logo

|

Home >

hindu-hub >

temples

ஆன்பட்டிப்பேரூர் (பேரூர்)

இறைவர் திருப்பெயர்: பட்டிப்பெருமான், பட்டீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பச்சைநாயகி, மரகதவல்லி

தல மரம்:

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், காஞ்சிமா நதி.

வழிபட்டோர்:காமதேனு, பட்டி

Sthala Puranam

  • காமதேனுவும், அவள் மகள் 'பட்டி' என்பவளாலும் வழிபடப்பட்ட பதி.

     

  • சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குழம்படி தழும்பை இப்போதும் காணலாம்.

     

  • பேரூர் நடராசப் பெருமானைத் தரிசித்த சுந்தரர், தில்லை சென்று வணங்கியபோது, அப்பெருமான் பேரூர்ப் பெருமானாகவே காட்சி தந்தார் என்பது வரலாறு.

     

  • நடராசர் அம்பலத்தில் எழுந்தருளியுள்ள அம்பலவாணப் பெருமான், கோமுனிக்கும் 'பட்டி'க்கும் ஆனந்த தாண்டவ தரிசனம் அருளிய பெருமானாவார்.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - ஆரூர் தில்லையம் (2-039-1). 
    
    				  அப்பர் - 1. சிந்தும் புனற்கெடில (6-07-10), 
    					   2. அஞ்சைக் களத்துள்ளார் (6-51-8), 
    					   3. ஆரூர்மூ லத்தானம் (6-70-2). 
    
    				  சுந்தரர் - 1. ஆரூர் அத்தா ஐயாற் (7-47-4), 
    					   2. பாரூரும் அரவல்குல் (7-90-10)

Specialities

  • இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • மணிவாசகரின் திருக்கோவையாரிலும் இத்தலம் போற்றப்படுகிறது.

     

  • அருணகிரிநாதர் இங்குள்ள முருகனைப் போற்றித் திருப்புகழ் அருளியுள்ளார்.

     

  • நொய்யலாற்றின் கரையில் உள்ள தலம்.

     

  • இத்தலத்திற்குக் காஞ்சிவாய்ப்பேர், மேலச்சிதம்பரம், இனாம்பேரூர், அரசம்பலம் என பெயர்கள் இருந்ததாகத் தெரிகிறது.

     

  • தலவரலாறு தொடர்புடையதால் - இத்தலம் மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும் பெருமை வாய்ந்தது.

     

  • சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன.

     

  • அம்பாள் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது. மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதியும் இருக்கிறது.

     

  • சோமாஸ்கந்த வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார்.

     

  • சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும்; ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம்.

     

  • இங்கு நடராஜரின் முகத்தில் குறும்பு பார்வை தெரிகிறது - மேடான கதுப்பு கன்னங்களும், பின்புறத்தில் தாழ் சடையும், ஆடி முடியப்போகும் நிலையில் கால்களும் தரையை நோக்கி மிகவும் தாழ்ந்துள்ளன.

     

  • முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞானபைரவர் இங்கு அருள் செய்கிறார்.

     

  • இத்தலத்தில் நாற்று நடும் திருவிழா விசேஷம்.

     

  • இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பதும் அழியாப்புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.

     

  • ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார்.

     

  • நொய்யல் நதியில் இறந்தவர்களின் எலும்புகளையிட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறிவிடும் என்பது ஐதீகம்.

     

  • இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் "நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர்.

     

  • பேரூர்த் தலத்திற்குறிய சிறப்புக்களாக எழும்பு கல்லாதல், இறவாப்பனை, பிறவாப்புளி - இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைப்பதில்லை, திருநீற்றுமேடு, செம்பு பொன்னாதல், இறக்கும் உயிர்கள் வலச் செவியை மேல்வைத்து இறத்தல், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது போன்றச் சிறப்புச் செய்திகள் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

     

  • இங்குள்ள நடராசர் அம்பலம் - நடராச சபை, வேறெங்கும் காண முடியாத சிற்பக்கலை நுட்பங்கள் வாய்ந்தது. இம்மண்டபம் முழுவதுமே - ஒவ்வொரு பகுதியும் சிற்பக் கலையழகுடன் மிளிர்கின்றது. இச்சபை நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு வரலாறு கூறுகிறது.

     

  • கோயிலுக்கு எதிரே 16 வளைவுகளைக் கொண்ட திருக்குளம் மற்றும் இறவாப்பனையும், பிறவாப்புளியும் உள்ளது.

     

  • சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் இத்தலம் "மேலைச்சிதம்பரம்' என அழைக்கப்படுகிறது.

     

  • பேரூர் புராணத்தை திருவாவடுதுறை ஆதீனம் கவிராக்ஷ கச்சியப்பமுனிவர் எழுதியுள்ளார்.

     

  • கரிகாற்சோழன் இத்தலத் திருக்கோயிலைக் கட்டினான் என்று சோழர்களின் பூர்வபட்டயம் கூறுகிறது.

     

  • இத்தலம் "பேரூர் நாட்டுக் கோவன்புத்தூர்" என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கோயம்புத்தூருக்குப் பக்கத்தில் உள்ளது. அடிக்கடி கோவையிலிருந்து பேருந்து செல்கிறது.

Related Content

திருக்கானப்பேர் - திருக்கானப்பேரூர் (காளையார்கோயில்)

ஏமப்பேறூர் - (திருநெய்ப்பேறு)

Perur Sree Pattishwarar temple