thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

5 திருநின்ற சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 

5 திருநின்ற சருக்கம்

23 பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்
1. சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவும் பூகஞ்சூழ்புடைத்தாய் 1706-1 வீதிதோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி 1706-2 நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து 1706-3 மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை 1706-4 2. அன்ன தொன்மைத் திருப்பதிக் கண் அதிபர் மிழலைக் குறும்பனார் 1707-1 சென்னி மதியம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் 1707-2 இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று 1707-3 முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் 1707-4 3. தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக் 1708-1 கொண்டு செல்ல இரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்த அடைவார் 1708-2 வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் 1708-3 புண்ட ரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார் 1708-4 4. இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத் தொண்டின் 1709-1 மெய்த் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் 1709-2 சித்தம் நிலவும் திருத் தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்து 1709-3 நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத் தலை நின்றார் 1709-4

5. மையார் தடங் கண் பரவையார் மணவாளன் தன் மலர்க் கழல்கள் 1710-1 கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப் பாட்டில் 1710-2 செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாள் இணைக் கீழ் 1710-3 உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் 1710-4 6. நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே 1711-1 ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதற்பின் 1711-2 மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும் 1711-3 கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார் 1711-4 7. இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம் 1712-1 பொன்னங் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து 1712-2 மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் 1712-3 சென்னி மதி தோய் மாட மலி கொடுங் கோளூரைச் சேர்வுற்றார் 1712-4 8. அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட அமுதைப் பரவி அணைவுறுவார் 1713-1 செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே 1713-2 மஞ்சில் திகழும் வட கயிலைப் பொருப்பில் எய்த வரும் வாழ்வு 1713-3 நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார் 1713-4 9. மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர் 1714-1 நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து 1714-2 கண்ணில் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று 1714-3 எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் 1714-4 10. நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு 1715-1 காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு 1715-2 ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப 1715-3 மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் 1715-4 11. பயிலைச் செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுறக் 1716-1 கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி 1716-2 மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் 1716-3 குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம் 1716-4

This webpage was last updated on 16 May 2004

See Also:

  • perumizhalaik kuRumba n^AyanAr purANam in English prose
  • The Puranam Of perumizhalaik kuRumba n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page