logo

|

Home >

hindu-hub >

temples

திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) கோயில் தலவரலாறு Sthala puranam of Aradhaipperumpazhi (Ariduvaramangalam) Temple

இறைவர் திருப்பெயர்: பாதாள வரதர், பாதாளேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: அலங்காரவல்லி

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், திருமால் முதலியோர்

Sthala Puranam

  • இத்தல இறைவன் முன்பு, திருமால் பன்றி வடிவம்கொண்டு பூமியைத் தோண்டி துவாரம் செய்தத் தலமாதலால், இப்பெயர் பெற்றது.

     

  • இஃது, வராக அவதாரமெத்த திருமாலின் கொம்பைப் பறித்து இறைவன் அணிந்து கொண்டத் திருத்தலமாகும்.

 

Sri Pathaleswarar temple, Aradhaipperumpazhi (Ariduvaramangalam)

 

Sri Pathaleswarar temple, Aradhaipperumpazhi (Ariduvaramangalam)
The holy pond of Sri Pathaleswarar temple, Aradhaipperumpazhi (Ariduvaramangalam)
 

 

திருமுறை பாடல்கள்	: 

பதிகங்கள்  : சம்பந்தர்  -  1. பைத்த பாம்போடு (3.30);

பாடல்கள்   :  அப்பர்    -     வீழி மிழலை (6.70.7); 

               சேக்கிழார் -     பாடும் அரதைப் பெரும்  பாழியே (12.28.403) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • மூலவருக்கு முன்னர் ஒரு பெரிய பள்ளம்  இருப்பதை இன்றும் காணலாம். 

  • இக்கோவிலில், மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு ஒன்று மட்டும் உள்ளது.

  • முல்லைவனமாகிய திருக்கருகாவூரில்  உஷக் காலத்திலும், பாதிரி வனமாகிய அவளிவ நல்லூரில்  கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில் )   உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில் ) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தற்பொழுது இத்தலம் அரித்துவாரமங்கலம் என்று வழங்கப்படுகிறது. இத்தலத்திற்கு தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோண்த்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு :- 94421 75441 , 04374 - 264 586.

Related Content