|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
43 அதிபத்த நாயனார் புராணம்
1. மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின் 3992-1
தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப் 3992-2
பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல் 3992-3
நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம் 3992-4
2. தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த 3993-1
தேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் 3993-2
காமர் பொற் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த 3993-3
மாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு 3993-4
3. பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து 3994-1
திருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் 3994-2
தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல் 3994-3
கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால் 3994-4
4. நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த 3995-1
பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக் 3995-2
கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும் 3995-3
ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர் 3995-4
5. அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் 3996-1
பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் 3996-2
மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த 3996-3
தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி 3996-4
6. புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை 3997-1
அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல் 3997-2
வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த 3997-3
கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் 3997-4
7. உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த 3998-1
கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல் 3998-2
அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்து 3998-3
மணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழிய மருளும் 3998-4
8. வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் 3999-1
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் 3999-2
தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் 3999-3
அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய 3999-4
9. அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து 4000-1
மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார் 4000-2
புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும் 4000-3
வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர் 4000-4
10. ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள் 4001-1
ஏங்கு தெண் திரைக் கடல் இடைப் பலபட இயக்கிப் 4001-2
பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் 4001-3
ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார் 4001-4
11. முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து 4002-1
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும் 4002-2
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் 4002-3
விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால் 4002-4
12. வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் 4003-1
ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால் 4003-2
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே 4003-3
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் 4003-4
13. மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் 4004-1
தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் 4004-2
பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று 4004-3
மான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் 4004-4
14. சால நாள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்து 4005-1
கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச் 4005-2
சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தே 4005-3
ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் 4005-4
15. ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத் 4006-1
தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால் 4006-2
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் 4006-3
பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார் 4006-4
16. வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற 4007-1
ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத் 4007-2
தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப் 4007-3
பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் 4007-4
17. என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர் 4008-1
பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால் 4008-2
ஒன்றும் மற்றிது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் 4008-3
சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரிந்தார் 4008-4
18. அகில லோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில் 4009-1
புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்த 4009-2
இகலில் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல் 4009-3
முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகைப்பூ 4009-4
19. பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே 4010-1
அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை 4010-2
நஞ்சு வாண்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து 4010-3
அஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார் 4010-4
20. தம் மறம் புரி மரபினில் தகும் பெருந் தொண்டு 4011-1
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி 4011-2
மும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும் 4011-3
செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம் 4011-4
This webpage was last updated on 13 July 2004
|
|