|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
40 பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்
1. செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் 3939-1
மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர் 3939-2
மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார் 3939-3
பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார் 3939-4
2. பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமை அல்லால் 3940-1
சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற 3940-2
பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் 3940-3
மற்றவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள் 3940-4
3. ஆங்கு அவர் தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் 3941-1
தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார் 3941-2
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த 3941-3
பூம் கழலார் புகழ்ச் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம் 3941-4
This webpage was last updated on 13 July 2004
See Also:
poyyadimaiyillatha pulavar purANam in English prose
The Puranam Of poyyadimaiyillatha pulavar in English poetry
- Back to periya purANam Page
- Back to thirumuRai Page
- Back to Shaiva Sidhdhantha Home Page
|