logo

|

Home >

devotees >

references-to-eyarkon-kalikkama-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

வைய கமுற்றும் மாமழை மறந்து 

        வயலில் நீரிலை மாநிலந் தருகோம்

உய்யக் கொள்கமற் றெங்களை என்ன 

        ஒலிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்

பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் 

        பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்

செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன்

        செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.          7.55.2 

 

ஏத நன்னிலம் ஈரறு வேலி 

        ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக்

கோத னங்களின் பால்கறந் தாட்டக் 

        கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற

தாதை தாளற எறிந்ததண் டிக்குன் 

        சடைமி சைமலர் அருள்செயக் கண்டு

பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்

        பூம்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.             7.55.3 

 

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

        மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

        ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

        நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.            7.39.5 

 

பதினோறாம் திருமுறை

 

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

 

பொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர் புயல்மறந்த

கன்னம்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூர்

மன்னு மழைபொழிந் தீர்அறு வேலிகொண் டாங்கவற்கே

பின்னும் பிழைதவிர்ந் தீர்அறு வேலிகொள் பிஞ்ஞகனே.   11.54-நம்பி

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

கொற்றத் திறல்எந்தை தந்தைதன் தந்தைஎங் கூட்ட மெல்லாம்

தெற்றச் சடையாய் நினதடி யேந்திகழ் வன்தொண்டனே

மற்றிப் பிணிதவிர்ப் பான்என் றுடைவாள் உருவிஅந்நோய்

செற்றுத் தவிர்கலிக் காமன் குடிஏயர் சீர்க்குடியே.         11.35-நம்பி 

 

 

 பெரியபுராணம்

 

கோளுறு மனத்த ராகிக் குற்றுடை வாளைப் பற்ற

See Also: 1. Life history of EyarkOn kalikkAma nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

63 Nayanmar Drama- ஏயர்கோன் கலிக்காம நாயனார் - தமிழ்நாடகம்

The history of Eyarkon kalikkama Nayanar