|
001 |
பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.01 |
002 | நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.02
|
003 | மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.03
|
004 | முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீÿ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீÿ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.04
|
005 | பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய்ÿ
ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளாÿ
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.05
|
006 | தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீÿ
எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்ÿ
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.06
|
007 | ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்ÿ
வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்ÿ
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.07
|
008 | ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்ÿ
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்ÿ
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.08
|
009 | மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்காÿ
தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலேÿ
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே. | 7.1.09
|
010 | காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற்ÿ
பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்ÿ
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்ÿ
ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே. | 7.1.10
|