|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
9 கறைக் கண்டன் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
50 நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்
1. தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று தம் உடலை 4069-1
அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு அடைந்த 4069-2
விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த 4069-3
நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்ததால் 4069-4
2. அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே 4070-1
தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் உய்த்து அறம் அளித்து 4070-2
சொன்னாம நெறிபோற்றிச் சுரர் நகர்க்கோன் தனைக் கொண்ட 4070-3
பொன்னாரம் அணி மார்பில் புரவலனார் பொலி கின்றார் 4070-4
3. ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்து ஏற்ற 4071-1
சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப் 4071-2
பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம் 4071-3
காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் நடக்கின்றார் 4071-4
4. எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையில் பொரு படைஞர் 4072-1
படுத்த நெடுங் கரித்துணியும் பாய் மாவின் அறு குறையும் 4072-2
அடுத்து அமர் செய் வய்வர் கரும் தலையும் மலையும் அலை செந்நீர் 4072-3
மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக 4072-4
5. வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் 4073-1
கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் 4073-2
வியக்குமுகக் கடை நாளின் மேக முழக்கு என மீளச் 4073-3
சயத்தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க 4073-4
6. தீயுமிழும் படை வழங்கும் செருக்களத்து முருக்கும் உடல் 4074-1
தோயும் நெடும் குறுதி மடுக் குளித்து நிணம் துய்த்து ஆடி 4074-2
போய பருவம் பணிகொள் பூதங்களே அன்றிப் 4074-3
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது எனப் பிறங்க 4074-4
7. இனைய கடுஞ் சமர் விளைய இகலுழந்த பறந்தலையில் 4075-1
பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக் குடைந்து 4075-2
முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப் 4075-3
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து 4075-4
8. வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கு அரசியார் 4076-1
களப மணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார் 4076-2
இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் 4076-3
அளவில் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் 4076-4
9. திரை செய் கடல் உலகின் கண் திருநீற்றின் நெறி விளங்க 4077-1
உரைசெய் பெரும்புகழ் விளக்கி ஓங்கு நெடு மாறனார் 4077-2
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே 4077-3
பரசு பெரும் சிவலோகத்தில் இன் புற்று பணிந்து இருந்தார் 4077-4
10. பொன் மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதராந் 4078-1
தென்மதுரை மாறனார் செம் கமலக் கழல் வணங்கிப் 4078-2
பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத் 4078-3
தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலைதொழுவாம் 4078-4
This webpage was last updated on 13 July 2004
|
|