logo

|

Home >

hindu-hub >

temples

திருஅவளிவணல்லூர் கோயில் தலவரலாறு Sthala puranam of Avalivanallur Temple

இறைவர் திருப்பெயர்: சாட்சிநாதர், தம்பரிசுடையார்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, சௌந்தரியவல்லி.

தல மரம்:

தீர்த்தம் : சந்திர புஷ்கரணி.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார்,திருஅவளிவணல்லூர்வராகமூர்த்தி(திருமால்), காசிபர், அகத்தியர் முதலியோர்

Sthala Puranam

  • பஞ்சாரண்யத் தலங்களுள் இரண்டாவது.

  • சாட்சிநாதபுரம், புல்லாரண்யம், பாதிரிவனம் ஆகிய பெயர்கள்  இத்தலத்திற்கு உண்டு.

  • பிரமனும் சூரியனும்,அகத்திய முனிவரும்  வழிபட்ட தலம் இது. 

  • வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றார். 

  • இத் தலத்தில் பூஜித்துவந்த சிவாச்சாரியாரின் மகள்கள் இருவருள் மூத்தவள், அவள் கணவன் காசியாத்திரை சென்றுவரும் காலத்திற்குள் அம்மைவார்க்கப்பெற்று, உடல் நலம்கெட்டு, உருவின் நிறமாறி இருக்க, காசியாத்திரை சென்றுவந்த கணவன், அவளின் தோற்றத்தைப் பார்த்து, "இவள் என் மனைவியல்லள். இளையவளே என் மனைவி" என்று வாதிட, இறைவன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மூத்தவளே இவரது மனைவி என்னும் பொருள்பட அவள் இவளெனச் சுட்டிக்காட்டிய காரணத்தால், நல்லூர் என்னும் பெயரோடு, அவள் இவள் என்னும் தொடரையும்ச் சேர்த்து, அவளிவணல்லூர் என்ற பெயர் பெற்றது. இத் தல இறைவனின் கர்ப்பகிரகத்தில் இச் செய்தியை உணர்த்தும் பிரதிமைகள் உள்ளன.

     

  • அம்மை வார்க்கப்பெற்ற சிவாச்சாரியாரின் மூத்தமகள், இத் தல தீர்த்தத்தில் மூழ்கி, உடல் வனப்பும், இழந்த கண்ணையும் பெற்றாள்.

  • Sri Satchinathar temple, Avalivanallur.

 

திருமுறை பாடல்கள்	: 

பதிகங்கள்  :  சம்பந்தர்  -  1. கொம்பிரிய வண்டுலவு (3.82); 

                அப்பர்    -  1.  தோற்றினான் எயிறுகவ்வி (4.59); 

பாடல்கள்  :  சேக்கிழார் -     பதிக இன்னிசை (12.28.373) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

Specialities

The holy pond of Sri Satchinathar temple, Avalivanallur.

  • இக்கோவிலில், நான்கு கல்வெட்டுகள் உள்ளன. இரண்டு சோழர் காலத்தவை. மற்றவை மிகச் சிதைந்துள்ளன.

  • முல்லைவனமாகிய திருக்கருகாவூரில்  உஷக் காலத்திலும், பாதிரி வனமாகிய அவளிவ நல்லூரில்  கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில் )   உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில் ) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இஃது, சாலியமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே 10-கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப்பேருந்துகளும், தஞ்சாவூரிலிருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப்பேருந்துகளும் இத்தலத்தின் வழியாகவே செல்கின்றன. தொடர்புக்கு :- 0437 - 275 441.

Related Content