|
631 |
இரங்கா வன்மனத் தார்கள் இயங்குமுப்
புரங்கா வல்லழி யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்கா டுதுறைக் கோலக் கபாலியே. | 5.63.1 |
632 | முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர்
தொத்தி னைச்சுடர் சோதியைச் சோலைசூழ்
கொத்த லர்குரங் காடு துறையுறை
அத்த னென்னஅண் ணித்திட் டிருந்ததே. | 5.63.2
|
633 | குளிர்பு னற்குரங் காடு துறையனைத்
தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி
ஒளிய னைந்நினைந் தேனுக்கென் உள்ளமுந்
தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே. | 5.63.3
|
634 | மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக்
கணவன் காண்கலை ஞானிகள் காதலெண்
குணவன் காண்குரங் காடு துறைதனில்
அணவன் காணன்பு செய்யு மடியர்க்கே. | 5.63.4
|
635 | ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன்
காலத் தானுயிர் போக்கிய காலினன்
நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி
கோலத் தான்குரங் காடு துறையனே. | 5.63.5
|
636 | ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப்
பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை
வீட்டி னான்வினை மெய்யடி யாரொடுங்
கூட்டி னான்குரங் காடு துறையனே. | 5.63.6
|
637 | மாத்தன் றான்மறை யார்முறை யான்மறை
ஓத்தன் றாருகன் றன்னுயி ருண்டபெண்
போத்தன் றானவள் பொங்கு சினந்தணி
கூத்தன் றான்குரங் காடு துறையனே. | 5.63.7
|
638 | நாடி நந்தம ராயின தொண்டர்காள்
ஆடு மின்னழு மின்தொழு மின்னடி
பாடு மின்பர மன்பயி லும்மிடங்
கூடு மின்குரங் காடு துறையையே. | 5.63.8
|
639 | தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்
அன்ற வந்தக னையயிற் சூலத்தாற்
கொன்ற வன்குரங் காடு துறையனே. | 5.63.9
|
640 | நற்ற வஞ்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி யாலருள் செய்தநற்
கொற்ற வன்குரங் காடு துறைதொழப்
பற்றுந் தீவினை யாயின பாறுமே. | 5.63.10
|
641 | கடுத்த தேரரக் கன்கயி லைம்மலை
எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல்
அடுத்த லுமவன் இன்னிசை கேட்டருள்
கொடுத்த வன்குரங் காடு துறையனே. | 5.63.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பவளக்கொடியம்மை.