மூழ்கி, வசிஷ்டேஸ்வரரை வழிபட்டால் கருங்குட்டம் முதலான சரும நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

     

  • கோயில் நான்கு மூலைகளிலும் வெளிப்பிராகாரத்தில் நான்கு விநாயகர் சந்நிதிகள் உள்ளன.

 

appar in karanthai temple gangalar in karanthai temple

 

 

gangadharar in karanthai temple gangaladevar in karanthai temple

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில், தஞ்சையிலிருந்து 2 கி.மீ. சென்று 'கரந்தை'யை அடைந்து, இக்கோயிலை அடையலாம்.

Related Content