|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
1 தில்லை வாழ் அந்தணர் புராணம்
திருச்சிற்றம்பலம்
1. ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச் 0350-1
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப் 0350-2
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப் 0350-3
போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி 0350-4
2. கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி 0351-1
அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம் 0351-2
சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று 0351-3
பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி போற்றி 0351-4
3. போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன் 0352-1
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம் 0352-2
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும் 0352-3
ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார் 0352-4
4. பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி 0353-1
மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் 0353-2
தங்களுக்கு ஏற்ற பண்பில் தரும் பணித் தலை நின்று உய்த்தே 0353-3
அங்கணர் கோயில் உள்ளா அகம் படித் தொண்டு செய்வார் 0353-4
5. வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க 0354-1
தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும் 0354-2
அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார் 0354-3
திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார் 0354-4
6. மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார் 0355-1
அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளார் 0355-2
உறுவது நீற்றின் செல்வம் எனக் கொளும் உள்ளம் மிக்கார் 0355-3
பெறுவது சிவன் பால் அன்பாம் பேறு எனப் பெருகி வாழ்வார் 0355-4
7. ஞானமே முதலாம் நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார் 0356-1
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார் 0356-2
ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும் 0356-3
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார் 0356-4
8. செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார் 0357-1
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை 0357-2
இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார் 0357-3
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார் 0357-4
9. இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ 0358-1
தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட 0358-2
அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல் 0358-3
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றால் 0358-4
10. அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் 0359-1
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ 0359-2
நிகழ் திரு நீல கண்டக் குயவனார் நீடு வாய்மை 0359-3
திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம் 0359-4
This webpage was last updated on 31 August 2008
See Also:
thillaivAzhandhaNar purANam in English prose
The Puranam Of thillaivaz anthaNar in English poetry
- Back to periya purANam Page
- Back to thirumuRai Page
- Back to Shaiva Sidhdhantha Home Page
|