|
Home > Scriptures & Stotras > Tamil
muththuth thANDavar compositions முத்துத்தாண்டவர் பாடல்கள்
In Unicode Tamil font
You could also read the transliterated version in English (Roman) alphabets
This page needs to be proof read as well as completed for the whole compositions of muththuththANDavar.
Please send additions, corrections
- உனை நம்பினேன் அய்யா
- ஆடிக்கொண்டார் அந்த
- உனை நம்பினேன் அய்யா
ராகம்: கீரவாணி
தாளம்: ஆதி
பல்லவி
உனை நம்பினேன் அய்யா (நான்)
அனுபல்லவி
நாகம் புனை சம்போ நடராஜா புலியூர் வாழ் ஈசா (உனை)
சரணம் 1
இருவர் தம் இசைகொண்ட காதா தித்தி என நின்று நடம்செய்யும் இங்கித பொற்பாதா
திருநாவலூரன் விடு தூதா தில்லை சிவகாமி ஒரு பாகா சிதம்பர நாதா (உனை)
சரணம் 2
மழுவினைத் தரிக்கின்ற கையா கொன்றை மலர் மாலை புனைகின்ற வடிசுடர் மெய்யா
எழு புவி துதிக்கின்ற துய்யா அன்பர் இடமாய் இருந்தின்பம் உடனாளும் அய்யா
சரணம் 3
நெடியமால் அயன்தேடிக் காணாதெங்கும் நிறைந்தவா எலும்பெல்லாம் அணிந்திடும் பூணா
அடியவர் தொழுந் தமிழ்ப்பாணா தில்லையம்பதி நடராஜா அம்பலவாணா (உனை)
- ஆடிக்கொண்டார் அந்த
ராகம்: மாயாமாளவ கௌளை
தாளம்: ஆதி
பல்லவி:
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ
அனுபல்லவி:
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்
சரணம் 1:
பங்கயச் சிலம்பைந்தாடப் பாதச் சலங்கைகள் கிண் கிணென்றாடப்
பொங்குமுடனே உரித்து சரித்த புலித்தோல் அசைந்தாட
செங்கையில் ஏந்திய மான் மழுவாட செம்பொற்குழை கண் முயலகனாட
கங்கை இளம்பிறை செஞ்சடையாடக் கனக சபைதனிலே
சரணம் 2:
ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவும் படம் விரித்தாட
சீரணி கொன்றை மலர்த்தொடையாடச் சிதம்பரத்தேர் ஆட
பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும்
பூஜித்துக்கொண்டு நின்றாடக் கனக சபைதனிலே
சரணம் 3:
நிர்த்த கணபதி வேலர் நின்றாட நின்றயன் மாலொடு இந்திரன் ஆட
முப்பத்து முக்கோடி தேவருடனே முனிவரும் நின்றாட
மெய்ப் பத்தி மேவும் பதஞ்சலியாட வியாக்கிர பாதரும் நந்தியும் ஆட
ஒப்பற்ற சிவகாமியம்மையும் கூடவே நின்றாட
ராகம்: ஆந்தோளிகா / ஆபோகீ
தாளம்: ஆதி
பல்லவி: சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா
அநுபல்லவி: சேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம்
தேவாதி தேவன் திருச் சன்னிதி கண்டு
சரணம் 1: காரானை மாமுகத்தைந்து கரத்தானை கற்பக ராயனை முக்குறுணீயாணை
சீரார் புலியூர்ப்பதி மேலை வாசல் வாழ் தேவர் சிறை மீட்கும் சேவற்க்கொடியானை
சரணம் 2 : சிங்காரமான சிவகங்கையில் மூழ்கி சிவகாமி சன்னிதி முன்பாகவே வந்து
பாங்காகவே ப்ரதட்சிணமும் செய்து பக்தர்கள் சித்தர்கள் பணிவிடையோர் தொழ
சரணம் 3: சித்தர் பரவும் திருமூலத்தானை சிற்றம்பலமென்னும் பேரம்பலத்தானை
அட்ட திக்கும் புகழம்பலவாணனை ஆண்டவனைத்தில்லைத்தாண்டவராயனை
சரணம் 4: நல்ல திருவிழா ஆணித்திருதேரும் நாடெங்குமே புகழ் நற்கோபுர நான்கும்
தில்லை மூவாயிரவர் வளர் வீதியும் திருமஞ்ஜனமும் மார்கழி தரிசனமும்
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
|