|
456 |
கனகமா வயிர முந்து
மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி
யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற ஈச
னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. | 4.47.1 |
457 | கதித்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவன் எடுத்தி டலும்
அரிவைதான் அஞ்ச ஈசன்
நெதித்தவ னூன்றி யிட்ட
நிலையழிந் தலறி வீழ்ந்தான்
மதித்திறை யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. | 4.47.2
|
458 | கறுத்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச
வானவர் இறைவன் நக்கு
நெறித்தொரு விரலா லூன்ற
நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. | 4.47.3
|
459 | கடுத்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
எடுத்தலும் மங்கை அஞ்ச
இறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற
நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. | 4.47.4
|
460 | கன்றித்தன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
வென்றித்தன் கைத்த லத்தா
லெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாத
னூன்றலு நகழ வீழ்ந்தான்
மன்றித்தான் ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. | 4.47.5
|
461 | களித்தவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டலும்
நேரிழை அஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட
வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. | 4.47.6
|
462 | கருத்தனாய்க் கண்சி வந்து
கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த வாறே
ஏந்திழை அஞ்ச ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன்
திருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவான் ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. | 4.47.7
|
463 | கடியவன் கண்சி வந்து
கயிலைநன் மலையை யோடி
வடிவுடை மங்கை அஞ்ச
எடுத்தலும் மருவ நோக்கிச்
செடிபடத் திருவி ரலா
லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற வூன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. | 4.47.8
|
464 | கரியத்தான் கண்சி வந்து
கயிலைநன் மலையைப் பற்றி
இரியத்தான் எடுத்தி டலும்
ஏந்திழை அஞ்ச ஈசன்
நெரியத்தான் ஊன்றா முன்னம்
நிற்கிலா தலறி வீழ்ந்தான்
மரியத்தான் ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. | 4.47.9
|
465 | கற்றனன் கயிலை தன்னைக்
காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த வாறே
சேயிழை அஞ்ச ஈசன்
உற்றிறை ஊன்றா முன்னம்
உணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை ஊன்றி னானேல்
மறித்துநோக் கில்லை யன்றே. | 4.47.10
|
இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கைலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.