|
Home > Scriptures & Stotras > Tamil >Fourth ThirumuRai
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)
4.46 திருவொற்றியூர் - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
|
454 |
ஓம்பினேன் கூட்டை வாளா
உள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக்
கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப்
பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ உய்யக் கொள்ளாய்
ஒற்றியூ ருடைய கோவே. | 4.46.1 |
455 | மனமெனுந் தோணி பற்றி
மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச்
செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி
மறியும்போ தறிய வொண்ணா
துனையுனும் உணர்வை நல்காய்
ஒற்றியூ ருடய கோவே. | 4.46.2
|
| இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன. | 4.46.3-10
|
திருச்சிற்றம்பலம்
Back to Complete Fourth thirumuRai Index
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
|