thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

5 மெய்ப்பொருள் நாயனார் புராணம்
1. சேதி நன்னாட்டு நீடு திருக் கோவலூரின் மன்னி 0467-1 மாதொரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான் 0467-2 வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு 0467-3 காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார் 0467-4 2. அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து 0468-1 வரை நெடும்ந்தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி 0468-2 உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார் 0468-3 திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார் 0468-4 3. மங்கையைப் பாகமாக உடையவர் மன்னும் கோயில் 0469-1 எங்கணும் பூசை நீடி ஏழிசைப் பாடல் ஆடல் 0469-2 பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார் 0469-3 தங்கள் நாயகருக்கு அன்பர் தாளலால் சார்பு ஒன்று இல்லார் 0469-4 4. தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் 0470-1 ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று 0470-2 நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது 0470-3 கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவு அறக் கொடுத்து வந்தார் 0470-4 5. இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன் 0471-1 அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு 0471-2 பொன் அணி ஓடை யானைப் பொரு பரி காலாள் மற்றும் 0471-3 பன் முறை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான் 0471-4

6. இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான் 0472-1 மெய்ப் பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும் 0472-2 அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆகச் 0472-3 செப்பரு நிலைமை எண்ணித் திருக் கோவலூரில் சேர்வான் 0472-4 7. மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக் 0473-1 கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி 0473-2 மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப் 0473-3 பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் 0473-4 8. மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும் 0474-1 கோதை சூழ் அளக பாரக் குழைக் கொடி ஆட மீது 0474-2 சோதி வெண் கொடிகள் ஆடுஞ் சுடர் நெடு மறுகில் போகிச் 0474-3 சேயதிர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான் 0474-4 9. கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே 0475-1 உடையவர் தாமே வந்தார் உள் எழுந்து அருளும் என்னத் 0475-2 தடை பல புக்க பின்பு தனித் தடை நின்ற தத்தன் 0475-3 இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும் இறைவன் என்றான் 0475-4 10. என்று அவன் கூறக் கேட்டே யான் அவற்கு உறுதி கூற 0476-1 நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கிப் புக்குப் 0476-2 பொன் திகழ் பள்ளிக் கட்டில் புரவலன் துயில மாடே 0476-3 மன்றலங் குழல் மென் சாயல் மா தேவி இருப்பக் கண்டான் 0476-4 1.1 கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி 0477-1 வண்டலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன் 0477-2 அண்டர் நாயகனார் தொண்டராம் எனக் குவித்த செங்கை 0477-3 கொண்டு எழுந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று 0477-4 12. மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன 0478-1 இங்கு எழுந்து அருளப் பெற்றது என் கொலோ என்று கூற 0478-2 உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல் 0478-3 எங்கும் இலாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் 0478-4 13. பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள் செய்த இந்த 0479-1 மாறிலா ஆகமத்தை வாசித்து அருள வேண்டும் என்ன 0479-2 நாறு பூங் கோதை மாது தவிரவே நானும் நீயும் 0479-3 வேறு இடத்து இருக்க வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் 0479-4 14. திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப் 0480-1 பரிவுடன் விரைய அந்தப்புரத்திடைப் போக ஏவித் 0480-2 தரு தவ வேடத்தானைத் தவிசின் மேல் இருத்தித் தாமும் 0480-3 இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள் செய்யும் என்றான் 0480-4 15. கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடி மேல் வைத்துப் 0481-1 புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்த அவர் வணங்கும் போதில் 0481-2 பத்திரம் வாங்கித் தான் முன் நினைத்த அப் பரிசே செய்ய 0481-3 மெய்த் தவ வேடமே மெய்ப்பொருள் எனத் தொழுது வென்றார் 0481-4 16. மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன் 0482-1 இறைப் பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான் 0482-2 நிறைத்த செங் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால் 0482-3 தறைப் படும் அளவில் தத்தா நமர் எனத் தடுத்து வீழ்ந்தார் 0482-4 17. வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட 0483-1 தாதனாந் தத்தன் தானும் தலையினால் வணங்கித் தாங்கி 0483-2 யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக 0483-3 மீதிடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் 0483-4 18. அத் திறம் அறிந்தார் எல்லாம் அரசனைத் தீங்கு செய்த 0484-1 பொய்த் தவன் தன்னைக் கொல்வோம் எனப் புடை சூழ்ந்த போது 0484-2 தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான் 0484-3 இத் தவன் போகப் பெற்றது இறைவனது ஆணை என்றான் 0484-4 19. அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகன்று நீங்கச் 0485-1 செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து 0485-2 கை வடி நெடுவாள் ஏந்தி ஆளுறாக் கானஞ் சேர 0485-3 வெவ் வினைக் கொடியோன் தன்னை விட்ட பின் மீண்டு போந்தான் 0485-4 20. மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல் 0486-1 செற்றவர் தம்மை நீக்கித் தீது இலா நெறியில் விட்ட 0486-2 சொல் திறம் கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும் 0486-3 கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான் 0486-4 21. சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு 0487-1 வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற 0487-2 இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய வல்லார் என்று 0487-3 நின்றவன் தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார் 0487-4 2.2 அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும் 0488-1 விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியினாலே 0488-2 பரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்று 0488-3 புரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார் 0488-4 23. தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார் அவர் முன் தம்மைக் 0489-1 கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்தருளி மிக்க 0489-2 அண்ட வானவர் கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேரக் 0489-3 கொண்டவாறு இடை அறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார் 0489-4 24. இன்னுயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான் அன்பர் என்றே 0490-1 நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னில் 0490-2 என் உரை செய்தேன் ஆக இகல் விறன் மிண்டர் பொற் தாள் 0490-3 சென்னி வைத்து அவர் முன் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன் 0490-4
This webpage was last updated on 16 May 2004

See Also:

  • meipporuL nAyanAr purANam in English prose
  • The Puranam Of meipporuL nAyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page