|
780 |
சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன்
வெங்கு லாமத வேழம் வெகுண்டவன்
கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென
எங்கி லாததோர் இன்பம்வந் தெய்துமே. | 5.78.1 |
781 | வாடி வாழ்வதென் னாவது மாதர்பால்
ஓடி வாழ்வினை உள்கிநீர் நாடொறுங்
கோடி காவனைக் கூறீரேற் கூறினேன்
பாடி காவலிற் பட்டுக் கழிதிரே. | 5.78.2
|
782 | முல்லை நன்முறு வல்லுமை பங்கனார்
தில்லை யம்பலத் தில்லுறை செல்வனார்
கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங்
கொல்லை யேத்துவார்க் கூனமொன் றில்லையே. | 5.78.3
|
783 | நாவ ளம்பெறு மாறும னன்னுதல்
ஆம ளஞ்சொலி அன்புசெ யின்னலாற்
கோம ளஞ்சடைக் கோடிகா வாவென
ஏவ ளின்றெனை ஏசுமவ் வேழையே. | 5.78.4
|
784 | வீறு தான்பெறு வார்சில ராகிலும்
நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேற்
கூறு வேன்கோடி காவுளாய் என்றுமால்
ஏறு வேனும்மால் ஏசப் படுவனோ. | 5.78.5
|
785 | நாடி நாரணன் நான்முகன் வானவர்
தேடி யேசற வுந்தெரி யாததோர்
கோடி காவனைக் கூறாத நாளெலாம்
பாடி காவலிற் பட்டுக் கழியுமே. | 5.78.6
|
| இப்பதிகத்தில் 7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 5.78.7-9
|
786 | வரங்க ளால்வரை யையெடுத் தான்றனை
அரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர்
குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவென
இரங்கு வேன்மனத் தேதங்கள் தீரவே. | 5.78.10
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.