thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்

32 மூர்க்க நாயனார் புராணம்
1. மன்னிப் பெருகும் பெரும் தொண்டை வளநாடு அதனில் வயல் பரப்பும் 3618-1 நல் நித்திலம் வெண் திரைப்பாலி நதியின் வடபால் நலம் கொள் பதி 3618-2 அன்னப் பெடைகள் குடை வாவி அலர் புக்காட அரங்கின் இடை 3618-3 மின்னுக் கொடிகள் துகில் கொடிகள் விழவில் காடு வேற்காடு 3618-4 2. செம் பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடைக் கற்றை 3619-1 நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு 3619-2 இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் 3619-3 தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் 3619-4 3. கோதில் மரபில் பிறந்துவளர்ந்து அறிவு கொண்ட நாள்தொடங்கி 3620-1 ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார் 3620-2 காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்யக்கண்டு உண்ணும் 3620-3 நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார் 3620-4 4. தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவைஅமைத்து 3621-1 மேய அடியார் தமைப் போற்றி விருப்பால் அமுது செய்வித்தே 3621-2 ஆய பொருளும் அவர் வேண்டும் படியால் உதவி அன்பு மிக 3621-3 ஏயுமாறு நாள் தோறும் இனைய பணி செய்து இன்புற்றார் 3621-4

5. இன்ன செயலின் ஒழுகுநாள் அடியார் மிகவும் எழுந்து அருள 3622-1 முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன் 3622-2 மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே 3622-3 அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார் 3622-4 6. அங்கண் அவ்வூர் தமக்கு ஒருபால் அடியார் தங்கட்கு அமுத ஆக்க 3623-1 எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்துஅயர்வார் 3623-2 தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நற்சூதால் 3623-3 பொங்கும் பொருள் ஆக்கவும் அங்குப் பொருவார் இன்மை இனில் போவார் 3623-4 7. பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள் 3624-1 உற்ற அன்பால் ¦ச்ன்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து 3624-2 கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதாரூர் 3624-3 செற்ற சிலையார் திருக் குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் 3624-4 8. இருளாரும் மணிகண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்கப் 3625-1 பொருளாயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தே 3625-2 உருளாயச் சூது ஆடி உறுபொருள் வென்றன நம்பர் 3625-3 அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார் 3625-4 9. முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ளப் 3626-1 பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கிச் 3626-2 சொல் சூதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி 3626-3 நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால் நிலத்தில் 3626-4 10. சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில் 3627-1 தீது அகல அமுது ஆக்குவார் கொள்ளத் தாம் தீண்டார் 3627-2 காதல் உடன் அடியார்கள் அமுது செயக் கடைப் பந்தி 3627-3 ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் 3627-4 11. நாதன் தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்தோறும் 3628-1 ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே 3628-2 ஏதங்கள் போய் அகல இவ் உலகைவிட்டு அதன்பின் 3628-3 பூதங்கள் இசைபாட ஆடுவார் புரம் புக்கார் 3628-4 12. வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள் 3629-1 அல்லாரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும் 3629-2 நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச் 3629-3 சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம் 3629-4

This webpage was last updated on 13 July 2004

See Also:

  • mUrkka n^AyanAr purANam in English prose
  • The Puranam Of mUrkka n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page