thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

6 விறன்மிண்ட நாயனார் புராணம்
1. விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப் 0491-1 பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு 0491-2 திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும் 0491-3 வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு 0491-4 2. வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும் 0492-1 வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் 0492-2 மூரல் எனச் சொல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் 0492-3 சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர் 0492-4 3. என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான் 0493-1 அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை 0493-2 சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமைத் தலை நின்றார் 0493-3 மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபிற் பெரியோர் வாழ் பதியாம் 0493-4 4. அப் பொன் பதியின் இடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார் 0494-1 செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி 0494-2 எப் பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் 0494-3 மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர் 0494-4 5. நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த 0495-1 பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார் 0495-2 முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்து 0495-3 எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார் 0495-4 6. பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் 0496-1 சென்று ஆள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி 0496-2 வன் தாள் மேருச் சிலை வளைத்துப் புரங்கள் செற்ற வைதிகத் தேர் 0496-3 நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார் 0496-4

7. திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடைப் பொலிந்து 0497-1 மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது 0497-2 ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று உரைப்பச் சிவன் அருளால் 0497-3 பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார் 0497-4 8. சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம் 0498-1 பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப் 0498-2 பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால் 0498-3 கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் 0498-4 9. ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின் 0499-1 சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள் 0499-2 ஓலம் இடவும் உணர்வு அரியார் உடனாம் உளது என்றால் 0499-3 ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார் 0499-4 10. ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெருந் தன்மை 0500-1 தொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர் 0500-2 தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல்ற்கீழ் 0500-3 மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார் 0500-4 1.1 வேறு பிரிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும் 0501-1 பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை 0501-2 கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டே 0501-3 ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம் 0501-4
This webpage was last updated on 16 May 2004

See Also:

  • viRanmiNda nAyanAr purANam in English prose
  • The Puranam Of viRanmiNdar n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page