thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்

33 சோமாசி மாற நாயனார் புராணம்
1. சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை 3630-1 வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர் 3630-2 ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால் 3630-3 பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார் 3630-4 2. யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம் 3631-1 ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன 3631-2 ஏழும் உவப்பப் புரிந்து இன்புறச் செய்த பேற்றால் 3631-3 வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல் என்பார் 3631-4 3. எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால் 3632-1 அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார் 3632-2 சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை 3632-3 நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார் 3632-4

4. சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி 3633-1 ஆரம் திகழ் மார்பின் அணுக்கவன் தொண்டர்க்கு அன்பால் 3633-2 சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கிப் 3633-3 பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார் 3633-4 5. துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் 3634-1 வென்று இங்கு இது நல்நெறி சேரும் விளக்கம் என்றே 3634-2 வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப 3634-3 என்றும் நிலவும் சிவலோ கத்தில் இன்பம் உற்றார் 3634-4 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி 1. பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்தோர் 3635-1 துணையும் தாமும் பிரியாதார் தோழத்தம் பிரானாரை 3635-2 இணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென்பணை தோள் எய்துவிக்க 3635-3 அணையும் ஒருவர் சரணமே அரணமாக அடைந்தோமே 3635-4 திருச்சிற்றம்பலம்

வம்பறா வரிவண்டு சருக்கம் முற்றிற்று.


This webpage was last updated on 13 July 2004

See Also:

  • chOmAsimARa n^AyanAr purANam in English prose
  • The Puranam Of chOmAsimARa n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page