|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
47 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
1. வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி 4046-1
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச் 4046-2
செய்ய சடையார் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார் 4046-3
ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார் 4046-4
2. திருமலியும் புகழ் விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் 4047-1
பெருமையுடன் இனிது அமரப் பிற புலங்கள் அடிப்படுத்துப் 4047-2
தருமநெறி தழைத்து ஓங்கத் தாரணிமேல் சைவமுடன் 4047-3
அருமறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் 4047-4
3. மன்னவரும் பணி செய்ய வடநூல் தென்தமிழ் முதலாம் 4048-1
பன்னு கலைப் பணிசெய்யப் பார் அளிப்பார் அரசாட்சி 4048-2
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழச்சி 4048-3
நன்மை நெறித் திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் 4048-4
4. தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண் 4049-1
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்களான எலாம் 4049-2
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த 4049-3
வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார் 4049-4
5. பெருத்தெழு காதலினால் வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த் 4050-1
திருச்சிற்றம் பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை 4050-2
நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார் 4050-3
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் 4050-4
6. அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி 4051-1
இவ் உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்திச் 4051-2
செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே 4051-3
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன்தமிழ் வெண்பா மொழிந்தார் 4051-4
7. இந்நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி 4052-1
பன்னெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ் 4052-2
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார் 4052-3
கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார் 4052-4
8. பையரவ மணியாரம் அணிந்தார்க்குப் பாவணிந்த 4053-1
ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக் 4053-2
கையணிமான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய 4053-3
செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் 4053-4
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
1. உளத்தில் ஒரு துளக்கம் இலேம் உலகு உய்ய இருண்ட திருக் 4054-1
களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு 4054-2
வளத்தின் மலி ஏழ் உலகும் வணங்கு பெரும் திருவாரூர்க் 4054-3
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் 4054-4
திருச்சிற்றம்பலம்
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் முற்றிற்று.
This webpage was last updated on 13 July 2004
|
|