|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
46 சத்தி நாயனார் புராணம்
1. களமர் கட்ட கமலம் பொழிந்த தேன் 4039-1
குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை 4039-2
அளவும் ஆணைச் சயத் தம்பம் நாட்டிய 4039-3
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர் 4039-4
2. வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம் 4040-1
பெரும் சிறப்புப் பெறப் பிறப்பு எய்தினார் 4040-2
விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும் 4040-3
அரும் சிலம்பு அணி சேவடிக்காள் செய்வார் 4040-4
3. அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை 4041-1
இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை 4041-2
வைத்த நாவை வலித்து அரி சத்தியால் 4041-3
சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார் 4041-4
4. தீங்கு சொற்ற திருவிலர் நாவினை 4042-1
வாங்க வாங்கும் தண்டு ஆயத்தினால் வலித்து 4042-2
தாங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன் 4042-3
ஓங்கு சீர்த் தொண்டின் உயர்ந்தனர் 4042-4
5. அன்னதாகிய ஆண்மைத் திருப்பணி 4043-1
மன்னு பேருலகத்தில் வலி உடன் 4043-2
பண்னெடும் பெருநாள் பரிவால் செய்து 4043-3
சென்னி ஆற்றினர் செந்நெறி ஆற்றினர் 4043-4
6. ஐயம் இன்றி அரிய திருப்பணி 4044-1
மெய்யினால் செய்த வீரத் திருத்தொண்டர் 4044-2
வையம் உய்ய மணிமன்றுள் ஆடுவார் 4044-3
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர் 4044-4
7. நாயனார் தொண்டரை நலம் கூறலார் 4045-1
சாய நாவரி சத்தியார் தாள் பணிந்து 4045-2
ஆய மா தவத்து ஐயடிகள் எனும் 4045-3
தூய காடவர் தம் திறம் சொல்லுவாம் 4045-4
This webpage was last updated on 13 July 2004
|
|