|
Home > Scriptures & Stotras > Tamil
பரஞ்சோதி முனிவர் அருளிய
திருவிளையாடற் புராணம்
(திருவாலவாய் மான்மியம்)
திருச்சிற்றம்பலம்
முதலாவது - மதுரை காண்டம்
(இந்திரன் பழிதீர்த்த படலம் முதல் திருமணப் படலம் வரை)
இந்திரன் பழி தீர்த்த படலம்
344
மின்பயில் குலிசப் புத்தேள் விருத்திரா கரனைக் கொன்ற
வன்பழி விடாது பற்றக் கடம்பமா வனத்தில் எய்தி
என்பர வாரம் பூண்ட விறைவனை யருச்சித் தேத்திப்
பின்பது கழிந்து பெற்ற பேற்றினை யெடுத்துச் சொல்வாம்
345
முன்னதா முகத்தில் வண்டு மூசுமந் தார நீழற்
பொன்னவிர் சுணங்குண் கொங்கைப் புலோமசை மணாளன் பொற்பூண்
மின்னவிரிந் திமைப்பச் சிங்கஞ் சுமந்தமெல் லணைமேன் மேவி
அன்னமென் னடையா ராடு மாடன்மேல் ஆர்வம் வைத்தான்
346
மூவகை மலரும் பூத்து வண்டுளே முழங்கத் தெய்வப்
பூவலர் கொடிபேர்ந் தன்ன பொன்னனார் கூத்து மன்னார்
நாவலர் அமுத மன்ன பாடலு நாக நாட்டுக்
காவலன் கண்டு கேட்டுக் களிமதுக் கடலி லாழ்ந்தான்
347
பையரா வணிந்த வேணிப் பகவனே யனைய தங்கள்
ஐயனாம் வியாழப் புத்தேள் ஆயிடை யடைந்தா னாகச்
செய்யதாள் வழிபா டின்றித் தேவர்கோ னிருந்தா னந்தோ
தையலார் மயலிற் பட்டோர் தமக்கொரு மதியுண் டாமோ
348
ஒல்லெனக் குரவ னேக வும்பர்கோன் றிருவி னாக்கம்
புல்லெனச் சிறிது குன்றப் புரந்தர னறிந்திக் கேடு
நல்லதொல் குரவற் பேணா நவையினால் விளைந்த தென்னா
அல்லலுற் றறிவின் றன்னைத் தேடுவா னாயி னானே
349
அங்கவ னிருக்கை புக்கான் கண்டில னவித்த பாசப்
புங்கவர் உலகு மேனோர் பதவியும் புவன மூன்றில்
எங்கணுந் துருவிக் காணா னெங்குற்றான் குரவ னென்னுஞ்
சங்கைகொண் மனத்த னாகிச் சதுர்முக னிருக்கை சார்ந்தான்
350
துருவின னங்குங் காணான் றிசைமுகற் றெழுது தாழ்ந்து
பரவிமுன் பட்ட வெல்லாம் பகர்ந்தனன் பகரக் கேட்டுக்
குரவனை யிகழ்ந்த பாவங் கொழுந்துபட் டருந்துஞ் செவ்வி
வருவது நோக்கிச் சூழ்ந்து மலர்மகன இதனைச் சொன்னான்
351
அனையதொல் குரவற் காணும் அளவுநீ துவட்டா வீன்ற
தனையன்முச் சென்னி யுள்ளான் றானவர் குலத்தில் வந்தும்
வினையினா லறிவான் மேலான் விச்சுவ வுருவ னென்னும்
இனையனைக் குருவாக் கோடி யென்னலு மதற்கு நேர்ந்தான்
352
அழலவிர்ந் தனைய செங்கேழ் அடுக்கிதழ் முளரி வாழ்க்கைத்
தொழுதகு செம்ம றன்னைத் தொழுதுமீண் டகன்று நீங்கா
விழைதகு காதல் கூர விச்சுவ வுருவன் றன்னை
வழிபடு குருவாக் கொண்டான் மலர்மகன் சூழ்ச்சி தேறான்
353
கைதவக் குரவன் மாயங் கருதிலன் வேள்வி யொன்று
செய்திட லடிக ளென்னத் தேவர்கட் காக்கங் கூறி
வெய்தழல் வளர்பான் உள்ளம் வேறுபட் டவுணர்க் கெல்லாம்
உய்திற நினைந்து வேட்டான் றனக்குமே லுறுவ தோரான்
354
வாக்கினான் மனத்தால் வேறாய் மகஞ்செய்வான் செயலை யாக்கை
நோக்கினா னோதி தன்னா னோக்கினான் குலிச வேலாற்
றாக்கினான் றலைகண் மூன்றுந் தனித்தனி பறவை யாகப்
போக்கினான் அலகை வாயிற் புகட்டினான் புலவுச் சோரி
355
தெற்றெனப் பிரம பாவஞ் சீறிவந் தமரர் வேந்தைப்
பற்றலு மதனைத் தீர்ப்பான் பண்ணவர் மரமேன் மண்மேற்
பொற்றொடி யார்மே னீர்மேல் வேண்டினர் புகுத்த லோடும்
மற்றவ ரி•தியாந் தீர்க்கும் வண்ணம்யா தென்ன விண்ணோர்
356
அப்பிடை நுரையாய் மண்ணில் அருவருப் புவரா யம்பொற்
செப்பிளங் கொங்கை யார்பாற் றீண்டுதற் கரிய பூப்பாய்க்
கப்பிணர் மரத்திற் காலும் பயினதாய்க் கழிக வென்றார்
இப்பழி சுமந்த வெங்கட் கென்னல மென்றார் பின்னும்
357
கருவின் மாதர் கருவுயிர்க்கும் அளவு முறையாற் கணவர்தோள்
மருவி வாழ்க மண்ணகழ்ந்த குழியு மதனால் வடுவொழிக
பொருவி னீரு மிறைதோறு மூறிப் பொலிக மாங்குறைபட்
டொருவி னாலுந் தழைகவென வொழியா நலனுமுதவினார்
358
மாசிற் கழிந்த மணியேபோல் வந்த பழிதீர்ந் திந்திரனுந்
தேசிற் றிகழத் துவட்டாத்தன் செல்வன் றன்னைத் தேவர்பிரான்
வீசிக் குலிசத் துயிருண்ட விழுமங் கேட்டு வெகுண்டுயிர்த்துக்
கூசிப் பழிகோள் கருதியொரு கொடிய வேள்வி கடிதமைத்தான்
359
அந்தக் குண்டத் தெரிசிகைபோல் அழலுங் குஞ்சி யண்டமுக
டுந்தக் கொடிய தூமம்போ லுயிர்த்துச் செங்கண் சினச்செந்தீச்
சிந்தப் பிறைவா ளெயிறதுக்கித் திசைவான் செவிடு படநகைத்து
வந்தக் கொடிய விடம்போல வெழுந்தா னொருவாண் மறவீரன்
360
ஈங்குவன் விருத்திரன் என்ப வாரழற்
றூங்குவன் கணைவிடு தூர நீண்டுநீண்
டோங்குவ னோங்குதற் கொப்ப வைகலும்
வீங்குவ னறனிலார் வினையி னென்பவே
361
வீங்குடல் விருத்திரன் றன்னை விண்ணவர்
எங்குற வருதுவட் டாவெ னும்பெயர்த்
தீங்குறு மனத்தினேன் றேவர் கோனுயிர்
வாங்குதி பொருதென வரவிட் டானரோ
362
மதித்துணி யெயிற்றினோன் வடவை போற்சினைஇக்
கொதித்தெதிர் குறுகினான் கொண்டல் ஊர்தியும்
எதிர்த்தனன் களிற்றின்மே லிமையத் துச்சிமேல்
உதித்ததோர் கருங்கதிரொக்கு மென்னவே
363
அறத்தொடு பாவநேர்ந் தென்ன வார்த்திரு
திறத்தரு மூண்டமர் செய்யக் கற்சிறை
குறைத்தவன் றகுவன்மேற் குலிச வேலெடுத்
துறைத்திட வீசினான் உடன்று கள்வனும்
364
இடித்தனன் கையிலோர் இருப்பு லக்கையைப்
பிடித்தனன் வரையெனப் பெயர்ந்து தீயெனத்
துடித்தனன் சசிமுலைச் சுவடு தோய்புயத்
தடித்தன னிந்திர னவச மாயினான்
365
அண்டரே றனையவ னவச மாறிப்பின்
கண்டகன் கைதவ நினைந்திக் கள்வனேர்
மண்டமர் ஆற்றுவான் வலியி லோமெனப்
புண்டரீ கத்தவ னுலகிற் போயினான்
366
தாழ்ந்துதான் படுதுயர் விளம்பத் தாமரை
வாழ்ந்தவன் வலாரியோ டணைந்து மாமகள்
வீழ்ந்தமார் பின்னடி வீழ்ந்து செப்பமால்
சூழ்ந்துவா னாடனை நோக்கிச் சொல்லுவான்
367
மதித்துணி யெயிற்றினோன் வடவை போற்சினைஇக்
கொதித்தெதிர் குறுகினான் கொண்டல் ஊர்தியும்
எதிர்த்தனன் களிற்றின்மே லிமையத் துச்சிமேல்
உதித்ததோர் கருங்கதிரொக்கு மென்னவே
363
அறத்தொடு பாவநேர்ந் தென்ன வார்த்திரு
திறத்தரு மூண்டமர் செய்யக் கற்சிறை
குறைத்தவன் றகுவன்மேற் குலிச வேலெடுத்
துறைத்திட வீசினான் உடன்று கள்வனும்
364
இடித்தனன் கையிலோர் இருப்பு லக்கையைப்
பிடித்தனன் வரையெனப் பெய்ர்ந்து தீயெனத்
துடித்தனன் சசிமுலைச் சுவடு தோய்புயத்
தடித்தன னிந்திர னவச மாயினான்
365
அண்டரே றனையவ னவச மாறிப்பின்
கண்டகன் கைதவ நினைந்திக் கள்வனேர்
மண்டமர் ஆற்றுவான் வலியி லோமெனப்
புண்டரீ கத்தவ னுலகிற் போயினான்
366
தாழ்ந்துதான் படுதுயர் விளம்பத் தாமரை
வாழ்ந்தவன் வலாரியோ டணைந்து மாமகள்
வீழ்ந்தமார் பின்னடி வீழ்ந்து செப்பமால்
சூழ்ந்துவா னாடனை நோக்கிச் சொல்லுவான்
367
ஆற்றவும் பழையதுன் னங்கை வச்சிரம்
மாற்றவர் உயிருண வலியின் றாதலால்
வேற்றொரு புதியது வேண்டு மாலினிச்
சாற்றது மதுபெறுந் தகைமை கேட்டியால்
368
தொடையகன் மார்பநாந் தூய பாற்கடல்
கடையுநாள் அசுரருஞ் சுரருங் கையில்வெம்
படையொடு மடையன்மின் பழுதென் றப்படை
அடையவுந் ததீசிபா லடைவித் தாமரோ
369
சேட்படு நாணனி செல்லத் தேவரா
வாட்படை யவுணரா வந்து கேட்டிலர்
ஞாட்படை படையெலா ஞான நோக்கினால்
வேட்படை வென்றவன் விழுங்கி னானரோ
370
விழுங்கிய படையெலாம் வேற றத்திரண்
டொழுங்கிய தான்முது கந்தண் டொன்றியே
எழுங்கதிர்க் குலிசமாம் அதனை யெய்துமுன்
வழங்குவன் கருணையோர் வடிவு மாயினான்
371
என்று மாதவன் இயம்ப வும்பர்கோன்
ஒன்றும் வானவர் தம்மொ டொல்லெனச்
சென்று மாயையின் செயலை நோன்பினால்
வென்ற மாதவ னிருக்கை மேவினான்
372
அகமலர்ந் தருந்தவன் அமரர்க் கன்புகூர்
முகமலர்ந் தின்னுரை முகமன் கூறிநீர்
மிகமெலிந் தெய்தினீர் விளைந்த தியாதது
தகமொழிந் திடலென வலாரி சாற்றுவான்
373
அடிகணீர் மறாததொன் றதனை வேண்டியிம்
முடிகொள்வான் அவரொடு முந்தி னேனது
செடிகொள்கா ரிருளுட லவுணர்த் தேய்த்தெமர்
குடியெலாம் புரப்பதோர் கொள்கைத் தாயது
374
யாதெனி னினையதுன் யாக்கை யுள்ளதென்
றோதலும் யாவையு முணர்ந்த மாதவன்
ஆதவற் கண்டதா மரையி னானனப்
போதலர்ந் தின்னன புகல்வ தாயினான்
375
நாள்நம தெனநரி நமதெ னப்பிதாத்
தாய்நம தெனநமன் றனதெ னப்பிணி
பேய்நம தெனமன மதிக்கும் பெற்றிபோ
லாய்நம தெனப்படும் யாக்கை யாரதே
376
விடம்பயி லெயிற்றர வுரியும் வீ நுழை
குடம்பையுந் தானெனுங் கொள்கைத் தேகொலாம்
நடம்பயல் கூத்தரி னடிக்கு மைவர்வாழ்
உடம்பையும் யானென வுரைக்கற் பாலதோ
377
நடுத்தயா விலார்தமை நலியத் துன்பநோய்
அடுத்தயா வருந்திரு வடைய யாக்கையைக்
கொடுத்தயா வற்ம்புகழ் கொள்வ னேயெனின்
எடுத்தயாக் கையின்பயன் இதனின் யாவதே
378
என்றனன் கரண மொன்றி யெழுகருத் தறிவை யீர்ப்ப
நின்றனன் பிரம நாடி நெறிகொடு கபாலங் கீண்டு
சென்றனன் விமான மேறிச் சேர்ந்தனன் உலகை நோன்பால்
வென்றனன் துறக்கம் புக்கு வீற்றினி திருந்தா னம்மா
379
அம்முனி வள்ளல் ஈந்த வடுபடை முதுகந் தண்டைத்
தெம்முனை யடுபோர் சாய்க்குந் திறல்கெழு குலிசஞ் செய்து
கம்மியப் புலவ னாக்கங் கரைந்துலைக் கொடுப்ப வாங்கி
மைம்முகி லூர்தி யேந்தி மின்விடு மழைபோ னின்றான்
380
மறுத்தவா வஞ்சப் போரால் வஞ்சித்து வென்று போன
கறுத்தவாள் அவுணற் கொல்வான் கடும்பரி நெடுந்தேர் நீழ்ல்
வெறுத்தமால் யானை மள்ளர் வேலைபுக் கெழுந்து குன்றம்
அறுத்தவா னவர்கோ னந்த வவுணர்கோ மகனைச் சூழ்ந்தான்
381
வானவர் சேனை மூண்டு வளைத்தலும் வடவைச் சேந்தீ
யானது வரையி னோங்கி யழன்றுருத் தெழுந்தால் என்னத்
தானவர் கோனு மானந் தலைக்கொள வெழுந்து பொங்கிச்
சேனையுந் தானு மூண்டு சீறிநின் றடுபோர் செய்வான்
382
அடுத்தன ரிடியே றென்ன வார்த்தனர் ஆக்கங் கூறி
எடுத்தனர் கையிற் சாப மெறிந்தனர் சிறுநா ணோசை
தொடுத்தனர் மீளி வாளி தூர்த்தனர் குந்த நேமி
விடுத்தனர் வானோர் சேனை வீரர்மே லவுண வீரர்
383
கிட்டினர் கடகக் கையாற் கிளர்வரை யனைய திண்டோள்
கொட்டினர் சாரி மாறிக் குதித்தனர் பலகை நீட்டி
முட்டின ரண்டம் விள்ள முழங்கினர் வடிவாள் ஓச்சி
வெட்டின ரவுணச் சேனை வீரரை வான வீரர்
384
வீழ்ந்தனர் தோளுந் தாளும் விண்டனர் சோரி வெள்ளத்
தாழ்ந்தனர் போருந் தாரு மகன்றன ரகன்ற மார்பம்
போழ்ந்தனர் சிரங்க ளெங்கும் புரண்டனர் கூற்றூர் புக்கு
வாழ்ந்தன ரடுபோ ராற்றி வஞ்சகன் சேனை மள்ளர்
385
தாளடு கழலு மற்றார் தலையொடு முடியு மற்றார்
தோளடு வீர மற்றார் தும்பையொ டமரு மற்றார்
வாளடு கரமு மற்றார் மார்பொடு கவச மற்றார்
கோளடும் ஆண்மை யற்றார் குறைபடக் குறையா மெய்யர்
386
தொக்கன கழுகு சேனஞ் சொரிகுடர் பிடுங்கி யீர்ப்ப
உக்கன குருதி மாந்தி யொட்டல்வாய் நெட்டைப் பேய்கள்
நக்கன பாடல் செய்ய ஞாய்பினுட் கவந்த மாடப்
புக்கன பிணத்தின் குற்றம் புதைத்தபார் சிதைத்த தண்டம்
387
இவ்வகை மயங்கிப் போர்செய் திறந்தவ ரொழியப் பின்னுங்
கைவ்வகை யடுபோ ராற்றிக் கரையிற்ந் தார்கண் மாண்டார்
அவ்வகை யறிந்து வானத் தரசனு மவுணர் வேந்துந்
தெய்வதப் படைகள் வீசிச் சீற்நின் றடுபோர் செய்வார்
388
அனற்படை விடுத்தான் விண்ணோர் ஆண்டகை யதனைக் கள்வன்
புனற்படை விடுத்துச் சீற்றந் தனித்தனன் புனிதன் காற்றின்
முனைப்படை விடுத்தான் வெய்யோன் முழங்குகால் விழுங்கு நாகச்
சினப்படை தொடுத்து வீசி விலக்கினான் றேவ ரஞ்ச
389
நாகமாப் படைவிட் டார்த்தா னாகர்கோ னுவணச் செல்வன்
வேகமாப் படையை வீசி விளக்கினான் றகுவர் வேந்தன்
மோகமாப் படையைத் தொட்டு முடுக்கினான் முனைவன் அன்ன
தேகமாப் படிறன் ஞானப் படைவிடுத் திருள்போ னின்றான்
390
மட்டிடுதாரான் விட்ட வானவப் படைக்கு மாறு
விட்டுடன் விலக்கி வேறும் விடுத்திடக் கனன்று வஞ்சன்
முட்டிடமான வெங்கான் மூட்டிட கோபச் செந்தீச்
சுட்டிடப் பொறாது பொங்கிச் சுராதிபன் இதனைச் செய்தான்
391
வீங்கிருள் ஒதுங்க மேக மின்விதிர்த் தென்னக் கையில்
ஓங்கிருங் குலிச வேலை யொல்லென விதிர்த்த லோடுந்
தீங்குளம் போன்றிருண்ட திணியுடற் கள்வ னஞ்சி
வாங்கிருங் கடலில் வீழ்ந்தான் மறைத்தமை நாக மொத்தான்
392
ஓக்கவிந் திரனும் வீழ்ந்தான் உடல்சின வுருமே றன்றான்
புக்கிடந் தேடிக் காணான் புண்ணிய முளரி யண்ணல்
பக்கம்வந் தனைய செய்தி பகர்ந்தனன் பதகன் மாளத்
தக்கதோர் சூழ்ச்சி முன்னிச் சராசர மீன்ற தாதை
393
விந்தவெற் படக்கி னாற்கீ துரையென விடுப்ப மீண்டு
சந்தவெற் படைந்தான் வானோர் தலைவனை முகமன் கூறிப்
பந்தவெற் பறுத்தான் வந்த தெவனெனப் பறைகள் எல்லாஞ்
சிந்தவெற் பறுத்தான் வந்த செயலெலா முறையாற் செப்பி
394
யாலையு முணர்ந்த வெந்தைக் கியானெடுத் துணர்த்து கின்ற
தாவாதென் னமருக் காற்றா தாழிபுக் கொளித்தான் ஆவி
வீவது மவனால் வந்த விழுமநோ யெல்லா மின்று
போவதுங் கருதி நும்பாற் புகுந்தன மடிகளென்றான்
395
என்றவன் இடுக்கண் டீர்ப்பா னிகல்புரி புலன்க ளைந்தும்
வென்றவ னெடியோன் றன்னை விடையவன் வடிவ மாக்கி
நின்றவ னறிவா னந்த மெய்ம்மையாய் நிறைந்த வெள்ளி
மன்றவ னூழிச் செந்தீ வடிவினை மனத்துட் கொண்டான்
396
கைதவன் கரந்து வைகுங் கடலைவெற் படக்குங் கையிற்
பெய்துழுந் தெல்லைத் தாக்கிப் பருகினான் பிறைசேர் சென்னி
ஐயன தருளைப் பெற்றார்க் கதிசய மிதென்கொன் முன்று
வையமுத் தொழிலுஞ் செய்ய வல்லவர் அவரே யன்றோ
397
அறந்துறந் தீட்டு வார்த மரும்பெறற் செல்வம் போல
வறந்தன படுநீர்ப் பௌவம் வடவைகட் புலப்பட் டாங்கு
நிறைந்தசெம் மணியு மத்தீ நீண்டெரி சிகைபோ னீண்டு
சிறந்தெழு பவளக் காடுந் திணியிருள் விழுங்கிற் றம்மா
398
பணிகளின் மகுட கோடிப் பரப்பென விளங்கிப்பல்கா
சணிகலப் பேழை பேழ்வாய் திறந்தனைத் தாகி யொன்பான்
மணிகிடந் திமைக்கு நீரான் மகபதி வேள்விக் காவாய்த்
திணியுடல் அவுணன்பட்ட செங்கள மனைய தன்றே
399
வறந்தநீர் தன்னின் மின்னு வாள்விதிர்த் தென்னப் பன்மீன்
எறிந்தன நெளிந்த நாகம் இமைத்தன வளைய முத்துஞ்
செறிந்தன கரந்த யாமை சேர்ந்தபல் பண்டஞ் சிந்தி
முறிந்தன வங்கங் கங்க முக்கின சிறுமீ னெல்லாம்
400
செருவினில் உடைந்து போன செங்கண்வா ளவுண னங்கோர்
அருவரை முதுகிற் கார்போ லடைந்துவா னாடர் செய்த
உருகெழு பாவந் தானோ ருருவெடுத் திருந்து நோற்கும்
பரிசென நோற்றா னின்னும் பரிபவ விளைவு பாரான்
401
கைதவ நோன்பு நோற்குங் கள்வனைக் கண்டு வானோர்
செய்தவ மனையான் யாணர் வச்சிரஞ் சீரிப் பான்போற்
பொய்தவன் றலையைக் கொய்தான் புணரிவாய் நிறையச் சோரி
பெய்தது வலாரி தன்னைப் பிடித்தது பிரமச் சாயை
402
உம்மெனு மார்பைத் தட்டு முருத்தெழு மதிர்க்கும் போர்க்கு
வம்மெனும் வாய்மடிக்கும் வாளெயி றதுக்கும் வீழுங்
கொம்மென வோடுமீளுங் கொதித்தழுஞ் சிரிக்குஞ் சீறும்
இம்மெனும் அளவு நீங்கா தென்செய்வா னஞ்சி னானே
403
விரைந்தரன் றிசையோர் வாவி வீழ்ந்தொரு கமல நூலுட்
கரந்தனன் மகவா னிப்பாற் கற்பக நாடு புல்லென்
றிடுந்ததா லிருக்கு மெல்லை யிம்பரி னகுட னென்போன்
அருமபரி மேத வேள்வி யாற்றினான் ஆற்று மெல்லை
404
அரசிலா வறுமை நோக்கி யவனைவா னாடர் யாரும்
விரை செய்தார் மகுடஞ் சூட்டி வேந்தனாக் கொண்டார் வேந்தாய்
வருபவன் சசியை யீண்டுத் தருகென மருங்கு ளார்ப்போய்த்
திரைசெய்நீ ரமுத னாட்குச் செப்பவக் கற்பின் மிக்காள்
405
பொன்னுயிர்த் தனைய காட்சிப் புண்ணிய குரவன் முன்போய்
மின்னுயிர்த் தனையா ணின்று விளம்புவாள் இதென்கொல் கெட்டேன்
என்னுயிர்த் துணைவ னாங்கே யிருக்கமற் றொருவ னென்னைத்
தன்னுயிர்த் துணையாகக் கொள்கை தருமமோ வடிக ளென்றாள்
406
மாதவர் எழுவர் தாங்க மாமணிச் சிவிகை மீது
போதரி னவனே வானோர் புரந்தர னவனே யுன்றன்
காதல னாகு மென்றான் கைதொழுதற்கு நேர்ந்தம்
மேதகு சிறப்பாலிங்கு வருகென விடுத்தா டூது
407
மனிதரின் மகவா னாகி வருபவன் சிவிகை தாங்கும்
புனித மாதவரை யெண்ணான் புண்கணோய் விளைவும் பாரான்
கனிதரு காமந் துய்க்குங் காதலால் விரையச் செல்வான்
இனிதயி ராணி பாற்கொண் டேகுமின் சர்ப்ப வென்றான்
408
சர்ப்பமா கெனமுற் கொம்பு தாங்குமுன் னடக்குந் தென்றல்
வெற்பனா முனிவன் சாபம் விளைத்தனன் விளைத்த லோடும்
பொற்பமா சுணமே யாகிப் போயினா னறிவி லாத
அற்பரா னவர்க்குச் செல்வம் அல்லது பகைவே றுண்டோ
409
பின்னர்த்தங் குரவ னான பிரானடி பணிந்து வானோர்
பொன்னகர் வேந்தன் இன்றிப் புலம்படை கின்ற தைய
என்னுலங் குரவன் போயவ் விலஞ்சியு ளளித்தாற் கூவித்
தன்னுரை யறிந்து போந்த சதமகற் கொண்டு மீண்டாள்
410
கொடும்பழி கோட்பட் டான்றன் குரவனை வணங்கி யென்னைச்
சுடும்பழி கழிய தெங்ஙன் சொல்லெனத் தொலைவ தோர்ந்தான்
அடும்பழி மண்மேல் அன்றி யறாதுநீ வேட்டைக் கென்னப்
படும்பழி யிதனைத் தீர்ப்பான் பார்மிசை வருதி யென்றான்
411
ஈசனுக் கிழைத்த குற்றந் தேசிகன் எண்ணித் தீர்க்குந்
தேசிகற் கிழைத்த குற்றங் குரவனே தீர்ப்ப தன்றிப்
பேசுவ தெவனோ தன்பாற் பிழைத்தகா ரணத்தால் வந்த
வாசவன் பழியைத் தீர்ப்பான் குரவனே வழியுங் கூற
412
வாம்பரி யுகைத்துத் தன்னால் வழிபடு குரவன் வானோர்
தாம்பரி வோடுஞ் சூழத் தாராதலத் திழிந்து செம்பொற்
காம்பர் தோளி பங்கன் கயிலைமால் வரையைத் தாழ்ந்து
தேம்பரி யலங்கன் மார்பன் றென்றிசை நோக்கிச் செல்வான்
413
கங்கைமுத லளவிறந்த தீர்த்தமெலாம் போய்ப்படிந்து காசி காஞ்சி
அங்கனக கேதார முதற்பதிகள் பலபணிந்து மவுணற் கொன்ற
பொங்குபழி விடாதழுங்கி யராவுண்ண மாசுண்டு பொலிவு மாழ்குந்
திங்களனை யான்கடம்ப வனத்தெல்லை யணித்தாகச் செல்லு மேல்வை
414
தொடுத்தபழி வேறாகி விடுத்தகன்ற திந்திரன்றான் சுமந்த பாரம்
விடுத்தவனொத் தளவிறந்த மகிழ்வெய்தித் தேசிகன் பால் விளம்பப் பாசங்
கெடுத்தவன்மா தலம்புனித தீர்த்தமுள விவணமக்குக் கிடைத்தல் வேண்டும்
அடுத்தறிக வெனச்சிலரை விடுத்தவ்வே றாநிலை நின்று அப்பாற் செல்வான்
415
அருவிபடிந் தருவியெறி மணியெடுத்துப் பாறை யிலிட் டருவி நீர்தூய்க்
கருவிரல்கொய் தலர்சூட்டிக் கனியூட்டு வழிபடுவ கல்லா மந்தி
ஒருதுறையில் யாளிகரி புழைக்கைமுகந் தொன்றற் கொன் றூட்டி யூட்டிப்
பருகுவன புலிமுலைப்பால் புல்வாய்க்கன் றருந்தியிடும் பசிநோய் தீர
416
நெளியராக் குருளைவெயில் வெள்ளிடையிற் கிடந்துயங்கி நெளியப் புள்ளே
றொலியறாச் சிறைவிரித்து நிழல்பரப்பப் பறவைநோய் உற்ற தேகொல்
அளியவா யச்சோவென் றோதியயன் மடமந்தி யருவி யூற்றுந்
துளியநீர் வளைத்தசும்பின் முகந்தெடுத்துக் கருங்கையினாற் சொரிவ மாதோ
417
படவரவ மணியீன்று நொச்சிப்பா சிலையன்ன பைந்தாண் மஞ்ஞை
பெடைதழுவி மணஞ்செய்ய மணவறையில் விளக்கிடுவ பெருந்தண் கானத்
தடர்சிறைமென் குயிலோமென் றார்ப்பமடக் கிள்ளையெழுத் தைந்தும் ஓசை
தொடர்புபெற வுச்சரிப்பக் குருமொழிகேட்டாங் குவப்ப தொடிக்கட் பூவை
418
இன்னவிலங் கொடுபுள்ளின் செயற்கரிய செயனோக்கி யிறும்பூ தெய்திப்
பொன்னகரான் புளகமுடல் புதைப்பநிறை மகிழ்ச்சியுளம் புதைப்பப் போவான்
அன்னபொழு தொற்றுவர்மீண் டடிவணங்கி யின்சுவைப்பால் அருந்து வான்முன்
பின்னரிய தேன்சொரிந்தாங் குவகைமேற் பேருவகை பெருகச் சொல்வார்
419
எப்புவனத் திலுமென்றுங் கண்டறியா வதிசயமு மெண்ணுக் கெய்தாத்
திப்பியமு மிக்கடம்ப வனத்தின்று கண்டுவகை திளைத்தே பங்கண்
வைப்பனைய வொருபுனித வாவிமருங் கொருகடம்ப வனத்தினீழல்
ஒப்பிலொளி யாய்முளைத்த சிவலிங்க மொன்றுள தென் றுரைப்பக் கேட்டான்
420
செவித்துளையி லமுதொழுக்கு முழையரொடும் வழிக்கொண்டு சென்னிமேற்கை
குவித்துளமெய் மொழிகரணங் குணமூன்று மொன்றித்தன் கொடிய பாவம்
அவித்துளயர் வொழிக்கமுளைத் தருள்குறிமேல் அன்பீர்ப்ப வடைவான் கானங்
கவித்துளபூந் தடம்படிந்து கடம்பவனத் துழைநுழைந்தான் கவலை தீர்வான்
421
அருவாகி யுருவாகி யருவுவங் கடந்துண்மை யறிவா னந்த
உருவாகி யளவிறந்த வுயிராகி யவ்வுயிர்க்கோர் உணர்வாய்ப் பூவின்
மருவாகிச் சராசரங்க ளகிலமுந்தன் னிடையுதித்து மடங்க நின்ற
கருவாகி முளைத்தசிவக் கொழுந்தையா யிரங்கண்ணுங் களிப்பக் கண்டான்
422
கண்டுவிழுந் தெழுந்துவிழி துளிப்பவெழு களிப்பென்னுங் கடலில் ஆழ்ந்து
விண்டுமொழி தழுதழுப்ப வுடல்பனிப்ப வன்புருவாய் விண்ணோர் வேந்தன்
அண்டர்பிரா னருச்சனைக்கு வேண்டுமுப கரணமெலா மகல்வா னெய்திக்
கொண்டுவரச் சிலரைவிடுத் தவரேகப் பின்னுமொரு குறைவு தீர்ப்பான்
423
தங்குடிமைத் தச்சனையோர் விமானமமைத் திடவிடுத்தத் தடத்தின் பாற்போய்
அங்கணனைக் கடிதருச்சித் திடநறிய மலர்கிடையா தயர்வா னந்தச்
சங்கெறிதண் டிரைத்தடத்தில் அரனருளாற் பலபரிதி சலதி யொன்றிற்
பொங்குகதிர் பரப்பிமுளைத் தாலென்னப் பொற்கமலம் பூப்பக் கண்டான்
424
அன்புதலை சிறப்புமகிழ்ந் தாடினான் காரணத்தால் அதற்குநாமம்
என்பதுபொற் றாமரையென் றேழுலகும் பொலிகவென விசைத்துப் பின்னும்
மின்பதுமத் தடங்குடைந்து பொற்கமலங் கொய்தெடுத்து மீண்டு நீங்காத்
தன்பிணிநோய் தணியமுளைத் தெழுந்தமுழு முதன்மருந்தின் றன்பால் வந்து
425
மொய்த்தபுனக் காடெறிந்து நிலந்திருத்தி வருமளவின் முளைத்த ஞான
வித்தனைய சிவக்கொழுந்தின் றிருமுடிமேற் பரிதிகா மெல்லத் தீண்டச்
சிந்தநெகிழ்ந் திந்திரன்றன் வெண்கவிகைத் திங்கணிழல் செய்வான் உள்ளம்
வைத்தனனப் போதிரவி மண்டலம்போ லிழிந்த தொரு மணிவி மானம்
426
கிரியெட்டு மெனமழையைக் கிழித்தெட்டும் புழைக்கைமதிக் கீற்றுக் கோட்டுக்
கரியெட்டுஞ் சினமடங்க னாலெட்டு மெட்டெட்டுக் கணமுந்தாங்க
விரியெட்டுத் திசைபரப்ப மயனிருமித் துதவியவவ் விமானஞ் சாத்தி
அரியெட்டுத் திருவுருவப் பரஞ்சுடரை யருச்சிப்பான் ஆயி னானே
427
முந்தவம ருலகடைந்து பூசனைக்கு வேண்டுவன முழுதந் தேர்வார்
வந்துதரு வைந்தீன்ற பொன்னாடை மின்னுமிழு மணிப்பூண் வாசச்
சந்தனமந் தாகினிமஞ் சனந்தூபந் திருப்பள்ளித் தாமந் தீபம்
அந்தமிலா னைந்துநறுங் கனிதீந்தேன் றிருவமுத மனைத்துந் தந்தார்
428
தெய்வத்தா மரைமுளைத்த தடம்படிந்து பவந்தொலைக்குந் திருநீ றாடித்
சைவத்தாழ் வடந்தாங்கி யன்புருவாய் அருளுவந் தானாய்த் தோன்றும்
பைவைத்தா டரவார்த்த பசுபதியை யவனுரைத்த பனுவ லாற்றின்
மெய்வைத்தா தரம்பெருக வருச்சனைசெய் தானந்த வெள்ளத் தாழ்ந்தான்
429
பாரார வட்டாங்க பஞ்சாங்க விதிமுறையாற் பணிந்துள் வாய்மெய்
நேராகச் சூழ்ந்துடலங் கம்பித்துக் கும்பிட்டு நிருத்தஞ் செய்து
தாராருந் தொடைமிதப்ப வானந்தக் கண்ணருவி ததும்ப நின்றன்
பாராமை மீக்கொள்ள வஞ்சலித்துத் துதிக்கின்றான் அமரர் கோமான்
430
அங்கணா போற்றி வாய்மை யாரணா போற்றி நாக
கங்கணா போற்றி மூல காரணா போற்றி நெற்றிச்
செங்கணா போற்றி யாதி சிவபரஞ் சுடரே போற்றி
எங்கணா யகனே போற்றி யீறிலா முதலா போற்றி
431
யாவையும் படைப்பாய் போற்றி யாவையுந் துடைப்பாய் போற்றி
யாவையு மானாய் போற்றி யாவையும் அல்லாய் போற்றி
யாவையு மறிந்தாய் போற்றி யாவையு மறந்தாய் போற்றி
யாவையு புணர்ந்தாய் போற்றி யாவையும் பிரிந்தாய் போற்றி
432
இடருறப் பிணித்த விந்தப் பழியினின் றென்னை யீர்த்துன்
அடியிணைக் கன்ப னாக்கு மருட்கடல் போற்றி சேற்கண்
மடவரன் மணாள் போற்றி கடம்பமா வனத்தாய் போற்றி
சுடர்விடு விமான மேய சுந்தர விடங்க போற்றி
433
பூசையும் பூசைக்கேற்ற பொருள்களும் பூசை செய்யும்
நேசனும் பூசை கொண்டு நியதியின் பேறு நல்கும்
ஈசனுமாகிப் பூசை யான்செய்தேன் என்னுமென் போத
வாசனை யதுவுமான மறைமுத லடிகள் போற்றி
434
என்னநின் றேத்தி னானை யின்னகை சிறிது தோன்ற
முன்னவ னடியார் எண்ண முடிப்பவ னருட்க ணோக்கால்
உன்னது வேட்கை யாதிங் குரையென விரையத் தாழ்ந்து
சென்னிமேற் செங்கை கூப்பித் தேவர்கோ னிதனை வேண்டும்
435
ஐயநின் னிருக்கை யெல்லைக் கணியனாம் அளவி னீங்கா
வெய்யவென் பழியி னோடு மேலை நாளடியேன் செய்த
மையல்வல் விளையு மாய்ந்துன் மலரடி வழுத்திப் பூசை
செய்யவு முரிய னானேன் சிறந்தபே றிதன்மேல் யாதோ
436
இன்னநின் பாதப் போதே யிவ்வாறே யென்றும் பூசித்
துன்னடி யாருள் யானு மோரடித் தொண்டன் ஆவேன்
அன்னதே யடியேன் வேண்டத் தக்கதென் றடியில் வீழ்ந்த
மன்னவன் றனக்கு முக்கண் வரதனுங் கருணை பூத்து
437
இருதுவிற் சிறந்த வேனிலு மதியா றிரண்டிச் சிறந்தவான் றகரும்
பொருவிறா ரகையிற் சிறந்தசித் திரையுந் திதியினிற் சிறந்தபூ ரணையும்
மருவுசித் திரையிற் சித்திரை தோறும் வந்துவந் தருச்சியோர் வருடந்
தெரியுநாண் முந்நூற் றறுபது மைந்துஞ் செய்தவர்ச் சனைப்பயன் எய்தும்
438
துறக்கநா டணைந்து சுத்தபல் போகந் துய்த்துமேன் மலபரி பாகம்
பிறக்கநான் முகன்மான் முதற்பெருந் தேவர் பெரும் பதத் தாசையும் பிறவும்
மறக்கநாம் வீடு வழங்குதும் என்ன வாய்மலர்ந் தருளிவான் கருணை
சிறக்கநால் வேதச் சிகையெழு மநாதி சிவபரஞ் சுடர்விடை கொடுத்தான்
439
மூடினான் புளகப் போர்வையால் யாக்கை முடிமிசை யஞ்சலிக் கமலஞ்
சூடினான் வீழ்ந்தான் எழுந்துகண் ணருவி பன்முறை துதிசெய்
தாடினா னைய னடிபிரி வாற்றா தஞ்சினா னவனரு ளாணை
நாடினான் பிரியாவிடைகொடு துறக்க நண்ணினான் விண்ணவர் நாதன்
440
வந்தரமங் கையர் கவரி மருங்கு
வீச மந்தார கற்பகப்பூ மாரி தூற்ற
அந்தரநாட் டவர்முடிகள் அடிகள்சூட வயிராணி
முலைத்த டந்தோய்ந் தகலந் திண்டோள்
விந்தமெனச் செம்மாந்து விம்மு காம
வெள்ளத்து ளுடலழுந்தவுள்ளஞ் சென்று
சுந்தரநா யகன் கருணை வெள்ளற் தாழ்ந்து தொன்
முறையின் முறைசெய்தான் துறக்க நாடன்
இந்திரன் பழிதீர்த்தப் படலம் சுபம்
2. வெள்ளை யானையின் சாபம் தீர்த்த படலம்
2.
வெள்ளை யானையின் சாபம் தீர்த்த படலம்
441
மட்டவிழுங் கொன்றைச் சடையான் மகவானைத்
தொட்ட பழியின் றொடக்கறுத்த வாறீது
பட்டமத வேழம் பரனைப் பராய் முனிவன்
அட்டகொடுஞ் சாபநீத் தேகியவாறு ஓதுவாம்
442
கருவா சனைகழிக்குங் காசிநகர் தன்னிற்
றுருவாச வேதமுனி தொல்லா கமத்தின்
பெருவாய்மை யாற்றன் பெயர் விளங்க வீசன்
ஒருவா விலிங்க வொளியுருவங் கண்டான்
443
இன்புற் றருச்சனைசெய் தேத்துவான் அவ்வேலை
அன்புக் கெளிய னருளாற் றிருமுடிமேன்
மின்பொற் கடிக்கமலப் போதொன்று வீழ்த்திடலுந்
தன்பொற் கரகமலப் போதலர்த்தித் தாங்கினான்
444
தாங்கிக்கண் சென்னி தடமார் பணைத்துடலம்
வீங்கித் தலைசிறந்த மெய்யுவகை மேற்கொள்ள
நீங்கிக் கழிந்த கருணை நிதியனையான்
யங்கற் பகநாட்டிற் போகின்றான் அவ்வேலை
445
சங்கலறச் செங்களத்துத் தானவரைத் தேய்த்துவிறற்
கொங்கலர்ந்தார் வேய்ந்தமரர் கோமான்றன் கோநகரிற்
செங்கண் அமரர்பெருஞ் சேனைக் கடல் கலிப்ப
மங்கலப்பல் லாண்டு மறைமுழங்க வந்தணைவான்
446
எத்திக்குங் கல்லென் றியங்கலிப்ப வேந்திழையார்
தித்தித்து அமுதொழுக்குங் கீதஞ் செவிமடுப்பப்
பத்திக் கவரிநிரை தானைபடுகடலிற்
றத்திப் புரளுந் திரைபோற் றலைபனிப்ப
447
அங்கட் கடலி னெடுங்கூடம் பகநிமிர்ந்த
வங்கத் தலையுய்க்கு மீகான் றனைமானத்
திங்கட் குடைநிழற்றத் தீந்தே மதங்கவிழ்க்கும்
வெங்கற் களிற்றின் மிசைப்பவனி போந்தணைந்தான்
448
அத்தலைவிண் ணாடர் அருகணைந்து வெவ்வேறு
தத்த மனக்கிசைந்த கையுறைக டாங்கொடுத்துக்
கைத்தலங்கள் கூப்பினார் கண்டார் கடவுளரில்
உத்தமனை யர்ச்சித்துப் போந்தமுனி யுத்தமனும்
449
தீங்கரிய வாசிமொழி செப்பித்தன் செங்கரத்தின்
நீங்கரிய தாமரையை நீட்டினான் மற்றதனைத்
தாங்கரிய செல்வத் தருக்காலோர் கையோச்சி
வாங்கிமத யானையின்மேல் வைத்தான் மதியில்லான்
450
கீறிக் கிடந்த மதியனைய கிம்புரிகோட்
டூறிக் கடங்கவிழ்க்கு மால்யானை யுச்சியின்மேல்
நாறிக்கிடந்த நறுமலரை வீழ்த்தியுரற்
சீறிக்கிடந்த நெடுந் தாளாற் சிதைத்தன்றே
451
கண்டான் முனிகாமற் காய்ந்தா னுதற்கண்போல்
விண்டார் அழல்சிதற நோக்கினான் வெங்கோபங்
கொண்டா னமர ரொதுங்கக் கொதித்தாலம்
உண்டா னெனநின் றுருத்தா னுரைக்கிறான்
452
புள்ளியதோ லாடை புனைந்தரவம் பூணணிந்த
வெள்ளிய செங்கண் விடையான் அடிக்கமலம்
உள்ளிய மெய்யன் புடையா ரருவருத்துத்
தள்ளிய செல்வத் தருக்கினா யென்செய்தாய்
453
கதிர்த்தார் முடியமரர் கையுறையே நன்கு
மதித்தா யெம்மீசன் மதிமுடிமேற் சாத்தும்
பொதித்தா தவிழ்மலரைப் போற்றாது வாங்கி
மிதித்தானை சிந்தவதன் மேல்வைத்தாய் பேதாய்
454
வண்டுளருந் தண்டுழாய் மாயோன் இறுமார்ப்பும்
புண்டரிகப் போதுறையும் புத்தே ளிறுமாப்பும்
அண்டர்தொழ வாழுன் னிறுமாப்பு மாலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்
455
சேட்டானை வானவநின் சென்னி செழியரிலோர்
வாட்டானை வீரன் வளையாற் சிதறுகநின்
கோட்டான நாற்கோட்டு வெண்ணிறத்த குஞ்சரமும்
காட்டானை யாகவென விட்டான் கடுஞ்சாபம்
456
சவித்தமுனி பாதந் தலைக்கொண்டு செங்கை
குவித்தமரர் தங்கோன் குறையிரப்பா ரைய
அவித்தபொறி யாயெம் மரசுங்கா றள்ளுஞ்
செவித்தறுகண் வேழமுந் தீங்குடையர் அன்றோ
457
அத்தகைய நீராற் சபித்தீ ரடிகேன்மற்
றித்தகைய சாப மினிவிடுமின் என்றிரந்து
கைத்தலங்கள் கூப்பிக் கரைந்தார்க் கிரங்கியருள்
வைத்த முனிபிறிது சாபம் வகுக்கின்றான்
458
சிந்தனை வாக்கிற் கெட்டாச் சிவனருள் அளித்த சேட
நிந்தனை பரிகா ரத்தா னீங்காது தலைமட் டாக
வந்தது முடிமட் டாக மத்தமா வனமா வாகி
ஐந்திரு ப•தாண் டெல்லை யகன்றபின் பண்டைத் தாக
459
என்றனன் பிறிது சாபம் இந்திரன் மகுட பங்கம்
ஒன்றிய செய்கை பின்ன ருரைத்துமற் ற•து நிற்க
நின்றவெள் ளானை வான நீத்தறி விழுந்து நீலக்
குன்றென வனத்து வேழக் குழாத்தொடு குழீ இய தன்றே
460
மாவொடு மயங்கிச் செங்கன் மறம்பயில் காடு முல்லைப்
பூவொடு வழங்கு நீத்தப் புறவமுங் குறவர் தங்கள்
தேவொடு பயிலுங் கல்லுந் திரிந்துநூ றியாண்டுஞ் செல்லக்
காவொடு பயிலுந் தெய்வக் கடம்பமா வனம்புக் கன்றே
461
புக்குரல் வட்டத் திண்காற் பொருவிறே வியலிற் றீர்ந்த
மைக்கருங் களிறு முக்கண் மாதவன் அருள்வந் தெய்தத்
தக்கதோ ரமையஞ் சார மரகதந் தழைத்து மின்னு
நக்கபொன் முளரி பூத்த நளிர்கயந் தலைக் கண் டன்றே
462
கண்டபோ தறிவு தோன்றக் கயந்தலைக் குடைந்த போது
பண்டைய வடிவந் தோன்றப் பரஞ்சுடர் அருட்கண் டோன்றக்
கொண்டதோர் பரமா னந்தக் குறியெதிர் தோன்றக் கும்பிட்
டண்டர்நா யகனைப் பூசை செய்வதற் கன்பு தோன்ற
463
தூம்புடைக் கையான் மொண்டு மஞ்சனத் தாநீ ராட்டித்
தேம்புடை யொழுகப் பள்ளித் தாமமுந் தெரிந்து சாத்திப்
பாம்புடைத் தாயவேணிப் பரனையர்ச் சிக்கவுள்ளத்
தாம்புடை யறிந்த வெந்தை யானையை நோக்கிக் கூறும்
464
வந்ததை யெவனீ வேண்டும் வரமெவன் உரைத்தி யென்னச்
சிந்தையி லன்பு கூர்ந்த தெய்வத வேழந் தாழ்ந்து
முந்தையில் விளைவும் வந்த முறைமையு முறையாற் கூறி
எந்தையை யடையப் பெற்றேற் கினியொரு குறையுண் டாமோ
465
என்பதா மாரம் பூண்ட வெந்தையிக் கரிக ளெட்டோ
டொன்பதா யடிய னேனு முன்னடி பிரியா துன்றன்
முன்பதா யிவ்வி மான முதுகுறச் சுமப்ப லென்றோர்
அன்பதா யொன்றென் னுள்ளத் தடுத்ததா ல•தே வேண்டும்
466
இடையறா வன்பின் வேழ மிங்ஙனங் கூற விண்ணா
டுடையவ னம்பான் மெய்யன் புடையவன் அவனைத் தாங்கி
அடைவதே நமக்கு வேண்டு மகமகிழ் வென்னாப் பின்னும்
விடையவள் வரங்க ணல்கி விடைகொடுத் தருளி னானே
467
விடைகொடு வணங்கி யேகும்வெள் ளானை
மேற்றிசை யடைந்துதன் பெயராற்
றடமுமற் றதன்பால் ஆனையுங் கணேசன்
றன்னையுங் கண்டருச் சனைசெய்
திடையறா வன்புந் தானுமங் கிருக்கு மெல்லையிச்
செய்திகேட் டருள்கூர்
கடவுளர் பெருமா னுழையரை விளித்தெங்
களிற்றினைக் கொணர்கென விடுத்தான்
468
வல்லைவந் தழைத்தார் தம்மைமுன் போக்கி
வருவ லென் றெழுந்துகீழ்த் திசையோர்
எல்லைவந் தோரூர் தன்பெய ராற்கண் டிந்திரேச்
சிரனென விறைவன்
றொல்லைவண் பெயரா லொன்றுகண் டரனைத்
தூயபூ சனைசெய்தல் கிருப்பக்
கல்லைவன் சிறகு தடிந்தவன் இன்னுங் களிறுவந்
திலதெனப் பின்னும்
469
மனத்தினுங் கடிய தூதரை விடுப்ப வானடைந்
திறைவனை வணங்கிப்
புனத்தினுங் கடிய கல்லினும் பன்னாட் புன்கணோ
யுறவரு சாபங்
கனத்தினுங் கரிய கண்டனைக் கண்டு சுளைந்ததுங்
கிளந்துதிக் கயத்தின்
இனத்தினுங் கழிந்த தெய்வத வேழம் இனிதுவீற
றிருந்தது மாதோ
470
குடவயி னயிரா வதப்பெருந் தீர்த்தங் குடைந்தயி ராவத கணேசக்
கடவுளைத் தொழுதை ராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் சாபத்
தொடர்பினும் பாவத் தொடர்பினுங் கழிவர் சுராதிபன் களிறுசென்னெறிபோய்
இடர்கெட வைகை படிந்துதென் கரையில் இந்திரேச் சுரனடி பணிவோர்
471
இம்மையி லறமுன் மூன்றால் எம்திய பயனை யெய்தி
அம்மையின் மகவா னீரே ழரும்பத மளவும் வானில்
வெம்மையில் போக மூழ்கி வெறுப்புவந் தடைய வுள்ளச்
செம்மையில் விளைபே ரின்பச் சிவகதிச் செல்வ ராவார்
வெள்ளை யானையின் சாபம் தீர்த்த படலம் சுபம்
3. திருநகரம் கண்ட படலம்
472
தான வாறிழி புகர்முகத் தடுகரி சாபம்
போன வாறுரை செய்துமேற் புதுமதி முடிமேல்
வான வாறினன் கடம்பா வனமுது நகரம்
ஆன வாறது தனைச்சிறது அறிந்தவா றறைவாம்
473
இன்ன ரம்புளர் ஏழிசை யெழிஅன்மிடற் றளிகள்
கின்ன ரம்பயில் கட்ம்பமா வனத்தினின் கீழ்சார்த்
தென்னர் சேகர னெனுங்குல சேகர னுலக
மன்னர் சேகர னரசுசெய் திருப்பது மண்வூர்
474
குலவு மப்பெரும் பதியிளங் கோக்களில் ஒருவன்
நிலவு மாநிதி போலருச் சனைமுத னியதி
பலவு மாஞ்சிவ தருமமுந் தேடுவான் பரன்பாற்
றலைமை சான்றமெய் யன்பினான் தனஞ்சயன் என்பான்
475
செல்வ மாநக ரிருந்துமேற் றிசைப்புலஞ் சென்று
மல்லல் வாணிகஞ் செய்துதன் வளம்பதி மீள்வான்
தொல்லை யேழ்பவக் கடற்கரை தோற்றுவித் தடியார்
அல்ல றீர்ப்பவன் கடம்பமா வனம்புகும் அளவில்
476
இரவி கண்மறைந் தேழ்பரி யிரத முந் தானும்
உரவு நீர்க்கருங் கடலில் வீழ்ந் தொளித்தன னாக
இரவு நீண்மயங் கிருள்வயிற் றமியனாய் மெலியும்
அரவு நீர்ச்சடை யண்ணலுக் கன்பினோ னாங்கண்
477
வாங்கு நான்மருப் பேந்திய மதமலை யெருத்தந்
தாங்கி யாயிரங் கரங்களாற் றடவியெண்டி சையுந்
தூங்கு காரிரு டுரத்துசெஞ் சுடரெனச் சூழ்போய்
வீங்கு காரிரு ளதுக்கிய விமானனேர் கண்டான்
478
அடுத்த ணைந்தனன் அவிர்சுடர் விமானமீ தமர்ந்த
கடுத்த தும்பிய கண்டனைக் கண்டுதாழ்ந் துவகை
மடுத்த நெஞ்சினா னங்ஙனம் வைகிருள் கழிப்பான்
எடுத்த சிந்தையி னிடுந்தன னிருக்குமவ் விருள்வாய்
479
சோம வாரமன் றாதலாற் சுரர்களங் கெய்தி
வாம மேகலை மலைமக டலைமகன் மலர்ந்த
காமர் சேவடி பணிந்தவன் கங்குல்போற் கருதி
யாம நான்கினு மருச்சனை யின்புறப் புரிவார்
480
அண்டர் வந்தது மருச்சனை புரிவது மனைத்துந்
தொண்டர் அன்பினுக் கெளியவன் சுரர்தொழக் கறுத்த
கண்ட னின்னருட் கண்ணினாற் கண்டன னுதலிற்
புண்ட ரம்பயி லன்புடைப் புண்ணிய வணிகன்
481
நான மென்பனி நறும்புன னாயகன் பூசைக்
கான நல்விரை வருக்கமும் அமரர்கைக் கொடுத்து
ஞான வெண்மதிச் சடையவன் கோயிலின் ஞாங்கர்த்
தான மர்ந்தருச் சனைசெய்வான் றங்கணா யகனை
482
வள்ள றன்னைமெய் யன்பினால் அருச்சனைசெய் வானோர்
உள்ள வல்வினை யீட்டமுங் கங்குலு மொதுங்கக்
கள்ள மில்லவன் யாரையுங் கண்டிலன் கண்டான்
தள்ள ருஞ்சுடர் விமானமேற் றனித்துறை தனியை
483
ஆழ்ந்த சிந்தையன் அதிசய மடைந்துசே வடிக்கீழ்த்
தாழ்ந்தெ ழுந்திரு கைகளுந் தலைமிசைக் கூப்பிச்
சூழ்ந்து தன்பதிக் கேகுவா னொருதலை துணிந்து
வாழ்ந்த வன்பினான் விடைகொடு வழிக்கொடு வந்தான்
484
முக்க டம்படு களிற்றினான் முகிறவழ் கோயில்
புக்க டங்கலர் சிங்கமன் னானெதிர் புகல்வான்
திக்க டங்கலுங் கடந்தவெந் திகிரியாய் நெருநல்
அக்க டம்பமா வனத்திலோர் அதிசயங் கண்டேன்
485
வல்லை வாணிகஞ் செய்துநான் வருவழி மேலைக்
கல்ல டைந்தது வெங்கதிர் கங்குலும் பிறப்பும்
எல்லை காணிய கணடனன் இரவிமண் டலம்போல்
அல்ல டுஞ்சுடர் விமானமு மதிற்சிவக் குறியும்
486
மாவ லம்புதார் மணிமுடிக் கடவுளர் வந்தத்
தேவ தேவனை யிரவெலாம் அருச்சனை செய்து
போவ தாயினார் யானுமப் பொன்னெடுங் கோயின்
மேவு மீசனை விடைகொடு மீண்டன னென்றான்
487
மூளு மன்பினான் மொழிந்திட முக்கணெம் பெருமான்
றாளு மஞ்சலி கரங்களுந் தலையில்வைத் துள்ளம்
நீளு மன்புறமற் புதமுமே நிரம்பநீர் ஞாலம்
ஆளு மன்னவன் இருந்தனன் போயினா னருக்கன்
488
ஈட்டு வார்வினை யொத்தபோ திருண்மலங் கருக
வாட்டு வார்அவர் சென்னிமேன் மலரடிக் கமலஞ்
சூட்டு வார்மறை கடந்ததந் தொல்லுரு விளங்கக்
காட்டு வாரொரு சித்தராய்த் தோன்றினார் கனவில்
489
வடிகொள் வேலினாய் கடம்பா வனத்தினைத் திருந்தக்
கடிகொள் காடகழ்ந் தணிநகர் காண்கென வுணர்த்தி
அடிகள் ஏகினார் கவுரிய ராண்டகை கங்குல்
விடியும் வேலைகண் விழித்தனன் பரிதியும் விழித்தான்
490
கனவிற் றீர்ந்தவ னியதியின் கடன்முடித் தமைச்சர்
சினவிற் றீர்ந்தமா தவர்க்குந்தன் கனாத்திறஞ் செப்பி
நனவிற் கேட்டதுங் கனவிற் கண்டது நயப்ப
வினவித் தேர்ந்துகொண் டெழுந்தனன் மேற்றிசைச் செல்வான்
491
அமைச்ச ரோடுமந் நீபமா வனம்புகுந் தம்பொன்
சமைச்ச விழ்ந்தபொற் றாமரைத் தடம்படிந் தொளிவிட்
டிமைச்ச லர்ந்தபொன் விமானமீ தினிதுவீற் றிருந்தோர்
தமைச்ச ரண்பணிந்து அஞ்சலி தலையின்மேன் முகிழ்த்தான்
492
அன்பு பின்றள்ள முன்புவந் தருட்கணீர்த் தேக
என்பு நெக்கிட வேகிவீழ்ந் திணையடிக் கமலம்
பொன்பு னைந்ததார் மௌலியிற் புனைந்தெழுந்து இறைவன்
முன்பு நின்றுசொற் பதங்களாற் றோத்திர மொழிவான்
493
சரண மங்கையோர் மங்குறை சங்கர சரணஞ்
சரண மங்கல மாகிய தனிமுதல் சரணஞ்
சரண மந்திர வடிவமாஞ் சதாசிவ சரணஞ்
சரண மும்பர்க ணாயக பசுபதி சரணம்
494
ஆழி ஞாலமே லாசையும் அமரர்வான் பதமேல்
வீழு மாசையும் வெறுத்தவர்க் கன்றிமண் ணாண்டு
பீழை மூழ்கிவா னரகொடு பிணிபடச் சுழலும்
ஏழை யேங்களுக் காவதோ வெந்தைநின் கருணை
495
சூள தாமறைச் சென்னியும் தொடத்தொட நீண்ட
நீள னீயுனக் கன்பில மாயினு நீயே
மூள வன்புதந் தெங்குடி முழுவதும் பணிகொண்
டாள வேகொலிக் கானகத் தமர்ந்தனை யென்னா
496
சுரந்த வன்பிரு கண்வழிச் சொரிவபோற் சொரிந்து
பரந்த வாறொடு சிவானந்தப் பரவையுட் படிந்து
வரந்த வாதமெய் யன்பினால் வலங்கொடு புறம்போந்
தரந்தை தீர்ந்தவன் ஒருசிறை யமைச்சரோ டிருந்தான்
497
ஆய வேலையின் மன்னவ னாணையால் அமைச்சர்
மேய வேவலர் துறைதுறை மேவினர் விடுப்பப்
பாய வேலையி னார்த்தனர் வழிக்கொடு படர்ந்தார்
சேய காடெறிந் தணிநகர் செய்தொழின் மாக்கள்
498
வட்ட வாய்மதிப் பிளவின்வெள் வாய்க்கூரிய நவியம்
டூட்ட தோளினர் யாப்புடைக் கச்சினர் இரும்பின்
விட்ட காரொளி மெய்யினர் விசிகொள்வார் வன்றோல்
தொட்ட காலினர் வனமெறி தொழிலின ரானார்
499
மறியு மோதைவண் டரற்றிட மரந்தலை பனிப்ப
எறிய மோதையு மெறிபவ ரோதையும் இரங்கி
முறிய மோதையு முரிந்துவீ ழோதையு முகில்வாய்ச்
செறியு மோதையிங் கீழ்ப்பட மேற்படச் செறியும்
500
ஒளிறு தாதொடு போதுசெந் தேனுக வொலித்து
வெளிறில் வன்மரஞ் சினையிற் வீழ்வசெங் களத்துப்
பிளிறு வாயவாய் நிணத்தொரு குருதிநீர் பெருகக்
களிறு கோடிற மாய்ந்துவீழ் காட்சிய வனைய
501
பூவ டைந்தவண் டினமயற் புறவொடும் பழனக்
காவ டைந்தன பறவைவான் கற்பக மடைந்த
கோவ டைந்திட வொதுங்குறுங் குறும்புபோற் செறிந்து
மாவ டைந்தன மாடுள வரைகளுங் காடும்
502
இருணி ரம்பியவனவெலா மெறிந்துமெய் யுணர்ந்தோர்
தெருணி றைந்தசிந் தையின்வெளி செய்துபல் லுயிர்க்கும்
அருணி றைந்துபற் றறுத்தர னடிநிழ லடைந்த
கருணை யன்பர்தம பிறப்பென வேரொடுங் களைந்தார்
503
களைந்து நீணிலந் திருத்திச்செந் நெறிபடக் கண்டு
வளைந்து நன்னக ரெடுப்பதெவ் வாறெனத் தேறல்
விளைந்து தாதுகு தார்முடி வேந்தன்மந் திரரோ
டளைந்த ளாவிய சிந்தையோ டிருந்தன னங்கண்
504
மெய்ய ரன்புதோய் சேவடி வியனிலந் தீண்டப்
பொய்ய கன்றவெண் ணீறணி மேனியர் பூதிப்
பையர் நள்ளிருட் கனவில்வந் தருளிய படியே
ஐயர் வல்லைவந் தருளினா ரரசுளங் களிப்ப
505
கனவி லும்பெருங் கடவுளர் காண்பதற் கரியார்
நனவி லும்வெளி வந்தவர் தமையெதிர் நண்ணி
நினைவி னின்றதா ளிறைஞ்சிநேர் நின்றுநல் வரவு
வினவி யாதனங் கொடுத்தனன் மெய்யுணர் வேந்தன்
506
தென்ன ரன்பினில் அகப்படு சித்தர்தா முன்னர்ச்
சொன்ன வாதிநூல் வழிவரு சார்புநூற் றொடர்பால்
நன்ன ராலய மண்டபங் கோபுர நகரம்
இன்ன வாறுசெய் யெனவகுத் திம்மென மறைந்தார்
507
மறைந்தெ வற்றினு நிறைந்தவர் மலரடிக் கன்பு
நிறைந்த நெஞ்சுடைப் பஞ்சவ னிலத்துமேம் பட்டுச்
சிறந்த சிற்பநூற் புலவராற் சிவபரஞ் சுடர்வந்
தறைந்து வைத்தவா றாலய மணிநகர் காண்பான்
508
மறைபயில் மதும மண்டப மருத்த மண்டப மழை நுழை வளைவாய்ப்
பிறைபயில் சிகைமா மண்டப மறுகாற் பீடிகை திசையெலாம் பிளக்கும்
பறைபயி னிருத்த மண்டபம் விழாக்கொள் பன்மணி மண்டபம் வேள்வித்
துறைபயில் சாலை திருமடைப் பள்ளி சூழுறை தேவர்தங் கோயில்
509
வலவயி னிமய வல்லி பொற் கோயின் மாளிகை யடுக்கிய மதில்வான்
நிலவிய கொடிய நெடிய சூளிகைவா னிலாவிரி தவளமா ளிகைமீன்
குலவிய குடுமிக் குன்றிவர் செம்பொற் போபுரங் கொண்டல்கண் படுக்குஞ்
சுலவெயில் அகழிக் கிடங்குகம் மியநூற் றொல்வரம் பெல்லைகண் டமைத்தான்
510
சித்திர நிரைத்த பீடிகை மறுகு தெற்றிகள் வாணிலாத் தெளிக்கும்
நிலத்தில நிரைத்த விழாவரு வீதி நிழன்மணிச் சாளர வொழுக்கப்
பித்திகை மாடப் பெருந்தெருக் கவலை பீடுசால் சதுக்கநற் பொதியில்
பத்தியிற் குயின்ற மன்றுசெய் குன்று பருமணி மேடையா டரங்கு
511
அருந்தவர் இருக்கை யந்தண ருறையு ளரசரா வணங்குல வணிகப்
பெருந்தெரு நல்வே ளாளர்பே ரறஞ்சால் பெருங்குடி யேனைய கரிதேர்
திருந்திய பரிமா நிலைக்களங் கழகந் தீஞ்சுவை யாறுநான் குண்டி
இரந்தவர்க் கருத்து நல்லறச் சாலை யினையன பிறவுநன் கமைத்தான்
512
துணிகயங் கீழ்நீர்க் கூவல்பூ வோடை தொடுகுளம் பொய்கைநந் தவனந்
திணிமலர்ச் சோலை துடவையூ யானந் திருநகர்க் கணிபெறச் செய்து
மணிமலர்த் தாரோன் மாளிகை தனக்கம் மாநகர் வடகுண பாற்கண்
டணிநகர் சாந்தி செய்வது குறித்தா னண்ணலார் அறிந்திது செய்வார்
513
பொன்மய மான சடைமதிக் கலையின் புத்தமு துகுத்தனர் அதுபோய்ச்
சின்மய மான தம்மடி யடைந்தார்ச் சிவமய மாக்கிய செயல்போற்
றன்மய மாக்கி யந்நகர் முழுதுஞ் சாந்திசெய் ததுவது மதுர
நன்மய மான தன்மையான் மதுரா நகரென வுரைத்தனர் நாமம்
514
கீட்டிசைக் கரிய சாத்தனுந் தென்சார் கீற்றுவெண் பிறை நுதற் களிற்றுக்
கோட்டிளங் களபக் கொங்கையன் னையருங் குடவயின் மதுமடை யுடைக்குந்
தோட்டிளந் தண்ணந் துழாயணி மௌலித் தோன்றலும் வடவயிற் றோடு
நீட்டிரும் போந்தி னிமிர்குழ லெண்டோ ணீலியுங் காவலா நிறுவி
515
கைவரை யெருத்திற் கனவரை கிடந்த காட்சியிற் பொலிந்தொளிர் கோயின்
மைவரை மிடற்று மதுரைநா யகரை மரபுளி யருச்சனை புரிவான்
பொய்வரை மறையா கமநெறி யொழுகும் புண்ணிய முனிவரை யாதி
சைவரைக் காசிப் பதியினிற் கொணர்ந்து தலத்தினிற் றாபனஞ் செய்தான்
516
உத்தம குலத்து நாற்பெருங் குடியு முயர்ந்தவும் இழிந்தவுமயங்க
வைத்தவு மான புறக்குடி மூன்று மறைவழுக் காமநு வகுத்த
தத்தம நெறிநின் றொழுகவை திகழுஞ் சைவமுந் தருமமும் தழைப்பப்
பைத்தெழு திரைநீர் ஞாலமேற் றிலகம் பதித்தென நகர்வளம் படுத்தான்
517
அன்றுதொட் டசர னந்நகர் எய்தி யணிகெழு மங்கல மியம்ப
என்று தொட் டிமைக்கு மனையின்மங் கலநா ளெய்தினா னிருந்துமுப் புரமுங்
குன்று தொட் டெய்தான் கோயின்மூன் றுறுப்புங் குறைவில்பூ சனைவழா தோங்கக்
கன்றுதொட் டெறிந்து கனியுருத் தான்போற் கலிதுரந் தரசுசெய் நாளில்
518
பவநெறி கடக்கும் பார்த்திவன் கிரணம் பரப்பிளம் பரிதிபோன் மலயத்
துவசனைப் பயந்து மைந்தன்மேன் ஞாலஞ் சுமத்திநாள் பலகழித் தொருநாள்
நவவடி விறந்தோன் ஆலயத் தெய்தி நாதனைப் பணிந்துமூ வலஞ்செய்
துவமையி லின்ப வருணிழ லெய்தி யொன்றியொன் றாநிலை நின்றான்
திருநகரம் கண்ட படலம் சுபம்
4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்
519
கன்னியொரு பங்கினர் கடம்பவன மெல்லாம்
நன்னகர மானது நவின்றுமுல கீன்ற
அன்னைமக ளாகிமல யத்துவச னாகுந்
தென்னனிடை வந்துமுறை செய்ததுரை செய்வாம்
520
மனுவறம் உவந்துதன் வழிச்செல நடத்தும்
புனிதன்மல யத்துவசன் வென்றிபுனை பூணான்
கனியமுத மன்னகரு ணைக்குறையுங் காட்சிக்
கினியன்வட சொற்கட றமிழ்க்கட லிகந்தோன்
521
வேனில் விறல் வேள்வடிவன் வேட்கைவிளை பூமி
ஆனமாட வார்கள்பதி னாயிரவர் உள்ளான்
வானொழுகு பானுவழி வந்தொழுகு சூர
சேனன்மகள் காஞ்சனையை மன்றல்வினை செய்தான்
522
கண்ணுதலை முப்பொழுதும் வந்துபணி கற்றோன்
எண்ணில்பல நாண்மகவி லாவறுமை யெய்துப்
பண்ணரிய தானதரு மம்பலவும் ஆற்றிப்
புண்ணிய நிரம்புபரி வேள்விபுரி குற்றான்
523
ஈறின்மறை கூறுமுறை யெண்ணியொரு தொண்ணூற்
றாறினொடு மூன்றுமக மாற்றவம ரேசன்
நாறுமக மும்புரியி னென்பதநொ டிப்பின்
மாறுமென மற்றதனை மாற்றியிது சாற்றும்
524
நன்பொருள் விரும்பினை யதற்கிசைய ஞாலம்
இன்புறு மகப்பெறு மகத்தினை யியற்றின்
அன்புறு மகப்பெறுதி யென்றமரர் நாடன்
தன்புலம் அடைந்திடலு நிம்பநகு தாரான்
525
மிக்கமக வேள்விசெய் விரும்புடைய னாகி
அக்கண மதற்குரிய யாவையும் அமைத்துத்
தக்கநிய மத்துரிய தேவியோடு சாலை
புக்கன னிருந்துமக வேள்விபுரி கிற்பான்
526
ஆசறம றைப்புலவர் ஆசிரியர் காட்டும்
மாசறுச டங்கின்வழி மந்திரமு தாத்த
ஓசையநு தாத்தசொரி தந்தழுவ வோதி
வாசவ னிருக்கையி லிருந் தெரி வளர்ப்பான்
527
விசும்புநில னுந்திசையும் வேள்வியடுசாலைப்
பசும்புகை படர்ந்தொரு படாமென மறைப்பத்
தசும்புபடு நெய்பொரி சமித்தனோடு வானோர்க்
கசும்புபடு மின்னமுதின் ஆகுதி மடுத்தான்
528
ஐம்முக னநாதிபர மாத்தனுரை யாற்றால்
நெய்முக நிறைத்தழ னிமிர்ந்து வரு மெல்லை
பைம்முக வராவணி பரஞ்சுடர் தனிப்ப
மைம்முக நெடுங்கணிம வான்மனைவி நாண
529
வள்ளன்மல யத்துவச மீனவன் வலத்தோள்
துள்ளமனை காஞ்சனை சுருங்கிய மருங்குல்
தள்ளவெழு கொங்கைக டதும்பநிமிர் தீம்பால்
வெள்ளமொழி கக்கரிய வேற்கணிட னாட
530
இவ்வுலக மன்றியுல கேழுமகிழ் வெய்தச்
சைவமுத லாயின தவத்துறை நிவப்ப
ஔவிய மறங்கெட வறங்குது கலிப்பத்
தெய்வமறை துந்துபி திசைப்புலன் இசைப்ப
531
மைம்மலர் நெடுங்கணர மங்கையர் நடிப்ப
மெய்ம்மன மொழிச்செயலின் வேறுபடல் இன்றி
அம்மதுரை மாநகரு ளாரக மகிழ்ச்சி
தம்மையறி யாதன தலைத்தலை சிறப்ப
532
மார்ந்தர்பயின் மூவறுசொன் மாநில வரைப்பிற்
றீந்தமிழ் வழங்குதிரு நாடது சிறப்ப
ஆய்ந்ததமிழ் நாடர சளித்துமுறை செய்யும்
வேந்தர்களின் மீனவர் விழுத்தகைமை யெய்த
533
நொய்தழ லெரிக்கடவு ணோற்றபயன் எய்தக்
கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத்
தைதவ ழிதழ்க்கமல மப்பொழு தலர்ந்தோர்
மொய்தளிர் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன
534
விட்டிலகு சூழியம் விழுங்குசிறு கொண்டை
வட்டமதி வாய்க்குறு முயற்கறையை மானக்
கட்டியதி னாற்றிய கதிர்த்தரள மாலை
சுட்டியதில் விட்டொழுகு சூழ்கிரண மொப்ப
535
தீங்குதலை யின்னமுத மார்பின்வழி சிந்தி
யாங்கிள நிலாவொழுகு மாரவட மின்ன
வீங்குடல் இளம்பரிதி வெஞ்சுடர் விழுங்கி
வாங்குகடல் வித்துரும மாலையொளி கால
536
சிற்றிடை வளைந்தசிறு மென்றுகில் புறஞ்சூழ்
பொற்றிரு மணிச்சிறிய மேகலை புலம்ப
விற்றிரு மணிக்குழை விழுங்கிய குதம்பை
சுற்றிருள் கடிந்துசிறு தோள்வருடி யாட
537
தெள்ளமுத மென்மழலை சிந்திவிள மூரல்
முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய தோர்பெண்
பிள்ளையென மூவொரு பிராயமொடு நின்றாள்
எள்ளரிய பல்லுயிரும் எவ்வுலகு மீன்றாள்
538
குறுந்தளிர்மெல் லடிக்கிடந்த சிறுமணிநூ புரஞ்சதங்கை குழறி யேங்க
நறுந்தளிர்போல் அசைந்துதளர் நடையொதுங்கி மழலையிள நகையுந் தோன்றப்
பிறந்தபெரும் பயன்பெறுபொன் மாலைமடி யிருந்தொருபெண் பிள்ளை யானாள்
அறந்தழுவு நெறிநின்றோர்க் கிகம்போகம் வீடளிக்கு மம்மை யம்மா
539
செய்யவாய் வெளிறாது துணைமுலைக்கண் கருகாது சேல்போல் நீண்ட
மையவாய் மதர்த்தகருங் கண்பசவா தையிரண்டு மதியந் தாங்கா
தையவா லிலைவருந்தப் பெறாதுபெறு மகவையெடுத் தணைத்தாள் மோந்தாள்
துய்யவாய் முத்தங்கொண் டின்புற்றாள் முன்பெற்ற தோகை யன்னாள்
540
பரையாதி விருப்பறிவு தொழிலாகி யுலகமெலாம் படைத்துக் காத்து
வரையாது துடைத்துமறைத் தருளியவை நின்றுந்தன் வடிவு வேறாய்
உரையாதி மறைகடந்த வொருமுதல்வி திருமகளா யுதித்தற் கிந்தத்
தரையாளு மன்னவன்செய் தவமிதுவோ அதற்குரிய தவந்தான் மன்னோ
541
கள்ளமா நெறியொழுகும் பொறிகடந்து கரண மெலாங் கடந்தா னந்த
வெள்ளமாம் பரஞான வடிவுடையாள் தன்னன்பின் வெளிவந் தின்றோர்
பிள்ளையாய் அவதரித்த கருணையுந்தன் மணாட்டிதவப் பேறுந் தேறான்
பள்ளமா கடற்றானைப் பஞ்சவர்கோ னெஞ்சகத்துவப் பரிவு கூர்ந்தான்
542
மகவின்றிப் பலபகல்யான் வருந்தியருந் தவம்புரிந்தேன் மைந்தற் பேறு
தகவிந்த மகஞ்செய்தேன் அதுவுமொரு பெண்மகவைத் தந்த தந்தோ
முகவிந்து நிலவொழுக வருபெண்ணு முலைமூன்றாய் முகிழ்த்து மாற்றார்
நகவந்த தென்னேயோ என்றுவகை யிலனாகி நலியு மெல்லை
543
மன்னவநின் றிருமகட்கு மைந்தர் சடங்கனைத்தும் வழாது வேதஞ்
சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென் றிட்டுமுடி சூட்டு வாயிப்
பொன்னையா டனக்கிறைவன் வரும்பொழுதோர் முலைமறையும் புந்தி மாழ்கேல்
என்னவரன் அருளாலோர் திருவாக்கு விசும்பிடைநின் றெழுந்த தன்றே
544
அவ்வாக்குச் செவிநிரம்ப வன்புவகை யகநிரம்ப வகல மெல்லாம்
மெய்வாக்கு மனமொன்ற விழிவாக்கும் புனனிரம்ப விமலற் போற்றி
நெய்வாக்கு மகநிரப்பி யெழுந்துமனை யொடுஞ்சாலை நீத்தி ரண்டு
கைவாக்கு மியங்கலிப்பக கடிமாட மனைபுகுந்தான் சுழற்கால் வேந்தன்
545
முரசதிர்ப்ப மங்கலங்கொண் டெதிர்வருவார் முகத்துவகை முறுவல் பூப்ப
அரசிருக்கு மண்டபம்புக் கினிதமர்ந்து கனகமழை யான்ற கேள்வி
விரசிருக்கு மறையவர்கைப் பெய்தெவர்க்கு மம்முறையால் வெறுப்ப நல்கிப்
பரசிருக்குங் கரதலத்தெம் பரன்கோயி னனிசிறப்புப் பல்க நல்கா
546
சிறைவிடுமின் சிறைக்களமுஞ் சீத்திடுமின் ஏழாண்டு தேயத் தீட்டும்
இறைவிடுமி னயல்வேந்தர் திறைவிடுமி னிறைநிதிய மீட்டு மாயத்
துறைவிடுமி னறப்புறமு மாலயமும் பெருக்குமெனத் தொழாரைக் காய்ந்த
கறைவிடுமின் னயில்வேலான் வள்ளுவனைக் கூய்முரசங் கறங்கச் சாற்றி
547
கல்யாண மணிமௌலி வேந்தரையுங் கால்யாப்புக் கழல நீத்துக்
கொல்யானை பரிநெடுந்தேர் அரசுரிமை தொன்முறையாற் கொடுத்துப் போக்கிப்
பல்லாருங் கொளகவெனப் பண்டாரந் தலைசிறந்து பசும்பொன் னாடை
வில்லாரு மணிக்கொடும்பூண் வெறுக்கைமுத லெனைப்பலவும் வெறுக்க வீசி
548
தூமரபின் வருபெருமங் கலகவிகட் கிருநிதியந் துகில்பூண் பாய்மா
காமர்கரி பரித்தடந்தேர் முதலாய பலபொருளுங் களிப்ப நல்கிக்
கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடு மெண்ணெய்விழாக் குளிப்ப நல்கி
மாமதுரா நகரன்றி மற்றுமுள நகரெங்கு மகிழ்ச்சி தூங்க
549
இவ்வண்ண நகர்களிப்ப விறைமகனுங் விறைமகனுங்
களிப்பெய்தி இறைவர் சொன்ன
அவ்வண்ணஞ் சாதமுதல் வினை நிரப்பித் தடாதகையென்று
அழைத்துத் தேவி
மெய்வண்ண மறையுணரா விறைவிதனை மேனைபோல் மேனா ணோற்ற
கைவண்ணத் தளிர்தீண்டி வளர்ப்பவிம வான்போலக் களிக்கு நாளில்
550
திருந்தாத விளங்குதலை யாயமோடு புறம்போந்து சிறார்க்குச் சிற்றில்
விருந்தாக மணற்சிறுசோ றட்டும்வரை யுரங்கிழித்த வேளும் வாய்வைத்
தருந்தாத விளமுலைவாய் வைத்தருத்தப் பாலைவதனக் களித்தும் போதில்
வருந்தாதை யண்டமெலாஞ் சிற்றிலிழைப் பாளாய்க்கு மகிழ்ச்சி செய்தான்
551
தீட்டுவாள் இரணடனைய கண்களிப்பத் தோழியர்க்குத் தெரிய வாடிக்
காட்டுவா ளெனக்கழங்கு பந்துபயின் றம்மனையுங் கற்றுப் பாசம்
வீட்டுவாண் மேலொடுகீழ் தள்ளவெமை வினைக்கயிறு வீக்கி யூசல்
ஆட்டுவாள் காட்டுதல்போல் லாடினா ணித்திலத்தாம் பசைத்த வூசல்
552
இம்முறையாற் றாயர்க்குந் தோழியர்க்கு மகத்துவகை யீந்தாள் ஆகி
அம்முறையாற் றாதைக்கு மகத்துவகை யீவாளா யாத்த வாய்மைச்
செம்முறையா ரண்முதனா லீரெட்டுக் கலைமுழுதுந் தெளிந்தா ளந்த
மெய்ம்மறையார் கலையனைத்தும் மேகலையா மருங்கசைத்த விமலை யம்மா
553
சொல்வாய்மைக் கலைத்தெளிவு முழுமதியைப் பிளந்திருபாற் சொருகி யன்ன
பல்வாய்மைக் கடகரிதேர் பரியுகைக்குந் திறனுமழற் பகழி தூர்க்கும்
வில்வாள்வச் சிரமுதற்பல் படைத்தொழிலுங் கண்டிளமை விழுங்கு மூப்பிற்
செல்வாய்மைத் திறலரசன் றிருமகட்கு முடிசூட்டுஞ் செய்கை பூண்டான்
554
முடிகவிக்கு மங்கலநாள் வரையறுத்துத் திசைதோறு முடங்கல் போக்கி
கடிகெழுதார் மணிமௌலிக் காவலரை வருவித்துக் காவல் சூழ்ந்த
கொடியணிமா நகரெங்கும் விழாவெடுப்ப வழகமைத்துக் குன்ற மன்ன
தொடிகெழுதோட் சுமதிதிரு மணத்தினுக்கு வேண்டுவன சூழ்ந்து செய்தான்
555
மங்கலதூ ரியமுழங்க மால்யானை யுச்சிமிசை வந்த பூத
கங்கைமுதல் ஓன்பதுதீர்த் தமுநிரப்பிக் கதிர் விடுபொற் கடம்பூ சித்துப்
புங்கவரை மந்திரத்தீ வளர்த்தமுத மருத்தியெரி பொன்னாற் செய்த
சிங்கமணி யாதனத்தை நேசித்துப் பூசித்துத் தெய்வ மேற்றி
556
திருமுடியை மதயானை மிசைவைத்து நகரைவலஞ் செய்து பூசித்
தருமணியாற் சுடிகையிழைத் தாடகத்தாற் குயிற்றியதோர் ஐவாய் நாகம்
பெருமணிநீள் படம்பரப்பி மிசைகவிப்ப வச்சிங்க பீடத் தேற்றிக்
குருமணிவா ணகைமயிலைக் கும்பத்துப் புண்ணியநீர் குளிர வாட்டி
557
புங்கவர்மந் தாரமழை பொழியவருந் தவராக்கம் புகலத் தெய்வப்
பங்கயமென் கொம்பனையா ராடமுனி பன்னியர்பல் லாண்டு பாட
மங்கலதூ ரியமுழங்க மறை தழங்க மாணிக்க மகுடஞ் சூட்டி
எங்கருணைப் பெருமாட்டிக் கரசமைச்சர் பணியுந்தன் னிறைமை நல்கா
558
பாலனைய மதிக்கவிகை மிசைநிழற்ற மதிகிரணம் பரப்பி யன்ன
கோலமணிக் கவரிபுடை யிரட்டமலர் மழைதேவர் குழாங்க டூற்றக்
காலையிளங் கதிர்கயிலை யுதித்தெனவெண் கடாயானைக் கழுத்தில் வேப்ப
மாலைமுடிப் பெண்ணரசை மங்கலதூ ரியமுழங்க வலஞ்செய் வித்தான்
559
விண்ணாடு மொழிகேட்ட மகிழ்ச்சியுனுந் திருமகடன் விளக்க நோக்கி
உண்ணாடு பெருங்களிப்புத் தலைசிறப்புச் சிலபகல்சென்றொழிய மேனாட்
புண்ணாடு வேன்மங்கை குதுகலித்து நடிப்பத்தன் புயமேல் வைத்த
மண்ணாடு மகட்களித்து வானாடு பெற்றானம் மகவு பெற்றான்
560
விரதநெறி யடைந்தீற்றுக் கடன்பிறவுந் தாதைக்கு விதியால் ஆற்றி
அரதனமெல் லணைமேற்கொண் டுலகமெலா மொருகுடைக்கீ ழாள்வா ளானாள்
சரதமறை யாய்மறையின் பொருளாயப் பொருண் முடிவு தானாய்த் தேனின்
இரதமெனப் பூவின்மண மெனப்பரம னிடம்பிரியா வெம்பிராட்டி
561
மண்ணர சிறைஞ்ச ஞால மநுவழி புரந்து மாறன்
விண்ணர சிருக்கை யெய்தப் பெற்றபின் விடையோன் உள்ளத்
தெண்ணர சன்ன மென்னத் தென்னவ னீன்ற கன்னிப்
பெண்ணர சிருந்து நேமி யுருட்டிய பெருமை சொல்வாம்
562
இன்னிய மியம்பு மாக்க ளெழுப்பவான் இரவி தோன்றக்
கன்னலைந் தென்னப் பள்ளித் துயிலெழீஇக் கடிநீராடித்
தன்னிறை மரபுக் கேற்ற நியதிமா தான மன்பு
துன்னிய கடவுட் பூசைத் தொழின்முத லனைத்து முற்றா
563
திடம்படு மறிஞ்ர் சூழச் சிவபரன் கோயில் முன்னிக்
கடம்படி முளைத்த முக்கட் கரும்பினை மறைவண் டார்க்கும்
விடம்பொதி கண்டத் தேனை விதிமுறை வணங்கி மீண்டு
குடம்பயில் குடுமிச் செம்பொற் குருமணிக் கோயில் நண்ணி
564
அரசிறை கொள்ளுஞ் செம்பொன் அத்தாணி யிருக்கை யெய்தி
நிறைசெற்¢ மடங்க லாறு முடங்கின நிமிர்ந்து தாங்க
விரைசெறி மலர்மீப் பெய்த வியன்மணித் தவிசின் மேவித்
திரைசெறி யமுதிற் செய்த பாவை போற் சிறந்து மாதோ
565
அனிந்திதை யமுதின் சாயற் கமலினி யணங்குங் காதல்
கனிந்தபார் மகளி ராய்வந் தடைப்பைப்பொற் களாஞ்சி யேந்த
இனந்திரி பதுமக் கோயில் இருவரு மனைய ராகிப்
புனைந்தவெண் கவரிக் கற்றை யிருபுடை புரட்டி வீச
566
செடியுட லெயினச் செல்வன் சென்னிமேற் சுமந்து சாத்துங்
கடியவிழ் மலரிற் பொன்னிக் காவலன் குடக்கோ னேனை
முடிகெழு வேந்தர் உள்ளார் முடிமிசை மிலைந்த தாமம்
அடிமிசைச் சாத்திநங்கை யாணையா றேவல்செய்ய
567
வையுடை வாள ராகி மார்புறப் பின்னி யார்த்த
கையின ராகி யன்னை யென்றுதன் கருணை நோக்குஞ்
செய்யுமென் றிமையார் நோக்கி நோக்குமேற் செங்கை கூப்பி
உய்குந மெனவாய் பொத்தி யுழையர்தம் பணிகேட்டுய்ய
568
ஆங்கவன் மராடர் வேந்தன் அவன்கரு நாடர் வேந்தன்
ஈங்கிவன் விராடா வேந்த னிவன்குரு நாடர் வேந்தன்
ஊங்குவன் சேரன் சென்னி யுவனெனக் கோலாற் சுட்டிப்
பாங்கிரு மருங்குங் காட்டக் கஞ்சுகப் படிவ மாக்கள்
569
செந்தமிழ் வடநூலெல்லை தெரிந்தவர் மறைநூ லாதி
அந்தமில் எண்ணெண் கேள்வியளந்தவர் சமயமாறும்
வந்தவர் துறந்தோர் சைவ மாதவர் போத மாண்ட
சிந்தனை யுணர்வான் மாயை வலிகெடச் செற்ற வீரர்
570
முன்னிருந் தினிய தேற்று மூத்தவர் எண்ணி யெண்ணிப்
பன்னுமைந் துறுப்பிற் கால மளந்தறி பனுவன் மாந்தர்
பின்னுமுன் னோக்குஞ் சூழ்ச்சிப் பெருந்தகைச் சுமதி யோடும்
இன்னமு தனைய கேள்வி மந்திரர் யாருஞ் சூழ
571
கற்றறி யந்தணாளர் விருத்திகள் கடவுட் டானத்
தற்றமில் பூசைச் செல்வ மறப்புற நடக்கை யேனைச்
செற்றமில் குடிகண் மற்று மமைச்சராற் றெளிந்தும் வெவ்வே
றொற்றுவிட் டுணர்த்தும் வேறு குறையுண்டே லொறுத்துத் தீர்த்தும்
572
ஆதியுத் தேசத் தானும் இலக்கண வமைதி யானுஞ்
சோதனை வகைமை யானுஞ் சொன்னநூ லனுவா தித்து
நீதியி நவற்றாற் கண்டித் தவ்வழி நிறுத்தித் தம்மில்
வாதிகள் வாதஞ் செய்யுங் கோட்டின்மேன் மகிழ்ச்சி கூர்ந்தும்
573
பையுள பகுவாய் நாகப் பள்ளியோன் ஆதி வானோர்
கையுள வலியா லட்ட கடலமு தனைத்தும் வாரிப்
பொய்யுள மகலக் கற்ற புனிதநூற் புலவர் நாவிற்
செய்யுள விளைவித் தூட்டத் திருச்செவி தெவிட்ட வுண்டும்
574
தொல்லைநான் மறையோர் சைவர் துறந்தவர் யார்க்கும் இன்பம்
புல்லவா னமுதுங் கைப்பப் பாகநூற் புலவ ரட்ட
முல்லைவான் முகையினன்ன வறுசுவை முரியாமூரல்
நல்லவூ ணருத்தி யன்னார் நாவிருந் தமுதுசெய்யும்
575
எல்லவன் உச்சி நீந்து மெல்லையி னான்கு மாறும்
வல்லவர் சூதனோதி வகுத்தமூ வாறு கேள்வி
சொல்லவுண் மலர்ந்துமேனை மநுமுதற் றுறைமாண் கேள்வி
நல்லவ நயந்து கேட்டு நன்பகற் போது நீத்தும்
576
கலைக்குரை விரிப்பார் என்ன வறுமையிற் கல்வி போலப்
புலப்படா மருங்கு னல்லா ரெந்திப் புலவன் பூட்டி
அலைத்திடு பாவை போனின் றாடல்செய் யாடற் கண்ணும்
நலத்தகு பாடற் கண்ணு நல்லரு ணாட்டஞ் செய்தும்
577
இன்னிலை யொழுகுத் தொல்லோர் இயற்றிய தருமம் வேறும்
அந்நிலை நிறுத்தும் வேள்வியறம்பல வாக்கஞ் செய்ய
நன்னிதி யளித்தும் வேள்வி நடாத்தியுஞ் செல்வங் கல்வி
தன்னிரு கண்க ளாகத் தழைந்திட வளர்க்கு நாளும்
578
ஒப்புரு முதலீ றில்லா வொருத்திதன் சத்திபெற்ற
முப்பெருந் தேவ ராலே முத்தொழி னடாத்து மென்று
செப்பலும் புகழன் றென்னிற்றென்னவன் கன்னியாகி
இப்புவி மநுவிற் காக்கும் என்பதென் பேதை மைத்தே
579
வரைசெய் பூண்முலைத் தடாதகை மடவரற் பிராட்டி
விரைசெய் தார்முடி வேய்ந்துதண் குடைமநு வேந்தன்
கரைசெய் நூல்வழி கோல்செலக் கன்னியாம் பருவத்
தரசு செய்தலாற் கன்னிநா டாயதந் நாடு
580
இன்ன வாறுமை யவதரித் திருந்தனள் என்னாப்
பொன்ன வாவினர் பெறவெறி பொருநைகால் பொருப்பான்
சொன்னவாய்மை கேட் டகங்களி தூங்கினர் தொழுது
மின்னுவார்சடை முனிவரோர் வினாவுரை செய்வார்
581
திருந்து நான்மறைச் சென்னியுந் தீண்டுதற் கரிதாய்
இருந்த நாயகி யாவையும் ஈன்றவெம் பிராட்டி
விரிந்த வன்புகூர் தக்கனும் வெற்பனும் பன்னாள்
வருந்தி நோற்றலா லவர்க்கொரு மதலையாய் வந்தாள்
582
மனித்த னாகிய பூழியன் மகளென வீங்குத்
தனித்த காரணம் யாதெனத் தபனியப் பொதுவிற்
குனித்த சேவடிக் கன்புடைக் குடமுனி யருள்கூர்ந்
தினித்த தோர்கதை கேண்மினென்று எடுத்துரை செய்வாள்
583
விச்சு வாவசு வெனுமொரு விச்சையன் பயந்த
நச்சு வாள்விழி மடந்தைவிச் சாவதி நாமம்
அச்சு வாகத மொழியினாள் அம்பிகைக் கன்பு
வைச்சு வாழ்வுறு மனத்தினா டாதையை வணங்கா
584
ஐய வம்பிகை தன்னையாண் அன்பினால் வழிபட்
டுய்ய வேண்டுமென் றா |