|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
17 உருத்திர பசுபதி நாயனார் புராணம்
1. நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும் புனல் நீத்தம் 1031-1
மலர்த் தடம் பணை வயல் புகு பொன்னி நன்னாட்டுக் 1031-2
குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமித் 1031-3
தலத்தின் மேம் படு நலத்தது பெருந் திருத் தலையூர் 1031-4
2. வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ 1032-1
தேன் அளிப்பன நறுமலர் செறி செழுஞ் சோலை 1032-2
ஆன் அளிப்பன அம் சுகந்து ஆடுவார்க்கு அவ்வூர் 1032-3
தான் அளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும் 1032-4
3. அங்கண் மா நகர் அதன் இடை அருமறை வாய்மைத் 1033-1
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர் 1033-2
செங்கண் மால் விடையார் செழும் பொன் மலை வல்லி 1033-3
பங்கனார் அடிமைத் திறம் புரி பசுபதியார் 1033-4
4. ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு 1034-1
மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும் 1034-2
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி 1034-3
நேய நெஞ்சினர் ஆகி அத் தொழில் தலை நின்றார் 1034-4
5. கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு 1035-1
பிரச மென் சுரும்பு அறைந்திடக் கரு வரால் பிறழும் 1035-2
நிரை நெடுங் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய 1035-3
விரை நெகிழ்ந்த செங் கமலம் என் பொய்கையுள் மேவி 1035-4
6. தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடைச் செறிய 1036-1
உள்ளுறப் புக்கு நின்று கை உச்சி மேல் குவித்துத் 1036-2
தள்ளு வெண்டிரைக் கங்கை நீர் ததும்பிய சடையார் 1036-3
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார் 1036-4
7. அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை 1037-1
வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே 1037-2
திருமலர்ப் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள் 1037-3
ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார் 1037-4
8. காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்த 1038-1
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி 1038-2
ஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம் 1038-3
தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார் 1038-4
9. நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால் 1039-1
ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப் 1039-2
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியாராம் 1039-3
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற 1039-4
10. அயில் கொள் முக்குடுமிப் படையார் மருங்கு அருளால் 1040-1
பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி 1040-2
எயில் உடைத் தில்லை எல்லையில் நாளைப் போவாராம் 1040-3
செயலுடைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம் 1040-4
This webpage was last updated on 16 May 2004
|
|