thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

9 கறைக் கண்டன் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
50 நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்
1. தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று தம் உடலை 4069-1 அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு அடைந்த 4069-2 விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த 4069-3 நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்ததால் 4069-4 2. அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே 4070-1 தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் உய்த்து அறம் அளித்து 4070-2 சொன்னாம நெறிபோற்றிச் சுரர் நகர்க்கோன் தனைக் கொண்ட 4070-3 பொன்னாரம் அணி மார்பில் புரவலனார் பொலி கின்றார் 4070-4 3. ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்து ஏற்ற 4071-1 சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப் 4071-2 பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம் 4071-3 காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் நடக்கின்றார் 4071-4 4. எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையில் பொரு படைஞர் 4072-1 படுத்த நெடுங் கரித்துணியும் பாய் மாவின் அறு குறையும் 4072-2 அடுத்து அமர் செய் வய்வர் கரும் தலையும் மலையும் அலை செந்நீர் 4072-3 மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக 4072-4

5. வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் 4073-1 கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் 4073-2 வியக்குமுகக் கடை நாளின் மேக முழக்கு என மீளச் 4073-3 சயத்தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க 4073-4 6. தீயுமிழும் படை வழங்கும் செருக்களத்து முருக்கும் உடல் 4074-1 தோயும் நெடும் குறுதி மடுக் குளித்து நிணம் துய்த்து ஆடி 4074-2 போய பருவம் பணிகொள் பூதங்களே அன்றிப் 4074-3 பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது எனப் பிறங்க 4074-4 7. இனைய கடுஞ் சமர் விளைய இகலுழந்த பறந்தலையில் 4075-1 பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக் குடைந்து 4075-2 முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப் 4075-3 புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து 4075-4 8. வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கு அரசியார் 4076-1 களப மணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார் 4076-2 இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் 4076-3 அளவில் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் 4076-4 9. திரை செய் கடல் உலகின் கண் திருநீற்றின் நெறி விளங்க 4077-1 உரைசெய் பெரும்புகழ் விளக்கி ஓங்கு நெடு மாறனார் 4077-2 அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே 4077-3 பரசு பெரும் சிவலோகத்தில் இன் புற்று பணிந்து இருந்தார் 4077-4 10. பொன் மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதராந் 4078-1 தென்மதுரை மாறனார் செம் கமலக் கழல் வணங்கிப் 4078-2 பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத் 4078-3 தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலைதொழுவாம் 4078-4

This webpage was last updated on 13 July 2004

See Also:

  • ninRachIr nedumARa n^AyanAr purANam in English prose
  • The Puranam Of ninRachIr nedumARa n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page