|
Home > Scriptures & Stotras > Tamil scriptures and literature > kandha purANam
kandha purANam of kachchiyappa chivAchAriyAr
(in tamil script, unicode UTF-8 format)
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
4. யுத்த காண்டம்
***
1. ஏ ம கூ ட ப் ப ட ல ம்
நாரண னென்னுந் தேவும் நான்முகத் தவனும் முக்கட்
பூரணன் தானு மாகிப் புவிபடைத் தளித்து மாற்றி
ஆரண முடிவுந் தேறா அநாதியாய் உயி£¢கட் கெல்லாம்
காரண னாய மேலோன் கழலிணை கருத்துள் வைப்பாம். 1
திண்ணிய அவுணர் தம்மைச் செற்றிட இன்னே செவ்வேற்
பண்ணவன் ஏகும் எல்லா அமரரும் பாங்கிற் செல்வர்
துண்ணென யானும் ஏகா தொழிவது சூழ்வன் றென்னா
எண்ணிவந் திடுவான் போல இரவிவந் துதயஞ் செய்தான். 2
இரவிவந் துதய வெற்பின் எய்திய காலை தன்னின்
அரியணை மிசையே வைகும் அறுமுகங் கொண்ட அண்ணல்
பிரமன்மால் மகவான் தேவர் முனிவரர் பிறருங் கேட்ப
வரமிகு சிறப்பின் வீர வாகுவை நோக்கிச் சொல்வான். 3
பாவமே பயிலுஞ் சூர பன்மனும் அவுண ரானோர்
ஏவரும் முடிவா ராக இமையவர் இடும்பை நீங்க
மாவியல் கின்ற வீர மகேந்திர புரத்துக் கின்னே
போவது புரிது நந்தேர் பொள்ளெனக் கொணர்தி என்றான். 4
வள்ளல்மற் றிதனைச் செப்ப மாலயன் மகவா னாதி
உள்ளபண் ணவர்கள் கேளா உவகையங் கடலின் மூழ்கித்
தௌ¢ளிதின் எமது துன்பந் தீர்ந்தது தீர்ந்த தென்னாத்
துள்ளினர் ஆடிப் பாடி அவனடி சூட லுற்றார். 5
ஆயது காலை தன்னின் அரும்பெருங் கயிலை போற்றும்
நாயக நந்தி அண்ணல் நற்கணத் தலைமை பூண்டோன்
சேயதோர் மனவே கப்பொற் றேரொடு வலவன் தன்னைக்
கூயினன் கொண்டு வல்லே குமரவேள் முன்னர் உய்த்தான். 6
முன்னுற மருத்தன் தூண்டு முரண்டகு தடந்தேர் நண்ண
அன்தை அருளின் நோக்கி அறுமுகம் படைத்த அண்ணல்
பன்னெடுஞ் சீயந் தாங்கும் பைம்பொனின் தவிசு தன்னின்
மன்னினன் இருத்தல் நீங்கி எழுந்தனன் மறைகள் போற்ற. 7
மாறில்பொன் சுடரும் மேரு வரைமிசை இருமூ வெய்யோர்
வேறிலா தொருபாற் பட்டு விளங்கிவந் திவரு மாபோல்
ஆறுமா முகத்தெம் மையன் அனையதொல் இரத மீக்கண்
ஏறினான் ஏறிச் சூழ்வோர்க் கினையதொன் றியம்பு கின்றான். 8
வா£¢திரை அளக்கர் நாப்பண் வரம்பிலா அளவைத் தாகிச்
சீர்திகழ் மகேந்தி ரப்பேர்த் திருநகர் முன்னர் ஏகிச்
சூர்தனை அடுவான் போதுந் துண்ணென நீவிர் நுந்தம்
ஊர்திகள் தம்மில் மேவி ஊர்ந்திவண் வருதி ரென்றான். 9
இப்படி முகமா றுள்ள எம்பிரான் இசைத்த லோடும்
அப்பணி இசையா வேதன் அன்னத்தும் ஆழி மேலோன்
ஒப்பரும் உவண மீதும் உம்பர்கோன் மான மீதுஞ்
செப்புறும் ஏனை விண்ணோர் தத்தமூர் தியினுஞ் சோ¢ந்தார். 10
அந்தமில் இலக்கத் தோரும் அவரலா எண்மர் தாமும்
மந்தரம் உறழும் வீர வாகுவாம் வன்மை யோனும்
எந்திர வயமான் தேரின் வீற்றுவீற் றேறி யார்க்குஞ்
சிந்தையி னானும் எட்டாத் தேவர்க டேவற் சூழ்ந்தார். 11
சுப்பிரன் மேக மாலி சுவேதசீ ரிடன்க பாலி
அப்பிர சித்துச் சித்தி ராங்கனே சுவால தாலு
ஒப்பில்வச் சிரனே வீமன் உக்கிரன் உக்கி ரேசன்
பிப்பிலன் நந்தி சேனன் பிரமசன் பிரம சேனன். 12
பதுமனே கராளன் தண்டன் பத்திரன் பரிக நேமி
உதவகன் புட்ப தந்தன் உருத்திரா காரன் வீரன்
மதிசயன் கேது மாலி வக்கிரன் பிரம கேசன்
அதிபதி கலிங்கன் கோரன் அச்சுதன் அசலன் சாந்தன். 13
சித்திர சேனன் பூரி சுசீலன்மா சயனே சிங்கன்
உத்தர மடங்கற் பேரோன் உபதிட்டன் சயனே ஈசன்
மத்தகன் மதங்கன் சண்டி மகாபலன் சுவேதன் நீல
பத்திரன் சுவாகு அண்டா பரணனே காக பாதன். 14
பிங்கலன் சமானன் மாயன் பிறங்கிய நிகும்பன் கும்பன்
சங்கபா லன்வி சாகன் சதநாவன் அயக்கி ரீவன்
அங்கையா யிரத்தன் செங்கண் அயுதத்தன் அனந்தன் வாமன்
மங்கல கேசன் சோமன் வச்சிர மாலி சண்டன். 15
அசமுகன் சரபன் குந்தன் ஆடகன் கவந்தன் மேகன்
விசயன்வித் துருமன் தண்டி வியாக்கிரன் கால பாசன்
தசமுகன் குமுதன் பானு தனஞ்சயன் இடப ரூபன்
சுசிமுகன் அனல கேசன் சுபத்திரன் கேது மோகன். 16
மத்தனுன் மத்தன் மனோபவன் வாயு வேகன்
பத்துநூ றடிகள் பெற்றோன் பானுகம் பன்ப தங்கன்
சுத்தனே அனிகன் சீதன் சுனாதனே சுமாலி மாலி
அத்திரி அவுணர் கூற்றன் அரிகேசன் சுவால கேசன். 17
இங்கிவர் பூத வௌ¢ளத் திறையவர் ஒருநூற் றெண்மர்
பொங்குவெஞ் சினத்தர் எல்லாப் புவனமும் அடவென் றாலும்
அங்கொரு நொடிப்பின் முன்னர் அடுபவர் ஆடல் மிக்கோர்
சங்கையில் வலியோர் யாருஞ் சண்முகத் தவனைச் சூழ்ந்தார். 18
ஏயெனப் பகரும் முன்னம் இவ்வகை எவருஞ் செவ்வேற்
சேயினைச் சூழ்த லோடுஞ் செய்கைமற் றதனைக் காணூஉ
மாயிருட் பரவை ஞாலம் வரைக்குலம் பனிப்ப ஆர்த்திட்
டாயிரத் திரட்டி வௌ¢ளத் தனிகமும் எழுந்த அன்றே. 19
எழுந்தன அனிக வௌ¢ளம் ஈண்டிய எங்கும் விண்ணோர்
பொழிந்தனர் பூவின் மாரி பூதர்தந் தெழிப்பு விண்ணும்
ஒழிந்திடு திசையும் பாரும் உற்றன உலைந்த தாழி
அழிந்தன கருவி வானம் அண்டம்நெக் குடைந்த மாதோ. 20
கல்லென இரங்கு பேரி கரடிகை துடியே காளஞ்
சல்லரி திமிலை தக்கை தண்ணுமை படகங் கோடு
வல்லியல் உடுக்கை சங்கம் வான்குட முழவ மாதிப்
பல்லியம் அனந்த கோடி பாரிடம் இயம்பிச் சென்ற. 21
கள்ளலம் புற்ற தண்டார் கவினிய மொய்ம்பிற் பூத
வௌ¢ளமங் கேக லோடும் விரிந்தெழு பூழி மாலை
தள்ளருஞ் சுடர்கண் மாற்றி அகிலமுந் தானே யாகி
அள்ளலங் கடலின் பேழ்வாய் அடைத்தது திடரே யாக. 22
கலகல மிழற்றும் நோன்றாட் கழல்புனை பூத வௌ¢ளம்
வலவயின் எ·கம் ஏந்தும் வள்ளல்தாள் வழுக்கிச் சூழ்ந்து
செலவுறு கிரிகள் மானச் சென்றுதந் தலைவ ரோடும்
அலைபொரும் அளக்கர் வேலை அகன்கரை இறுத்த அம்மா. 23
மடங்கலை உறழும் மொய்ம்பின் மாபெரும் பூத வௌ¢ளந்
தடங்கழல் கலிப்பத் தாளிற் சலசல ஒலிப்ப மாறா
நெடுந்திரை அலமந் துள்ள நேமியங் கடலே ஆறா
நடந்தன பொறையாற் றாது சேடனும் நடுக்கம் உற்றான். 24
படிதவிர் பூத வௌ¢ளம் படா¢தலும் பரட்டின் காறாக்
கடலள வமைந்த தன்றே கனல்விழிச் சுறவு சின்னை
கெடலருந் திமிங்கி லாதி கீடம்போல் உலவா நின்ற
அடியுறை பரலே போன்ற அதற்படு கிரிகள் முற்றும். 25
தந்திரப் பூத வௌ¢ளந் தடங்கட லாற்றிற் சார
வெந்திறல் துணைவர் யாரும் விரிஞ்சனும் மாலும் மற்றை
இந்திரத் தலைவன் தானும் இமையவர் பலருஞ் சூழ
அந்தரத் தாற்றிற் சென்றான் அறுமுகன் அணித்திண் தேர்மேல். 26
மாறுபட் டவர்மேற் செல்லும் வயப்பெரும் பூதர் ஏக
ஆறுபட் டமரும் முந்நீர் அலமந்து தௌ¤வின் றாகிச்
சேறுபட் டிறைய தொன்று தேயந்திடு முன்னம் அ·தே
நீறுபட் டெழுந்து சென்றெவ் வுலகமும் நிமிர்ந்து சூழந்த. 27
இவ்வகை அயில்வேல் அண்ணல் இராயிரம் பூத வௌ¢ளங்
கவ்வையின் அமைந்து செல்லக் கனைகடல் வரைப்பின் ஏகி
எவ்வம தடைந்த தொல்லை இலங்கையங் குவடு நீங்கி
மைவரை புரைசூர் மேவு மகேந்திர புரமுன் போந்தான். 28
வேறு
போந்தகாலை அயலின்வந்து போற்றியங்கை கூப்பியே
நாந்தகஞ் சிலைகதை நலங்கொள் சங்குசக்கரம்
ஏந்தினோனும் நான்முகனும் இந்திரத் தலைவனும்
ஆய்ந்துநேடி இன்னதன்மை ஆர்வமோ டியம்பினார். 29
காண்டியீது சூரனூர் கடுங்கண்நீசர் செறிதலால்
ஆண்டுசேறல் முறையதன் றதற்கடுத்த எல்லையாம்
ஈண்டுபாச றைத்தலம் இயற்றுவித் திருந்தபின்
வேண்டுமாறு புரிதிஐய வினையநாடி என்னவே. 30
குன்றெறிந்த முருகன்அன்ன கூற்றுணர்ந்தி சைந்திடா
நன்றிதென் றருட்கண்வைத்து நாகர்கம்மி யன்தனை
மன்றஅன்பொ டேவிளித்து வல்லைஈண்டு பாசனை
ஒன்றுசெய்தி டென்னலும் உளஞ்சிறந்து புகலுவான். 31
தாரகற் கடந்தவேற் றடக்கைவீர ஈண்டியான்
ஓரிறைக்கு முன்னமாக ஓங்குபா சறைத்தலஞ்
சீரிதிற் படைக்குவன் தெரிந்துகாண்டி உனதுபேர்
ஆரருட் டிறத்தினென் றடித்தலம் பணிந்துபின். 32
மாடகூட மண்டபம் வளங்கொள்சோலை வாவிகள்
பீடுலாய கோபுரம் பிறங்குவீதி ஓர்திசை
கோடிகோடி ஆக்கி மற்றொர் கோநகர் இயற்றியே
நாடுமேம கூடமென்று நாமமொன்று நாட்டினான். 33
கருத்திலன்ன வன்செயுங் கவின்கொள்பாடி வீடுகண்
டருத்தியான் மகிழ்ச்சியெய்தி அருள்புரிந்து கந்தவேள்
திருத்தகுஞ் சனங்கள் போற்றி செய்யஆண்டு சென்றபின்
மருத்தன்உந்து நேரிழிந்து மந்திரத்தை நண்ணினான். 34
அந்தமற்ற பூதர்தம்மை ஆவணங்கள் நிறுவியே
முந்துகொற்ற வயவர்நான் முகத்தனாதி அவரொடும்
மந்திரத்துள் ஏகியே மகிழ்துவீற் றிருந்தனன்
இந்திரப்பெ ருமடங்கல் ஏறுதாங்கு தவிசின்மேல். 35
ஒன்பதோடி லக்கவீரர் ஓங்கலார் அறுவர்கள்
அன்புசெய்து போற்றிசெய்ய அறுமுகேசன் அமரர்கள்
முன்புசெய் பணித்திறம் முறைப்படப் புரிந்திட
இன்பினோடும் ஏமகூட வெழிலிருக்கை வைகினான். 36
ஆகத் திருவிருத்தம் - 36
- - -
2. வ ர வு கே ள் வி ப் ப ட ல ம்
ஏகநா யகனாம் ஐயன் இவ்விடை இருந்த எல்லை
நாகர்மேல் அளிவைத் துள்ள நாரதன் அவற்றை நாடி
மாகநீள் புரிசை சூழ்ந்த மகேந்திர புரத்திற் சென்று
போகமார் உலகின் மேலாம் புலவலன் கோயில் புக்கான். 1
புக்கனன் அவுணர் உய்ப்பப் பொருவிலா இகல்வெஞ் சூரன்
மிக்குயர் திருவி னோடும் வீற்றிருந் திடுதல் காணூஉ
இக்கென இனைய தீயோன் இறப்பவென் றுன்னி வாயால்
தக்கதோர் ஆசி கூறிச் சார்ந்தனன் தவத்தின் மேலோன். 2
அங்கைகள் மலர நின்றே ஆசிசெய் தானை நோக்கி
எங்குளை இங்கு வந்த தென்னைநீ யாரை யென்ன
மங்கையோர் பங்கன் மேவும் வடபெருங் கயிலை வாழ்வேன்
நுங்குலந் தலைமை யாக வைகலும் நோற்றல் செய்வேன். 3
கைதவம் புகலேன் வெய்ய காமமே முதல நீத்துச்
செய்தவம் பலவும் உள்ளேன் தேவருக் கிடுக்கண் செய்வேன்
மைதவிர் புகரி னோடும் மருவுநண் புடையேன் நின்பால்
எண்திஒன் றுரைக்க வந்தேன் நாரதன் எனும்பே ருள்ளேன். 4
சிந்துவான் மதிதோய் வேணிச் செல்வன்நின் அடுவ தாகக்
கந்தனாம் முருகன் தன்னைக் காமா¢கண் ணழலால் நல்க
வந்தமா மதலை தன்பால் ஐயஉன் பணிய தாற்றும்
இந்திரா தியர்கள் ஏகி இறைஞ்சியே ஏத்தி யுற்றார். 5
உற்றுளா£¢ தமக்கு நின்னால் உறுதுயர் குமரன் கேட்பச்
சொற்றலும் அஞ்சல் என்று தொல்சிவன் அருள்மேற் கொண்டு
கொற்றவெம் பூத வீரர் குழாத்தொடும் புவியின் ஏகி
மற்றுன திளவல் தன்னை வரையொடும் வேலாற் செற்றான். 6
ஆண்டது புரிந்த பின்னர் அறுமுகன் செந்தி மேவித
தூண்டினன் நினைக்கோ ரொற்றைத் துண்ணென அவனும் வந்து
மீண்டபின் புகுதி நாடி வேலையைக் கடநது தன்பால்
ஈண்டிய படையொ டன்னான் இந்நகா¢ வடபால் வந்தான். 7
ஆங்கனம் பாடி வீடொன் றாற்றுவித் தனிகம் யாவும்
பாங்குற இருந்தான் செவ்வேள் பா£¢த்தனன் இனைய வெல்லாம்
ஈங்கிது நிகழ்ந்த வண்ணம் என்றலும் அவுணர் கேர்மான்
தீங்கன லென்னச் சீறி நகைததிவை செப்ப லுற்றான். 8
வேறு
மேனிமிர் கொண்டல் உயர்த்தவன் அம்புய மிசைவேதா
நீனிற மாயவன் ஊரது போல நினைந்தானோ
ஆனதொல் அண்டமொ ராயிர கோடியும் அரசாள்வேன்
மாநகர் மேலொரு பாலக னாம்பொர வருவானே. 9
அரியின் இனஞ்செறி சூழலின் அன்னவை அடலுன்னிக்
கரியது கன்றுழை கலைபிற வற்றொடு கடிதேகில்
பொருது வயங்கொள் வல்லது கொல்அது போலன்றோ
முருகனும் வெம்படை யுடன்இவண் வந்திடு முறைதானே. 10
வேலை கடந்தென தாணை இகழ்ந்து வியன்பூதச்
சால நெடும்படை தன்னுடன் இந்நகர் சார்வானாங்
காலம் இதங்கவன் வீரம் அழிப்பல் கருத்தில்லாப்
பாலகன் என்றும் விடேன்வசை என்பதும் பாரேனால். 11
முன்னொரு சூழ்ச்சியின் அசமுகி ஒண்கரம் முரிவித்தே
ஒன்னல ராய்அமர் உம்பர்கள் யாவரும் உய்ந்தாரோ
என்னிளை யானொடும் வெற்பினை அட்டன மெனவுன்னித்
தன்னுயிர் போவ தறிந்திலன் இந்நகர் தனின்வந்தான். 12
ஆழிய தெண்டிரை ஆழ கடைந்தவன் அலகில்லா
வேள்வி புரிந்திடு வாசவன் அம்புய மிசைமேயோன்
வாழிய நம்பெயர் கூறினும் அஞ்சினர் மறைகுற்றார்
பூழி புனைந்தவர் பாலக னோஅமர் புரிவானே. 13
அந்தர மேல்வரு செங்கதி ரைச்சிறை அமர்வித்த
மைந்தனை நாற்படை தன்னொடு மேவி வயப்போரால்
முந்திய பூதரை ஏனைய வீரரை முடிவித்தே
கந்தனை யொல்லையின் வெற்றிகொள் வேன்இது காண்கிற்பாய். 14
என்றசு ரேசன் இசைத்தலும் நாரதன் இவைகேளா
நன்றிது நன்றிது தாழ்க்கலை இன்னினி நகா¢சூழச்
சென்றவ னைப்பொர நின்படை ஏவுதி செல்கின்றே
வென்றி நுமக்குற நோற்றிடு வானென விண்போனான். 15
வேறு
நாரதன் இனைய கூறி நகையொடு போத லோடுஞ்
சூரருள் ஆற்றல் மிக்கோன் துண்ணென அயலின் நின்ற
கோரன்உற் கோரன் என்னும் ஒற்றரைக் குறித்து நோக்கி
வாரிதி இறைவற் பற்றி வல்லையிற் கொணர்தி ரென்றான். 16
என்றலும் அனைய ரோடி எறிகடற் கரசைக் கூவி
வன்றிற லோடு பற்றி வல்லைமுன் கொணர்ந்தே உய்ப்பக்
கன்றிய மனத்த னாகிக் கைதொழு தவலங் கூர்ந்து
நின்றனன் அவனை நோக்கி நெருப்பெழ விழித்துச் சொல்வான். 17
பவ்வநீர் அரச கேண்மோ பங்கயத் தவனும் மாலுஞ்
செவ்விதின் உணரா வண்ணம் ஔ¤த்தவன் சிறுவன் தன்னை
வெவ்வலி கடந்த பூத வௌ¢ளத்தை நமது மாறா
இவ்விடை விடுத்த தென்னை என்னலும் இசைக்க லுற்றான். 18
மண்படு புவனம் போற்றும் மன்னகேள் புயங்க மீது
கண்படு முகுந்தன் வேதாக் கடவுளர் தலைவ னோடும்
எண்படு துணைவ ரானோர் யாவரும் புடையிற் சூழ
விண்படு நெறியிற் சென்றான் வீரவேற் றடக்கை அண்ணல். 19
மடல்கெழு நீபத் தண்டார் வள்ளல்வான் நெறியிற் போத
மிடல்கெழு பூதர் என்பால் மேவினர் சென்றார் அன்னார்
அடிகளின் பரட்டின் காறும் அமைந்திலன் அவரை யானே
தடைசெய வல்லேன் போலுந் தக்கதே இதுமற் றன்றோ. 20
ஊழியும் உலையாப் பூதர் ஒல்லெனச் செல்லத் தாளிற்
பூழியால் அளறு பட்டாங் கிடையறப் புலம்ப லுற்றான்
ஆழியன் என்னும் பேரும் அற்றனன் வசையே பெற்றேன்
ஏழையேன் செய்வ தென்கொல் எதிருண்டோ வலியர்க் கம்மா. 21
தௌ¢ளிதில் தமிழ்தேர் காட்சித் திருமுனி கரத்தில் வாரி
உள்ளுறக் கொண்ட தேபோல் ஒல்லையின் மிசைவர் போலாங்
கொள்ளையிற் செறிபூ தர்க்குள் ஒருவரோர் குடங்கை தன்னின்
அள்ளுதற் காற்ற கில்லேன் ஆதலின் உய்ந்தேன் அன்றே. 22
உடல்சின வசனி தன்னை ஒண்பணி விலக்க வற்றோ
கடுமுரண் அரிமான் ஏற்றைக் களிறெதிர் விலக்கிற் றுண்டோ
மிடல்கெழு விதியைப் புந்தி விலக்குமோ அ·தே அன்றோ
அடல்மிகு பூதர் தம்மை அளியனேன் தடுப்ப தென்றான். 23
இற்றெலாம் அளக்கர் கோமான் இசைத்துமெய் துளக்க மெய்தி
நிற்றலும் நெடுவேல் அண்ணல் நீள்நகர் நணிய தன்மை
ஒற்றரிற் சிலவர் காணா ஓடினா¢ ஒல்லை சென்று
கொற்றவற் பணிந்து நின்§றிஇவையிவை கூற லுற்றார். 24
அராவணை அண்ணல் வேதா அரிமுதல் அமரர் சூழ
விராவுறும் இலக்கத் தொன்பான் வெலற்கரும் வீரர் போற்ற
இராயிரம் பூத வௌ¢ளம் ஈண்டிட எறிநீர்ச் சென்னிப்
பராபரன் மைந்தன் நந்தம் பதிவட திசையிற் போந்தான். 25
வடதிசை அதனிற் போந்து வானவர் புனைவற் கொண்டே
படிபுகழ் தகைமைத் தான பாசறை புரிவித் தாங்கே
புடைதனின் அனிக மான பூதவெவ் வீரர் மேவ
நடுவணோர் நகரந் தன்னின்நண்ணிவீற் றிருந்தான் அன்றே. 26
கண்டனம் இதனை இன்னே கடவது புரிதி யென்னாத்
திண்டிறல் வெய்ய தூதர் செப்பலும் அதனைக் கேளா
அண்டமும் புவனம் யாவும் அலமர வழலிற் சீறிப்
புண்டிகழ்ந் தனைய கண்ணான் இவையிவை புகல லுற்றான். 27
ஆகத் திருவிருத்தம் - 63
- - -
3. முதனாட் பானுகோபன் யுத்தப் படலம்
கோதை வேலுடைக் குமரன தாற்றலுங் கொற்றப்
பூதர் ஆற்றலும் ஏனையர் ஆற்லும் போர்செய்
தூதன் ஆற்றலுந் தொலைக்குவன் துண்ணென நீவிர்
ஆத வன்தனிப் பகைஞனைக் கொணர்திரென் றறைந்தான். 1
ஆன காலையில் நன்றெனத் தூதுவர் அகன்று
பானு கோபன திருக்கைபுக் கனையவற் பணிந்து
மேனி லைப்படு தந்தைதன் பணிவிடை விளம்ப
மான வாலரித் தவிசுவிட் டெழுந்தனன் மன்னோ. 2
தொல்லை மந்திரத் தலைவருஞ் சுற்றமா யினரும்
எல்லை சீர்தரு தானையந் தலைவர்கள் யாரும்
ஒல்லெ னப்புடை சூழ்ந்தனர் உருமுகான் றென்னப்
பல்லி யங்களும் ஆர்த்தன போர்த்தன பதாதி. 3
அக்க ணத்தினில் இரவியம் பகைஞனோ ரணித்தேர்
புக்கொ ராயிர கோடிவீ திகளரீஇப் புடையில்
தொக்க வீரரிற் கண்டுளார் வயின்வயின் தொழப்போய்
மிக்க தாதைதன் திருநகர் அடைந்தனன் விரைவின். 4
தேரின் நின்றிழிந் தண்ணலங் கோயிலுட் சென்று
சூர பன்மனை அணுகியே அவனடி தொழுது
வீர வீரநீ யெனையிவண் விளித்ததென் னென்ன
வாரி ருங்கழல் மன்னவன் இன்னன வகுப்பான். 5
முந்து தாரக வெம்பியை வரையொடு முடித்த
கந்த வேள்செந்தி நீங்கியே அளக்கரைக் கடந்து
நந்தி தன்கணத் தலைவரும் பூதரும் நணுக
இந்த மாநகர் வடதிசை வாயில்வந் திறுத்தான். 6
சிந்து போன்றுல களந்திடு கள்வனுஞ் செயிர்தீர்
கந்த மாமலர்க் கடவுளும் என்பணி கடந்த
இந்தி ராதியர் யாவரும் பிறருமாய் ஈண்டி
வந்து ளார்களாம் அறுமுக மதலைதன் மருங்கு. 7
அளிய ராகிய அமரரும் அரன்தரு மகவும்
ஔ¤று வாட்படை நந்திதன் கணத்தினுள் ளோரும்
களியின் மூழ்கிய பூதருங் கடிதுவந் தடைதற்
கௌ¤து பட்டதோ நன்றுநன் றிணையமா நகரம். 8
பின்னை தன்னுடன் அடுக்கலை மைந்தனைப் பிறரை
முன்னம் அட்டிடும் மாற்றலர் தங்களை முருக்கச்
சென்னெ றிக்கொடு போதலென் கடன்அவர் சிறியர்
மன்னர் மன்னன்யான் ஆதலின் இருந்தனன் வறிது. 9
அந்தண் மாமுகில் உயர்த்தவன் வேண்டலும் அமலன்
தந்த கந்தனைச் சாரதத் தலைவர்க ளோடு
நந்த மைப்பொர விடுத்தனன் ஆதலின் நானும்
மைந்த நிற்கொடு வென்றிபெற் றிருந்திடல் வழக்கே. 10
ஆத லால்இனிப் படையொடும் அமர்க்களத் தடைந்து
நாதன் மைந்தனை நந்திதன் கணத்துளார் தம்மைப்
பூதர் தங்களைப் பொருதழித் தடல்வயம் புனைந்து
காதல் மைந்தநீ மீடியால் நம்முனங் கடிதின். 11
வேறு
என்றிவை சூர்முதல் இசைப்பக் கேட்டலும்
பொன்றிகழ தடம்புயம் பொருப்பிற் சேட்செல
ஒன்றிய குமிழ்வடி வுடலம் போர்த்திட
நின்றிடு திருமகன் இவைநி கழ்த்துவான். 12
இருளுறு மிடற்றினன் ஏவும் மைந்தனை
மருளுறு பூதரை மற்று ளார்தமை
வெருளுறு சமரிடை வென்று மீள்வதோர்
பொருளென நினைந்துகொல் புகன்றி இற்றெலாம். 13
பன்னுவ தென்னினிப் பரமன் கான்முளை
இந்நகர் நணுகுமுன் எதிர்ந்து போர்செய்வான்
நென்னலே வினவினன் நீய தோர்ந்திலை
பின்னிது புகலுதல் பிழைய தாகுமால். 14
படைப்பெருந் தொறுவொடும் படர்ந்து கந்தனை
அடுத்தனன் பேரமர் ஆற்றி வென்றிகொண்
டிடுக்கணில் பூதரை ஏனை யோருடன்
முடித்திவண் வருகுவன் முதல்வ காண்டிநீ. 15
கந்தனை விறல்கொடே அவன்றன் கட்படு
செந்திரு மார்பனைத் திசைமு கத்தனை
இந்திரக் கள்வனை இமைப்பில் பற்றிமுன்
தந்திடு கின்றனன் தகுவ செய்தியால். 16
என்றிவை கூறியே இறைஞ்ச மைந்தநீ
சென்றனை வருதியால் திறலி னோடெனா
நன்றென விடைகொடு நடந்து நன்கமை
பொன்றிகழ தனதுதேர் புகுந்து போயினான். 17
தொல்லையிற் பரிசனம் புடையிற் சூழ்தரப்
பல்பதி னாயிரந் துணைவர் பாற்பட
ஒல்லென இயம்பல ஒலிப்ப ஏகுறா
எல்லையம் பகைதன திருக்கை எய்தினான். 18
பண்டியந் தேரினுந் தணந்து பாங்கரின்
மண்டுறு தூதரை வல்லை கண்ணுறீஇ
எண்டரு நம்படை யாவும் இவ்விடை
கொண்டணை வீரென்கூறிப் போயினான். 19
ஏயிரும் பரிசனர் யாரை யும்நிறீஇ
மாயிருங் கலைமகள் வதிந்து வைகிய
ஆயுத சாலையின் அவுணர் கோன்மகன்
போயினன் தொழுதனன் பூசை ஆற்றினான். 20
கயிரவ நிறத்தபூங் கச்சு வீக்கினான்
வயிரவொள் வாளினை மருங்கு சேர்த்தினான்
வெயில்விடு பொன்துகில் மீது சுற்றினான்
துயிலறும் அமரரைத் துளக்கங் கண்டுளான். 21
செல்லிடை உருமெனத் தெழிக்கும் நோன்கழல்
கல்லென அரற்றிடக் கழலிற் பூட்டினான்
வல்லிதிற் சாலிகை மருமஞ் சேர்த்தினான்
சொல்லினும் நிவந்தெழு தூண்டுசெய் தோளினான். 22
கோதையை அங்கையிற் கொளுவிச் சுற்றினான்
போதுறழ் அங்குலி புட்டில் தாங்கினான்
சோதிகொள் சரம்படு தூணி யைச்சுவல்
மீதுற வீக்கினான் விறலின் மேலையோன். 23
வெம்பெரு நுதல்மிசை விசயப் பாலதாஞ்
செம்பொனின் பட்டிகை திகழச் சேர்த்தினான்
பம்புறும் அணிலம் பலவுந் தாங்கினான்
தும்பையஞ் சிகழிகை மவுலி சூட்டினான். 24
வடித்ததோர் பெருஞ்சிலை வயமுண் டாகஎன்
றெடுத்தனன் விடுத்திடின் யாவர் தம்மையும்
படுத்திடு மோகமாம் படையொன் றேந்தினான்
அடுத்திடு செறுநர்தம் மாற்றல் உன்னலான். 25
ஆனதோர் போரணி அணிந்து, வாய்தலிற்
பானுவின் மாற்றலன் படர முன்னரே
போனதோர் தூதுவர் எழுதிர் போர்க்கெனத்
தானையோ டெழுந்தனர் தகுவர் யாவரும். 26
வேறு
விசையன் நேமியன் மிகுந்திறல் மாயன்
முசலி கண்டகன் முரன்கரன் மூர்க்கன்
தசமுகன் கனலி சண்டன் விசண்டன்
அசமுகன் மகிடன் அக்கிர வாகு. 27
விசையசே னன்விட சேனன் விமோகன்
வசைகொள் சோமகன் மதுச்சசி சித்துச்
சுசிமுகன் அசனி சூனிய கேது
அசுரசே னன்இவர் ஆதியர் ஆனோர். 28
தடுக்கொ ணாவகை தடிந்திடு தெய்வப்
படைக்கலங் களவை பற்பல பற்றா
உடைத்தவன் மையுடன் ஒய்யென வந்தார்
கிடைத்த தோவமர் எனக்கிளர் கின்றார். 29
ஆனகா லைபதி னாயிர வௌ¢ளந்
தானவப் படைஞர் சார்புதொ றேகி
மீனவே லைகளும் வௌ¢குற ஆர்த்து
மானவத் தலைவர் மாடுற வந்தார். 30
கோல வார்சிலை கொடுங்கதை நீடுஞ்
சூல நேமிஅயில் தோமரம் ஈட்டி
ஆலம் வாள்கணையம் ஆரெழு நாஞ்சில்
கால பாசமிவை கைக்கொடு சென்றார். 31
கந்து கத்தொகை கடங்கலுழ் கைம்மா
எந்தி ரத்திரதம் ஈங்கிவை மூன்றும்
ஐந்தொ கைப்படுமி ராயிர வௌ¢ளந்
தந்தி ரத்தலைவர் தம்புடை சூழ்ந்த. 32
ஐந்து நான்குடைய ஆயிர வௌ¢ளத்
திந்த நாற்படையும் ஈண்டுபு செல்ல
மைந்தின் ஏற்றமிகு மானவா¢ தத்தஞ்
சிந்தை போற்கடிது சென்றனர் அம்மா. 33
சென்ற காவலர்கள் சேனையி னோடும்
என்ற வன்பகைஞன் எய்துழி நண்ணி
ஒன்ற அங்கைதொழு தொல்லென ஆர்த்துத்
துன்றி வந்துபுடை சூழ்ந்தனர் அன்றே. 34
இரவிதன் பகைஞன் ஈங்கிவை காணா
ஒருதன்ஏ வலனை ஒல்லையின் நோக்கித்
திருமைபெற் றதொரு தேரினை வல்லே
தருகஎன் னஇனி தென்று தணந்தான். 35
செப்பும் அத்தொழில் சிங்கொடு சென்றே
மெய்ப்படைக் கருவி மேவுழி நண்ணி
முப்ப தாயிர முரட்பரி பூண்ட
ஒப்பிலா இரதம் ஒன்றினை உய்த்தான். 36
உய்த்த தேரின்உத யக்கி£¤ வாவு
மொய்த்த வெங்கதிரின் மொய்ம்பொடு பாய்ந்தான்
மெத்து பேரனிக வௌ¢ள மியாவும்
அத்துணைப் பொழுதின் ஆர்த்தன அன்றே. 37
உரத்த கந்திகள் ஒராயிர கோடி
பெருத்து நீண்டசைவு பெற்றிடு பானை
விரித்து நீட்டியென வெவ்வசு ரேசர்
கரத்தின் எண்ணில்கவ ரித்தொகை வீச. 38
மற்ற வன்தனது மாசிருள் மேனி
உற்றி டற்கருமை யால்அவன் ஒண்சீர்
சுற்றி மீதுலவு தோற்றம தென்னக்
கற்றை வெண்குடைகள் காவலர் ஏந்த. 39
அடைப்பை கோடிகம் அடுஞ்சுடர் ஔ¢வாள்
கடிக்கொள் பீலிகவின் உற்ற களாசித்
தொடக்கம் ஏந்திமுறை சுற்றி அனந்தம்
படைப்பெ ருந்தலைவர் பாங்கொடு போற்ற. 40
எழில்செ றிந்தஇர தத்திடை வைகும்
அழலின் வெங்கதிரை ஆற்றமு னிந்தோன்
உழைய ரிற்பலரை ஒய்யென நோக்கி
விழுமி தோர்மொழி விளம்புதல் உற்றான். 41
காமர் வெம்படை கணிப்பில கொண்ட
சேம மாகியமர் தேரொரு கோடி
ஏம மோடுகொணர் வீரென லோடுந்
தாம வேலுழையர் தாழந்தனர் சென்றார். 42
அண்ட ரும்படை அளப்பில உய்த்துத்
திண்டி றற்கெழுமு தேரொரு கோடி
கொண்டு வந்துழையர் கொற்றவன் மைந்தற்
கெண்டி சைப்புறமும் ஈண்டுறு வித்தார். 43
ஆண்ட கைக்குமரன் அன்னது காலை
மாண்ட சீர்வலவன் மாமுகம் நோக்கிப்
பாண்டியன் மாத்தொகுதி பண்ணின இத்தேர்
தூண்டு கந்தன்அமர் சூழலின் என்றான். 44
என்ன லும்விழுமி தேயென முட்கோல்
மன்னு மத்திகையின் வன்றொழில் காட்டித்
துன்னு வாம்புரவி யின்தொகை தூண்டிப்
பொன்னந் தேர்கடவி னான்புகழ் வெய்யோன். 45
வெய்ய வன்தனை வியன்சிறை இட்ட
கையன் ஏகஅது கண்டு புறஞ்சூழ்
மையல் மால்அவுண மாப்படை யாவும்
ஒய்யெ னப்பெரிது லம்பின அன்றே. 46
எழுந்த தானவர் இகற்படை வௌ¢ளம்
எழுந்த தேர்நிரை எழுந்தன கைம்மா
எழுந்த வாசிகள் எழுந்தன ஓதை
எழுந்த கேதனம் எழுந்தன பூழி. 47
அறைந்த பேரிகை அறைந்தன சங்கம்
அறைந்த காகளம் அறைந்தன திண்கோ
டறைந்த சல்லிகை அறைந்த கடாரி
அறைந்த தண்ணுமை அறைந்தன தக்கை. 48
ஆர்த்த தேர்த்தொகுதி ஆர்த்தன வாசி
ஆர்த்த தந்திநிரை ஆர்த்ததனர் வெய்யோர்
ஆர்த்த வால்துவசம் ஆர்த்தன கண்டை
ஆர்த்த தார்நிரைகள் ஆர்த்தது மூதூர். 49
அதிர்ந்த மாநிலம் அலைந்தன நாகம்
உதிர்ந்த தாரகை உலைந்தனர் தேவர்
விதிர்ந்த மேகநிரை விண்டது மேருப்
பிதிர்ந்து போயின பிறங்கல்கள் ஏழும். 50
ஊழி யான்மதலை ஓங்கு படைப்பேர்
ஆழி யோடுற அருக்கன் வெருண்டே
பூழி வான்முகடு போர்த்தெழல் காணா
வாழி என்றதின் மறைந்து படா¢ந்தான். 51
வாழி மாநகர் வளைந்திடு தொல்பேர்
ஆழி யாங்கடை அவப்படை யாகிச்
சூழும் வேலையிடை தோன்றி யுலாவும்
பூழி தூர்த்துளது பூதர்க ளேபோல். 52
விட்ட சோதிநிமிர் விண்மிசை தாக்கப்
பட்டு லாவரு பதாகையின் ஈட்டம்
வட்ட வானமெனும் வான்பட கத்தைக்
கொட்டு மண்மகள் குலாவுகை போலும். 53
தாழும் வீரர்படை தம்மின் உரிஞ்சப்
பாழ வெங்கனல் பரந்த பதாகைச்
சூழல் வானநதி தோய்ந்தசை காலை
வீழு மாலிகளின் வீழந்திடு கின்ற. 54
வான மோடியன மால்கரி தள்ளுந்
தான மோடின சரங்களின் ஓடி
மீன மோடுதிரை வேலையி னோடும்
கான மோடின களிற்றின மென்ன. 55
செப்பு தற்கரிய சேணகா தன்னில்
துப்பு மிக்கெழுபு தொல்படை வௌ¢ளம்
இப்பு றத்துநெறி இன்றிஅவ் வானத்
தப்பு றத்தினும் அளப்பில சென்ற. 56
மறந்த ருங்கதிரை வன்சிறை செய்தோன்
செறிந்த தானையுடன் இவ்வகை செல்ல
இறந்த சீர்நகரின் இத்திற மெல்லாம்
அறிந்து நாரதன் அகன்றிடு கின்றான். 57
வான மேல்நெறி வழிக்கொடு பூதர்
மேன பாசறை வியன்பதி யுட்போய்
ஞான வாலறிவின் நாரதன் விண்ணோர்
சேனை காவலன் அமர்ந்துழி சென்றான். 58
சிந்து ரப்பகை சிரத்தவி சுற்ற
கந்த வேள்இரு கழற்றுணை காணாப்
புந்தி நாரொடு புகழ்ந்து வணங்கி
எந்தை கேட்கவென இன்ன துரைப்பான். 59
பூத சேனையொடு பொள்ளென ஏகி
ஆதி நீயிவண் அமர்ந்தன யாவும்
தூதர் கூறஉயர் சூரபன் மாவென்
றோது தீயவன் உயர்ந்து வெகுண்டான். 60
நிகண்ட முற்பகல் நெடுங்கதி ரோன்பால்
உகண்ட தன்மகனை ஒல்லை விளித்தே
அகண்ட சேனையொடும் அன்பிலன் நின்மேல்
வெகுண்டு போர்செய விடுத்தனன் அம்மா. 61
விடுத்த காலையவன் வெஞ்சமர் ஆற்றற்
கடுத்த கோலமொ டளப்பில வான
கடற்பெ ரும்படை கலந்துடன் ஏகத்
தடுப்ப ரும்வெகுளி தன்னொடும் வந்தான். 62
இவனு டன் சமரின் ஏற்பவர் நீயுஞ்
சிவனும் அன்றியெவர் தேவரின் உள்ளார்
அவனை வெல்வதரி தாகும்முன் ஓர்நாட்
புவனி யுண்டவர் புரந்தர வென்றான். 63
கரையி லாவமர் கடந்திசை கொண்டான்
வரைவி லாதபல மாயைகள் வல்லான்
உரக வேந்தினும் உரம்பெரி துள்ளான்
பிரமன் ஈந்திடு பெரும்படை பெற்றான். 64
அறைக டற்கிறைவன் அங்கைகொள் பாசம்
மறலி தன்பரசு வவ்வினன் மாயோன்
விறலின் நேமிகொள வேண்டலன் முன்னஞ்
சிறிய தந்தையணி குற்ற சிறப்பால். 65
ஆகை யால்அவனை ஆள்கொடு வல்லை
வாகை கொண்டிடலும் மற்றா¤ தம்மா
பாகு பட்டபடை பாங்குற நீயே
ஏகல் வேண்டுமட வென்று பகர்ந்தான். 66
நார தன்இவை நவின்றிடு காலை
மூரல் எய்திமுரு கன்புடை நின்ற
வீர வாகுவை விளித்தருள் செய்து
சீரி தாஇனைய செப்புதல் உற்றான். 67
ஈண்டு பூதரொ டியாம்வரு தன்மை
யாண்டு சூரனுணா¢ந் தந்நகர் தன்னின்
மாண்ட தானையுடன் மைந்தனை நம்மேல்
தூண்டி னான்அமர் தொடங்கிய மன்னோ. 68
எள்ளு தற்கரிய எண்மர் இலக்கர்
உள்ள பேர்களும் ஒராயிர பூத
வௌ¢ள மும்புடையின் மேவர நீபோய்ப்
பொள்ளெ னப்புரிசை யின்புடை சூழ்தி. 69
சென்று முன்கடை சிதைத்தனை அங்ஙன்
கன்றி நேரவுணர் காவலன் மைந்தன்
துன்று சேனைகள் தொலைத்தமர் ஆற்றி
வென்றி கொண்டவனை மீளுதி யென்றான். 70
ஈரும் வேல்முருகன் இவ்வகை கூறி
வீர வாகுவை விடுத்திளை யோரைச்
சார தத்தலைவர் தம்முடன் ஏவி
நார தற்கிது நவின்றருள் செய்வான். 71
கேட்டி யான்முனிவ கேழ்கிளர் சிம்புட்
கூட்ட மீதுசில கோளரி மேவின்
வாட்ட வல்லனகொல் மாய்குவ தல்லால்
காட்டு வாமுடிவு காண்டிய தென்றான். 72
குமரன் நல்குவிடை கொண்டு படர்ந்தே
விமல வாலுணர்வின் மேதகு வீரன்
சிமைய மேருநிகர் திண்சிலை ஒன்றை
அமரர் கோன்புகழ அங்கை பிடித்தான். 73
வீக்கி னன்கவசம் வெந்நிடை தன்னில்
தூக்கி னன்பகழி பெய்திடு தூணி
நீக்க மில்விரலின் நீடுகை தன்னில்
தாக்கு கோதையொடு புட்டில் தரித்தான். 74
சேம வெம்படை செறிந்திடு வைய
மாம ருங்கினில் வரம்பில செல்லத்
தோமில் வீரமிகு தோளினன் அங்கோர்
ஏம மாமிரத்ம் ஏறினன் மாதோ. 75
எட்டு வீரரும் இலக்கரும் ஏனை
மட்டில் பூதகண மன்னரு மாக
ஒட்டி ஆடமர் உருக்கொடு கொண்மூ
முட்டு தேர்த்தொகையின் மொய்ம்பொடு புக்கார். 76
தேரின் மேற்படு சிறப்புடை வீரர்
வீர வாகுவை விரைந்தயல் சூழந்தார்
நேரில் ஆயிர நெடுங்கதிர் ஒன்றைச்
சூரர் தந்தொகுதி சுற்றிய வாபோல். 77
விரசி யேயமர் விளைத்திட வெஞ்சூர்
அரசன் மாநகரின் ஆயிர வௌ¢ளம்
பரிச னங்கள்படர் மின்கடி தென்னா
முரச றைந்தனர்கள் ஆயிடை மொய்ம்போர். 78
அறைந்த காலைதனில் ஆயிர வௌ¢ளம்
நிறைந்த பூதர்நெடு வேல்முரு கன்பாற்
செறிந்து போற்றியிட ஏனையர் சென்றார்
உறைந்த ஆர்கலி உடைந்தது போல. 79
அருத்தி யிற்படரும் ஆயிர வௌ¢ளக்
கிருத்தி மத்தவர் கிளர்ந்திடு தீப்போல்
உருத்து வேலையின் ஒலித்துயர் ஊழி
மருத்தின் வன்மைகொடு வந்திடு கின்றார். 80
பைய ராவிறை பரித்திடு கின்ற
வையம் யாவையுமொர் வாகுவின் வைக்குங்
கையர் காலனை அடுந்தறு கண்ணார்
வெய்ய ரானவர்கள் யாரினும் வெய்யோர். 81
அரத்த வேணியர் அடும்படை ஏந்துங்
கரத்தர் வெங்கழல் கத்திடு தாளர்
வரத்தின் மேதகையர் மாயை கடந்தோ£¢
உரத்தின் அண்டமும் உடைந்திட வல்லோர். 82
இனைய தன்மையினில் ஈண்டிய பூதர்
அனைவ ருஞ்செல அவர்க்கிறை யானோர்
தனதுதொல் லிளைஞர் தம்மொடு சென்றான்
வனைக ருங்கழல் வயம்புனை வாகு. 83
செல்ல லுந்திமிலை செல்லுறழ் பேரி
கல்லெ னுங்கரடி காகள மாம்பல்
சல்ல ரிப்பறை தடாரி உடுக்கை
பல்லி யம்பிற முழங்கின பாங்கர். 84
மாறில்சே னையிடை வந்தெழு பூழி
நீறுபூ சிமுடி நீடிய கங்கை
ஆறு தோய்ந்தகல் விசும்பிடை ஆடி
ஏறுகொண் டகொடி ஈசனை யொப்ப. 85
பாய சாரதர் படைக்குள் எழுந்தே
ஆய பூழிஅவு ணப்படை தன்னில்
சேய பூழியொடு சேர்வன தாமுன்
போயெ திர்ந்தமர் புரிந்திடு மாபோல். 86
பான்மை இன்னன படைப்புற எண்ணில்
சேனை வௌ¢ளமொடு திண்டிறல் வாகு
தூந லம்தவறு சூருறை மூதூர்
வானு லாம்புரிசை மாடுற வந்தான். 87
வேறு
ஆனதொர் காலையின் அதனை நோக்குறீஇத்
தானவர் ஒருசிலர் தரிப்பின் றோடியே
சேனையங் கடலினைத் தீர்ந்து வல்லைபோய்ப்
பானுவின் பகைஞனைப் பணிந்து கூறுவார். 88
மாயிருந் தானைகள் மருங்கு சூழ்ந்திட
நீயமர் செயவரு நிலைமை நாடியே
வேயென முந்திவண் மேயி னான்றனை
ஏயினன் குமரவேள் நிகழ்ச்சி ஈதென்றார். 89
மற்றிவை அவுணர்கோன் மதலை கேட்டலுங்
கற்றையங் கதிர்மணிக் கடகக் கையினை
எற்றினன் முறுவல்செய் தெயிறு தீயுகச்
செற்றமொ டுயிர்த்திவை செப்பல் மேயினான். 90
இருந்திடு பாலனை என்னொ டேபொர
விரைந்தெதிர் தூதனை வியன்ப தாதியாய்ப்
பொருந்திய பூதரைப் போர்க் ளத்தியான்
துரந்திடு கின்றனன் தொலைந்து போகவே. 91
அந்தர வரைப்பினில் ஆசை யெட்டினில்
வந்திடும் அளக்கரின் மற்றை நேமியில்
கந்தனும் ஒற்றனுங் கணங்கள் யாவருஞ்
சிந்தினர் வெருவியே திரியக் காண்பனால். 92
புன்மைய ராகிய பூதர் சேனையும்
வன்மையில் தூதனும் மழலைப் பிள்ளையுந்
தொன்மிடல் ஒருவியே தொலைந்து போகினும்
என்மன வெகுளியும் ஏகற் பாலதோ. 93
விடுகிலன் அவர்தமை மேலை ஏற்பெருங்
கடல்திசை முழுவதுங் கடந்து செல்லினும்
புடையது சுற்றியே போக்கு றாதிவண்
கொடுவரு கின்றனன் குறுகிப் பற்றியே. 94
மேவலில் அவர்தமை மேலை நம்பெருங்
காவலன் முன்புறக் காட்டி இவ்விடைத்
தேவா¢கள் தம்மொடுஞ் சிறையில் வீட்டுவன்
ஏவரும் எனதுசீர் இறைஞ்சி ஏத்தவே. 95
என்றிவை பற்பல இசைத்துச் சூர்மகன்
கன்றிய மனத்தொடு கடிது சேறலுந்
துன்றிய அவுணர்தந் தொறுமுன் போயின
பொன்றிகழ் வடமதிற் புதவு நீங்கியே. 96
ஆனதொர் காலையின் அடையும் பூதவெஞ்
சேனையின் ஆற்றலுந் திறலுங் கண்ணுறீஇத்
தானவா¢ கூறுவார் சமர்கண் டோடிய
வானவா¢ அன்றிவர் வலியர் போலுமால். 97
என்னினும் இங்கிவர் எம்மொ டேபொரும்
வன்மையும் உடையரோ வரம்பில் குன்றெலாம்
பொன்மலை அதனொடு பொருவ தேயினும்
மின்மினி கதிரினும் விளங்க வல்லதோ. 98
என்றிவை போல்வன இணையில் தானவர்
ஒன்றல பலபல உரைத்து வெஞ்சினங்
கன்றிய அழல்விழிக் கணத்தின் சேனைநேர்
சென்றனர் தெழித்தனர் சிலைத்த பல்லியம். 99
வயிர்த்திடு பூதர்கள்மறலி என்றுல
கயிர்த்திடும் அவுணரை நோக்கி அம்புவி
உயிர்த்தொகை அலைத்தவர் உவர்கொ லோவெனாச்
செயிர்த்தனர் இடித்தனர் தீயின் வெம்மையார். 100
கரையறு தானவர் தாமுங் காய்கனல்
புரைதரு சூ£¢விழிப் பூத வீரரும்
ஒருவரின் ஒருவர்போர் உடன்று சேறலான்
இருவகை அனிகமும் இகலின் ஏற்றவே. 101
தந்தியின் கரங்களில தண்டம் ஈந்திடா
வந்தெதிர் தெம்முனை மாய்ந்து வீடுறச்
சிந்துதி யெனுங்குறி செப்பிப் பூதர்மேல்
உந்தினர் மீமிசை உலப்பில் தானவர். 102
பகைத்திடு பூதர்கள் பலரும் நாடியே
திகைத்திவை யாவெனச் சிந்தித் தையுறத்
தகைத்தடந் தாளவை தரையின் பாற்படா
துகைத்தனர் பரியெனும் ஓத வேலையே. 103
காரிடைச் சென்றெனக் களிற்றி னுந்திரை
நீரிடைச் சென்றென நீடு மாவினும்
போரிடைச் சென்றனர் புறத்துப் போற்றியே
தேரிடைச் சென்றனர் வரைவிற் சென்றென. 104
அடுகரி நிரையினை ஆடல் மாக்களைத்
தடநெடுந் தேர்களைத் தணப்பி லாவகை
கடலினை வளைந்திடு கரைய தாமெனப்
புடைதனில் சுற்றியே புவியின் ஏகினார். 105
அத்திறம் எதிர்ந்திடும் அவுணர் பூதர்மேல்
முத்தலை வேற்படை முசுண்டி தோமரஞ்
சத்தியொ டெழுமழுத் தண்ட மேமுதல்
எத்திறப் படைகளும் எடுத்து வீசினார். 106
கரங்கொடு பெரும்படைக் கலங்கள் யாவையும்
பரங்கொடு வீசிய பதகர் உட்கிட
மரங்கொடும் எழுக்கொடும் வரைகொ டுந்தம
துரங்கொடும் வீசினர் உலைவில் பூதரே. 107
வேறு
செறிந்து நேர்ந்து செருச்செயும் எல்லையின்
இறந்த தானவர் எண்ணிலர் ஆவிபோய்த்
தறிந்த தாளுந் தலையுங் கழலுமாய்
மறிந்த சாரத ரும்வரம் பில்லையால். 108
மாண்ட சாரதர் யாக்கையும் மண்மிசை
வீண்ட தானவர் மெய்களுஞ் செங்களம்
யாண்டு மாகி இருங்கரை போலுற
நீண்ட நேமியின் நின்றது சோரிநீ£¢. 109
விரவு பூதர் வெகுண்டுசென் றொன்னலர்
இரத மோடிர தங்களை எற்றினார்
கரிக ளாற்கரி யின்தொகை காதினார்
பரிக ளோடு பரிகளை மோதினார். 110
ஆளை யாள்கொண் டடர்த்தனர் ஆங்கவர்
தோளை யேதம தோள்கொடு தாக்கினார்
தாளி னால்அவர் தந்தலை சிந்தினார்
கோள ரித்தொகை மான்அடுங் கொள்கையார். 111
ஏற்ற சாரதர் எற்றிடத் தானவர்
ஊற்றம் இன்றி உடைதலும் அவ்வழி
காற்றொ டங்கி கலந்தன்ன காட்சியான்
ஆற்ற லாளன் அனலிகண் டானரோ. 112
கையின் மேயின கார்முகம் ஒன்றுதன்
மொய்யின் வாங்கி முரண்கெழு நாணொலி
செய்ய லோடுமத் தேவர் வெருக்கொளா
ஐய கோவென் றலக்கணுற் றாரரோ. 113
நாரி யார்ப்பு நணுகலும் நாற்படை
மூரி யர்ப்பு முகிலிடை ஆர்ப்பெனும்
பேரி யார்ப்பும் பிறங்கு பெருங்கடல்
வாரி யார்ப்புந்தம் வாய்மடிந் திட்டவே. 114
கொற்ற வில்லிற் கொடுங்கனல் வெங்கணை
முற்று மாரியின் முத்திறந் தூண்டலுஞ்
செற்று பூதர்தம் மொய்ம்பினுட் சென்றன
புற்றி னுடு புகுந்திடு பாந்தள்போல். 115
அங்கி மாப்படை ஏவலும் அவ்வழிச்
சிங்கன் என்னுந் திறல்கெழு சாரதன்
எங்கண் உய்தி இறந்தனை ஈண்டெனாப்
பொங்கு சீற்றம் புகுந்தனன் புந்திமேல். 116
நேர்கொண் டார்த்து நெடுந்தகை தீயவன்
தேர்கொண் டார்க்குந் திறற்பரிச் சேக்கையின்
பார்கொண் டார்ப்பப் பரூஉத்தடக் கைதனில்
தார்கொண் டார்த்திடுந் தண்டினிற் சாடினான். 117
சாடும் எல்லையிற் சாரதி உந்திய
ஆடல் வாம்பரி ஆவி யுலந்திட
ஓட லின்றி இரதமங் குற்றதால்
நீடு கின்ற நிலைப்படு தேரென. 118
மாக்க ளுற்ற மடிவினை நோக்கியே
தீக்க னற்பெய ரோன்சின மேற்கொளாத்
தாக்க ணங்குறு தாழ்சிலை வாங்கியே
ஏக்கள் பூட்டி இதுவொன்று கூறுவான். 119
தடுக்கொ ணாஇச் சரஞ்சொரிந் துன்னுயிர்
படுத்து வானவர் பார்த்திடத் தென்றிசை
விடுக்கி லேனெனின் வெஞ்சம ரத்திடை
எடுக்கி லேன்சிலை யானெனக் கூறினான். 120
சூளிவ் வாறு புகன்று தொவை¤லா
வாளி யான்மிசை அங்கியின் பேரினான்
கோளி யார்பய னாமென்கூற்றுறழ்
வாளி தூண்டி மறைத்தனன் மேனியே. 121
மறைய வேயுடல் வாளிகள் தூண்டவும்
இறையும் உன்னலன் இனனலுற் றாழ்கிலன்
பொறையி னோடு பொருக்கெனப் போகியத்
தறையின் நின்ற சயந்தனத் தேறினான். 122
நீர்மு கந்த நெடுமுகி லாமெனத்
தேர்மு கந்தனில் தீயவன் ஏந்திய
கார்மு கந்தனைக் கைக்கொடு வாங்கியே
பார்மு கத்துப் பதைப்புற வீசலும். 123
வலக்கை யாலொரு வானகதை பற்றியே
சிலக்கை ஈர்த்திடுச் சிங்கனைத் தீயினான்
தலைக்கண் மோதலுந் தானவர் ஆர்த்தனர்
கலக்க முற்றனர் கண்டஅத் தேவரே. 124
அடித்த தண்டொ டனலிதன் கைத்தலம்
பிடித்து மற்றொர் பெருங்கையி னாலவன்
தடித்த மார்பத் தடவரை சாய்ந்துக
இடிப்பின் முன்மை இசைத்திட எற்றினான். 125
எற்ற வெய்யவன் எல்லையில் துன்புறச்
செற்ற மிக்கெழுஞ் சிங்கனுஞ் செங்கையில்
பற்று தண்டத் தொடுமப் பதகனைச்
சுற்றி வானந் துணுக்குற ஆர்த்தனன். 126
மாறி லாத அவுணனை வன்கையால்
சூறை போலவச் சிங்கன் சுலவலும்
ஈறில் பித்தினி லேமரு வோன்மிகத்
தேற லார்ந்தெனத் தேற்றமின் றாயினான். 127
ஆர ழற்பெயர் அண்ணல் அறிவொரீஇச்
சோரும் எல்லையில் துண்ணென ஏறிய
தேரை விட்டுத் திறலரிப் பேரினான்
பாரின் எற்றப் பதைப்பொடு துஞ்சினான். 128
வேறு
அண்டருந் திறலின் மிக்க அனலிஅங் கிறந்த வண்ணங்
கண்டனன் கவலா வுள்ளம் அழலெனக் கறங்கு கண்ணான்
சண்டன்என் றுரைக்கும் பேரோன் தடுப்பரும் படைகள் தன்கை
கொண்டிவன் உயிரை இன்னே குடிப்பனா லென்று சென்றான். 129
என்றதோர் மாற்றங் கேளா எரிவிழித் திடியின் நக்குப்
பொன்றிய அனலி யங்கைப் போர்கெழு தண்டம் வாங்கிச்
சென்றனன் விரைவில் அன்னான் தேர்மிசைப் பாய்ந்து நீலக்
குன்றெனும் வயிரத் தோள்மேற் புடைத்தனன் கூற்றம் உட்க. 130
புடைத்தலும் உயிர்த்து நெஞ்சம் பொம்மெனப் பொரும லெய்தித்
தடப்பெருந் தேரில் வீழுஞ் சண்டனும் தனது செங்கை
எடுத்ததோர் தண்டந் தன்னால் எதிர்புகுஞ் சிங்கன் மார்பத்
தடித்தனன் அவனுந் தானும் ஆரஞர் உழந்து வீழ்ந்தான். 131
அப்பொழுது ததனை நோக்கி அவுணரின் மாயன் என்போன்
குப்புறு தடந்தே ரோடுங் குறுகலும் பூதர் தம்மின்
ஒப்பிலா நீலன் நேர்போய் ஓச்சினன் கதையொன் றண்ணல்
முப்புரம் அதனில் தூண்டு மூரிவான் பகழி யென்ன. 132
போந்ததோர் தண்ட மாயன் பொருவகல் மார்பில் தாக்க
மாய்நதனன் போல நின்று வருந்திமற் றவன்றன் பாணி
ஏந்துமுத் தலைவேல் ஒன்றை எறிநதனன் எழிலா கத்தில்
சாய்ந்தது குருதி நீலன் தானுமங் கயரா நின்றான். 133
சிறிதுபோழ் ததனில் தேறித் திரண்மணிக் கடகஞ் சேர்த்த
எறுழ்வலித் தடக்கை தன்னால் எதிர்ந்தவன் உரத்தின் எற்ற
அறைகழல் மாயன் தானும் அணங்குற நீலன் என்போன்
கறைகெழு நாக மென்னக் கனன்றிது கருதிச் செய்வான். 134
மந்தரந் தழீஇய தொல்லை வாசுகி யென்ன மாயன்
சுந்தரத் தடம்பொற் றோளைத் துணைக்கையால் தொடர்ந்து வீக்கிக்
கந்தரந் தன்னில் தீய கறைசெறி எயிற்றில் கவ்வி
முந்துறு குருதிச் செந்நர் குடித்தனன் மொய்ம்பி னோடும். 135
சோரிய துண்டு நீலன் தொல்சினந் துறந்து நின்றான்
ஆருயிர் உண்டு போனான் அந்தகன் அனைய காலை
மூரிவில் தடக்கை மாயன் முடிந்தனன் சண்டன் சிங்கன்
பேரஞர் உழந்தோர் தேறிப் பின்னும்போர் புரிய லுற்றார். 136
கிட்டினர் தடந்தேர் மீது கிடந்ததண் டேந்திக் கீழபோய்
ஒட்டினர் ஒருவர் தம்மின் ஒருவர்மேல் உடன்று பொங்கி
முட்டினர் இரண்டு பாலின் முறைமுறை பெயர்ந்தார் மொய்ம்பால்
வட்டணை திரிந்து தண்டில் தாக்கினா£¢ மாற்று கின்றார். 137
இங்கிது போலப் பல்வே றியற்கையிற் கதையின் வெம்போர்
சிங்கனுஞ் சண்டன் தானுஞ் செய்தனர் திரிந்த வேலைப்
பொங்கிய பூதர் வேந்தன் பொருவரும் அவுணன் பொன்னார்
அங்கையில் தண்டஞ் சிந்த அடித்தனன் அணிப்பொற் றண்டால். 138
வயிர்த்திடு தண்டம் அங்கண் வலிகெழு சிங்கன் மோத
அயிர்த்தொகை ஆத லோடும் ஆற்றல்சேர் அவுணர் யாரும்
உயிர்த்தனர் என்கொ லாமென் றுன்னினர் உருமே றென்னச்
செயிர்த்தனன் சண்டன் என்னுஞ் செருவலான் உரக்க லுற்றான். 139
தண்டமொன் றிற்ற தென்று தருக்கலை தடம்பொற் றோளாக்
கொண்டதும் அ·தே அன்றோ கூற்றுவன் நகரும் மேலை
அண்டமும் உலையத் தொன்னாள் அடர்த்தனன் உனக்கிங் கஞ்சேன்
மண்டமர் புரிதி என்னா வலிகெழு கரங்கொண் டேற்றான். 140
ஏற்றனன் இகலும் வேலை எரிசினங் கடவிச் சிங்கன்
ஆற்றலை யாங்கொல் நீயென் றாற்றலை அணிபொற் றண்டம்
போற்றுகென் றுய்ப்ப அங்கட் புகாநெறி புடைத்துக் கையால்
கூற்றனும் உட்க ஆர்த்ததான் குருமணித் திரற்தோள் கொட்டி. 141
அந்நெடுந் தகையோன் ஆ£¢ப்ப அதுபொறா தழன்று சிங்கன்
பொன்னெடுந் தண்டால் அன்னான் புயமிறப் புடைத்த லோடுங்
கன்னெடுந் தோளும ஓர்சார் கதுமென முரியத் தண்டும்
பன்னெடுந் துணியாய்ச் சிந்திப் படிமிசைக் கிடந்த தன்றே. 142
புயந்தளர்ந் திடலுஞ் சண்டன் போவது கரமென் றுன்னா
அயர்ந்திலன் ஒசிபொற் றோளை அங்கையின் இறுத்து வாங்கி
வயங்கெழு தண்டிற் பற்றி வட்டணை புரிந்தான் வானோர்
வியந்தனர் இவனே கொல்லாம் வீரருள் வீரன் என்றே. 143
கரங்கெழு புயப்பொற் றண்டால் கார்கெழு சண்டன் காமர்
உரங்கெழு உரத்தின் மோத உருகெழு மடங்கற் பேரோன்
இரங்கிலன் உவன்போல் யானும் எற்றலன் கரங்கொண் டென்னாச்
சரண்கொடே அவன்றன் ஆகத் தடவரை அதனைச் சாய்த்தான். 144
கண்டகன சாய்த லோடுங் கரமெடுத் தார்த்து வானோர்
புண்டருங் கருதிச் செங்கட் பூதநா யகநீ அன்றேல்
சண்டனை உதைப்பார் யாரே தாழ்த்திடல் அவன்றன் ஆவி
கொண்டருள் இறையின் என்று குறையிரந் தரைய லுற்றார். 145
வேறு
வானவார் உரைகேளா மறலியொ டிகல்வெங்கண்
தானவன் இவனேஎன் தனிஉயிர் அடுகிற்பான்
ஈனம துறுதேவர் இவனொடு நுமையின்றே
ஊனுடல் உயிரோடும் உண்குவன் அதுகாணீர். 146
என்னலும் இகல்சிங்கன் எரிகலுழ் விழியான்என்
முன்னிது புகல்கின்றாய் முடிகுவை இனியென்னாக்
கொன்னலில் தருகையால் கொடிறுடை தரமோத
ஒன்னலன் அதுபோழ்தின் ஒலிமுகி லெனவீழ்ந்தான். 147
போழுறு பகுவாயில் பொலிதரும் எயிறோடும்
வீழுறு நகையாலும் விரிகுரு தியினாலுந்
தாழுறு மதிதன்னைத் தாரகை நிரைசூழ
ஊழுற அமா¢செவ்வான் ஒத்ததவ் வுழியன்றே. 148
சண்டனும் இறலோடும் சமன்விட வருதூதர்
அண்டலர் வெருவாமுன் அலமரல் உறுகின்றார்
கண்டனன் அதுசிங்கன் கையன துயிர்தன்னைக்
கொண்டணை குதிரென்னக் குறுகினர் அதுகொண்டார். 149
ஆனதொர் செயல்பாரா அசமுகன் எனவோதும்
மானவன் இறைநில்நில் வந்துன துயிர்உண்பல்
ஏனைய ரெனவேநீ எண்ணலை எனையென்னாக்
கானிமிர் தருதேர்மேற் கடுவிசை யொடுசென்றான். 150
சிங்கன தெதிர்செல்லுஞ் செல்லுறழ் பகுவாயான்
அங்கணு கிடும்வேலை அதிபல மதுவென்போன்
எங்கினி அகல்வாய்நீ இற்றனை இவண்என்னாப்
பொங்கிய சினமோடும் பொள்ளென விடைபுக்கான். 151
செந்தழல் புரைவெங்கட் டிறல்அச முகன்என்போன்
முந்துற மதுவென்னும் மொய்ம்பினன் எதிர்கோடல்
அந்தக னொடுகாலன் அமர்புரி தரவேமுன்
வந்தெதிர் எதிர்தன்மை மானுவ தெனலாமால். 152
அணுகினர் இருவோரும் அசமுகன் அதுகாலைக்
குணநனி சிலைகொள்ளக் குலவிய சிலைகொள்ளாக்
கணிகையர் மிளிர்வேற்கட் கடைநில வியதென்ன
நுணுகிய நுதிவெங்க ணோன்கணை சிதறுற்றான். 153
முன்னது வரலோடும் முகனுறு செயலோரான்
துன்னுபு செறிபோழ்துந் துணைவிழி இமையாதான்
தன்னிலை இறையேனுந் தவிர்கிலன் ஒருதானே
அந்நிலை தனில்நின்றான் அடுதிறல் முயல்கின்றான். 154
பாலுற நிமிர்கின்ற பழுமர மதுபற்றா
மேலுறு சரம்வீசான் விடுகணை படமெய்யில்
சாலிகை யெனநின்றான் தகுவன திரதத்தில்
காலென விசைசென்றே கருமுகி லெனஆர்த்தான். 155
ஆர்த்தனன் அதுகேளா அசமுகன் அயர்வெய்தித்
தேர்த்தனில் நிலமீதிற் சிலையொடு கணைசிந்தி
வேர்த்தனன் வறிதுற்றான் விம்மினன் மெலிதன்மை
பார்த்தனன் மதுவென்போன் இவையிவை பகர்கின்றான். 156
வீரனும் அலைஎஞ்சா வெஞ்சமர் வலன்எய்தச்
சூரனும் அலைநின்றே சூர்நிலை அதுகாணுந்
தீரனும் அலைஎன்னே செருமுய லுதிநீநின்
ஆருயிர் கொடுபோகென் றவனியின் மிசைபோனான். 157
பாரிடன் நிலன்மேவப் பகர்அச முகன்என்னும்
பேருடை யவன்வௌ¢கிப் பெருமிதம் இலனாகிப்
போரிடை வெருவுற்றேன் எனவொரு புரையுற்றேன்
ஆரிடை யிதுதீர்வ னெனஅல மருகின்றான். 158
ஆயிடை அவுணன்தான் அமா¢புரி கிலனாகிப்
போயினன் அவன்அந்தோ பொன்றுதல் இனிதென்னாக்
காயமொ டுளமானக் கனல்சுட மனம்வேவத்
தீயென வெகுளுற்றான் செருமுயல் திறல்பெற்றான். 159
ஒல்லையின் அவன்ஏகி யுழிதனி தொடராநிற்
கொல்லுவன் இனியாண்டுக் குறுகினும் அகலாதே
நில்லுநில் லெனவாரா நீனிற முகிலென்னச்
செல்லுறழ் பகுவாயால் திசைசெவி டுறஆர்த்தான். 160
அற்றமில் மதுவென்போன் அசமுகன் உரைகேளாக்
கற்றதும் உளகொல்லோ கழறினை சிலவீரம்
பெற்றிலை யெனைநாடிப் பெயருதல் பிழைளேனும்
உற்றலை இசையெற்கோர் உறுபழி தருகின்றாய். 161
என்றிது புகல்கின்றோன் எதிருற இகலிப்போய்ப்
பொன்றிகழ் சிலைகோலிப் பொறியுமிழ் பிறைவாளி
ஒன்றல பலவுய்பப உருகெழு சினமெய்தி
நின்றனன் அவையாவும் நெடியகை கொடுவீசி. 162
வேறு
வைத்தலைப் பகழிமேல் விடுப்ப மாமது
எய்த்திலன் இறையுமென் றெண்ணி எண்ணலன்
முத்தலைக் கழுவயின் முசலம் ஆதியாங்
கைத்தலப் படையெலாஞ் சிதறுங் காலையே. 163
சாரதன் மெய்யுறத் தளர்ந்து தானவன்
தேரினை விரைந்துதன் செங்கை யாலெடா
வாரிதி மேற்செல விடுப்ப வஞ்சகன்
பாரிடை ஒல்லையிற் பாய்ந்து மேயினான். 164
குப்புறு கின்றவன் கூளி வேந்தன்முன்
வெப்பமொ டணுகுறா வீங்கு தோளினால்
துப்புறு மற்றொழில் தொடங்க வானகத்
தப்புறம் அவனசெல அடிகொண் டோச்சினான். 165
வெய்தென இறந்துவான் மீண்டு பூதன்முன்
எய்தினன் அவனுரத் திடியின் எற்றியே
வைதனன் போயினன் மறைந்து மற்றொரு
கைதவம் நினைந்தனன் ககனம் புக்குளான். 166
வரந்தனிற் பெற்றதோ£¢ மாயன் நேமியைக்
கரந்தனில் எடுத்தனன் கருத்தில் அர்ச்சனை
புரிந்தனன் தொழுதனன் போற்றிப் பூதன்மேல்
விரைந்துற விடுத்தனன் விளிந் தன்மையான். 167
மாசுறும் அசமுகன் மதுவின் ஆகமேற்
பாசனம் வியப்பமால் பரிதி உய்த்தலும்
காசினி அவன்வெறுங் கரத்தன் ஆதலின்
வீசிய அப்படை வெகுண்டு மீண்டதே. 168
கணையிருள் உருவினைக் கனலி சேர்ந்தென
முனைகெழும் அசமுகன் முடியை அட்டதால்
தனதுகை நேமிதன் னால்உ றாததோர்
வினையிலை என்பது மெய்மை போலுமால். 169
உலந்தனன் அசமுகன் உருமு வீழ்ந்தென
நிலந்தனில் வீழ்தலும் நின்ற தானவர்
புலந்தனர் ஆழிமால் புடையிற் போயது
தொலைந்ததின் றமரெனா அமரர் துள்ளவே. 170
சாற்றிய அவுணர்தந் தலைவர் ஏனையர்
நாற்றிறப் படையொடு நடந்து தம்முளஞ்
சீற்றம தாகியே செவி ளைத்தலும்
ஏற்றெதிர் சாரதர் இரிந்து போயினார். 171
வெற்றிகொள் தானவர் வெகுண்டு போர்செயப்
பற்றல ராகிய பாரி டத்தவர்
இற்றனர் வன்மையை இரிந்து போயினார்
மற்றது கண்டனன் வலிய தணடகன். 172
வேறு
ஏற்ற மாகும் இலக்கவில் வீரருட்
சாற்று பேரிசைத் தண்டகப் பேரினான்
கூற்றை நேர்வ தொருசிலை கோட்டியே
மாற்ற லார்மிசை வாளிகள் தூவினான். 173
மின்னு நாரி வியன்சிலை யேசிலை
துன்னு நாணொலி சூருரு மேற்றொலி
பொன்னின் வாளி மழைபொழிந் திட்டதான்
மன்னு தண்டக மாப்பெருங் கொண்டலே. 174
தட்டின் மொய்ம்புடைத் தண்டக மேலையோன்
விட்ட வாளிகள் வெய்யவர் தானையுட்
பட்ட காலைப் பரந்தெழு சோரிநீர்
மட்டி லாத குடிஞையின் வந்ததே. 175
இரதம் இற்றன எண்ணில வண்ணமார்
பரிகள் பட்டன பற்பல மாமதக்
கரிகள் பட்ட கணிப்பில எண்ணிலா
அரிகள் நேர்அவு ணப்படை பட்டதே. 176
இந்த வாறிவர் பட்டிட ஏனையோர்
நொந்து தம்முயிர் காப்ப நுதலியே
சிந்தி யேயெண் டிசையினும் பாரினும்
அந்த ரத்தினு மாய்இரிந் தோடினார். 177
வேறு
தண்டா அவுணப் படையிவ்வகை சாய்ந்த வாறும்
எண்டா னைமள்ளர் பலர்அங்கண் இறந்த வாறும்
விண்டாழ் கதிரைச் சிறைபூட்டிய வீர வீரன்
கண்டான் வெகுண்டான் நகைத்தொன்று கழறு கின்றான். 178
மட்டார் தெரியல் மகவான் முதல் வானு ளோர்கள்
எட்டாத சேணில் தொலைவெய்தி இரிந்து போக
வட்டாடல் செய்த நமரங்களின் றாவி மாண்டு
பட்டா£¢கொல் ஈசன் மகன்ஏவு படைகள் தம்மால். 179
எல்லார் கதிரைச் சிறைபூட்டிய யானும் நிற்க
ஒல்லார்கள் ஆற்றல் உளராயடும் ஊறறம் நான்றால்
கொல்லாது சீற்றம் இலதாய்இகல் கொண்டு றாதேல்
வெல்லாது கொல்லோ அரிதன்னையும் வேழம் எல்லாம். 180
வாரார் கழற்கால் அமராரட மாய்ந்த வௌ¢ளம்
ஈரா யிரத்தின் மிகுமல்லதை எஞசு றாதால்
பேராமல் என்பாங் கரின்நிற்பன் பேசில் வௌ¢ளம்
ஓரா யிரமே இரிகின்ற தொழிந்த தெல்லாம். 181
ஒன்றே வரிவில் ஒருவேன்பிடித் தொன்ன லார்மேற்
சென்றே அடல்செய் திலன்முன்னமென் சேனை யெல்லாங்
கொன்றே னியானே பொரவிட்டனன் கூழை தன்னின்
நின்றேன் இ·தோர் பொருளென்று நினைந்தி லேனால். 182
தீருஞ் செயலை நினைந்தாவதென் செனறி யானே
ஓரொன்று கன்னல் முடிகின்றமுன் ஒன்ன லார்தம்
பேரின் றெனவே அடுவேனது பெற்றி லேனேல்
சூரன் குமரன் அலன்யானெனச் சூள்மொ ழிந்தான். 183
பானுப் பகைவன் இவைகூறிப் பரிதி மான்தேர்
மானக் கடுங்கோல் வலவன் மரபிற் கடாவச்
சேனைக் கடலி னுடன்சென்றுதன் செங்கை தன்னில்
கூனற் சிலையைப் புருவத் தினொடு குனித்தான். 184
மேதக்க தன்கைச் சிலைவாங்கி விளங்கும் வௌ¢ளி
சோதிக் கிறையாயுறும் எல்லையிற் சூல்கொள் மேகம்
மூதக்க பாரிற் சொரிந்தென்ன முனிந்து நேரும்
பூதப் படைமேற் பரமாரி பொழிதல் உற்றான். 185
பொழிகின்ற காலைத் திறன்மேதகு பூதர் நோக்கிக்
குழிகின்ற கண்ணின் அழல்காலக் குலாச லங்கள்
ஒழிகின்ற வெற்பு முழுதும்பறித் தொல்லை வீசி
அழிகின்ற காலத் துருமேறென ஆர்த்து நின்றார். 186
என்றின் பகைஞன் தனைபூதா¢கள் யாரும் வீசுங்
குன்றம் பலவும் புடைசுற்றக் குறித்து நோக்கி
ஒன்றங் கதனுக் கொருகோடி ஒண்கோல தாகத்
துன்றும் படியே முறைதூண்டித் துகள்செய் திட்டான். 187
வண்டூது பூந்தாரவன் வாளியின் மாய்ந்த குன்றம்
நுண்டூளி யாகியது வானிடை நொய்தின் ஏகி
விண்டூர்க டோறுஞ் செறிகின்றவர் மேனி தோயக்
கண்டூதி ஆற்றாதவர் விண்ணிடைக் கங்கை புக்கார். 188
தேவுத் தடந்தேர் ஒருவன்செரு வெல்லை முற்றும்
மேவிக் கறங்கில் திரிவான்றனி வில்லை வாங்கிக்
கோவைத் தொடையொன் றினில்ஆயிர கோடி வாளி
தூவக் கணத்தின் தொகைமுற்றுந் தொலைவு செய்தான். 189
நன்கா லநீவி மிளிர்கின்ற நறுசெய் தோய்ந்த
மின்கா லதனின் விரைகின்ற செந்தீயின் வெய்ய
முன்காலு கின்ற சுடருள்ளன மூன்று கண்ண
வன்காலன் அஞ்ச அடவல்லன வஞ்சன் வாளி. 190
தோளைத் துணிக்குங் கரத்தோடு துணிக்கு மார்பைத்
தாளைத் துணிக்கும் எரிகுஞ்சித் தலைது ணிக்கும்
வாளைத் துணிக்கும் அணிமெய்வயப் பூதர் வாழ்க்கை
நாளைத் துணிக்கும் அசுரன்விடு நாம வெங்கோல். 191
சூரற் கினிய மகன்வாளி துணித்து வீச
வீரத்தின் மிக்க கணத்தின்றலை வீழு முன்னர்ச்
சீருற்ற சோரிப் புனல்சிந்துவ தீயர்சென்ற
பாரைப் புனிதஞ் செயுந்தன்மை படைத்த தன்றே. 192
பொன்செய் றிலங்குங் கணைத்தள்ளலும் பூதர் சென்னி
மின்சென்ற வானத் தெழச்சோரியு மீதெ ழுந்த
என்சென் றனையாங் குமரன்படை ஏக லென்னாப்
பின்சென்று பற்றித் தருவான்றொடர் பெற்றி போலும். 193
எய்யுந் தொழிலுக் கவன்மேலவர் யாவர் எங்கள்
ஐயன் வடையாகிய பூதர்தம் மாற்றல் மொய்ம்புங்
கையும் வரையுஞ் சிரமுங் கழற்காலும் மார்பும்
ஒய்யென் றறுக்கும் அவுணன்விடும் ஒன்றொர் வாளி. 194
வானோர் தொகையைச் சிறையிட்டவன் மற்றிவ் வாறு
தானோர் சிலையின் வலியாலடத் தாவில் பூதர்
ஆனோர் அளப்பில்லவர் மாய்ந்திட ஆற்ற லில்லா
ஏனோர்கள் யாரும் உடையவார்இவை எண்ண லுற்றார். 195
மின்னும் புகர்வேலவன் அங்குளன் வீர வாகு
பின்னின்றனன் ஈதுண ரான்பிற ராரு மற்றே
முன்னின்ற நம்மை இவன்அட்டிடு மொய்ம்பி லேம்யாம்
என்னிங்கு நிற்ப தெனப்பூதர் இரிந்து போனார். 196
இரிகின்ற பூதர் எவரும் படைக்கீற்றின் நின்ற
வரிகின்ற தண்டார் அடல்மொய்ம்புடை வள்ளல் பாங்கர்ப்
பரிகின்ற நெஞ்சத் தொடுசெல்லவப் பான்மை யாவுந்
தெரிகின்றனன் உக்கிரன் என்பதொர் சேனை வேந்தன். 197
கண்டுக் கிரனாகிய பூதன் கனன்று செங்கண்
விண்டிற் பெரிது நிவப்புற்று விளங்கு பொன்னந்
தண்டப்படை ஒன்றினை அங்கையில் தாங்கி யேகி
அண்டத் தவர்கள் புகழத்தனி ஆர்த்து நேர்ந்தான். 198
செற்றத்துடன் உக்கிரன் நேர்புகு செய்கை தன்னைக்
கற்றைக்கதி ரைத்தளை இட்டவன் கண்டு தன்கைக்
கொற்றச்சிலை யைக்குனித் தாயிர கோடி வாளி
முற்றத்துரந் தேயவன் யாக்கையை மூடி ஆர்த்தான். 199
மைக்கின்ற மேனி நெடும்பூதனை வஞ்சன் வாளி
தைக்கின்றில வானுதி மாய்ந்து தளர்ந்து வீழ்ந்த
மெய்க்கின்ற இன்பும் அறனும் விளையாது வாளா
பொய்க்கின்ற வன்கைப் பொருள்வல்லையிற் போ தேபோல். 200
விடுகின்ற வாளி பயனின்றயல் வீழ்த லோடும்
படுகின்ற தன்மை யதுகண்டனன் பானு கோபன்
அடுகின்ற தெவ்வா றிவன்றன்னையென் றங்கண் வானந்
தொடுகின்ற தாங்கோ ரெழுவத்தைச் சுழற்றி விட்டான். 201
தீயன்முச லந்தனை உக்கிரன் செங்கை தாங்கும்
ஆய்திண்கதை யாற்சிதைத் தேயவன் தேரை அண்மிப்
பாயும்பரி யைப்புடைத் தொல்லையிற் பாரின் வீட்ட
வேயென்று பல்காலிகழ்ந் தா£¢த்தனர் யாரும் வானோர். 202
புரவித் தொகுதி விளிவாகப் பொருவின் மைந்தன்
எரியிற் கனன்று புடைஓ ரிரதத்தின் வாவி
வா¤விற் குனித்துக் கிரன்ஏந்தும் வலிய தண்டம்
முரிவுற்றிட வேயொரு நூறு மொட்டம்பு தொட்டான். 203
நூறொண்கணை யால்அவன் தண்டம்நுண் டூள தாகச்
சீறுந்திறல் உக்கிரன் கைக்கொடு தீயன் மைந்தன்
ஏறுந்தடந் தேர்தனை வானின் எடுத்து வீச
வீறும் பரிதி பதத்தின்துணை மேய தன்றே. 204
துன்னான் மதலை வருகின்றது சூரன் நோக்கி
முன்னாளின் நின்று நமைப்பற்ற முயன்று ளான்கொல்
அன்னான் புணர்ப்பை உணரேன்அணித் தாகும் இன்னம்
என்னா வதோவென் றுளத்துன்னி இரிந்து போனான். 205
தேரோடு சென்ற அசுரன்மகன் சேணின் மீண்டு
பாரோடு சேர்வான் வருகின்ற பரிசு நோக்கில்
காரோடு வானந் தவறுற்றுழிக் காமர் தாருத்
தூரோடு சாய்ந்து மறிகின்றதொர் தோற்றம் ஒக்கும். 206
வேறு
வீழு கின்றதேர் ஒருவியே வெங்கதிர்ப் பகைஞன்
தாழு மெய்யுடை உக்கிரன் தன்னைவந் தணுகி
மாழை யொண்கையால் எற்றியே எடுத்துவா னுலகோர்
ஏழை யுங்கடந் தப்புறஞ் சென்றிட எறிந்தான். 207
எறியும் வெய்யவன் வேறொரு தேரின்மே லேறி
வௌ¤கொள் பங்கயத் தண்ணலார் விதித்துமுன் னளித்த
செறியு மூவிலை இருதலை வேலினைச் சேண்போய்
மறியும் உக்கிரன் எதிர்புக விடுத்தனன் மன்னோ. 208
விடுத்த தெய்வவேல உக்கிரன் மருமத்தை விடர்போற்
படுத்தி யேபுகுந் தப்புறம் போந்திடப் பாரின்
அடுத்து மற்றவன் சிறியதர் வுற்றனன் அதுகண்
டெடுத்த குன்றொடுந் தண்டியென் றுரைப்பவன் எதிர்ந்தான்.209
தண்டி யாகிய பாரிடன் தனதுகைத் தலத்தின்
மிண்டு கின்றதோர் அடுக்கலை அவன்மிசை வீசக்
கொண்ட வார்சிலை வாங்கி ஆயிரங்கணை கோத்துக்
கண்ட துண்டம தாக்கினன் அதனையோர் கணத்தில். 210
வெற்பு நுண்டுகள் ஆதலும் விண்ணுற நிமிர்ந்து
கற்ப கம்புரை மராமரம் ஒன்றினைக் களைந்து
வற்பு றுங்கரந் தனினெடுத் தவுணர்கோன் மணித்தேர்
முற்பு குந்திடும் பரிகளைப் புடைத்தனன் மொய்ம்பால். 211
மொய்ம்பி னிற்புடைத் திடுதலுங் கவனமா முழுதும்
அம்பு வித்தலை மறிந்தன அதற்குமுன் அவுணன்
பைம்பொன் முத்தலைப் பலபதி னாயிரம் பகழி
செம்பு னற்கொளத் தண்டிதன் நெற்றியுட் செறித்தான். 212
செறித்த காலையின் மெலிந்தனன் தண்டியச் செய்கை
குறித்து நோக்கியே பினாகியாம் பூதனோர் குன்றம்
பறித்து வீசுவான் முயறலும் ஆயிரம் பகழி
நிறத்தின் மூழ்குமா றெய்தனன் அனையனும் நின்றான். 213
குன்று கொண்டகைப் பினாகியுந் தொல்வலி குறைந்து
நின்ற காலையி வேனைய பூதரும் நேர்ந்து
சென்று வீற்றுவீற் றமரினைச் சிலபொழு தியற்றி
ஒன்று தீங்கதிர்ப் பகைஞனுக் காற்றலர் உடைந்தார். 214
எண்ட ருங்கணத் தலைவர்கள் தொலைதலும் இதனைக்
கண்டு வெஞ்சினந் திருகியே எதி£¢ந்தனர் கபாலி
அண்ட லோசனன் நிரஞ்சனன் உருத்திரன் அகண்டன்
தண்ட கன்முதல் இலக்கமா கியபடைத் தலைவர். 215
மிடல்ப டைத்திடும் இலக்கமாம் வீரரும் விரவித்
தடம ணிப்பெருந் தேரொடும் அவுணன்முன் சார்ந்து
சுடரு டைக்கட கங்கிளர் செங்கையில துன்னுங்
கொடும ரத்தினைக் குனித்தனர் நாணொலி கொண்டார். 216
கவடு பட்டிடும் ஈரிரு மருப்புடைக் ககுபக்
குவடு பட்டதை உரைப்பதெ னொருகரிக் கொம்பாற்
சுவடு பட்டிடு மேருவுஞ் சலித்தது துளங்கிச்
செவிடு பட்டன வானமும் வையமுந் திசையும். 217
பானு கோபன்மற் றதுகண்டு சிறுநகை படைத்து
மான வெஞ்சிலை யொன்றினைத் தோள்கொடு வணக்கி
மேன லந்திகழ அண்டங்கள் யாவையும் வெருவத்
தேனின் வீழ்ச்சியை மலைந்திடுங் குணத்தொலி செய்தான். 218
உலத்தின் மேற்படு மொய்ம்புடை இலக்கரும் ஒருங்கே
வலத்தில் வெஞ்சிலை இடத்தினில் வடிக்கணை தொடுத்து
நிலத்தில் வந்துகார் நெடும்புனல் சிதறிய நெறிபோற்
புலத்தி யன்முறைப் பேரன்மேல் தலைத்தலை போழிந்தார். 219
தொடலை அம்புயத் திலக்கமாம் பொருநருந் தொடுத்து
விடுச ரத்தொகை அவுணன்மேல் வீற்றுவீற் றேகல்
நெடிய தெண்டிரைப் பேரியா றெண்ணில நிரந்து
புடவி கொண்டதோர் அளக்கர்மேற் போவன போலும். 220
இலக்கர் விட்டிடு சரமெலாம் அவுணர்கள் எவருங்
கலக்க முற்றிட வருதலுஞ் சூ£¢மகன் கண்டே
கொலைக்கொ டுஞ்சிலை வளைத்ததில் ஆயிர கோடி
விலக்க ருங்கணை தொத்தவை அறுத்தனன் விரைவில். 221
அறுத்து மற்றுமோ ராயிர கோடிஅம் பதனைச்
செறுத்து விட்டிட அறுமுகன் பரிசனர் தெரிந்து
விறற்க டுங்கணை யாங்கதற் கெழுமையால் விடுத்து
மறித்து மீண்டிடு வித்தனா¢ அவுணர்கோன் வாளி. 222
அறந்தி றம்பிய சூர்மகன் வாளிகள் அனைத்தும்
முறிந்து மற்றவன் தன்மிசை உற்றன முழங்கிச்
செறிந்த மாமுகில் உயிர்த்திடுஞ் சீகரஞ் செல்லா
தெறிந்து கால்பொர வந்துழி மீண்டுபோம் இயல்போல். 223
செங்க திர்ப்பகை சீறியே செயிரிலா வயிரத்
துங்க வெங்கணை அபரித மிசைமிசை துரந்து
வெங்கண் வீரா¢கள் செலுத்திய சரமெலாம் விலக்கி
அங்கை யிற்கொண்ட கார்முகம் இலக்கமும் அறுத்தான். 224
பிடித்த கார்முகம் அற்றுழி மானவர் பெயர்த்துந்
தடத்த தேரிடை இருந்திடுஞ் சேமமாந் தனுக்கள்
எடுத்து வாங்கியே சரந்துரந் திரவியம் பகைஞன்
தொடுத்து மேவிடுங் கணைகளை இடையிடை துணித்தார். 225
சூரன் மாமகன் தொடுசரந் துணித்தபின் தூண்டுந்
தேரி லாயிரம் பரியினூ றாயிரந் தெழிக்
காரு லாவரு பதாகையில் ஆயிரங் கடவி
ஊரும் வன்மைசோ¢ வலவன்மேல் ஆயிரம் உய்த்தார். 226
வசையில் வீரர்கள் இவ்வகை விடுத்தலும் மனத்திற்
பசையில் சூர்மகன் இரதமும் பரிகளும் பாகும்
அசனி கொண்டதோர் துசவமும் அற்றன அதற்பின்
விசையில் வேறொரு தேரிடைப் பாய்ந்தனன் வெகுண்டு. 227
வைய மேற்செலும் அவுணர்கோன் தன்சிலை வணக்கிச்
செய்ய கூர்ங்கணை நூறுநூ றாயிரஞ் செலுத்தி
ஐயன் விட்டவர் தேரொடு சிலைகளை அறுத்து
மெய்யி டந்தொறும் அழுத்தினன் எண்ணிலா விசிகம். 228
பரிதி மாற்றலன் பகழிகள் மெய்யெலாம் பட்டுக்
குருதி சோ£¢தலும் இலக்கருந் தொல்வலி குறைந்து
பெரிது நோயுழந் தாற்றல ராகியே பின்னர்ப்
பொருதி றந்தனை நினைந்திலர் உடைந்துபின் போனார். 229
வற்பு றுத்திய இலக்கம்வில் லாளரும் மலைய
விற்பி டித்தவன் ஒருவனே யாரையும் வென்றான்
முற்ப கற்புரி தவப்பயன் இ·தென மொழிமோ
கற்பி னாற்றலென் றுரைத்துமோ கழறுவ தெவையே. 230
ஆன காலையில் வீரகோ ளரியென அறையும்
மான வீரன்மற் றதுகண்டு தனதுவில் வளைத்துப்
பானு கோபன்முன் னெய்தியே பிறைமுகப் பகழி
சோனை மாரியும் விம்மித முற்றிடச் சொரிந்தான். 231
சொரிந்த காலையில் அதுகண்டு சூரன்மா மதலை
சிரந்து ளக்கியே ஈங்கிவன் ஆற்றலுந் திறலும்
பெருந்த னிச்சிலை விஞ்சையும் நன்றெனப் பேசி
வரிந்த கார்முகங் குனித்தனன் பனித்தனன் வானோர். 232
குனித்த சாபத்தின் நூறுநூ றாயிர கோடி
நுனித்த வச்சிர நொறிலுடைப் பகழிகள் நூக்கித்
தனித்து நேர்ந்தவன் விடுத்திடு சரமெலாந் தடிந்து
துனித்தி டக்கணை ஆயிரம் அழுத்தினன் தோள்மேல். 233
தோளில் ஆயிரம் வெங்கணை அழூத்தலுந் தோலாக்
கோள ரித்திறற் பேரினன் கோமகன் துரந்த
வாளி யாவையும் விலக்கியே ஆங்கவன் மருமஞ்
சாள ரம்படச் செறித்தனன் ஆயிரஞ் சரங்கள். 234
சரங்கள் ஆயிரம் அகலமேல் அழுத்தலுந் தகுவன்
இரங்கி நோயுழந் தாற்றவும் முனிவுசெய் திவனைக்
கரங்கொள் வில்லினால் வெல்லரி தாமெனக் கருதி
உரங்கொள் விண்டுவின் படைக்கலந் தனையெடுந் துய்த்தான்.235
நார ணன்படை ஆங்கவன் உருக்கொடு நடந்து
வீர கோளரி விடுத்திடு சரமெலாம் விழுங்கிப்
பாரும் அண்டமும் நடுக்குற இடிக்குரற் பகுவாய்க்
காரி ரிந்திட ஆர்ப்பொடு கடிதுசென் றதுவே. 236
விண்டு வின்படை அணுகலும் விறலரி யதனைக்
கண்டு மால்படை எடுக்குமுன் அப்படை கடிதாய்
வண்டு லாந்தொடை மார்பிடம் புகுந்துமன் னுயிரை
உண்ட தில்லையால் அவசமாக் கியதவ னுணர்வை. 237
அண்ணல் ஏந்திடும் வேற்படை ஆணையால் அனையான்
உண்ணி லாவுயிர் கொளவஞ்சி எருவைநீ ருண்டு
கண்ண னார்படை சிறிதுதன் வன்மையுங் காட்டித்
துண்ணெ னப்பின்னர் மீண்டது சூர்மகன் தன்பால். 238
மீண்ட காலையில் வீரகோ |