logo

|

Home >

hindu-hub >

temples

திருவலிவலம் திருக்கோயில் தல வரலாறு Sthala puranam of Thiruvalivalam Temple

இறைவர் திருப்பெயர்: இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்.

இறைவியார் திருப்பெயர்: வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி.

தல மரம்:

தீர்த்தம் : காரணர் கங்கை, சங்கர தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர்,சேக்கிழார், சூரியன், கரிக்குருவி(வலியன்),காரணமாமுனிவர் முதலியோர்.

Sthala Puranam

  • வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.

     

  • சூரியன், வலியன், காரணமாமுனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

  • valivalam temple

  • valivalamkoil vimAnam

  • valivalamkoil vimAnam

  • valivalamkoil pirakAram

  • valivalamkoil entrance bottom view

  • valivalamkoil pirakAram

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -	1. ஒல்லையாறி உள்ளமொன்றிக் (1.50),
                                        2. பூவியல் புரிகுழல் வரிசிலை (1.123);

                     அப்பர்       - 	1. நல்லான்காண் நான்மறைக (6.48);

                    சுந்தரர்       - 	1. ஊனங் கைத்துயிர்ப் பாயுல (7.67); 

பாடல்கள்     :     அப்பர்       -        பூவிரியும் (6.20.7), 
                                           சிறையார் (6.22.3), 
                                           மறைக்காட்டார் (6.51.7), 
                                           புலிவலம் (6.70.11), 
                                           வானவனை (6.90.8); 

                  சேக்கிழார்    -         நீர் ஆரும் சடை முடியார் (12.21.228) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                           மல்லல் நீடிய வலிவலம் (12.28.515) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                           அங்கு நின்றும் (12.29.43) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

Specialities

  • வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.

     

  • இது கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்.

     

  • தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.

     

  • இவ்விறைவனை, இறைவியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் 'வலிவலமும்மணிக்கோவை' என்னும் நூலொன்று, "தமிழ்தாத்தா" திரு. உ.வே. சாமிநாத ஐயர் அவர்களால் வெளிடப்பட்டுள்ளது.

     

  • இக்கோயிலில் சோழர் காலத்திய ஒன்பது கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.

  • valivalam temple with holy theertha

  • valivalam temple's Sthala viruksha

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்; இரண்டுமே நல்ல பாதைகள். திருவாரூரிலிருந்து 10-கி. மீ. தொலைவு. தொடர்புக்கு :- 04366 - 205 636.

Related Content