logo

|

Home >

hindu-hub >

temples

திருமருகல் கோயில் தலவரலாறு Sthala puranam of Thirumarugal Temple

இறைவர் திருப்பெயர்: மாணிக்கவண்ணர், இரத்தினகிரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: வண்டுவார் குழலி, ஆமோதாளக நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம், மாணிக்க தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர்,அப்பர், சுந்தரர்,நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், இலட்சுமி.

Sthala Puranam

  • தலமரத்தின் பெயரால், இப்பதி வழங்கப்படுகிறது.

     

  • விடந்தீண்டி இறந்த காதலனை எண்ணிப் புலம்பிய நங்கையின் குரல்கேட்டுவந்து, அவளுடைய துயரைக் கண்டு, இறந்தவனை உயிர் பெறச் செய்த திருஞானசம்பந்தர், இருவருக்கும் திருமணம் நிகழ்த்திய பதி.

  • Sri Manikkavannar temple, Thirumarugal.

  • Sri Manikkavannar temple, Thirumarugal.

  • Sri Manikkavannar temple, Thirumarugal.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -	1. அங்கமும் வேதமும் (1.06),
                                        2. சடையா யெனுமால் (2.18);

                      அப்பர்       -	1. பெருகலாந் தவம் பேதமை (5.88); 

பாடல்கள்      :    சம்பந்தர்      -      நெற்குன்றம் (2.39.9); 

                      அப்பர்       -       மங்குல் மதிதவழும் (6.02.1),
                                           செல்வப் புனற்கெடில (6.07.1), 
                                           கொடிமாட நீடெருவு (6.13.1), 
                                           நடையுடைய (6.22.5), 
                                           புலிவலம் புத்தூர் (6.70.11); 

                      சுந்தரர்      -       வீழக் காலனைக் (7.12.1), 
                                           மருகல் உறைவாய் (7.47.5); 

            நம்பியாண்டார் நம்பி  -       வயலார் மருகல் (11.35.49) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, 
                                           குழகனைப் பாடிக் (11.37.7) ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை,  
                                           ஆருயிரை மீட்டன் (11.38.28) ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, 
                                           சயமி குத்தரு (11.39.18) ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், 
                                           மன்னன் மருகல்விடம் (11.40.5) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை; 

                       சேக்கிழார்     -       சீர் தரு செங்காட்டங்குடி (12.21.240) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                               திருமருகல் நகரின் கண் (12.28.472,476,477,481,484,485 & 486) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                               உள்ளும் புறம்பும் (12.55.1) செருத்துணை நாயனார் புராணம்.

Specialities

The holy pond of Sri Manikkavannar temple, Thirumarugal.

  • கோச்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.

     

  • இத் தல இறைவனின் அருளால், தடைபட்ட திருமணங்கள் கைகூடும். மேலே குறிக்கப்பட்டுள்ள "சடையா யெனுமால்" என்ற பதிகத்தை ஓத, தடைப்பட்ட திருமணம் கூட கைகூடும்.

     

  • தஞ்சை மராட்டிய மன்னரின் கல்வெட்டு ஒன்று உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இஃது, மயிலாடுதுறை - பேரளம் இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்குக் கிழக்கே 11-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு :- 04366 - 270823.

Related Content