|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
42 நரசிங்க முனையரைய நாயனார் புராணம்
1. கோடாத நெறி விளக்கும் குலமரபின் அரசு அளித்து 3983-1
மாடாக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் 3983-2
தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப் பாடி 3983-3
நாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர் 3983-4
2. இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்த் 3984-1
தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறிப் பாங்கு அகல 3984-2
மும்முனை நீள் இலைச் சூல முதல் படையார் தொண்டுபுரி 3984-3
அம் முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேரு என அடைவார் 3984-4
3. சின விடையார் கோயில் தொறுந் திருச் செல்வம் பெருக்குநெறி 3985-1
யனஇடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து 3985-2
மனவிடை ஆமைத் தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு 3985-3
கனவிடை ஆகிலும் வழுவாக் கடன் ஆற்றிச் செல்கின்றார் 3985-4
4. ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரை நாள் தொறும் என்றும் 3986-1
வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி 3986-2
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும் பொன் 3986-3
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் 3986-4
5. ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் 3987-1
மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில் 3987-2
மான நிலை அழிதன்மை வரும் காமக்குறி மலர்ந்த 3987-3
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் 3987-4
6. மற்று அவர் தம் வடிவு இருந்த படி கண்டு மருங்குள்ளார் 3988-1
உற்ற இகழ்ச்சியராகி ஒதுங்குவார் தமைக் கண்டு 3988-2
கொற்றவனார் எதிர் சென்று கைகுவித்துக் கொடு போந்தப் 3988-3
பெற்றியினார் தமை மிகவும் கொண்டாடிப் பேணுவார் 3988-4
7. சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை 3989-1
ஞாலம் இகழ்ந்த அருநரகம் நண்ணாமல் எண்ணுவார் 3989-2
பாலணைந்தார் தமக்கு அளித்தபடி இரட்டிப் பொன் கொடுத்து 3989-3
மேலவரைத் தொழுது இனிய மொழி விளம்பி விடை கொடுத்தார் 3989-4
8. இவ்வகையே திருத் தொண்டின் அருமை நெறி எந்நாளும் 3990-1
செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப் 3990-2
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சோர்ந்து 3990-3
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் 3990-4
9. விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்த நிலை 3991-1
உடனாகும் நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தித் 3991-2
தடநாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலம் சேரும் 3991-3
கடனாகை அதிபத்தர் கடனாகைக் கவின் உரைப்பாம் 3991-4
This webpage was last updated on 13 July 2004
|
|