|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
7 வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
35 சிறப்புலி நாயனார் புராணம்
1. பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளேர் 3654-1
இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் 3654-2
தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பை 3654-3
மன்னனார் அருளிச்செய்த மறைத் திரு ஆக்கூர் அவ்வூர் 3654-4
2. தூ மலர்ச் சோலை தோறும் சுடர் தொடுமாடம் தோறும் 3655-1
மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும் 3655-2
பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ 3655-3
ஓம நல் வேள்விச் சாலை ஆகுதித் தூபம் ஓங்கும் 3655-4
3. ஆலை சூழ் பூக வேலி அத்திரு ஆக்கூர் தன்னில் 3656-1
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான் மறைக் குலத்தில் உள்ளார் 3656-2
நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற 3656-3
சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினில் சிறந்த நீரார் 3656-4
4. ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து 3657-1
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி 3657-2
நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி 3657-3
நீளும் இன்பத்து உள் தங்கி நிதிமழை மாரி போன்றார் 3657-4
5. அஞ்சு எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் 3658-1
நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத்து 3658-2
எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடை அறா அன்பால் வள்ளல் 3658-3
தஞ்செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே 3658-4
6. அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில் 3659-1
மறைப் பெரு வள்ளலார் வண் சிறப்புலி யார் தாள் வாழ்த்திச் 3659-2
சிறப்புடைத் திருச் செங்காட்டங் குடியினில் செம்மை வாய்ந்த 3659-3
வீரர் சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன் 3659-4
This webpage was last updated on 13 July 2004
|
|