thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்

30 திருமூல நாயனார் புராணம்
1. அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில் 3564-1 முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி 3564-2 இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும் 3564-3 நந்தி திருவருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர் 3564-4 2. மற்றவர் தாம் அணி மாதி வரும் சித்தி பெற்று உடையார் 3565-1 கொற்றவனார் திருக் கயிலை மலை நின்றும் குறு முனிபால் 3565-2 உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு 3565-3 நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் 3565-4 3. மன்னு திருக் கேதாரம் வழி பட்டு மா முனிவர் 3566-1 பன்னு புகழ்ப் பசுபதி நேபாளத்தைப் பணிந்து ஏத்தித் 3566-2 துன்னு சடைச் சங்கரனார் ஏற்ற தூ நீர்க் கங்கை 3566-3 அன்ன மலி அகன் துறை நீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார் 3566-4 4. கங்கை நீர்த் துறை ஆடிக் கருத்துறை நீள் கடல் ஏற்றும் 3567-1 அங்கணர் தாம் மகிழ்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி 3567-2 மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி 3567-3 திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் 3567-4 5. நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி 3568-1 ஆடு திரு அரங்கான ஆலவனம் தொழுது ஏத்தித் 3568-2 தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து 3568-3 மாடுயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் 3568-4

6. நற்பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய்க் 3569-1 கற்புரிசைத் திருவதிகை கலந்து இறைஞ்சிக் கறை கண்டர் 3569-2 அற்புதக் கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திருவீதிப் 3569-3 பொற்பதியாம் பெரும் பற்ற புலியூர் வந்து அணைந்தார் 3569-4 7. எவ்வுலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரைச் 3570-1 செவ்விய அன்புற வணங்கிச் சிந்தை களிவரத் திளைத்து 3570-2 வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்தக் கூத்தை 3570-3 அவ்வியல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் 3570-4 8. தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய் 3571-1 அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே 3571-2 விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே 3571-3 கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார் 3571-4 9. காவிரி நீர்ப் பெரும் தீர்த்தம் கலந்து ஆடிக் கடந்து ஏறி 3572-1 ஆவின் அரும் கன்று உறையும் ஆவடு தண் துறை அணைந்து 3572-2 சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து 3572-3 மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் 3572-4 10. அந்நிலைமைத் தானத்தை அகலாத ஒருகருத்து 3573-1 முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்தப் 3573-2 பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோக்குலங்கள் 3573-3 பொன்னி நதிக் கரைப் புறவில் புலம்புவன எதிர் கண்டார் 3573-4 11. அந்தணர்தம் சாத்தனூர் ஆமேய்பார் குடித் தோன்றி 3574-1 முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயருடையான் 3574-2 வந்து தனி மேய் கின்றான் வினைமாள வாழ்நாளை 3574-3 வெந்தொழில் கூற்றுவன் கூற்று உண்ண வீடி நிலத்து இடை வீழ்ந்தான் 3574-4 12. மற்றவன் தன் உடம்பினை அக்கோக் குலங்கள் வந்து அணைந்து 3575-1 சுற்றி மிகக் கதறுன சுழல்வன மோப்பனவாக 3575-2 நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ 3575-3 உற்றதுயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் 3575-4 13. இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று 3576-1 அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும் 3576-2 தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற 3576-3 பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார் 3576-4 14. பாய்த்திய பின் திரு மூலராய் எழலும் பசுக்கள் எலாம் 3577-1 நாத் தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப் பொடு நயந்து 3577-2 வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின் 3577-3 நீத்த துயரினவாகி நிரைந்து போய் மேந்தனவால் 3577-4 15. ஆவின் நிரை மகிழ்வுறக் கண்ட அளிகூர்ந்த அருளினராய் 3578-1 மேவியவை மேய் விடத்துப் பின் சென்று மேய்ந்தவை தாம் 3578-2 காவிரி முன் துறைத் தண்ணீர் கலந்து உண்டு கரை ஏறப் 3578-3 பூவிரி தண் புறவின் நிழல் இனிதாகப் புறங்காத்தார் 3578-4 16. வெய்ய சுடர்க் கதிரவனும் மேல் பாலை மலை அணையச் 3579-1 சைவ நெறி மெய் உணந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் 3579-2 பைய நடப்பன கன்றை நினைந்து படர் வன வாகி 3579-3 வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்தப் பின் போனார் 3579-4 17. போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை தோறும் புகநின்றார் 3580-1 மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று 3580-2 ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள் 3580-3 ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய்தீண்ட அதற்கு இசையார் 3580-4 18. அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள் 3581-1 தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் எனத்தளர 3581-2 இங்கு உனக்கு என்னுடன் அணை ஒன்று இல்லை என எதிர்மறுத்துப் 3581-3 பொங்கு தவத்தோர் ஆங்கோர் பொது மடத்தின் உட்புகுந்தார் 3581-4 19. இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் 3582-1 சொல் ஆடாது இருந்தவர் பால் அணையாது துயிலாதாள் 3582-2 பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப 3582-3 நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் 3582-4 20. பித்து உற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று 3583-1 சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில் 3583-2 வைத்த கருத்தினர் ஆகி வரம்பில் பெருமையில் இருந்தார் 3583-3 இத்தகைமை அளப்பு அரிதால் யாராலும் என உரைப்பார் 3583-4 21. பற்று அறுத்த உபதேசப் பரமர் பதம் பெற்றார் போல் 3584-1 முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள் 3584-2 சுற்றம் இயல் பினுக்கு எய்தார் என்று உரைப்பத் துயர் எய்தி 3584-3 மற்றவளும் மையலுற மருங்குள்ளார் கொண்டு அகன்றார் 3584-4 22. இந் நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் 3585-1 வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த 3585-2 முந்தை உடல் பொறைகாணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞானச் 3585-3 சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் 3585-4 23. தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை 3586-1 மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக் 3586-2 கண்ணிய அத்திரு அருளால் அவ்வுடலைக் கரப்பிக்க 3586-3 எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் 3586-4 24. சுற்றிய அக் குலத்துள்ளார் தொடர்ந்தார்கு தொடர்வு இன்மை 3587-1 முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின் 3587-2 பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்துப் பெருகு ஆர்வச் 3587-3 செற்றம் முதல் கடிந்தவர்தாம் ஆவடுதண் துறை சேர்ந்தார் 3587-4 25. ஆவடு தண் துறை அணைந்து அங்கு அரும் பொருளை உறவணங்கி 3588-1 மேவுவார் புறக் குடபால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்த் 3588-2 தேவிருக்கை அமர்ந்து அருளிச் சிவயோகம் தலை நின்று 3588-3 பூவலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்து இருந்தார் 3588-4 26. ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோய் உய்ய 3589-1 ஞானம் முதல் நான்கு மலர் நல் திரு மந்திர மாலை 3589-2 பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம் பொருளாம் 3589-3 ஏன எயிறு அணிந்தாரை ஒன்றவன்தான் என எடுத்து 3589-4 27. முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி 3590-1 மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து 3590-2 சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை 3590-3 தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார் 3590-4 28. நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியை யெலாம் 3591-1 மலர்ந்த மொழித் திருமூலத் தேவர் மலர்க் கழல் வணங்கி 3591-2 அலர்ந்த புகழ்த் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட 3591-3 தலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம் 3591-4

This webpage was last updated on 13 July 2004

See Also:

  • thirumUla n^AyanAr purANam in English prose
  • The Puranam Of thirumUla n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page