|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
5 திருநின்ற சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
5 திருநின்ற சருக்கம்
22 குலச்சிறை நாயனார் புராணம்
1. பன்னு தொல் புகழ்ப் பாண்டி நன் நாட்டு இடைச் 1695-1
செந்நெலார் வயல் தீம் கரும்பின் அயல் 1695-2
துன்னு பூகப் புறம் பணை சூழ்ந்தது 1695-3
மன்னு வண்மையினார் மண மேற்குடி 1695-4
2. அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம் 1696-1
ஒப்பரும் பெரு நம்பி என்று ஓதிய 1696-2
செப்பரும் சீர்க் குலச் சிறையார் திண்மை 1696-3
வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர் 1696-4
3. காரணங்கள் கண் நுதற்கு அன்பர் என்னவே 1697-1
வாரம் ஆகி மகிழ்ந்தவர் தாள் மிசை 1697-2
யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து 1697-3
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் 1697-4
4. குறியில் நான்கு குலத்தினர் ஆயினும் 1698-1
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும் 1698-2
அறிவு சங்கரற்கு அன்பர் எனப் பெறில் 1698-3
செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார் 1698-4
5. உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும் 1699-1
அலகில் தீமையர் ஆயினும் அம்புலி 1699-2
இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில் 1699-3
தலம் உறப் பணிந்து ஏத்தும் தகைமையார் 1699-4
6. பண்பு மிக்கார் பலராய் அணையினும் 1700-1
உண்ப வேண்டி ஒருவர் அணையினும் 1700-2
எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு 1700-3
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் 1700-4
7. பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து 1701-1
ஆதி தேவர் தம் அஞ்செழுத்தாம் அவை 1701-2
ஓது நா வணக்கத்தால் உரைப்பவர் 1701-3
பாதம் நாளும் பரவிய பண்பினார் 1701-4
8. இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறில் சீர்த் 1702-1
தென்னவன் நெடு மாறற்குச் சீர் திகழ் 1702-2
மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார் 1702-3
ஒன்னலர்ச் செற்று உறுதிக் கண் நின்று உளார் 1702-4
9. ஆய செய்கையர் ஆயவர் ஆறணி 1703-1
நாயனார் திருப் பாதம் நவின்று உளார் 1703-2
பாய சீர் புனை பாண்டி மா தேவியார் 1703-3
மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார் 1703-4
10. புன்னையத் தருகந்தர் பொய் நீக்கவும் 1704-1
தென்னர் நாடு திருநீறு போற்றவும் 1704-2
மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி 1704-3
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் 1704-4
11. வாதில் தோற்ற அமணரை வன் கழுத் 1705-1
தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம் 1705-2
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன் 1705-3
வேத நீதி மிழலைக் குறும்பர் தாள் 1705-4
This webpage was last updated on 16 May 2004
|
|