logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

பட்டமங்கலம் சுந்தரேசுவரர் (குருபகவான்) கோயில் Pattamangalam Sundareshwarar Temple

Om symbol

இறைவர் திருப்பெயர்: சுந்தரேசுவரர்

இறைவியார் திருப்பெயர்: மீனாக்ஷி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:மாணிக்கவாசகர்

Loading map...

Sthala Puranam

தல மரம் : ஆல மரம்

  • கைலாய மலையில் சிவபெருமான் பார்வதியுடன் வீற்றிருந்தார். அப்போது அங்கு கார்த்திகை பெண்கள் ஆறு பேர் அங்கு வந்தனர். அவர்கள் சிவபெருமானிடம் தங்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்குமாறு வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் சிவயோகிகள் யாரும் சித்திகளை விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களிடம் இச்சித்திகள் நிழல்போல் உடலோடு ஒட்டிக் கொண்டு அவர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் என்றார். அப்போது பார்வதி தேவி அவர்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்கும்படி சிவனிடம் வேண்டினார். இதனால் சிவன் கார்த்திகை பெண்களிடம் உங்களுக்கு பராசக்தியாக விளங்கும் பார்வதிதேவி அஷ்டமாசித்தியை உபதேசிப்பார் என்று கூறி பார்வதியிடம் அவர்களுக்கு இச்சித்திகளை உபதேசிக்கும் படி கேட்டுக்கொண்டார். ஆனால் கார்த்திகை பெண்களோ, பார்வதிதேவியை சிந்தனை செய்யாமல் அவள் சொன்ன அஷ்டமா சித்தியை பற்றிய உபதேசத்தை கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சக்தி கார்த்திகை பெண்களை பாறைகளாக கிடக்க கடவீர்கள் என சாபமிட்டார். இதை கண்டு அஞ்சிய பெண்கள் சிவபெருமானிடம் சாபவிமோசனம் வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் நீங்கள் பட்டமங்கலத்தில் ஆலமரத்தரடியில் கற்பாறைகளாக இருங்கள். யாம் மதுரையில் இருந்து குருவடிவில் வந்து உங்களுக்கு சாபவிமோசனம் கொடுப்போம் என்றார். அதன்படி ஆறுகார்த்திகை பெண்களும் அங்கு பாறைகளாக ஆயிரம் ஆண்டுகள் கிடந்தனர். ஏற்கனவே கூறியபடி சிவபெருமான் வந்தபோது குருவடியில் பட்டமங்கலம் வந்து கார்த்திகை பெண்களின் சாபத்தை போக்கினார். பின்னர் அவர்களுக்கு அஷ்டமா சித்திகளை உபதேசித்தார். அதன்பின் கார்த்திகை பெண்கள் சிவனையும் பார்வதியையும் பூஜித்தனர். கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்த சிவபெருமான் இங்கு குருமூர்த்தியாக ஆலமரத்தடியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பட்டமங்கலம் சுந்தரேசுவரர் கோவிலுக்கு வெளியில் இந்த குருமூர்த்தி சன்னதி உள்ளது.
  • பட்டமங்கையில் பாங்காய் இருந்து அட்டமாசித்தி அருளிய அதுவும் - கீர்த்தித்திருவகவல் 
  • இத்தலம் தேவர்களுக்கு அடைக்கலம் தந்த கடம்பவன க்ஷேத்திரம் ஆகும் 

Specialities

  • குருவடிவான சிவபெருமான் தென்புறம் நோக்கி தக்ஷிணாமூர்த்தியாக இருப்பது பொதுவாகும். பட்டமங்கையில் கிழக்கு முகமாக குருவாக அருள் பாலிக்கிறார் 
  • நாவலடிக் காளி சன்னதியும் இங்கு சிறப்பு.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டைக்கு 1 கி. மீ. தொலைவில் உள்ள ஊர்.
Loading map...

Related Content

திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)

கங்கைகொண்ட சோழபுரம்

கீழ்க்கோட்டூர் மணியம்பலம்

தஞ்சை இராசராசேச்சரம் பிரகதீஸ்வரர் கோயில்

திருவிடைக்கழி