thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
47 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
1. வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி 4046-1 வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச் 4046-2 செய்ய சடையார் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார் 4046-3 ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார் 4046-4 2. திருமலியும் புகழ் விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் 4047-1 பெருமையுடன் இனிது அமரப் பிற புலங்கள் அடிப்படுத்துப் 4047-2 தருமநெறி தழைத்து ஓங்கத் தாரணிமேல் சைவமுடன் 4047-3 அருமறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் 4047-4 3. மன்னவரும் பணி செய்ய வடநூல் தென்தமிழ் முதலாம் 4048-1 பன்னு கலைப் பணிசெய்யப் பார் அளிப்பார் அரசாட்சி 4048-2 இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழச்சி 4048-3 நன்மை நெறித் திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் 4048-4 4. தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண் 4049-1 அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்களான எலாம் 4049-2 கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த 4049-3 வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார் 4049-4 5. பெருத்தெழு காதலினால் வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த் 4050-1 திருச்சிற்றம் பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை 4050-2 நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார் 4050-3 விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் 4050-4

6. அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி 4051-1 இவ் உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்திச் 4051-2 செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே 4051-3 எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன்தமிழ் வெண்பா மொழிந்தார் 4051-4 7. இந்நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி 4052-1 பன்னெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ் 4052-2 மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார் 4052-3 கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார் 4052-4 8. பையரவ மணியாரம் அணிந்தார்க்குப் பாவணிந்த 4053-1 ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக் 4053-2 கையணிமான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய 4053-3 செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் 4053-4 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி 1. உளத்தில் ஒரு துளக்கம் இலேம் உலகு உய்ய இருண்ட திருக் 4054-1 களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு 4054-2 வளத்தின் மலி ஏழ் உலகும் வணங்கு பெரும் திருவாரூர்க் 4054-3 குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் 4054-4 திருச்சிற்றம்பலம்

பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் முற்றிற்று.


This webpage was last updated on 13 July 2004

See Also:

  • aiyadikaL kAdavarkOn n^AyanAr purANam in English prose
  • The Puranam Of aiyadikaL kAdavarkOn n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page