|
Home > Scriptures & Stotras > Tamil
சித்தாந்த சிகாமணிமூன்றாம் பாகம்
சிவப்பிரகாசரின் தமிழாக்கம் - - - - -
2 - வது குருலிங்கத் தலம்
[அதாவது - ப்ரதிஷ்ட்டாகலா சமேதமாய் ஜ்ஞான சக்தியோடு கூடிக் கர்த்ரு சாதாக்யத்தைப் பொருந்திப் புத்தி கம்யமாயிருத்தல் என்பது.]
(மாகேச்வர ஸ்தலத்தைச் சேர்ந்த உட்பிரிவுகள்)
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
முன்புற மொழிந்து நின்ற முறைபத் தத்தலந் தொடர்ந்து
வொன்பது தலமு மைய வுரைத்தனை தமிய னேனுக்
கின்புற வினிமா கேசத் தலத்தினை யெய்தி நிற்குந்
துன்பறு தலபே தங்க டம்மையுந் தோன்றச் சொல்வாய். 1
கிரியைநற் பாவ ஞானங் கிடைக்குமா கமஞ்ச காயம்
பரிவறு மகாயம் பின்னர்ப் பரகாயந் தருமம் பாவ
மருவறு மாசா ரத்தான் மகேசநற் றலமொன் பானா
முறைசெயு* மவற்றி னுண்மை யுரைக்குது முனிவ கேண்மோ. 2
( *குருலிங்க ஷட்பக்தர்கள்:- குருலிங்கமோஹி, குருலிங்கபக்தன், குருலிங்கபூஜகன், குருலிங்கவீரன், குருலிங்கப்ரசாதி, குருலிங்கப்ராணி என ஆறு வகைப் படுவார்கள். இவர்களில், மாதாபிதாக்களின் மோகங்களை விட்டுக் குருவினிடத்தில் ப்ரீதியுள்ளவனே குருலிங்கமோஹி, பந்துக்களின் உபசாரமற்றுக் குருவினிடத்தில் ப்ரீதியுள்ளவனே குருலிங்கபகதன், வேறொரு பூஜையைச் செய்யாது குருபூஜனை செய்பவனே குருலிங்கபூஜகன், அன்னிய மார்க்கத்தை விட்டுக் குருவின் யுக்தி மார்க்கத்தில் வர்த்திப்பவனே குருலிங்கவீரன், குருவின் ஆஜ்ஜை வசத்தவனே குருலிங்கப்ரசாதி, குருநிந்தையைக் கேட்காதவனே குருலிங்கப்ராணி.
த்ரிவித குருலிங்கம்:- தீக்ஷை, சிக்ஷை, ஸ்வாநுபவம் என மூவகைப்படும். இவைகளில், ஆகமோக்த விதானந்தினாலும் குண்ட மண்டலாதிகளினாலும் ஷட்வித ஷுத்த முதலியவைகளைச் செய்தலே தீக்ஷை, ஜங்கமமே லிங்கமென்பது முதலான சம்யக் ஜ்ஞானம் சத்புருஷர்களா லாவதே சிக்ஷை, பூர்வஜன்ம சம்ஸ்கார வல்லமையினால் பக்தி ஜ்ஞானாதிகங்கள் தாமே தலைகாண்பித்தலே ஸ்வாநுபவம்.)
ஐம்பத்து நான்காவது
(54) கிரியாகமத்தலம்
[அதாவது - பரனே ப்ரத்யசூனான சிவன் என்று சொல்லப்படுகிற மேற்கூறிய பரஸ்தல சம்பந்நனான சிவயோகியின், நியமம் லோபமாகாமையாலும், அவனுக்கு சிவன் ப்ரசன்ன மாதலாலும், அவன் விதிப்படி செய்யும் லிங்கபூஜைக்குரிய க்ரியா சமூகமே உலகத்தாருக்கு சாஸ்த்ரமா யிருத்தலால் கிரியாகமம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அப்பர யோகி தானே யருஞ்சிவ மவன்றன் பூசை
யொப்புறு கிரியை யாகு முரைத்தவக் கிரியை தன்னை
மெய்ப்புறு முதன்மை யாக மேவுமா கமந்த னக்குச்
செப்புறு பெயர்யா தென்னிற் செழுங்கிரி யாக மந்தான். 1
ஒள்ளழ லரணி தன்னிற் கடைதலை யொழிந்துண் டாகா
துள்ளுறுஞ் சிவனுஞ் செய்யுங் கிரியையை யொழிந்து தோன்றான்
றெள்ளுறு நியம நாசஞ் சேர்ந்திடா தாக மத்திற்
கொள்ளுறு முறைவ ழாமற் குறித்துநற் கிரியை செய்க. 2
விதித்திடு கருமந் தன்னுள் விசேடமாஞ் சிவன தேவன்
மதித்தது தனையே செய்க மாசிலா சானைக் கொண்டு
பொதுத்தவிர் பூசை செய்க புராரியைப் பரமன் றன்னைத்
துதிப்பொடு பூசை செய்வோன் சுரரெலம் பூசை செய்வோன். 3
கருதுறு சிவபூ சைக்கட் கருவிக ளான வற்றி
லொருதனி மனம்வைத் தென்று முயர்சிவ யோக வேட்கை
புரிதரு மமல யோகி பொருந்திய மலங்க ளெல்லா
மிரிதர வகற்ற வல்ல னிதிலிலை யைய மன்றே. 4
கண்ணிலன் முடவன்போலக் கருதரு ஞான கன்ம
மெண்ணுறு மிரண்டு மொன்றை யொன்றவா யிருத்த லாலே
நண்ணுறு பலன்வி ருப்பி னன்றுறத் துறந்தா னேனும்
பண்ணுக வவையிரண்டு மெனமறை பகரு மன்றே. 5
அறிவினர் தமக்கு ஞான மடைந்ததிங் கெனினு மென்று
நெறிதரு கருமங் கூடி நின்றிடு மதனா லம்ம
செறிதரு பலனிற் றீர்ந்து செய்கரு மங்க ளேனும்
வறிதென விடலென் றோது மதிமுடி வள்ள னூலே. 6
யாவர்க்கு மாசா ரந்தா னெழிலணி யாகி நிற்கு
மோவுற்றோ னதனை நிந்தை யுறுகுவ னாசா ரத்தை
மேவுற்ற ஞானந் தன்னால் விளங்குறு மீச னென்றாற்
சாவுற்று மெய்வீழ் காறுஞ் சார்வதா சார மன்றே. 7
- கிரியாகமத்தலம் முற்றிற்று - * * *
ஐம்பத்தைந்தாவது
(55) பாவாகமத்தலம்
[அதாவது - விஷய போகங்களை நிஷ்காமமாகத் துய்க்கும் சிவயோகி அகத்தும் புறத்தும் சிவத்தை நோக்கும் லக்ஷணமே பாவாகமம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வீவுறு மவாவி னோடு விளங்கறி வுடைமை யோன்றன்
பாவசின் னங்க டாமே பகர்பாவா கமம தென்ன
யாவரு மறிய நிற்கு மென்றுளந் துணிந்து கோடி
பூவல யங்க ளேத்தப் பொதியமா மலையி லுற்றாய். 1
சீரணி சிவோக மென்னும் பாவனை சிவம தற்குக்
காரணம் வேறு ஞான கருமங்கா ரணமே யாக
பூரண வத்து வாகும் பொலிதரு ஞான மத்தின்
காரணந் தியான மந்தத் தியானமே கருத்திற் கொள்க. 2
நிரந்தர முட்பு றம்பு நிறைந்துள மகேசன் றன்னைப்
பரந்தரு பரமா நந்தப் பயன்பெறும் பொருட்டு மேவி
விரிந்துள கலைக ளெல்லாம் விளங்கிய வறிவி னாலே
தெரிந்துள புலவ ரென்றுந் தியானமே செய்க மாதோ. 3
பொருளறு மொழியு நூலிற் புக்குறா மதியுந் தன்பா
லருளுறு கொழுநற் றீர்ந்த வரிமதர் மழைக்கட் செவ்வாய்ச்
சுருளுறு மலர்மென் கூந்தற் றுடியிடை மாதும் போலுந்
தெருளுறு பாவ மோடு சேர்ந்திடாக் கிரியை யன்றே. 4
கண்ணிலான் வடிவ மொன்றுங் காண்கிலா வாறு போல
வெண்ணுபா வனையி லாதா னிறைவனைக் காணான் முக்கட்
பண்ணவன் றனையர்ச் சிக்கப் பாவனை மனத்தி னோடு
நண்ணுறான் சிவனை யந்தப் பாவனை நழுவி னோனே. 5
கீடசிந் தனையி னாலே கிருமியுங் கீட மாகும்*
பீடுறுஞ் சிவனை யென்றும் பிரிவறத் தியானஞ் செய்வோ
னீடுறு சிவமே யாவ னிட்கள சிவத்தி யானங்
கூடருந் தகைய தேனுங் குறிக்கொணீ யவன்றன் வாழ்வே. 6
( * புழுவானது குளவியை த்யாநித்தலால் எவ்வாறு குளவியின் தன்மை புழுவுக்கு ஏற்படுகின்றதோ, அவ்வாறே யோகியின் பாவனையானது சிவனைக்குறித்து இடைவிடாது த்யானிக்க நன்கு வாய்ந்தால் யோகிக்கு சிவத்வம் நிகழவது என்று கூறுப வடநூலார்.)
- பாவாகமத்தலம் முற்றிற்று - * * *
ஐம்பத்தாறாவது
(56) ஞானாகமத்தலம்
[அதாவது - ஜகத்தெல்லாம் சிவாத்மகமானது, சிவத்தைவிட வேறு பதார்த்தமில்லை, நானே சிவனாயிருக்கிறேன் என்னும் அந்தப் பாவாகம சம்பந்நனான சிவயோகியின் ஜ்ஞான சின்னங்கள் எத்தனையுண்டோ, அத்தனையும் தேகிகளுக்கு மோக்ஷ ஹேதுக்களாதலால் ஞானாகமம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நவின்றிடும் பரம யோகி ஞானசின் னங்க டாமே
பவந்தொடர் மனிதர்க் கெல்லாம் பவமற வின்ப வீடிங்
குவந்தருள் செய்யு ஞான கமமென வுரைப்பர் மேலோர்
தவந்தனி யுருவு கொண்ட தனையசந் தநவெற் புள்ளோய். 1
கிரியைபா வங்க டம்மாற் கிடைத்திடும் பயனொன் றில்லை
கிரியைபா வங்கண் மேவு ஞானத்தாற் கிடைக்கு முத்தி
பிரிவிலா நூறு கோடி பிறப்பினி லெனினுங் கன்ம
முரியவீ டுதவா தம்ம வுதவுவ துயர்ஞா னங்காண். 2
ஞானமற் றொழிந்த கன்ம நவைதரு பிறப்பிற் கேது
வானவக் கருமந் தானே யறிவொடு கூடு மாயி
னீனவப் பிறவி மாற்று மீவது கருமம் பொன்றும்
வானிலைப் பதமே ஞானம் வழங்குவ தழியா வீடு. 3
முன்னுறு நூல்க ளாதி முயற்சியாற் குரவன் சொல்லாற்
பன்னரு ஞான மொன்றே பயிலுக வொழிந்த வற்றா
லென்னுறு பலன்ஞா னந்தா னியல்சிவாத் துவித நல்கித்
துன்னுறு பவங்க ளெல்லாந் தொலைத்திடு நல்லோர்க் கன்றே. 4
தெரிந்திடு முலக மெல்லாஞ் சிவமயஞ் சிவனில் வேறா
யிருந்துள பொருளொன் றில்லை யாதலாற் சிவனா னென்றே
யுரந்தரு முணர்வு தானே யுத்தம ஞான மென்ப
ரருந்தவ முனிவ ரேறே யாகம நெறியு ணர்ந்தோர். 5
கண்ணிலா னெதிர்ந்த தொன்றைக் காண்கிலா னதுபோ னீங்கா
துண்ணிலா மிறையை ஞான மொழிந்தவன் காணா னென்று
நண்ணுறா தொழிக்கும் பாச நற்சிவ காட்சி ஞானக்
கண்ணுளார் தங்கட் கந்தக் காட்சிதா னௌ¤து மாதோ. 6
எறிசுட ரன்றி யில்லி லிருளறா ததுவே போல
வறிவினை யொழிய நீங்கா தகத்துறு மோகந் தானு
மறிவறு ஞான மாகும் வலிகெழு கதவங் கொண்டு
பொறிவழி யடைத்து மிக்க பொதியில்வீற் றிருக்க வல்லோய். 7
- ஞானாகமத்தலம் முற்றிற்று - * * *
ஐம்பத்தேழாவது
(57) சகாயத்தலம்
[அதாவது - ஜ்ஞானாகமஸ்தல சம்பந்நனா சிவயோகி க்ரியா த்யான பூஜைகளுக்குச் சரீரம் வேண்டியதா யிருக்க, அப்படிப்பட்ட சரீரத்தை வைராக்யாதிகளினால் கெடாதிருக்கச் செய்தலால் சகாயன் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கிரியைநற் பாவ ஞானங் கிடைத்திடா காய மின்றேல்
விரிதரு முலகில் யார்க்கும் விளம்புறி னதனால் யோகி
தரையுறு சகாய னாகச் சரிப்பனென் றெடுத்து ரைப்ப
ரரிமதர் மழைக்கண் மங்கை பாகனா மங்கள் வல்லோர். 1
ஏகமா ஞான யோகி யென்னினு முடம்பி னானே
போகமா முத்தி யாதி பொருந்துவன் விறகை யின்றி
யாகுறா தொளிரு மங்கி யதுவென வாக்கை யின்றி
யோகிதா னான்ம ஞான முடையவ னாகா னன்றே. 2
ஒப்பறு பரமன் றானு முருவொடு பூசை கொள்வ
னப்பரி சுடம்பின் மேவி யருச்சனை கொள்வன் யோகி
செப்புமைந் தொழிற்கு மாகச் சிந்மய னாகு மீசன்
மெய்ப்புறு மூர்த்தி மானாய் விளங்குவ னென்பர் மேலோர். 3
அயன்முத லாகி நின்ற வமரரு முத்தி வேட்ட
மயன்முனி முனிவர் தாமு மியாவையும் வழங்க வல்ல
செயன்மிகு தவமு டம்பாற் செய்தன ரத்த வத்திற்
கியன்முத லாய வாக்கை யினைவிட லாகா தன்றே. 4
- சகாயத்தலம் முற்றிற்று - * * *
ஐம்பத்தெட்டாவது
(58) அகாயத்தலம்
[அதாவது - சிவனுக்கு தேக சம்பந்தமிருப்பினும் காமாதி விகாரங்கள் எவ்வாறில்லையோ அவ்வாறே சகாயஸ்தல சம்பந்நனனான சிவயோகி, தேக சகிதனாயிருப்பினும் நான் மனிதனல்லன் தேவனல்லன் ராக்ஷஸனல்லன் சிவனாயிருக்கிறேன் என்னும் உணர்ச்சியினாலும் தேக விகாரங்க னில்லாதிருப்பதினாலும் அகாயன் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சாற்றிய பரம யோகி சகஞ்சிவ மயம தாகத்
தோற்றுறு நிலையி னாற்பொய் மாயையின் றொடக்கி லாத
வாற்றலா லுதவி யாகு மாக்கைய னாத லாலே
போற்றுறு மகாய னென்றே புகன்றிடப் படுவ னன்றே. 1
சங்கர னெனமெய் யோடு சாரினும் பரம யோகிக்
கிங்குறு முடல்வி கார மிலாமையா லகாய னாகும்
பொங்கொளி யம்பரத்திற் புக்குறு மியோகிக் காக
மெங்குள துடம்பி போல விருப்பது பிராந்தி யன்றே. 2
ஆக்கையின் மான மில்லா தருஞ்சிவ மாகி நிற்கு
நோக்குறு மியோகிக் காக்கை நுவன்றிடு முலக மொன்றாற்
போக்கறு முடல மொன்றாற் பொருந்துறும் வாதை யாதோ
வீர்க்குமிந் தியவாங் கார விடரவற் கில்லை யன்றே. 3
மயக்குறு மனித னல்லேன் வானவன் றானு மல்லே
னியக்கனு மல்லேன் மிக்க விராக்கத னல்லே னென்று
முயர்த்துறு சிவமே நானென் றுணர்ந்தவன் றனக்கு வந்து
பயக்குறு முடம்பு செய்யுங் கருமமென் பயனைச் செய்யும். 4
பிரபுலிங்க லீலை
வான மல்லேன் வளியல்லே னழனீ ரல்லேன் மண்ணல்லேன்
ஞான மல்லேன் வினையல்லே னானே சிவமென் றெண்ணினோ
னூனை யல்லா வொரு சிவமே யாவனிவ் வாறுன்னாதா
னீன மெல்லா முடையவுடம் பெடுத்துச் சுழலு மெஞ்ஞான்றும்.
- அகாயத்தலம் முற்றிற்று - * * *
ஐம்பத்தொன்பதாவது
(59) பரகாயத்தலம்
[அதாவது - அகாயனான சிவயோகி, தேசிகனாகவும் மாயாதீதனாகவும் ஜ்ஞானானந்தனாகவு மிருப்பினும் சரீரியாயிருப்பதனாலும் சாக்ஷாத் பரப்ரஹ்மமே தான் என்று அறிந்திருப்பதனாலும் பரகாயன் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பகுதியை வசிக ரிக்கும் பான்மையான் மாயா மார்க்கத்
தொகுதியை நீங்கி நீற்குந் தூய்மையா லறிவா னந்தத்
தகுதிகொள் பிரமந் தானாய்த் தகும்பர காய னாவன்
மிகுதிகொ டவத்தர் கோவே விளம்புறு மகாய னென்றே. 1
பேரறி வுருவாய் நின்ற பிரமமே வடிவ மானோற்
கேரறு மாயை யாக்கை யாற்பய மென்னே ஞான
வாரழ லாற்பி றப்பிற் காதியா முடலஞ் சுட்டு
நேரறு சிவம டைந்தோ னிகழ்பர காய னென்பான். 2
வினைதரு மநோவி ருத்தி விடயவிந் தியங்க ளெல்லா
மெனையதி லடங்கு மந்த விருஞ்சிவ மேயி வற்குத்
தனியுரு வாகு நானே சிவமெனச் சகங்க ளெல்லா
நனியறி வாகிக் கண்டோற் குடல்சொல னன்மா லாகும். 3
சோதியாம் பிரம மேதன் சொரூபமாய்ச் சிந்தை செய்வோன்
மேதையா முடம்போ டுற்று மெய்யிலி சீவன் முத்தன்
போதமா மியோதி யாக்கை யிருப்பினும் போகி னுந்தான்
றீதிலா முத்தி யாகு மென்பர்நூ றிருந்தக் கற்றோர். 4
பெரும்பவ நோய்வ ருத்தல் பிறங்குதன் சொரூப ஞானம்
பொருந்துறு மளவே யன்றோ பொங்கொளி யிரவி தோன்றப்
பரந்திடு மிருளு முண்டோ பகர்ந்திடிற் காலா தீத
வரும்பத மடைந்து ளோனுக் காக்கையுட் படுத லின்றே. 5
- பரகாயத்தலம் முற்றிற்று - * * *
அறுபதாவது
(60) தருமாசாரத்தலம்
[அதாவது - அகிம்சா, சத்யம், ப்ரஹ்மசர்யம், ஆஸ்தேயம், தயை, க்ஷமை, சகஜதானம், லிங்கபூஜை, பஞ்சாக்ஷரீ ஜபத்யானம், சத்குரு சேவை, சரணர் சங்கம், மனோ நிக்ரகம், சிவ சித்தாந்த விச்வாசம், வைராக்யம், விவேகம், வித்யை, இந்த்ரிய நிக்ரகம், பக்தி, நீதி, நிகமாகமங்களில் நம்பிக்கை ஆகிய ஆசாரங்கள், அந்தப் பரப்ரஹ்ம ஸ்வரூபனும் பரகாயனுமான சிவயோகிக்கு ஸ்வபாவமா யுண்டாயிருப்பன. அதனால் அவ்வாசாரமே எல்லாருக்கும் அநுசரணீயமான தர்மமாயிருப்பதால் தருமாசாரம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அப்பர காயன் செய்வ தியாதொரா சார மம்ம
செப்புறு மதுதான் யார்க்குஞ் செய்திடுந் தரும மாகி
யொப்பறு முதவி யாமென் றுரைப்பர்க ளுணர்வின் மிக்கோர்
துப்புறழ் சடிலக் கற்றைச் சுடர்முடி முனிவர் வேந்தே. 1
கூறருந் தருமா சாரங் கொல்லாமை வாய்மை யோடு
வேறுறுங் களவி லாமை வெகுளாமை பிரம சரியம்
பேறெனுந் தயையே தானம் பிறங்குறு செபந்தி யான
மாறரும் பூசை யென்று வகுத்துரை செய்வர் மேலோர். 2
வினையிலி யாக மத்தின் விதித்தவித் தருமா சாரம்
புனையிழை யாகக் கொள்வோன் புராரிதன் னருளுக் கேற்றோ
னினைவற வறம லாமை நியமஞ்செய் தருமந் தன்னை
நனிவரு காம மின்றி நவிற்றுதன் ஞான வேது. 3
உலகெலா மொருதா னாக வுன்னலால் வடிவ மாதி
விலகலா லுயிர்க ளெல்லாம் வேறறத் தானாய்க் காண்பா
னுலகெலாஞ் சிவமொன் றாக வுணர்ந்தவற் கெனதென் றெண்ண
விலகுமோர் பொருளு முண்டோ விலையென விளம்பு நூலே. 4
அறநெறி முத்தியேது வாதலா லவ்வ றத்தைத்
துறவின னெனினுஞ் செய்க தொல்லறி வமுதந் தன்னா
னிறையினு மறத்தை நீங்கா னின்றதன் னொழுக்க நோக்கிப்
பிறரிது நெறியென் றெய்தப் பெறுதலாற் பரம யோகி. 5
விமலனுஞ் சதாசா ரத்தில் விருப்புள னாகி யென்று
மமலுறு மாசா ரத்தா லருச்சிக்கப் படுவன் கண்டாய்
நிமலமா மாசா ரத்தை யன்றியே நெற்றி நாட்டத்
துமையொரு பாகன் செய்யு மோங்கரு ளுண்டா காதால். 6
- தருமாசாரத்தலம் முற்றிற்று - * * *
அறுபத்தொன்றாவது
(61) பாவாசாரத்தலம்
[அதாவது - தர்மாசார சம்பந்நனான சிவயோகியின் சத்பாவமே அனைவருக்கும் அநுசரணீய மாதலால் பாவாசாரம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அறமுறு மிவன்றன் பாவ மனைவர்க்கும் பாவா சாரந்
திறமுறு பாவந் தன்னைச் செப்புறின் மனவ ழக்காய்
நிறைதரு சிவனைப் பற்றி நிற்பதென் றறிந்து கொண்ணீ
மறிதிரை சுருட்டு மாழி வாய்மடுத் துண்ண வல்லோய். 1
பாவனை யாற்செய் கன்மம் பாவநங் களினுண் மேலாம்
பாவனை யால றத்தைப் பண்ணுக வதனா லென்றும்
பாவனை யாற்செய் கன்மம் பலித்திடு மனமுந் தூய்தாம்
பாவனை யாலென் றெண்ணிப் பாவனை விடாமற் செய்க. 2
நித்திய கரும மாதி நிகழ்சிவ பாவந் தன்னாற்
சுத்தநல் யோகி செய்து துரிசினிற் கட்டு றானால்
சித்தெனு மிரவி தன்னைச் சிந்தையிற் பாவித் தெய்த
லுத்தம மாய சந்தி வந்தனை யுணர்ந்து கொள்ளே. 3
பரசிவ வங்கி தன்னிற் படர்புல விந்த நத்தைத்
துரிசறு பாவத் தாலே சுடுதலே யாக மாகும்
பரிசுறு கரும மெல்லாம் பரமனுக் காவ வாகக்
கரிசுறு பவந்தொ லைப்பான் கருத்தினிற் கொள்க மாதோ. 4
செயத்தகு செயல்செய் யாத செயலெல்லாஞ் சிவன்பால் வைத்த
மயக்கமி லறிவன் றீமை மருவுறா னென்பர் தன்னை
வியக்குறு முலகை ஞான விமலனை வேறி லாம
லயிர்ப்பற வொன்றாய்க் கண்டோன் கண்டவ னாகு மன்றே. 5
- பாவாசாரத்தலம் முற்றிற்று - * * *
அறுபத்திரண்டாவது
(62) ஞானாசாரத்தலம்
[அதாவது - பாவாசார சம்பந்நனான சிவயோகியின் சிவைக்யத்தினால் கூடிய ஜ்ஞானாசாரமே அனைவருக்கும் அநுசரணீயமாதலால் ஞானாசாரம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இந்நிலை யோகி தன்பா லிலங்குறு ஞான சார
மன்னிய வுலகில் யார்க்கு மருவிய ஞானா சார
மென்னநன் குரைப்பர் கற்றோ ரிரைந்திழி யருவிக் குன்றந்
தன்னைவென் றிணையெ றிந்த தவத்தினி லுயர்ந்த மேலோய். 1
ஞானமா வதுசி வாத்து விதஞான மென்பர் நல்லோ
ரேனைய ஞான மெய்திற் றென்னினு மெய்தா தேனுந்
தானதா லாவ தென்கொல் சாற்றுமப் பரஞா னத்தா
லூனமாம் பிறவி நீங்கு மொழிந்ததா லொழிந்தி டாதால். 2
பூரண ஞானம் பற்றிப் புரிவதே ததுதான் மிக்க
வேரணி ஞானா சார மென்பர்நற் சிவமி தென்னும்
பேரணி பரத்தி லெல்லாம் பேரறி வாலொ டுக்குஞ்
சீரணி பவனே யாகுந் திகழ்தரு ஞானா சாரி. 3
முத்தியை யுதவு ஞானங் குருவருண் முறையிற் பெற்றோ
னெய்த்திடும் பவம்பெ ருக்குங் கருமத்தி லிச்சை செய்யான்
றத்தலை யொழுகு நீர்போற் சார்ந்துள கரும பந்தஞ்
சுத்தமெய்ஞ் ஞானத் தீயாற் கூடுதலான் மறித்துந் தோன்றா. 4
ஞானமி லாதான் கன்ம நாணினாற் கட்டுப் பட்டான்
ஞானமு ளானக் கன்ம பந்தனை நழுவி னோனாம்
ஞானவா சார நண்ணிப் பரசிவ நாட்டம் பெற்ற
ஞானிதான் சீவன் முத்த னாகியே நடிக்கு மன்றே. 5
- ஞானாசாரத்தலம் முற்றிற்று - * * *
இவ்விதமாய் க்ரியாகமம், பாவாகமம், ஜ்ஞானாகமம், சகாயன், அகாயன், பரகாயன், தர்மாசாரம், பாவாசாரம், ஜ்ஞானாசாரம் என்னும் ஒன்பது ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் சிவஜ்யோதி ஒன்றிலேயே நோக்கம் வைத்து லௌகிகர்களைப்போல வ்யவஹாரம் செய்து கொண்டிருக்கும் ஜீவன்முக்தனும், அங்கஸ்தலத்து இரண்டாமவனுமான மாகேச்வரனே குருலிங்க ஜங்கமன் என்று அறியப்பட்டான்.
2 - வது குருலிங்கத்தலம் முற்றும் - - - - - -
3 - வது சிவலிங்கத் தலம்
[அதாவது - வித்யாகலா சமேதமாய் இச்சாசக்தியுடன் கூடி மூர்த்தி சாதாக்யத்தைப் பொருந்தி அகங்கார கம்யமா யிருத்தல் என்பது.]
( ப்ரஸாதிக்குச் சேர்ந்த உட்பிரிவுகள் )
கலிநிலைத்துறை
தாவி லாதமா கேசநற் றலத்தவாந் தலங்கள்
யாவு மோதினை யினிப்பிர சாதியத் தலத்தை
மேவு றுந்தல பேதமும் விளங்குற வெனக்கு
நாவலோர் புகழ் தருகண நாயக நவில்வாய். 1
காய மிந்தியம் பிராணநல் லநுக்கிர கந்தாங்
காய மோடுறு கரணபா வார்ப்பிதங் கருதி
னேய சீடனற் சிசுருடை சேவியத் தலமென்*
றாய வத்தல மொன்பதா மவற்றையு மறைவாம். 2
( * சிவலிங்க ஷட்பக்தர்கள் :- சிவலிங்கமோஹி, சிவலிங்கபக்தன், சிவலிங்கபூஜகன், சிவலிங்கவீரன், சிவலிங்கப்ரசாதி, சிவலிங்கப்ராணி என ஆறு வகைப்படுவார்கள். இவர்களில், அந்யமோகமில்லாதவனே சிவலிங்கமோஹி, அந்ய தைவநிராசகனே சிவலிங்கபக்தன், அந்ய தைவபஜனையில்லாதவனே சிவலிங்கபூஜகன், அந்ய புண்ய க்ஷேத்ர யாத்ராதிகளை த்யாகஞ் செய்தவனே சிவலிங்கவீரன், சுகதுக்காதிகளை சகிப்பவனே சிவலிங்கப்ரசாதி, ஸ்த்ரீசம்போக மில்லாதவனே சிவலிங்கப்ராணி.
த்ரிவித சிவலிங்கம் :- இஷ்டலிங்கம், பாவலிங்கம், த்ருப்திலிங்கம் என மூவகைப்படும். ஸ்ரீசத்குருவானவர் தீக்ஷையினால் கொடுத்ததே இஷ்டலிங்கம், தேக குண வ்யாப்தியைவிட்டு சிவலிங்க ஸ்வரூபத்தில் மனம் லயித்திருப்பதே ப்ராணலிங்கம், சகலா வஸ்த்தைகளிலும் சிவலிங்கத்துடன் அநன்யபாவமாயிருப்பதே த்ருப்திலிங்கம்.)
அறுபத்துமூன்றாவது
(63) காயாநுக்கிரகத்தலம்
[அதாவது - ஜ்ஞானாசார சம்பந்நனான சிவயோகி, லோகாநுக்ரகத்தி னிமித்தம் தேகதாரணம் செய்து கொண்டிருப்பதனால் காயாநுக்கிரகன் என்பது.]
கலிநிலைத்துறை
இந்த யோகிதன் மெய்யினை யிலங்குறக் காட்டி
வந்தி யாரையு முலகினி லளித்திடு மாற்றா
லுந்து பேரெழி லுடலநுக் கிரகனென் றுரைக்கு
முந்து நாமமுற் றிடுமென வறைகுவர் முன்னோர். 1
அண்ண லாகிய பரசிவன் வடிவுகொண் டடுத்திங்
கெண்ணி லாவுயி ரியாவையு மளித்திடு மியல்போன்
மண்ணில் யோகியும் வடிவொடு மருவியா வரையு
நண்ணி யேயளித் திடுபவ னாமென நவில்வார். 2
ஈசன் மேனியோ டொன்றினும் பற்றில னென்ப
மாசில் யோகியு முடம்பின னெனினுமல் வாறாம்
பாச மாய்வுறு மருஞ்சிவ பாவனை யதனாற்
றேசு லாவுறு பரசிவ னாமவன் றிண்ணம். 3
இன்ப வெள்ளமாஞ் சிவத்தினின் மனவழுக் கிறந்த
துன்பில் யோகிமா யைப்பொரு டோன்றுறக் காணான்
முன்பு வெள்ளியன் றிதுவென விப்பிகாண் முறைபோற்
பின்பி லங்குறு மிதுசக மன்றெனப் பிரமம். 4
சொற்ப னப்பொருள் விழித்திடத் தோன்றிடா மாயா
கற்ப னைப்பொருண் ஞானம்வந் துற்றிடிற் காணா
முற்பெ றச்சக மயக்கினுக் கவித்தையே முதன்மை
நிற்ப தற்றிடி னதுபினை யுலகெதிர் நில்லா. 5
விண்ட மூலவாங் காரனாய் விளிந்திடு முபாதி
கொண்டு தான்விளை யாடலான் மெய்யொடு கூடிக்
கண்ட யோகிமெய் யாளர்போ னடித்திடுங் கண்டாய்
மண்டு வெண்டிரைக் கருங்கடன் மடுத்தவாய் மலரோய். 6
- காயாநுக்கிரகத்தலம் முற்றிற்று - * * *
அறுபத்துநான்காவது
(64) இந்திரியாநுக்கிரகத்தலம்
[அதாவது - விவேகச்ரேஷ்ட்டனும் காயாநுக்ரக சம்பந்நனுமான சிவயோகி, தன் தேகத்தை லோகாநுக்ரகத்தி னிமித்தம் விநியோகித்திருக்குமாறு தன் இந்திரிய வ்யாபாரங்களை ஏனையோர்களால் அநுசரணீயமாகுமாறாக்கி லோகோத்தாரணஞ் செய்தலால் இந்திரியாநுக்கிரகன் என்பது.]
கலிநிலைத்துறை
வடிவு கொண்டருள் பவனது காட்சியான் மருவு
மொடிவி லிந்திய விவேகமே யுலகுளார் யார்க்கும்
படிவி லிந்தியா நுக்கிர கம்மெனப் பகர்வார்
முடிவ றுஞ்சிவ தத்துவ முணர்பெரு முனிவர். 1
இந்தி யங்கடத் தம்புல னிதமொடு வெறுப்பாய்
வந்து றும்படி யடைந்திடு மிவனவை மருவா
னிந்தி யங்கடாம் புறந்திரிந் திடுதலே பந்த
மிந்தி யங்கணின் றகத்தடங் கிடுதலே முத்தி. 2
உள்ளு றுஞ்சிவத் தொடுங்கிய மனமுடை யோகி
கொள்ளு மிந்திய மியாவையுங் கூடினுங் கூடான்
றெள்ளு றும்பர சிவத்தையே காண்குவன் சிறிதும்
விள்ளு றும்பிற பொருளினைக் கண்டிடான் விழித்து. 3
மான மின்றியே சிவத்தினில் வைத்தவிந் தியத்தோ
னூன மொன்றியே மூப்பொடு முயிர்விடு மரணந்
தானு ணும்பசி தாகமென் றிவற்றினைச் சாரான்
வான மொன்றொடும் பற்றிலா வாறென மன்னோ. 4
எங்க ணெய்துறு மனமவ ணெய்துமிந் தியமுஞ்
சங்க ரன்றனை யுறின்மனஞ் சரிக்குமா புலன்க
ளிங்க ருஞ்சிவ யோகிதான் மனத்திடை யெண்ணிப்
பங்க மின்றியே பார்த்திடும் பொருளெலாம் பரமாம். 5
கரண மோடுறு பிராணனா மனத்தொடு கலந்தோன்
புரண மாஞ்சிவ மாகுவன் சகமயல் பொன்றி
முரணு றும்புலன் யாவினு முயன்றுமுட் புறமோ
ரரண வஞ்சிவ மடைந்தவ னெங்குமின் படைவான். 6
- இந்திரியாநுக்கிரகத்தலம் முற்றிற்று - * * *
அறுபத்தைந்தாவது
(65) பிராணாநுக்கிரகத்தலம்
[அதாவது - இந்திரியாநுக்ரக சம்பந்நனானவனும் பரப்ரஹ்மமே தேகமாயுள்ளவனுமான சிவயோகி, தான் ப்ராணவாயுவைத் தடுத்தலால் சிவலிங்க தர்சனமாகும், தத்க்ரமத்தை ஜகத்தெல்லாம் அநுசரிக்கும்படிச் செய்வதனால் பிராணாநுக்கிரகன் என்பது.]
கலிநிலைத்துறை
சிவமெ னும்பர வடிவமாய்த் திகழ்ந்திடு மிவன்ற
னுவகை யந்தரி சனமிகு முயலகனைத் தினுக்கும்
பவம றும்படி யுயிரநுக் கிரகமாப் பகர்வர்
தவம டைந்துயர் த்துவ முணர்ந்துள தலைவர். 1
யோகி னாற்சிவத் தொடுங்கிய வுயிருள னெனினு
மாக மேவுறுந் தன்சத்தி வாசனை யதனா
லேக மாஞ்சிவத் தடங்கிய பிராணனோ டிருப்போன்
போக மார்புல னொடுமன மெங்ஙனம் பொருந்தும். 2
தத்தம் வெவ்விட யங்களைச் சார்வுற மீள
வுய்த்தி டுங்கர ணங்களோ டுள்ளடங் குயிரான்
மெய்த்த சாந்திய னாகியே விளங்குவ னென்று
முத்த னாகம முழுதையு முணர்ந்தவர் மொழிவார். 3
சாந்தி யாமெனி னிங்குயிர் விருத்திதான் றழைந்து
போந்த வன்மன விருத்தியோ டமைந்திடும் புகலி
னேய்ந்த வம்மனச் சாந்தியா லிலங்குறும் யோகி
யார்ந்தி டுஞ்சிவ மன்றிவே றொருபொரு ளறியான். 4
உடம்பி னுக்குயி ருயிரினுக் கிறைவனா தார
மடைந்த காரண னாகிய சிவனிரா தாரன்
தொடர்ந்து மாபர னாலுயி ருயிரினாற் றோன்றி
மடங்கு காயநின் றியங்குறு மெனமதி மதித்தே. 5
இந்த வாயுநற் பயிற்சியா லின்பபூ ரணமா
யந்த மாதியி லாததா யறிவுரு வாகிப்
பந்த மாகிய தத்துவங் கடந்துயர் பரத்தில்
வந்து மாய்தலில் யோகிதான் சலித்திடான் மன்னோ. 6
நீங்கு வாசனை யுடையனாய் நிகழுயிர் விருத்தி
யீங்கு மாறுபு சிவத்தினி லேகமா யிருப்போ
னோங்கு தாணுவொத் தசைந்திடா னென்றுமென் றுணர்க
வாங்கு வார்திரைக் கடல்குடித் துயர்ந்திட வல்லோய். 7
- பிராணாநுக்கிரகத்தலம் முற்றிற்று - * * *
அறுபத்தாறாவது
(66) காயார்ப்பிதத்தலம்
[அதாவது - பரப்ரஹ்ம காயனாகியும் ப்ராணாநுக்ரக சம்பந்நனாகியு மிருக்கும் சிவயோகி, தன் லிங்கபூஜா விஷயத்தில் தேகாபிமானத்தை த்யாகம் செய்வதே காயார்ப்பிதம் என்பது.]
கலிநிலைத்துறை
அருள்செ யப்பர யோகிதா னருச்சனைப் பொருட்டு
மருள்செய் யிவ்வுடன் மானமற் றிடுவதே மதிப்பிற்
றெருள்செய் கின்றகா யார்ப்பித மென்றுரை செய்வ
ரிருள்செய் வெம்பவ மகன்றுநல் லறிவறிந் திருப்போர். 1
என்று தன்னுடம் பீசனுக் கர்ப்பிதஞ் செய்வ
னன்று தன்வடி வொருசிவ வடிவமே யாகு
மொன்று மிந்திய விடயவின் பங்களை யோகி
நின்ற சிந்மய சிவத்தினுக் காக்குவ னேர்ந்து. 2
கண்டு கேட்டுமற் றுண்டுயிர்த் துற்றிடு காலைக்
கொண்ட வின்பங்கள் யாவையுஞ் சிவத்தினிற் கொடுத்து
மண்டி யிவ்வுடல் வழிவரு மற்றுள சுகமும்
விண்ட வெந்தளைப் பரமனுக் காக்குவோன் விமலன். 3
- காயார்ப்பிதத்தலம் முற்றிற்று - * * *
அறுபத்தேழாவது
(67) கரணார்ப்பிதத்தலம்
[அதாவது - காயார்ப்பணம் செய்த சிவயோகி சகலேந்திரியங்களையும் லிங்கத்தில் சம்யோகம் செய்வதே கரணார்ப்பிதம் என்பது.]
கலிநிலைத்துறை
ஆதி யாகிய சிவத்தினிற் கரணங்க ளனைத்தும்
வேதி யாவத னிடைப்புணர்த் திடுதலே விளங்கத்
தீதி னூல்கர ணார்ப்பித மென்னவே தெரிக்கும்
பூத நாயக னருள்கொடு பொதியிலிற் புகுந்தோய். 1
யாது தானொரு கரணங்கொண் டுறுபுல னிடத்திற்
போது மோர்சுகஞ சிவத்தினிற் சமர்ப்பணை புரியு
நீதி யான்கர ணார்ப்பித னென்னவே நிகழ்த்து
மாது பாதிய னருளிய வாகமம் வகுத்து. 2
அகந்தை யாமதம் பொழதரு கரணவா ரணத்தை
மிகுந்த மாசிவ மெனுந்தறி பிணிப்பவன் வீரன்
பகுந்த விந்தியத் ததிபதி யாமனம் பரத்திற்
புகுந்து ளான்றனக் கதுதொடர் பொறிகொடென் பொருந்தும். 3
இந்தி யங்களை மறித்தருஞ் சிவத்தினி லிசைத்தோற்
கந்த வெம்பவ முழுகுத லியாண்டுள தறையி
னிந்தி யங்கடன் வழிபடுத் திடல்பவ மென்னும்
பந்த வல்வன மெறிந்திடற் கொருபெரும் பரசாம். 4
இந்தி யங்களாற் பாவபுண் ணியங்கள்வந் தெய்து
மிந்தி யஞ்சிவத் தாக்கினாற் கிருவினை யில்லை
யந்த வெம்பவ முறான்மனத் தாஞ்சக வவியை
முந்து ஞானவா ரழலிடை யிட்டிடு முறைபோல். 5
அகம்பு றங்களு நிறைந்துள ஞானவங் கியினின்
மிகும்பு லன்களெ னவியிடை யிட்டுவேட் கின்றோ
னுகந்தி டும்பர முத்தனொத் தொருசிவ மாமென்
றிகம்ப ரங்களு முணர்ந்தவ ரியம்புவ ரன்றே. 6
பொறிகள் யாவையும் போகசா தனமெனும் புரமு
நெறிகொ ளீசன தருச்சனை யங்கமா நினைந்தோன்
குறிகொ ளங்கமி லொருபர முத்தியே குறுகும்
வெளிகொள் வண்டின மிசைமுரல் சந்தன வெற்போய். 7
- கரணார்ப்பிதத்தலம் முற்றிற்று - * * *
அறுபத்தெட்டாவது
(68) பாவார்ப்பிதத்தலம்
[அதாவது - கரணார்ப்பணஞ் செய்த சிவயோகி ஸ்த்திரமான பாவத்தினால் லிங்கத்திற்கு மனோவிகாரங்களான பாவங்களை சமர்ப்பணம் செய்வதே பாவார்ப்பிதம் என்பது.]
கலிநிலைத்துறை
சலன மின்றிய பவனை கொண்டுசற் பாவ
நலமு றுஞ்சிவ னிடத்தினி லர்ப்பித நவிற்று
நிலையி லங்குபா வார்ப்பித மென்னவே நிறுப்பர்
புலமை கொண்டுயர் சிவநிலை யுணர்ந்திடும் புலவர். 1
மான சந்தனைப் பாவமென் றறைகுவர் மனத்தி
லான வப்பொரு ணினைவொரு சிவத்தி லர்ப்பிதமா
மீன வெம்பவ மடைகிலன் பாவசுத் தியினோன்
றான திங்கிலன் பவத்தினிற் சுழலுவன் றளர்ந்தே. 2
பாவ சுத்திதான் சிவோகமென் யோகமாய்ப் பகர்வர்
பாவ மற்றது தீர்ந்துளன் பவத்தினிற் படுவான்
மேவி யுண்பவ னுணும்பொரு ரூட்டுவோன் விளம்பின்
யாவு மோர்சிவ மயமென வெண்ணுவோன் சிவனாம். 3
மித்தை யென்றுல கனைத்தையும் விடுத்தறி வின்பச்
சத்தெ னுஞ்சிவந் தன்னையே நினைந்துறுந் தகையோ
னெத்தி றங்களி னாயினு மலத்துட னிசையான்
முத்த னென்றவன் றனைமொழி குறுவர்மூ தறிஞர். 4
கருமம் யாவுமோர் பரசிவ பூசனை கழறு
முரைகள் யாவுமொண் டுதியென வுன்னுவோற் கில்லை
கரும பந்தனை யின்பதுன் பங்களைக் கருதா
தொருப ரன்றனக் காக்குவோ னுயர்சீவன் முத்தன். 5
- பாவார்ப்பிதத்தலம் முற்றிற்று - * * *
அறுபத்தொன்பதாவது
(69) சீடத்தலம்
[அதாவது - பரகாயனாகவும் பாவார்ப்பித சம்பந்நனாகவு மிருக்கும் சிவயோகியினால் சிக்ஷிக்கப்படுவதற்கு யோக்யனானவனே சீடன் என்பது.]
கலிநிலைத்துறை
பிரம மேவடி வாகுமப் பெரியவன் றன்னா
லருள்பு ரிந்தளிக் கப்படு வோனவ னருளாற்
பரம வின்பவீ டவாவுளோ னெவனவன் பகரி
னிருமை தங்கிய சீடனென் றுயர்ந்தவ ரிசைப்பார். 1
பாவ நற்குணங் கட்கிட மாகியே பரமாய்
மேவு சற்குரு பரனிடை மனமொழி மெய்யால்
யாவு முற்றவன் றன்னையே சீடனென் றிசைக்குங்
காவி யொத்தகண் மலைமகள் பாகனா கமங்கள். 2
சாந்தி தாந்திநற் றவஞ்சம தரிசனம் வாய்மை
வாய்ந்து மாண்குரு சிவனிடை யொத்தநன் மனத்தா
லேய்ந்து ளான்றனைச் சீடசூ டாமணி யென்பர்
தீர்ந்த மாலுடை யொருபர சிவமுணர் திறத்தோர். 3
குருவை மெய்ச்சிவ மாகவச் சிவன்றனைக் குருவா
யொருமை பெற்றிடக் காண்கவக் குருபர னுரைத்த
திரிவ றச்சிவ நெறிசிவத் தியானமெய்ஞ் ஞான
மருவ லுற்றவை நிட்டையி னோங்குக மாதோ. 4
அண்ட மொக்குள்சேர் மாயையங் கடலுய ராசான்
கண்ட நல்லருள் கடைக்கணால் வற்றுறுங் கலப்பப்
பண்டி ரும்பிர தத்தினாற் பசும்பொன மாபோன்
மண்ட லந்தனின் மனிதருஞ் சிவமய மாவர். 5
தேசி கன்றன தாணையைக் கடந்திடல் செய்யா
னாச கன்றுள ஞானமுற் றடைகுவ னவனாற்
பேசு றுஞ்சக மித்தைபே ரறிவது பிரம
மேச லின்றது நீயென விசைந்தவன் முத்தன். 6
பிறவி நன்மருந் தாகிய பிரம ஞானத்தை
யறவ னென்றுயர் குரவனா லடைந்துவந் தமர்வோ
னுறவு வெம்பகை யிலாவுயிர் முத்தனென் றுரைப்பர்
மறுவ கன்றுள கலைமுழு துணர்ந்துறு மதிஞர். 7
- சீடத்தலம் முற்றிற்று - * * *
எழுபதாவது
(70) சிசுருடைத்தலம்
[அதாவது - பரப்ரஹ்மாகாரனான ஸ்ரீசத்குருவினால் சதா போதிக்கப்படும் அந்த சிஷ்யன் குருவைக் குறித்து நித்யம் யாது? அநித்யம் யாது? ஜீவன் யாது? சிவன் யார்? என்று வினவுவதே சிசுருடை என்பது.]
கலிநிலைத்துறை
பீடு றுங்குரு வாலருள் செய்திடப் பெற்ற
சீட னொண்குரு சிசுருடை விருப்பினைச் செயலா
னாடு றுஞ்சிசு ருடைப்பெயர் நண்ணுவ னென்னப்
பாடு றும்புகழ் மாதவ வாகமம் பகரும். 1
மெய்ம்மை யாதுபொய் யாதுயிர் யாதுதான் விளங்குஞ்
செம்மை யார்சிவம் யாதென வினவுவோன் சீட
னிம்மை யேசிவ மருள்குரு வின்மொழி கேட்டுப்
பொய்ம்மை போயக மமைபவன் வீட்டினைப் பொருந்தும். 2
ஆரி யன்றன துரையிலா தலர்வுறா திதயஞ்
சூரி யன்றனை யலான்மரை யலர்வுறா சொல்லி
னாரி யன்றிகழ் வால்விளங் குவனருஞ் சீடன்
சூரி யன்றிகழ் வாற்கதிர்க் காந்தமுஞ சுடரும். 3
சீட னக்குரு பரனெதி ரஞ்சலி செய்து
கேடி லத்துவி தானந்த மொன்றையே கேட்க
நாடு தத்துவம் யாதுல கெதன்கணே நண்ணும்
வீட டுத்துறல் யாதினால் விளம்புக வென்பான். 4
இன்ன வாறருஞ் சீடனேர் வினாவுற விறைவ
னின்ன லம்பவ மொழிகுவான் றத்துவ மிசைப்ப
னுன்ன ருஞ்சிவ னேபர முண்மையு மவனே
யன்னி யங்களா மிச்சக மநித்தமென் றறிவாய். 5
மித்தை யாஞ்சகஞ் சிவனிடை மேவுறும் வெள்ளி
சுத்தி மேவல்போற் சிவோகமென் பாவனை தோன்றி
னத்த னாகிய சிவநிலை யுண்மையை யடைய
முத்த னாகுவன் பவநெறி மூலமா மோகம். 6
மைந்த நீயுனைச் சிவமய மென்னவே மதித்திங்
கிந்த வேறெனு முலகினை யெண்ணலை யிங்ஙன்
வந்து றுஞ்சிவாத் துவிதவின் பத்தினான் மருவிப்
பந்த மின்றிய வுயிர்முத்த னாயினை பகரின். 7
மேவு நற்குணக் குன்றமாங் குரவனால் விளங்கப்
பாவ மற்றுயர் போதனை யருள்செயப் பட்டோ
னியாவு மிச்சகஞ் சிவமய மேயெனக் கண்டு
சீவன் முத்தனா குவனென வாகமந் தெருட்டும். 8
- சிசுருடைத்தலம் முற்றிற்று - * * *
எழுபத்தொன்றாவது
(71) சேவியத்தலம்
[அதாவது - சுச்ருஷு இவ்வாறு ஸ்ரீசத்குரூபதேச முகத்தினால் சிவாத்வைத ஜ்ஞானத்தை சம்பாதித்துக் கொண்ட பின்னர் சேவியன் என்பது.]
கலிநிலைத்துறை
போத மாபலன் குருமொழி யமுதினாற் பொருந்து
மேதை யாமிவ னேயுல கடங்கவும் விரும்பித்
தீதி லாதுசே வித்திடப் படுவனாற் றெரியி
னாத லாலிவன் சேவிய னெனும்பெய ரடைவான். 1
குரவ னல்குமெய்ஞ் ஞானநெஞ் சகத்தினிற் கூடி
விரவு றுஞ்சிவ வடிவமாஞ் சீடனும் விளம்பிற்
பரவு றுங்குரு பரனெனப் பூசிக்கப் படுவன்
வரமு றுஞ்சிவ ஞானவாழ வினனென மதித்து. 2
என்று மெய்ச்சிவ நானெனும் பாவனை யெய்தி
நின்ற வற்கிடை யீடிலா திறைநிலைத் திடலா
னன்று றச்சிவன் போலவே யிங்கவ னாளுங்
குன்ற லற்றுயர் பூசனை கொள்வனென் றறிவாய். 3
ஒழிவ றுஞ்சிவ பாவனை யுடையநல் யோகி
யிழிவு றுஞ்செயல் விடயநெஞ் சுடையவ னெனினு
மொழியு மவ்விட யங்களின் முத்தனாய் மருவும்
வழிப டுஞ்செயல் பரவுமா சிவனென மன்னோ. 4
பந்த நாசநஞ் செயுஞ்சிவ ஞானமே பற்றுஞ்
சிந்தை யாலுல கோர்பவந் தொலைத்திடல் செயுமா
நந்த ஞானமெய்ச் சிவபத மடைந்தநல் யோகி
யிந்த மாநிலத் தனைவரும் போற்றிட விருப்பன். 5
- சேவியத்தலம் முற்றிற்று - * * *
இவ்விதமாய் காயாநுக்ரகம், இந்திரியாநுக்ரகம், ப்ராணாநுக்ரகம், காயார்ப்பிதம், கரணார்ப்பிதம், பாவார்ப்பிதம், சிஷ்யன், சிச்ருஷை, சேவியன் என்னும் ஒன்பது ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் எல்லாராலும் இவ்வுலகில் போற்றப்பட்டவனும், சிவசாயுஜ்ய பதடைந்த யோகியும், அங்கஸ்த்தலத்து மூன்றாமவனுமான ப்ரசாதியே சிவலிங்கப்ரசாதி என்று அறியப்பட்டான்.
3 - வது சிவலிங்கத்தலம் முற்றும் - - - - - -
4 - வது ஜங்கமலிங்கத் தலம்
[அதாவது - சாந்திகலா சமேதமாய் ஆதிசக்தியுடன் கூடி அமூர்த்த சாதாக்யத்தைப் பொருந்தி மனோகம்யமாயிருத்தல் என்பது. (பிராண லிங்கிக்குச் சேர்ந்த உட்பிரிவுகள்)]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நற்பிர சாதி யெய்துந் தலத்திற நயந்து ரைத்தாய்
பிற்பெறு பிராண லிங்கி தலத்தினிற் பேதந் தானுஞ்
சொற்பொருள் விளங்கு மாறு சொல்லுக வடிய னேற்குப்
பொற்புறு கயிலை காக்கும் புகழ்மலி கணங்கள் வேந்தே. 1
பொற்புறு மான்மா மூன்றும் புகழுமா கமங்கண் மூன்றுந்
தற்பிர சாத மூன்று மாகவே தலங்க ளொன்பான் *
சொற்பெறு பிராண லிங்கி தொடர்ந்துள தலமி வற்றை
வெற்பமர் முனிவர் வேந்தே விளம்புது முறையிற் கேண்மோ. 2
( * ஜங்கமலிங்க ஷட்பக்தர்கள் :- ஜங்கம லிங்கமோஹி, ஜங்கம லிங்கபக்தன், ஜங்கம லிங்கபூஜகன், ஜங்கம லிங்கவீரன், ஜங்கம லிங்கப்ரசாதி, ஜங்கம லிங்கப்ராணி, என ஆறு வகைப்படுவார்கள். இவர்களில், பூர்வாசாரங்களை நிஷேதித்தவனே ஜங்கம லிங்கமோஹி, ஜாதிகுலாபிமானங்களை விட்டவனே ஜங்கம லிங்கபக்தன், அந்யார்ச்சனைகளை விட்டவனே ஜங்கம லிங்கபூஜகன், அர்த்தப்ராணாதிகளை ஜங்கமத்திற்குக் கொடுத்து மீளவும் மோஹிக்காதவனே ஜங்கம லிங்கவீரன், ஜங்கமத்திற்கு சகல த்ரவ்யங்களைக் கொடுப்பதன்றிக் கொள்ளாம லிருப்பவனே ஜங்கம லிங்கப்ரசாதி, ஜங்கமமே ஸாக்ஷாத் சிவமென்னும் விச்வாசியே ஜங்கம லிங்கப்ராணி.
த்ரிவித ஜங்கம லிங்கம் :- ஸ்வயலிங்கம், சரலிங்கம், பரலிங்கம் என மூவகைப்படும். இவைகளில், சிவலாஞ்சனம் தரித்தவனே லிங்கமென்றறிந்து பாஹ்யகர்ம பரித்யாகத்தினால் சதானந்தி யாயிருப்பதே ஸ்வயலிங்கம், சிவலிங்கத்துடன் சர்வேந்த்ரியங்கள் கூடிக் கொண்டு பேதப்ராந்தி மீளவும் உண்டாகாமல் நிஜாநந்தத்தினால் ஸ்வேச்சையாய் விஹரிப்பதே சரலிங்கம், ஸ்த்தாவர ஜங்கமாதி ஸகலத்திலும் தான் என்பதே பரலிங்கம்.)
எழுபத்திரண்டாவது
(72) சீவான்மத்தலம்
[அதாவது - பூர்வோக்தனான சேவ்யஸ்தலத்தை யடைந்த ப்ரசாதியே ஸ்ரீசத்குரு வினாலுண்டான சிவஜ்ஞானத்தினால் ஜீவபாவனையை விட்டு எப்போது பரதத்வத்தைப் பாவிக்கின்றானோ அப்போது சீவான்மா என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆரிய னருளு ஞான போதனை யடைந்த விந்தச்
சீரியன் சீவ பாவந் தீர்ந்துநற் றத்து வத்தை
யோரியல் பொடுபா விக்குங் காலையி லுணர்ந்து ளோர்நற்
பேரிய லான்மா வென்னப் பெற்றிடு முலகி லன்றே. 1
பகர்ந்திடி லுண்மை வாலாக் கிரசத பாக மொத்து
நுகர்ந்துறு வினையின் பேறு நுண்ணிய னாகு மான்மா
வகந்தனி லிருளி ரிக்கு மருஞ்சுடர் போலிருந்து
திகழ்ந்திடு மென்று சொல்வர் சிவாகம நெறியு ணர்ந்தோர். 2
ஆணவத் தடையி னாலோ ரணுவென வாதி கன்ம
நாணுற வசைக்கப் பட்டு நவிலினுண் ணியனா மான்மா
வேணுறுங் கரணந் தன்னை யிசைந்துளா னென்றி சைப்பர்
தாணுவி னமல நூலாற் றமையுணர்ந் தமைந்த மேலோர். 3
தெள்ளுறு பளிங்கு தானோர் சேயொளி யரத்தச் சார்வாற்
கொள்ளுறு மிலங்கு செம்மை குறித்திடி னவ்வா றேபோல்
விள்ளரு மாங்கா ரத்தின் சார்வினால் விளங்கு மான்மாத்
தள்ளரு முடலின் மானந் தரிக்குமென் றறிந்து கொள்ளே. 4
நிரஞ்சன மாய வான்மா நிறைந்தவ னெங்கு மேனும்
வருஞ்செய லுடலி லாதா னாயினு மாயை தந்த
புரஞ்செறி பவனாய் நின்று புகலரும் பவங்க டோறுந்
திரிந்திடு மென்று கூறுஞ் சிவனரு ளாக மங்கள். 5
மெய்யுட னிந்தி யங்கள் வேறுசெய் வழியி னாலே
பொய்யறு மகண்டா நந்த பூரண பிரம ரூபா
லையம தறவே யான்ம சொரூபநன் கறிதல் செய்யச்
செய்யுமெந் நாளந் நாளான் மாவினைச் சேர்த லென்பார். 6
உடம்பறு மான்மா விற்கோ ருடலிலை யியல்பா லேனு
மடந்தரு மவித்தை கன்ம மருவலா லவன்றா னிங்குத்
தொடர்ந்துள நுகர்விற் காகத் தோன்றுவன் றேகி யாயென்
றொடுங்கிய புலவ ழக்க முடையவ ருரைப்ப ரன்றே. 7
தேவல னியக்கர் நற்கந் திருவரோ டரக்கர் மக்கண்
மாவல னிற்ப வற்றின் வடிவலன் வயங்கு மான்மா
யாவன்மற் றென்னி னவ்வவ் வுடம்புறு மிசைவி னாலே
மேவுவ னவற்றா னாம மென்றறி விளக்க மிக்கோய். 8
பற்பல கருமந் தன்னாற் பற்பல யோனி யெய்திப்
பற்பல மதிபொ ருந்திப் பற்பல நெறியி னெய்தி
யற்பமென் றறிவு டன்சிற் றிறைமையு மடைந்த சீவன்
சிற்பர னாட லுக்கோ ரிடமெனச் செறியு மன்றே. 9
தன்னுறு வினையி னாலச் சம்புவா லியக்கப் பட்டு
வெந்நர கொடுது றக்க மேவிய கரும சேட
மன்னுற வனைவ யிற்றில் வந்துதித் திறந்து தோன்றி
யின்னண முழலுஞ் சீவ னிரும்பவத் தமைதி யின்றி. 10
அருந்துயர்க் கிடம தாயஞ் ஞானகற் பிதமே யாகிப்
பொருந்திநின் றுள்ள சீவத் துவமுடன் போகு மாசான்
றிருந்தருண் மொழியான் ஞான சத்தியுந் திகழு மென்பர்
பரந்துள கலைகண் முற்றும் பழுதறக் கற்ற மேலோர். 11
- சீவான்மத்தலம் முற்றிற்று - * * *
எழுபத்துமூன்றாவது
(73) அந்தரான்மத்தலம்
[அதாவது - ஜீவாத்மா தேகத்திலிருப்பினும் தோகாபிமான மில்லாமல் ஸ்ரீசத்குரூபதேசத்தின் ஸ்வஸ்வரூப ஜ்ஞானத்தினால் ஜீவபாவத்தைப் போக்கிக்கொண்ட ஆத்மாவே அந்தரான்மா என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தேசிக னருளி னாலே சீவபா வந்தா னென்று
நாசம தடையு மன்று நசித்திடப் பட்ட வற்குப்
பாசமி லந்த ரான்ம பாவம்வந் துறுமென் றோர்வாய்
மாசறு தவத்தின் மிக்க மலயவெற் பமர்ந்த மேலோய். 1
அறைந்தவச் சீவன் மெய்யோ டடுக்கினு முடல பந்தந்
துறந்தொரு பரமான் மாவை யுள்கலாற் றுளங்கு சீவ
னிறைந்துள பரம னாப்ப ணிற்றலா லுபயத் தன்மை
பெறுந்திற மதனா லெய்தும் பிறங்குமந் தரான்ம நாமம். 2
முற்றுறு மனிதத் தன்மை முதலவாங் காரச் சார்வான்
மற்றவை யியல்பன் றென்று மதிப்பவ னந்த ரான்மாச்
சொற்றிடு மவன்பு னற்கட் டோன்றுபா சிலையுந் துன்னத்
தெற்றுறு குடம்பைப் புள்ளும் போலவே மெய்யிற் றீர்ந்தான். 3
மதிதனை யடையா மேக மறைத்திடப் படல்போ லான்மாப்
பொதியுட லகல நின்று புணர்த்திடப் படுவன் மெய்யா
மிதனிடை யுறினு மாழ்கி யானென தென்ப தில்லோன்
பதியெனுஞ் சிவனை யோகப் பயிற்சியாற் காண்ப னென்றும். 4
போத்துரு வாம வற்கும் போக்கிய மாம வற்றைப்
பேர்த்திடு தலினான் மிக்க பிரேரக னருளி னாலே
போத்துருப் பாவ நீங்கிப் பொலிகுவ னெங்கு நின்று
காத்தருள் பரமற் கண்டு களிக்குவ னந்த ரான்மா. 5
- அந்தரான்மத்தலம் முற்றிற்று - * * *
எழுபத்துநான்காவது
(74) பரமான்மத்தலம்
[அதாவது - அந்தராத்மா, தான் சிவாத்வைத ஜ்ஞானசக்தியினால் சம்சாரமூலமான அஜ்ஞானத்தைப் போக்கிக் கொள்ளவும் பரமான்மாவினிடமுள்ள சாமரஸ்யம் ப்ராப்தமாதலால் பரமான்மா என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பரமமெய்ஞ் ஞானந் தன்னாற் பவநெறிக் கேது வாகு
மிருண்மல மகலு மாற்றாற் பரமனோ டிருக்கும் பற்றா
லுரமுறு பரமான் மாவென் றுரைத்திடப் படுவ னன்னோன்
றிரைமலி கடல்கு டித்துத் தேக்கெறி முனிவ ரேறே. 1
தன்னொளி யானிறைந்து தான்மிளிர் சிவனே யிங்ங
னுன்னுமான் மாக்கட் கெல்லா முயர்தலாற் பரமான் மாவா
மன்னுமா மாயை யென்னும் வாரியு ளண்ட மொக்குள்
சின்னமா யெழுந்த டங்கச் செய்பவன் பரமான் மாவாம். 2
யாதினி லொளிக ளெல்லா மெரியினிற் பொறிபோற் றோன்றி
மாய்தரும் பரம னுக்கவ் வடிவமாந் தத்து வங்கள்
யாதினிற் கடற்ற ரங்க மென்னவந் தெழுந்தொ டுங்கு
மோதுமவ் வடிவ மாகு மொருபர மான்மா விற்கே. 3
உலகினுக் குயிரு மாகி யொழிந்திடு மலத்த னாகி
யிலகுமப் பரமன் றன்னை யிசைப்பர்தத் துவத்தின் மேலோ
யலரிதன் கதிரா லெங்கு மவிர்தல்போற் பரமன் றானும்
விலகிலச் சத்தி தன்னால் வியாபித்து விளங்கு மன்றே. 4
எங்கணு மொளிர்வோ னேனு மகிலமு மிறந்து நின்ற
பொங்கறி வுருவ மாகப் புகன்றிடு பரமன் சீவர்
தங்களுக் கொருதன் சோதி வடிவமாய்ச் சாரு மென்பர்
மங்கலப் பொருளை யீன்ற மலயவெற் பமர்ந்த மேலோய். 5
- பரமான்மத்தலம் முற்றிற்று - * * *
எழுபத்தைந்தாவது
(75) நிர்த்தேகாகமத்தலம்
[அதாவது - சிவயோகி பரமாத்ம பாவனையைச் செய்து, அகங்கார மமகாரங்களைத் துறந்து, ஸ்தூலாதி சரீர தர்மங்களை த்யாகம் செய்திருப்பதே நிர்த்தேகாகமம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஓவுறு மகந்தை யோனா யுயர்தரு பரமான் மாவைப்
பாவனை புரிவோ னாகிப் பழுதுடற் றரும நீங்கி
மேவுறு தேகிக் கிங்கு விளம்புவ ரறிவ றிந்த
நாவலர் விளங்கு நிர்த்தே காகம நயந்து மாதோ. 1
இரும்பவ மூல மாகு மியானென தென்ப தின்றி
யரும்பர நானென் றன்மை யடைந்தவற் குடல முண்டோ
வருஞ்சகங் கடந்து ஞான வாரிதி தன்னின் மூழ்கு
முரம்பெறு யோகி யெவ்வா றுடம்பினைச் சிந்தை செய்வான். 2
தன்னையோ ரெல்லை யில்லாத் தனிச்சிதம் பரமாய்க் கொள்வோன்
மன்னுமா யினுமு டம்பில் வடிவுறு விகார மொன்றான்
றன்னைவே றிலாமற் சச்சிதா நந்த பரமா காச
மென்னவே யுணர்ந்த யோகி யாண்டமோ கத்திற் சேர்வான். 3
ஒருபொரு ளிடத்திற் பேத முபாதியாற் றோன்று மென்னத்
தெருளுற வுணர்வோற் குண்டோ தேகத்தி னளவா யுற்றல்
விரிவுறு பேத புத்தி வினைப்பரிச் சேத வேது
வரிதெனு மபேத புத்தி யதுதனக் கேது வாமோ. 4
நிரம்பிய சிவோக மென்னு நினைவுவந் தியார்க ணுண்டாம்
வரம்பெறு மவனுக் கெங்கு மருவுறா துடல பந்த
மிருங்கடன் முகட்டெ ழுந்த வமுதினு மினிமை பெற்ற
வருந்தமிழ் பயந்த செவ்வா யகத்தியப் பெயரி னானே. 5
- நிர்த்தேகாகமத்தலம் முற்றிற்று - * * *
எழுபத்தாறாவது
(76) நிர்ப்பாவாகமத்தலம்
[அதாவது - நிர்த்தேகாகம சம்பந்நனான சிவயோகிக்கு இந்த்ரிய விகாரமில்லாத மநோவ்யாபாரம் சித்திப்பதே நிர்ப்பாவாகமம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அப்பெருஞ் சொரூப முள்ள வவற்குமா றாகு மென்னச்
செப்புறு பாவ பேதஞ் சிதைந்திட விகார நீங்கு
மெய்ப்புறு பாவ நிர்ப்பா வாகம மெனவி ளம்புங்
கைப்பொலி மழுவொன் றுள்ள கடவுளா கமங்க ளன்றே. 1
பிரமநா னெனுமி ரண்டு பெரும்பொருள் பாவத் தெய்தும்
பரமதி லொன்றா தற்கப் பாவமின் றென்ப துண்மை
புரையறு சிதம்ப ரத்தி கேமாய்ப் பொருந்தி னோற்கு
வரையறு சாதி மேனி யலமரன் மருவு றாவால். 2
உரைமன மிறந்து நின்ற வொருபெருஞ் சிதாகா சத்தி
லிருமையின் றிலயித் தொன்றா னேதினா லெதைப்பா விப்பன்
றிரையறு ஞான வாரி சேர்ந்தடங் கினற்குச் சிந்தை
மருவுறு பாவஞ் சங்கற் பனையிவை மருவு மோதான். 3
நல்லிட மல்லி டங்க ளெனாதுசெஞ் ஞாயிற் றின்பே
ரெல்லொளி விழல்போல் யோகி யெங்ஙணு மொப்பக் காண்பன்
சொல்லரு மறிவா நந்த சுகிபசி தாகத் தின்கட்
செல்லுதல் செய்யான் மூப்பு மரணத்திற் சிறிது மஞ்சான். 4
- நிர்ப்பாவாகமத்தலம் முற்றிற்று - * * *
எழுபத்தேழாவது
(77) நட்டாகமத்தலம்
[அதாவது - த்வைதசூந்யமான மகா சிவஜ்ஞானத்தில் ஜ்ஞாத்ரு ஜ்ஞான ஜ்ஞேயங்களென்னும் த்ரிபுடிமயமான த்வைத ப்ரபஞ்சம் சூந்யமாகவும், நிர்ப்பாவாகம சம்பந்நனான சிவயோகிக்கு பேதஜ்ஞானம் நஷ்டமாவதே நட்டாகமம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பேதமி லாத மாபோ தத்தினிற் பிரிந்து நின்ற
ஞாதுரு வாதி யிங்கு நண்ணலான் ஞானத் தின்கட்
போதுறு நட்ட பாவம் புகல்வர்நட் டாக மந்தான்
றீதறு கலைகண் முற்றுந் திருந்துறக் கற்ற மேலோர். 1
ஏகமா நினைவு தோன்று மிதயத்திற் றனைக்கண் டோன்வே
றாகுஞா துருத்து வத்தை யடைவதெவ் வாறு சொல்லா
யோகையார் கருத்தா வல்லே னுணர்பவ னல்லே னல்லேன்
றேகநா னிமல னென்னுஞ் சிந்தையாற் கொளிரு ஞானம். 2
தணந்திடும் பேத முள்ள சாந்தனாய்த் தன்னிற் றானே
யணைந்தடங் குறுநல் யோகிக் கயலொரு ஞேய முண்டோ
விணங்கிடிற் றன்சொ ரூப ஞானத்தி லேக மாக
வுணர்ந்திடு பொருள்சி றந்த வுணர்வுணர் பவனெவ் வாறாம். 3
உண்டெனு மொருமா சித்தே யுலகமாய் விளங்கி நிற்குங்
கண்டிடு மறிவை யன்றிக் காண்பொருள் வேறொன் றில்லை
விண்டுறு பேத புத்தி மேவினோற் கென்று கூறும்
பண்டரு மறைக ளெல்லாம் பராரைவெற் பமர்ந்த மேலோய். 4
- நட்டாகமத்தலம் முற்றிற்று - * * *
எழுபத்தெட்டாவது
(78) ஆதிப்பிரசாதித்தலம்
[அதாவது - பூர்வோக்த நஷ்டாகம சம்பந்நனான சிவயோகி, சிவன் தனது ப்ரபஞ்சத்திற்கு ஆதாரபூதனாகவும், அதற்கு நியாமகனாகவும், ஸ்ருஷ்ட்யாதி பஞ்சக்ருத்யங்களுக்கு மூலகாரண னாகவும், அனைத்திற்கும் ஆதிபுருஷனாகவு மிருப்பனென்றறிந்து அவனுடைய அநுக்ரகத்தை யடைவதால் ஆதிப்பிரசாதி என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அனைத்தினு மதிட்டித் துள்ள சம்புவே யாதி யாமத்
தனிப்பரன் பிரசா தத்தால் விகாரமில் பதத்தைச் சார்வுற்
றினைப்பறு மவனை யாதிப் பிரசாதி யென்று கூறும்
பனிக்கதிர் தவழும் வேணிப் பராபர னருளு நூலே. 1
புனிதனாய்ப் பலபி றப்பிற் பொருசக வகந்தை யுள்ளோற்
கினிதுறு மாதி தேவ னிரும்பிர சாத மென்ப
வனைசிவப் பிரசா தத்தான் மலிசிவ மாயி னோற்குக்
கனைசகங் காண்ப தாயுங் காணுறப் படாது கண்டாய். 2
பிறப்பெறி மூல மாகும் பிரான்பிர சாதந் தன்னா
லறப்பெறு மோக முத்தி யடைகுவன் பிறவி வெந்நோய்
சிறப்பரன் பிரசா தத்தா லன்றியே தீர்ந்தி டாதால்
வெறுப்பிரு ளிரவி யன்றி வீயுமோ வுலகந் தன்னில். 3
அகிலமு மளிக்கு மீச னருளினா லுயிர்கட் கெல்லாம்
புகலுறு பாச நீக்கம் புரிவனிப் புரித லின்கண்
முகிழிள மதிய ணிந்த முதல்வனுக் கேது வின்றா
லிகலுறு புலன டங்க ஞானவா ளெடுத்த வேலோய். 4
- ஆதிப்பிரசாதித்தலம் முற்றிற்று - * * *
எழுபத்தொன்பதாவது
(79) அந்தியப்பிரசாதித்தலம்
[அதாவது - சகல பதார்த்தங்களுக்கும் லயஸ்த்தானனான பரசிவனே அனைத்திற்கும் அந்த்யனாயிருப்பன் என்றறிந்து, அந்த சர்வாந்த்யனான சிவனுடைய அநுக்ரகத்தை யடைபவனே அந்தியப்பிரசாதி என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆகிய பதார்த்த மெல்லா மடங்குறு மிடமாய் நிற்கு
மேகனந் தியனா மென்ப ரிவனநு பவமே யிங்குச்
சீர்கெழு பிரசா தப்பேர் சேர்ந்திடு மிதனைப் பெற்ற
யோகியென் பவன் றானேயந் தியப்பிர சாதி யோர்வாய். 1
சுரர்நரர் மிருக மாதி தோற்றுறு மாயை மாயிற்
பரனிடை யதுப யந்த பதார்த்தமு மாயு மென்ப
ருரமுறு சத்தாநந்த வொருபொரு ளுண்மை பெற்றா
னிரைதரு பதார்த்த ஞானம் யாதுயர் ஞேயம் யாதோ. 2
கனவிடைக் கண்ட தெல்லாங் கழிந்திடும் விழிப்ப மாயை
தனில்வரு வனமெய்ஞ் சார்ந்திட மாய்ந்து போகு
முனலருஞ் சுழுத்தி யோனுக் கொன்றுமங் கெதிரா வாபோ
லினலறு சீவன் முத்தற் கெதிர்ந்திடா தொன்று மன்றே. 3
அந்தரம் விகார மின்றி யகண்டித மாகு மாபோ
லுந்துறு சீவன் முத்த னுருவமும் விளங்கு மென்பர்
சிந்தனை செய்து காண்கை செய்கையம் முத்தற் கில்லை
நிந்தையில் சுகநி றைந்த நிச்சல னாகி மேவும். 4
பரசிவாத் துவித ஞான பலத்தினா னழுவப் பட்ட
விரிதரு பொருளு ளானாய் மெய்யுணர் வினையே காண்போற்
கொருவனா லாவ தாக வுறுபொரு ளில்லை யென்ப
ரரவுலாம் வேணி முக்க ணமலனா கமங்கள் வல்லோர். 5
- அந்தியப்பிரசாதித்தலம் முற்றிற்று - * * *
எண்பதாவது
(80) சேவியப்பிரசாதித்தலம்
[அதாவது - அனைத்திற்கும் சிவனே சேவ்யன் (குரவன்) என்றறிந்து அவனுடைய அநுக்ரகத்தை யடைபவனே சேவியப்பிரசாதி என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தேசிகன் சிவனே யந்தத் தேசிகன் சேவி யன்றா
னாசிலிங் கவன்ற னாதோ ரநுபவ மெவற்று மேலாய்ப்
பேசுறும் பிரசா தப்பேர் பெற்றுள ததனைப் பெற்றோன்
வீசுறும் பவமு றுஞ்சே வியப்பிர சாதி யாகும். 1
குரவனே பரம னந்தப் பரமனே குரவ னென்ப
விரவுமிவ் வேகமாகு மநுபவ மெய்ம்மை யென்று
முரைமன மிறந்த தன்பே ருருவவின் பங்கண் டுற்றோன்
மருவுறு மயலொன் றின்கண் மனம்விழைந் திடுமோ சொல்வாய். 2
ஞானவா ரமுதந் தன்னா னன்றுற நிரம்பி னோனுக்
கேனையூண் பொருளா லென்கொ லெய்துதல் சத்தா மீசன்
ஞானமே கொண்டு பேரா னந்தநின் றிலக்கு மென்னும்
பானல்வா ளரிநெ டுங்கட் பாவைபங் குடையோ னூலே. 3
சத்துட னறிவா னந்தத் தகுமிலக் கணத்த தாகு
முத்தியே யுயர்தி ருத்தி யென்குவர் முதனூல் கண்டோர்
நித்திய நிரம்பல் பெற்ற நிகரிலம் முத்த னுக்குத்
துய்த்திடு பொருள்க டம்மாற் றோன்றுறு பயனென் சொல்வாய். 4
சிவம்பெறு மேக ஞானஞ் சேர்ந்துடன் மயக்கி லாற்குப்
பவம்பெறு கரும மில்லைப் பகர்தரிற் புறவ கத்துந்
தவஞ்செபந் தியானம் யோகஞ் சார்ந்திடா வவற்றின் மேலா
யுவந்துள ஞானந் தன்னி லுற்றிடு மவனுக் குள்ளம். 5
- சேவியப்பிரசாதித்தலம் முற்றிற்று - * * *
இவ்விதமாய் நிர்த்தேகாகமம், நிர்ப்பாவாகமம், நஷ்டாகமம், ஆதிப்ரசாதி, அந்த்யப்ரசாதி, சேவ்யப்ரசாதி என்னும் ஆறு ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் சிவைக்யஜ்ஞான மடைந்து சித்தவ்ருத்தியின்றி ஜ்ஞாநியானவனும் அங்கஸ்தலத்து நான்காமவனுமான ப்ராண லிங்கியே ஜங்கமலிங்கப்ராணி என்று அறியப்பட்டான்.
4 - வது ஜங்கமலிங்கத்தலம் முற்றும் - - - - - -
5 - வது பிரசாதலிங்கத் தலம்
[அதாவது - சாந்த்யாதீதகலா சமேதமாய்ப் பராசக்தியுடன் கூடி தசிவசாதாக்யத்தைப் பொருந்தி ஜ்ஞானைக்ய கம்யமாயிருத்தல் என்பது.]
( சரணனுக்குச் சேர்ந்த உட்பிரிவுகள் )
கலிவிருத்தம்
உரைத்தனை விளங்குற வுயிரி லிங்கித
னிரைத்தல மனைத்தையு நீயெ னக்கினி
யருட்சர ணத்தல மடைந்த வற்றையுங்
கருத்துற வருளுதி கணங்கள் வேந்தனே. 1
அத்தல மடைவுற வடிப்பு னற்பினிட்
பத்திவிண் ணொளியின்மும் மூன்று பாலவாய்
வைத்துள பன்னிரு தலமு மாசற *
மெய்த்தவ வறைகுதும் விழைந்து னக்கரோ. 2
( * ப்ரசாதலிங்க ஷட்பக்தர்கள் :- ப்ரசாதலிங்கமோஹி, ப்ரசாத லிங்கபக்தன், ப்ரசாதலிங்கபூஜகன், ப்ரசாதலிங்கவீரன், ப்ரசாதலிங்கப்ரசாதி, ப்ரசாதலிங்கப்ராணி என ஆறு வகைப்படுவார்கள். இவர்களில், அந்யருசியை யறியாதவனே ப்ரசாதலிங்கமோஹி, பூர்வாகாரங்களை விட்டவனே ப்ரசாதலிங்கபக்தன், அந்யருடன் ஸ்நேகம் சம்பாஷணை தானம் ப்ரதிக்ரகாதிகளில்லாதவனே ப்ரசாதலிங்கபூஜகன், அந்ய த்ரவ்யங்களைக் கையாற்றொடாதவனே ப்ரசாதலிங்கவீரன், ஜீவஹிம்சைகள் எவ்விடத்திலும் செய்யாமலும் செய்விக்காமலு மிருப்பவனே ப்ரசாதலிங்கப்ரசாதி, ஆத்மநிக்ரஹம் செய்தவனே ப்ரசாதலிங்கப்ராணி.
த்ரிவித ப்ரசாதலிங்கம் :- சுத்தம் சித்தம் ப்ரசித்தம் என மூவகைப்படும். இவைகளில், குரு புஜித்த சேஷமே சுத்தமாம், லிங்கம் புஜித்த சேஷமே சித்தமாம், ஜங்கமம் புஜித்த சேஷமே ப்ரசித்தமாம். இதுவன்றி, மற்றொருவிதமாய்ப் பொருள் கூறுதலுமுண்டு - அதாவது, பூர்வத்திலிருந்த சகல குணங்களையும் த்யாகம் செய்து காமாதிகளைவிட்டு லிங்கத்தில் பற்றுறுவதே சுத்தமாம், சிவஜ்ஞானோதயமாவதே சித்தமாம், திவோஹம் பாவனையில் நிலைத்திருப்பதே ப்ரசித்தமாம்.)
எண்பத்தொன்றாவது
(81) தீக்ஷாபாதோதகஸ்த்தலம்
[அதாவது - சிவதீக்ஷையினால் த்வைத ஜ்ஞானம் நஷ்டமாகி, குரு சிஷ்யர்களுக்கு அபேத ஜ்ஞானம் பிறந்து, அதனுடன் சாஸ்வதமான ஆனந்தரசம் ஐக்யமாவதே தீக்ஷாபாதோதகம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆரிய னோடு சீட னானந்தத் தயிக்க மாகச்
சீரிய தீட்சை யாலே தீர்ந்துள பேத முள்ள
பேரியன் ஞானந் தன்னாற் பெருங்கலை யுணர்ந்த மேலோ
ரேரியன் முனிவ தீட்சா பதோதக மியம்பு வாரால். 1
பாதமென் கிளவி யாலே பகர்தரப் படுவ னாசான்
மேதைகொ ளுதகச் சொல்லால் விளம்புறப் படுவன் சீடன்
றீதறு தீட்சை தன்னாற் செப்புறு மிவர யிக்க
மேதமி லுலகிற் றீட்சா பதோதக மென்ன நிற்கும். 2
பரித்திடும் பரமா னந்தம் பாதமென் கிளவி ஞான
முரைத்திடு முதகந் தீட்சை யுரைத்திடு மிவற்ற யிக்கந்
தெரித்தவிஞ் ஞானா னந்தஞ் சேர்ந்துதான் பேத மின்றி
வரைத்தொரு பொருளுங் கண்ணாற் காண்குறான் மான யோகி. 3
ஆரிய னருளி னாலே ஞானவா ரமுத முண்டு
சீரிய பரம யோகி தீர்ந்துவெம் பிறவி நோய்தா
னோரிய லாடல் செய்தே யொழுகுமென் றறிந்து கொண்ணீ
கூரிய விலைவேற் செங்கைக் குமரனாற் றருமங் கண்டோய். 4
- தீக்ஷாபாதோதகஸ்த்தலம் முற்றிற்று -
எண்பத்திரண்டாவது
(82) சிக்ஷாபாதோதகஸ்த்தலம்
[அதாவது - தீக்ஷாபாதோதக சம்பந்நனான சிவயோகி சிக்ஷாபாதோதகத்தையடைய வேண்டும், அதனால் பாதோதக சப்தவாச்யரான குரு சிஷ்யர்களின் அபேத ஜ்ஞானம் தீக்ஷாபாதோதக சம்பந்நனான சிவயோகியை ப்ரேரேபிக்கும், அதனால் அந்த சிக்ஷா ஜ்ஞானங்களின் சாமரஸ்யமுண்டாம், அதனாலாகிய சுகாநுபவத்தைச் செய்வதே சிக்ஷாபாதோதகம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
யாதொரு சிட்சை யிங்குக் குருசீட மயமா ஞானந்
தீதறு மியோகிக் காகச் செய்திடு மவையி ரண்டும்
பேதம தறக்க லந்த பெருமையை யுரைப்பர் நல்லோர்
மாதவ முனிவ சிட்சா பதோதக மென்ன மாதோ. 1
மதியெனு மந்த ரத்தால் வாய்த்தநூற் கடலை யாசான்
விதிமுறை கடையத் தோன்றும் விளங்கறி வமுத முண்ப
னெதிரறு மியோகி முத்தி யிரவினிற் பரமா காசத்
துதிதரு ஞானத் திங்க ளின்பநல் லொளியே காண்பன். 2
வரைந்துள தேச கால மருவறும் பரமா னந்தம்
பொருந்தினோன் காண்ப கேட்ப வறிவவாம் பொருளிங் கில்லை
யொருங்கிய பரமா னந்த யோகிபால் விடய வேட்கை
வருங்கொலொண் கங்கை பெற்றோன் மதிப்பனோ கூவ நீரை. 3
அலையில்பே ரின்ப வாரி யமிழ்ந்துவன் பரம யோகி
யெலையிலவ் வாரி திக்கோ ரெல்லையு முண்டோ சொல்வாய்
கலைமலி குரவன் மிக்க கருணைவா னிலவு திப்ப
மலர்தரு நெஞ்ச நீல மருவினோன் மயங்கு றானால். 4
- சிக்ஷாபாதோதகஸ்த்தலம் முற்றிற்று - * * *
எண்பத்துமூன்றாவது
(83) ஞானபாதோதகத்தலம்
[அதாவது - சிக்ஷாபாதோதக சம்பந்நனான சிவயோகி குரூபதிஷ்ட ஜ்ஞானத்தினால் ஜ்ஞானானந்தத்தை யடைவதே ஞானபாதோதகம் என்பது.]
கலிவிருத்தம்
நாடுமா னந்த ஞானங்க ளேயிவண்
டேடரு ஞானதே சிகன்மற் றன்னவை
கூடிய சமரசங் குலவு பாதநீர்
சீடனென் றுரைத்திடச் சிறந்து ளோர்க்கரோ. 1
நிறைவொடு நிமலமாய் நின்ற வித்தையா
மறையர வொடுபுயன் மாறி யின்பமா
மறைகடல் பொலியவா னந்தச் சோதியாற்
கறையறு ஞானவெண் கதிரி லங்குமால். 2
அறிவெனு மதிவர வவித்தை யாகிய
செறியிரு ளொழிதரச் சிதானந் தங்களே
குறியெனு மொருபெருங் கோலந் தோன்றுமா
லுறவொடு பகைதவிர் யோகி கட்கரோ. 3
மாயைவல் லிரவற வந்து ஞானமாஞ்
சேயொளி யிரவிதான் றிகழுங் காலையிற்
போயுற வுலகியல் வழக்கம் போற்றுறான்
றூயநல் யோகிதான் றுயிலு மென்பவே. 4
அகன்றிட வனாதியா மவித்தை நித்திய
சுகந்திகழ் பரமமாஞ் சூரி யன்றனிற்
புகுந்துறு மனமுடைப் புனித யோகிதான்
சகந்தரு கற்பனை தன்னிற் றோய்வுறான். 5
மெய்ப்பர சுகமொடு விளங்கு சோதியர்க்
கொப்பல ரயனரி யுரத்தி ரன்கதி
ரப்படி தமையுணர்ந் தவர்க்கத் தேவர்தாந்
துய்ப்புறு சுகஞ்சிறு துளியொன் றாகுமால். 6
மானுடர் சிறுசுக மருவு மிந்திய
ஞானம தடைகுவர் நச்சி யிந்திய
மானம தறுபரா நந்த வாழ்வினைத்
தானெவர் விரும்புவார் சார்தற் கெண்ணியே. 7
- ஞானபாதோதகத்தலம் முற்றிற்று - * * *
எண்பத்துநான்காவது
(84) கிரியாநிட்பத்தித்தலம்
[அதாவது - ஜ்ஞானபாதோதக சம்பந்நனான சிவயோகி கிரியையை யாசரிப்பதாயினும் ரஜ்ஜுவினிடத்தில் சர்ப்ப ப்ராந்தி யுண்டாவது போல க்ரியா ஜந்யமான பலன் அவனைப்பற்றா திருப்பதால் கிரியாநிட்பத்திமான் என்பது.]
கலிவிருத்தம்
உன்னரும் பரமநல் யோகி தன்கணே
மன்னுறுங் கிரியையோர் வன்க யிற்றினிற்
பன்னகம் போன்றுகற் பிக்கப் பட்டதா
லன்னவன் றான்கிரி யாநிட் பத்திமான். 1
சிறப்புறு ஞானிசெய் செயல்கள் யாவுமிப்
பிறப்புறு காரண மல்ல பேரழல்
வறுப்புறு விதையினை மண்ணி னொண்முளைக்
குறப்பெறு மேதுவென் றுரைக்க லாகுமோ. 2
தீதறு ஞானிதன் செயல்க ளாலவற்
கேதுள தெய்துவ திருள்வி ழுங்குறு
சோதிகொண் மதிக்கெதிர் தோன்றும் விம்பமார்
வாதைய துளதுகொன் மதித்து நாடினே. 3
திங்களுக் கிரிதருஞ் செயல்வி சும்பினா
லிங்குரைத் திடுதல்போ லிசைந்த வாக்கையான்
மங்கலத் தொளிகொளான் ம |