|
Home > Shaiva Siddhanta > Thirumurai
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம் (தொடர்ச்சி) - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் முதல்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம் (தொடர்ச்சி)
29 ஏயர் கோன் கலிக் காம நாயனார் புராணம்
1. நீடு வண் புகழ்ச் சோழர் நீர் நாட்டு இடை நிலவும் 3155-1
மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்பால் 3155-2
ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர் தான் 3155-3
பீடு தங்கிய திரு மங்கலப் பெயர்த்தால் 3155-4
2. இஞ்சி சூழ்வன எந்திரப் பந்தி சூழ் ஞாயில் 3156-1
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் 3156-2
நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல்லடிச் செம் 3156-3
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு 3156-4
3. விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடுவீதி 3157-1
முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் 3157-2
மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் 3157-3
உழவு அறாத நல் வளத்தன ஓங்கிருங் குடிகள் 3157-4
4. நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்துக் 3158-1
காரினில் திகழ் கண்டர் தம் காதலோர் குழுமி 3158-2
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும் 3158-3
சீரின் மிக்கது சிவபுரி எனத் தகும் சிறப்பால் 3158-4
5. இன்ன வாழ் பதி அதன் இடை ஏயர் கோக் குடிதான் 3159-1
மன்னிய நீடிய வளவர் சேனாபதிக் குடியாம் 3159-2
தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய 3159-3
பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால் 3159-4
6. அங்கண் மிக்க அக் குடியினில் அவதரித்து உள்ளார் 3160-1
கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் 3160-2
தங்கள் நாயகர் அடி பணிவார் அடிச்சாந்து 3160-3
பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார் 3160-4
7. புதிய நாள் மதிச் சடைமுடியார் திருப் புன் கூர்க் 3161-1
அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து 3161-2
நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று 3161-3
துதியினால் பரவித் தொழுது இன்புறு கின்றார் 3161-4
8. நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டு அதனுக்கு 3162-1
இயாவர் இச் செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்பத் 3162-2
தேவர் தம் பிரான் அவர் திறம் திருத்திய அதற்கு 3162-3
மேய வந்த அச் செயலினை விளம்புவான் உற்றேன் 3162-4
9. திருத் தொண்டத் தொகை அருளித் திருநாவலுர் ஆளி 3163-1
கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர் 3163-2
ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து 3163-3
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் 3163-4
10. தாள் ஆண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த 3164-1
வேளாளர் குண்டையூரக் கிழார் எனும் மே தக்கோர் 3164-2
வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று 3164-3
ஆளாகக் கொண்டவர்தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார் 3164-4
11. செந் நெல்லும் பொன்னன்ன செழும் பருப்பும் தீம்கரும் பின் 3165-1
இன்னல்ல அமுதும் முதல் எண்ணில் பெரும் வளங்கள் 3165-2
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுதாக வழுவாமல் 3165-3
பன்னெடு நாள் பரவையார் மாளிகைக்குப் படி சமைத்தார் 3165-4
12. ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற 3166-1
வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்கப் 3166-2
போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்குப் போ தாமை 3166-3
மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார் 3166-4
13. வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க 3167-1
இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து 3167-2
துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே 3167-3
அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள் புரிவார் 3167-4
14. ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் என்று அருளி 3168-1
நீரூரும் சடை முடியார் நிதிக் கோமான் தனை ஏவப் 3168-2
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலைப் பிறங்கல் 3168-3
காரூரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது ஆல் 3168-4
15. அவ்விரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே 3169-1
எவ்வுலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்து 3169-2
செவ்விய பொன் மலை வளத்தார் திரு அருளின் செயல் போற்றிக் 3169-3
கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார் 3169-4
16. நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு 3170-1
யாவரால் எடுக்கல் ஆகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப் 3170-2
போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளிச் செய்து 3170-3
தேவர் தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார் 3170-4
17. குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர் கொண்டு கோதில் வாய்மைத் 3171-1
தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று 3171-2
பண்டெலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட 3171-3
அண்டர் தம் பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று 3171-4
18. மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம் 3172-1
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டு 3172-2
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று 3172-3
இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார் 3172-4
19. விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி 3173-1
அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி 3173-2
எண்ணில் சீர்ப் பரவை இல்லத்து இந் நெல்லை எடுக்க ஆளும் 3173-3
தண்ண்¢லவு அணிந்தார் தமே தரில் அன்றி ஒண்ணாது என்று 3173-4
20. ஆளிட வேண்டிக் கொள்வார் அருகு திருப்பதியான 3174-1
கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி 3174-2
வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் 3174-3
மூள வரும் காதல் உடன் முன் தொழுது பாடுதலும் 3174-4
21. பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி 3175-1
மிகப் பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப் 3175-2
புகப் பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் 3175-3
நிகர்ப்பு அரியது ஒருவாக்கு நிகழ்ந்தது நின் மலன் அருளால் 3175-4
22. தம் பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்து எழுந்தே 3176-1
உம்பரால் உணர்வு அரிய திருப் பாதம் தொழுது ஏத்திச் 3176-2
செம் பொன் நேர் சடையாரைப் பிறபதியும் தொழுது போய் 3176-3
நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலன் ஆர் 3176-4
23. பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரைப் புக்கு இறைஞ்சி 3177-1
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்திப் புறம் போந்து 3177-2
பாங்கு ஆனார் புடை சூழ்ந்து போற்றி இசைக்க பரவையார் 3177-3
ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர் 3177-4
24. கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படி கூறி 3178-1
மேவி அவர் தம் மோடு மிக இன்புற்று இருந்து அதன்பின் 3178-2
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திரு அருளின் 3178-3
ஏவலினால் அவ்விரவு பூதங்கள் மிக்கு எழுந்து 3178-4
25. குண்டையூர் நெல் மலையைக் குறள் பூதப் படை கவர்ந்து 3179-1
வண்டுலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே 3179-2
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி 3179-3
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன ஆல் 3179-4
26. அவ்விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு 3180-1
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து 3180-2
நவ்வி மதர்த் திருநோக்கின் நங்கை புகழ்ப் பரவையார்க்கு 3180-3
இவ் உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் 3180-4
27. நீக்க அரிய நெல் குன்று தனை நோக்கி நெறி பலவும் 3181-1
போக்க அரிது ஆயிடக் கண்டு மீண்டும் தம் இல் புகுவார் 3181-2
பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இந் நெல்லுப் 3181-3
போக்கும் இடம் அரிதாகும் எனப் பலவும் புகல்கின்றார் 3181-4
28. வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் 3182-1
இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம் 3182-2
பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க என 3182-3
வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார் 3182-4
29. அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்குப் பறை அறைந்த 3183-1
பணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடு 3183-2
அணியாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார் 3183-3
மணியாரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார் 3183-4
30. நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறைநாள் 3184-1
செம் பொன் புற்று இடம் கொண்டு வீற்று இருந்த செழும் தேனைக் 3184-2
தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி 3184-3
இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார் 3184-4
31. குலவு புகழ்க் கோட்டிலியார் குறை யிரந்து தம் பதிக்கண் 3185-1
அலகில் புகழ் ஆரூரர் எழுந்து அருள அடி வணங்கி 3185-2
நிலவிய வன் தொண்டர் அ·து இசைந்து அதன்பின் நேர் இறைஞ்சி 3185-3
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் 3185-4
32. தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர் 3186-1
காவல் கொண்டு தனியாளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி 3186-2
நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணிப் 3186-3
பாவை பாகர் தமைப் பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார் 3186-4
33. மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி 3187-1
ஞாலம் நிகழ் கோட் புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ண 3187-2
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சிக் 3187-3
கோல மணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக்கொடு புக்கார் 3187-4
34. தூய மணிப் பொன் தவிகில் எழுந்து அருளி இருக்கத் தூ நீரால் 3188-1
சேய மலர்ச் சேவடி விளக்கித் தெளித்துக் கொண்ட செழும் புனலால் 3188-2
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப 3188-3
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் 3188-4
35. பூந்தண் பனிநீர் கொடு சமைத்த பொருவு இல் விரைச்சந்தனக் கலவை 3189-1
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறைமான் மதச் சேறு 3189-2
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் 3189-3
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்ணில் மணிப் பாசனத்து ஏந்தி 3189-4
36. வேறு வேறு திருப் பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்து 3190-1
மாறிலாத மணித்திரு ஆபரண வருக்கம் பல தாங்கி 3190-2
ஈறில்விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி 3190-3
ஆறு புணைந்தார் அடித் தொண்டர் அளவு இல் பூசை கொள அளித்தார் 3190-4
37. செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதி ஆம் கோட்புலியார் 3191-1
நங்கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால் 3191-2
தங்கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சித்தலை சிறந்த 3191-3
பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவா 3191-4
38. ஆன விருப்பின் மற்று அவர் தாம் அருமையால் பெற்று எடுத்த 3192-1
தேனார் கோதைச் சிங்கடியார் தமையும் அவர்பின் திரு உயிர்த்த 3192-2
மானார் நோக்கின் வனப்பகையார் தமையும் கொணர்ந்து வன் தொண்டர் 3192-3
தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார் 3192-4
39. அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆகக் கொண்டு அருளிக் 3193-1
கடிசேர் மலர்த் தாள் தொழுது உய்யக் கருணை அளிக்க வேண்டும் எனத் 3193-2
தொடி சேர் தளிக்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக் கொண்டப் 3193-3
படியே மகண்மை யாக் கொண்டார் பரவையார் தம் கொழு நனார் 3193-4
40. கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்து கொண்டு இருந்து 3194-1
காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உட்கசிவால் அணைத்து உச்சி 3194-2
மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி 3194-3
நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பிதம்பிரான் தோழர் 3194-4
41. வென்றி வெள்ளேறு உயர்த்து அருளும் விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி 3195-1
ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் உச்சிகுவித்த கரத்தொடும் 3195-2
சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்துக் 3195-3
கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை 3195-4
42. சிறப்பித்து அருளும் திருக்கடைக் காப்பு அதன் இடைச் சிங்கடியாரைப் 3196-1
பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை நினைத்த பெற்றியினால் 3196-2
மறப்பில் வகைச் சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி 3196-3
நிறப் பொற்பு உடைய இசைபாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார் 3196-4
43. அங்கு நின்றும் எழுந்து அருளி அளவில் அன்பின் உள் மகிழச் 3197-1
செங்கண் நுதலார் மேவு திருவலிவலத்தைச் சேர்ந்து இறைஞ்சி 3197-2
மங்கை பாகர் தம்மைப் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்று 3197-3
எங்கும் நிகழ்ந்த தமிழ் மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார் 3197-4
44. நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டு உகந்தீர் 3198-1
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்து அருளி 3198-2
மன்றின் இடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர் 3198-3
சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம் பொன் கழல் பணிந்து 3198-4
45. இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்து அருளி 3199-1
நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப் 3199-2
புறம்பு நணிய கோயில் களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய் 3199-3
உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் 3199-4
46. செறி புன் சடையார் திருவாரூர்ப் திருப் பங்குனி உத்தரத் திருநாள் 3200-1
குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவறுக்க 3200-2
நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் 3200-3
இறைவர் பாதம் பணிய எழுந்து அருளிச் சென்று அங்கு எய்தினார் 3200-4
47. சென்று விரும்பித் திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி 3201-1
முன்றில் பணிந்து வலம் கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சித் 3201-2
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து 3201-3
நின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ் விப்பார் 3201-4
48. சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழிய 3202-1
வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் 3202-2
அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப 3202-3
மறி வண்கையார் அருளேயோ மலர்கண் துயில் வந்து எய்தியதால் 3202-4
49. துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர் அங்குத் திருப்பணிக்குப் 3203-1
பயிலும் சுடுமண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணித் தேன் 3203-2
அயிலும் சுரும்பார் மலர்ச் சிகழி முடிமேல் அணியா உத்தரிய 3203-3
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்துப் பள்ளி மேவினார் 3203-4
50. சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர்க் கண் 3204-1
பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் 3204-2
வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்வே விரிசுடர்ச் செம் 3204-3
பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி 3204-4
51. தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக் கைக் கமல முகை தலை மேல் 3205-1
கொண்டு கோயில் உள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேர் அன்பு 3205-2
மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழிமாலை 3205-3
பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து 3205-4
52. பதிகம் பாடித் திருக் கடைக் காப் பணிந்து பரவிப் புறம் போந்தே 3206-1
எதிரில் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்து அருளி 3206-2
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் 3206-3
பொதியும் சடையார் திருப் பனையூர் புகுவார் புரிநூல் மணி மார்பர் 3206-4
53. செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக் கூத்தொடும் காட்சி 3207-1
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி 3207-2
ஐயர் தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று 3207-3
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் 3207-4
54. வளம் மல்கிய சீர்ப் பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்து அருளி 3208-1
அளவில் செம்பொன் இட்டிகைகள் ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த் 3208-2
தளவ முறுவல் பரவையார் தம் மாளிகையில் புகத் தாமும் 3208-3
உளமன்னிய தம் பெருமானார் தம்மை வணங்கி உவந்து அணைந்தார் 3208-4
55. வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் 3209-1
அந்தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச் 3209-2
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வப் பெருமாள் திருவாரூர் 3209-3
முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப் பாடியார் தம் காவலனார் 3209-4
56. பல நாள் அமர்வார் பரமர் திரு அருளால் அங்கு நின்றும் போய்ச் 3210-1
சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்துச் சென்று எய்தி 3210-2
வலம் மாக வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் 3210-3
தலமார்கின்ற தண் இயல் வெம்மை யினான் என்னும் தமிழ் மாலை 3210-4
57. பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழி மிழலையினில் 3211-1
நீடு மறையால் மேம் பட்ட அந்தண் ஆளர் நிறைந்து ஈண்டி 3211-2
நாடு மகிழ அவ் அளவு நடைக் காவணம் பாவாடைஉடன் 3211-3
மாடு கதலி பூகம் நிரை மல்க மணித் தோரணம் நிரைத்து 3211-4
58. வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்றவரும் 3212-1
சிந்தை மலர்ந்து திரு வீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின் 3212-2
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில் தன்னை முன் வணங்கி 3212-3
பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார் 3212-4
59. படங்கொள் அரவில் துயில் வோனும் பதுமத்தோனும் பரவிய 3213-1
விடங்கன் விண்ணேர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி 3213-2
அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் எனத் 3213-3
தடம்கொள் செஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்குச் சாரும் நாள் 3213-4
60. வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்பால் 3214-1
தேசு மிக்க திருஅருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள் 3214-2
பாசம் அறுத்து ஆள் கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும் 3214-3
மாசில் பதிகம் பாடி அமர்ந்து அரிசில் கரைப் புத்தூர் அணைந்தார் 3214-4
61. செழு நீர் நறையூர் நிலவு திருச் சித்தீச் சரமும் பணிந்து ஏத்தி 3215-1
விழுநீர் மையினில் பெரும் தொண்டர் விருப்பின் ஓடும் எதிர்கொள்ள 3215-2
மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திருப் புத்தூர் வணங்கி 3215-3
தொழு நீர் மையினில் துதித்து ஏத்தித் தொண்டர் சூழ உறையும் நாள் 3215-4
62. புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு அருளும் திறமும் போற்றிசைத்து 3216-1
முனிவர் போற்ற எழுந்து அருளி மூரி வெள்ளக் கங்கையினில் 3216-2
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து 3216-3
இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவா வடு துறையில் 3216-4
63. விளங்கும் திருவாவடு துறையில் மேயார் கோயில் புடைவலம் கொண்டு 3217-1
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார் 3217-2
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து செம்கணான் 3217-3
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ் சொல் மாலை சாத்தினார் 3217-4
64. சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூடப் 3218-1
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்ணோர் பாகத்து அண்ணலார் 3218-2
தீர்தப் பொன்னித் தென் கரைமேல் திகழும் பதிகள் பல பணிந்து 3218-3
மூர்த்தியார் தம் இடை மருதை அடைந்தார் முனைப் பாடித் தலைவர் 3218-4
65. மன்னு மருதின் அமர்ந்த வரை வணங்கி மதுரச் சொல் மலர்கள் 3219-1
பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் பரவிப் போந்து தொண்டர் உடன் 3219-2
அந் நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை 3219-3
முன்னி புக்கு வலம் கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார் 3219-4
66. பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடிப் பெயர்ந்து நிறை 3220-1
திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல் வணங்கி 3220-2
உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து 3220-3
மருவும் பதிகள் பிற பணிந்து கலைய நல்லூர் மருங்கு அணைந்தார் 3220-4
67. செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ் 3221-1
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவித் தொழுது எழுவார் 3221-2
கொம்மை மருவு குரும்பைமுலை உமையாள் என்னும் திருப்பதிகம் 3221-3
மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து இசையின் விளம்பினார் 3221-4
68. அங்கு நின்று திருக் குடமூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய் 3222-1
மங்கைப் பாகர் வலம் சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத் 3222-2
தங்கு காதல் உடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத் 3222-3
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரைச் சென்று அணைந்தார் 3222-4
69. நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி 3223-1
எல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து இசையால் பரவும் தம் உடைய 3223-2
சொல்லூத்¢யமா அணிந்தவர் தம் சோற்றுத் துறையின் மருங்கு எய்தி 3223-3
அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம் கொண்டு அடி பணிவார் 3223-4
70. அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளிக் 3224-1
கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூரப் பரவிய பின் 3224-2
கெழு நீர்மையினில் அருள் பெற்றுப் போந்து பரவையார் கேள்வர் 3224-3
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் 3224-4
71. தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை 3225-1
மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சிச் 3225-2
சேவில் வருவார் திரு ஆலம் பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு 3225-3
பாவு சயனத்து அமர்ந் அருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண் 3225-4
72. மழபாடி இனில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று 3226-1
குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருளக் குறித்து உணர்ந்து 3226-2
நிழலார் சோலைக் கரைப் பொன்னி வடபால் ஏறி நெடுமாடம் 3226-3
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர் 3226-4
73. அணைந்து திருக் கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து 3227-1
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணைக் 3227-2
குணம் கொள் அருளின் திறம் போற்றிக் கொண்ட புளகத்துடன் உருகிப் 3227-3
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து 3227-4
74. அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி 3228-1
தன்னேர் இல்லாப் பதிக மலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்து 3228-2
மன்னும் பதியில் சில நாள் கள் வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்து 3228-3
பொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார் 3228-4
75. செய்ய சடையார் திரு ஆனைக் காவில் அணைந்து திருத் தொண்டர் 3229-1
எய்த முன் வந்து எதிர் கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தே 3229-2
ஐயர் கமலச் சேவடிக் கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து 3229-3
மெய்யும் முகிழ்ப்பக் கண் பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார் 3229-4
76. மறைகளாய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் 3230-1
நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி 3230-2
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் 3230-3
உறையூர்ச் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி 3230-4
77. வளவர் பெருமான் மணியாரம் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக் 3231-1
கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவிப் போக ஏதம் உற 3231-2
அளவில் திருமஞ்சனக் குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளித் 3231-3
தளரும் அவனுக்கு அருள் புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார் 3231-4
78. சாற்றி அங்குத் தங்கு நாள் தயங்கும் பவளத் திருமேனி 3232-1
நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால் 3232-2
போற்றி அங்கு நின்றும் போய்ப் பொருவில் அன்பர் மருவிய தொண்டு 3232-3
ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார் 3232-4
79. சென்று திருக் கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்து மணி 3233-1
முன்றில் வலம் கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி 3233-2
நன்று பெருகும் பொருள் காதல் நயப்புப் பெருக நாதர் எதிர் 3233-3
நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று 3233-4
80. அன்பு நீங்கா அச்சம் உடன் திருத் தோழமைப் பணியால் 3234-1
பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால் 3234-2
முன்பு நின்ற திருத் தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார்போல் 3234-3
என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார் 3234-4
81. நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப் புலம் கெழும் பிறப்பால் 3235-1
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி 3235-2
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் 3235-3
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் 3235-4
82. இவ் வகை பரவித் திருக்கடைக் காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப 3236-1
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழுநிதிக் குவை அளித்து அருள 3236-2
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகி 3236-3
எவ் வகை மருங்கும் இறைவர் தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் 3236-4
83. அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் 3237-1
எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்திப் 3237-2
பைப் பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கு அமர் புடை வலம் கொண்டு 3237-3
துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரைக் கண்டார் 3237-4
84. கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி 3238-1
வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் 3238-2
கொண்டது ஓர் மயலல் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று 3238-3
அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார் 3238-4
85. பரவி அப் பதிகத் திருக் கடைக் கப்புச் சாத்தி முன் பணிந்து அருள் பெற்றுக் 3239-1
கரவில் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி 3239-2
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கிக் 3239-3
குரவலர் சோலை அணி திருப் பாண்டிக் கொடு முடி அணைந்தனர் கொங்கில் 3239-4
86. கொங்கினில் பொன்னித் தென் கரைக்கறையூர்க் கொடு முடிக் கோயில் முன் குறுகிச் 3240-1
சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து 3240-2
பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி 3240-3
இங்கு இவர் தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய்க் குறிப்பினில் எடுப்ப 3240-4
87. அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு எழுத்து அறிய எப் பொழுதும் 3241-1
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடை அறாது இயம்பும் என்றும் இதனைத் 3241-2
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் பற்றுஇலேன் எனச் செழும் தமிழால் 3241-3
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம் 3241-4
88. உலகு எலாம் உய்ய உறுதி ஆம்பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை 3242-1
நிலவிய சிந்தை உடன் திரு அருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள் 3242-2
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றிப் போந்து தண் பனி மலர்ப் படப்பைக் 3242-3
குலவும் அக் கொங்கில் காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் 3242-4
89. அத் திருப்பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து 3243-1
மெய்த்தவர் சூழ வலம் கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க 3243-2
நித்தனார் தில்லை மன்றுள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்டக் 3243-3
கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் கலுழி நீர் பொழிதரக் கண்டார் 3243-4
90. காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை இல் அன்பு என்பினை உருக்கப் 3244-1
பூண்ட ஐம் புலனில் புலப் படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்கத் 3244-2
தாண்டவம் புரியும் தம் பிரானாரைத் தலைப்படக் கிடைத்த பின் சைவ 3244-3
ஆண் தகை யாருக்கு அடுத்த அந் நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் 3244-4
91. அந் நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற அன்பு அனார் இன்ப வெள்ளத்து 3245-1
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதன் இடை மருவி 3245-2
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிடப் பெற்றால் 3245-3
என் இனிப் புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்து அருளுவதற்கு எழுவார் 3245-4
92. ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அருவரைச் சுரங்களும் பிறவும் 3246-1
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதிபல பணிந்து 3246-2
மேய வண் தமிழால் விருப் பொடும் பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்து 3246-3
சேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடிமலையில் 3246-4
93. வீடு தரும் இக் கல் குடியில் விழுமியாரைப் பணிந்து இறைஞ்சி 3247-1
நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தை உடன் பாடிப் 3247-2
பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி 3247-3
தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார் 3247-4
94. செம் பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் 3248-1
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ் வார்க்கு அருள் கூட 3248-2
உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார் 3248-3
இம்பர் வாழ இன்னம்பர் நகரைச் சேர எய்தினார் 3248-4
95. ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி 3249-1
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் 3249-2
போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்றச் 3249-3
சேரும் உள்ளம் மிக்குஎழ மெய்ப் பதிகம் பாடிச் சென்றார் 3249-4
96. அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் 3250-1
பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று 3250-2
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புணைந்து உடன் எய்தினார் 3250-3
திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே 3250-4
97. அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய் நல் ஊரினில் 3251-1
ஒப்பரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் 3251-2
இப்பதிக் கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர் கொள்ளவே 3251-3
முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் 3251-4
98. நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடுள்ளணைந்து 3252-1
ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று 3252-2
ஏடு உலாம் மலர் தூவி எட்டினெடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் 3252-3
பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப் பணிந்து வணங்கினார் 3252-4
99. அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிகப் பொழிந்து எழும் அன்பினால் 3253-1
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து 3253-2
எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில் 3253-3
தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார் 3253-4
100. வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை 3254-1
தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னித் 3254-2
தம்பிரான் அமர்ந்த தானம் பல பல சார்ந்து தாழ்ந்து 3254-3
கொம்பனார் ஆடல் நீடு கூடலை யாற்றூர் சார 3254-4
101. செப்பரும் பதியில் சேரார் திருமுது குன்றை நோக்கி 3255-1
ஒப்பரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு 3255-2
மெய்ப் பரம் பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் 3255-3
முப்புரி நூலும் தாங்கி நம்பி ஆரூரர் முன்பு 3255-4
102. நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார் 3256-1
இன்றி யாம் முது குன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன 3256-2
குன்ற வில்லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச் 3256-3
சென்றது இவ் வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல 3256-4
103. கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார் 3257-1
வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழு என்று ஏத்தி 3257-2
அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று 3257-3
கொண்டு எழும் விருப்பினேடும் கூடலை யாற்றூர் புக்கார் 3257-4
104. கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்தம் 3258-1
பீடுயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க 3258-2
ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி 3258-3
நீடு அருள் பெற்றுப் போந்து திரு முது குன்றில் நேர்ந்தார் 3258-4
105. தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில் 3259-1
புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து 3259-2
நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்மாலைத் 3259-3
தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று 3259-4
106. நாதர் பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம் 3260-1
கோதறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போது 3260-2
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ 3260-3
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட 3260-4
107. பனி மதிச் சடையார் தாமும் பன்னிரண்டாயிரம் பொன் 3261-1
நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி 3261-2
தனி வரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று 3261-3
கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார் 3261-4
108. அருளும் இக் கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் 3262-1
மருளுற வியப்ப அங்கே வரப் பெற வேண்டும் என்னத் 3262-2
தெருளுற எழுந்த வாக்கால் செழு மணி முத்தாற்றில் இட்டிப் 3262-3
பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க என்றார்3262-4
109. என்று தம் பிரானார் இன் அருள் பெற்ற பின்னர் 3263-1
வன் தொண்டர் மச்சம் வெட்டிக் கைக் கொண்டு மணி முத்து ஆற்றில் 3263-2
பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார் 3263-3
அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று 3263-4
110. மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் 3264-1
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் 3264-2
காவியங் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று 3264-3
வாவி சூழ் தில்லை மூதூர் வழிக் கொள்வான் வணங்கிப் போந்தார் 3264-4
111. மாடுள பதிகள் சென்று வணங்கிப் போய் மங்கை பாகர் 3265-1
நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்தக் கூத்தர் 3265-2
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்குச் 3265-3
சேடுயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார் 3265-4
112. பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும் 3266-1
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் 3266-2
மற்றதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம் பொன் 3266-3
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலைமேல் கொள்வார் 3266-4
113. ஆடிய திருமுன்பான அம் பொனின் கோபுரத்தின் 3267-1
ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில் 3267-2
நாடகம் செய்யதாளை நண்ணுற உள் நிறைந்து 3267-3
நீடும் ஆனந்த வெள்ளக் கண்கள் நீர் நிறைந்து பாய 3267-4
114. பரவுவாய் குளறிக் காதில் படி திருப் படியைத் தாழ்ந்து 3268-1
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை 3268-2
உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தரப் பெருகி நெஞ்சில் 3268-3
கரவு இலாத அவரைக் கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள 3268-4
115. மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து மன் உயிர் கட்கு அருளும் ஆற்றல் 3269-1
அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் 3269-2
தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை சிறப்பித்துத் தனிக் கூத்து என்றும் 3269-3
நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி 3269-4
116. மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து திரு வீதி மேவித் தாழ்ந்தே 3270-1
ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி 3270-2
மாளாத பேர் அன்பால் பொன்பதியை வணங்கிப் போய் மறலி வீழத் 3270-3
தாள் ஆண்மை கொண்டவர் தம் கருப்பறியலூர் வணங்கிச் சென்று சார்ந்தார் 3270-4
117. கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக் கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழ3271-1
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலாப் பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்தப் 3271-2
போற்றிசைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப் புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி 3271-3
சாற்றிய மெய்த் திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ் மாலை புனைந்து ஆங்குச் சாரும் நாளில் 3271-4
118. கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக் கை தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும் 3272-1
மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு மாது ஒரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றி 3272-2
எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ் கொளி புத்தூர் எய்தாது 3272-3
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப் போற்றி 3272-4
119. திருப் பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித் தேவர் பெருமானார் தம் கோயில் வாயில் 3273-1
உருப் பொலியும் மயிர்ப் புளகம் விரவத் தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் 3273-2
பொருப்பரையன் மடப் பாவை இடப் பாலானைப் போற்றி இசைத்துப் புறம் போந்து தங்கிப் பூ மென் 3273-3
கருப்பு வயல் வாழ் கொளி புத்தூரை நீங்கிக் கான் நாட்டு முள்ளூரில் கலந்த போது 3273-4
120. கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது கண் நுதலார் எதிர் காட்சி கொடுப்பக் கண்டு 3274-1
தூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப் பாத மலர் கண்டு தொழுதேன் என்று 3274-2
வான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித் 3274-3
தேன் ஆரும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர் கொள் பாடியினை எய்தச் செல்வார் 3274-4
121. எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர் கொள் பாடியினை அடைவோம் என்னும் 3275-1
சித்த நிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி 3275-2
அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்றுத் திரு வேள்விக் குடியில் எய்தி 3275-3
முத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் 3275-4
122. காட்டு நல் வேள் விக் கோலம் கருத்துற வணங்கிக் காதல் 3276-1
நாட்டிய உள்ளத்தோடு நம்பி ஆரூரர் போற்றி 3276-2
ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு நின்று ஏகி அன்பு 3276-3
பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சிப் போந்து 3276-4
123. எஞ்சாத பேர் அன்பில் திருத் தொண்டர் உடன் எய்தி 3277-1
நஞ்சாரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி 3277-2
மஞ்சாரும் பொழில் உடுத்த மலர்த் தடங்கள் புடை சூழும் 3277-3
செஞ்சாலி வயல் மருதத் திருவாரூர் சென்று அடைந்தார் 3277-4
124. செல்வமலி திருவாரூர்த் தேவரொது முனிவர்களும் 3278-1
மல்கு திருக் கோபுரத்து வந்து இறைஞ்சி உள்புக்கு அங்கு 3278-2
எல்லை இலாக் காதல் மிக எடுத்த மலர்க் கை குவித்துப் 3278-3
பல்கு திருத் தொண்டர் உடன் பரமர் திருமுன் அணைந்தார் 3278-4
125. மூவாத முதல் ஆகி நடுவாகி முடியாத 3279-1
சேவாரும் கொடியாரைத் திரு மூலட்டானத்துள் 3279-2
ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சிப் புறம் போந்து 3279-3
தாவாத புகழ்ப் பரவையார் திரு மாளிகை சார்ந்தார் 3279-4
126. பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்றப் 3280-1
பங்கயக் கண் செங்கனிவாய்ப் பரவையார் அடி வணங்கி 3280-2
எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து 3280-3
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் 3280-4
127. நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த நல் நிதியம் 3281-1
தூய மணி முத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர் 3281-2
கோயிலின் மாளிகை மேல் பாற்குளத்தில் அவர் அருளாலே 3281-3
போய் எடுத்துக்கொடு போதப் போதுவாய் எனப்புகல 3281-4
128. என்ன அதிசயம் இது தான் என் சொன்னவாறு என்று 3282-1
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் 3282-2
நன் நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் 3282-3
பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது என்று 3282-4
129. ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் 3283-1
பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சி 3283-2
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலைப் 3283-3
பாங்கு திருக் குளத்து அணைந்தார் பரவையார் தனித்துணைவர் 3283-4
130. மற்றதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி 3284-1
முற்று இழையார் தமை நிறுத்தி முனைப் பாடித் திருநாடர் 3284-2
கற்றை வார் சடையாரைக் கை தொழுது குளத்தில் இழிந்து 3284-3
அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்குத் தடவுதலும் 3284-4
131. நீற்றழகர் பாட்டு உவந்து திரு விளையாட்டினில் நின்று 3285-1
மாற்றுறு செம் பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள 3285-2
ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ 3285-3
சாற்றும் எனக் கோல் தொடியார் மொழிந்து அருளத் தனித் தொண்டர் 3285-4
132. முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை 3286-1
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என 3286-2
மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில் 3286-3
பொன் செய்த மேனி இனீர் எனப் பதிகம் போற்றிசைத்து 3286-4
133. முட்ட இமை யோர் அறிய முது குன்றில் தந்த பொருள் 3287-1
சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம் 3287-2
இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு 3287-3
எட்டளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார் 3287-4
134. ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் 3288-1
காத்தாடும் அம்பலத்துக் கண்ணுளனாம் கண் நுதலைக் 3288-2
கூத்தாதந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று 3288-3
நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும் 3288-4
135. கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திரு அருளால் 3289-1
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற 3289-2
அந்தரத்து மலர் மாரி பொழிந்து இழிந்தது அவனியுளோர் 3289-3
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் எனத் தொழுவார் 3289-4
136. ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து 3290-1
மூலம் எனக் கொடு போந்த ஆணியின் முன் உரைப் பிக்க 3290-2
நீல மிடற்றவர் அருளால் உரை தாழப் பின்னும் நெடு 3290-3
மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்தொண்டர் 3290-4
137. மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும் 3291-1
பாட்டுவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் 3291-2
ஓட்டறு செம் பொன் ஓக்க ஒரு மாவும் குறையாமல் 3291-3
காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார் 3291-4
138. கரை ஏறிப் பரவையார் உடன் கனக ஆனது எலாம் 3292-1
நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கித் 3292-2
திரை யேறும் புனல் சடிலத்திரு மூலத் தானத்தார் 3292-3
விரை யேறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில் 3292-4
139. வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து 3293-1
அந்தமிலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்பச் 3293-2
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சேயிழையாருடன் அமர்ந்தார் 3293-3
கந்த மலி மலர்ச் சோலை நவலர் தம் காவலனார் 3293-4
140. அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப் 3294-1
பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப் பதிகம் 3294-2
தணியாத ஆனந்தம் தலை சிறப்பத் தொண்டர் உடன் 3294-3
துணிவு ஆய பொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார் 3294-4
141. பண்ணிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி 3295-1
உண்ணிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப 3295-2
கண்ணிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம் 3295-3
எண்ணிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் 3295-4
142. இன்புற்று அங்கு அமர்நாளில் ஈறில் அரு மறை பரவும் 3296-1
வன்புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே 3296-2
அன்புற்ற காதல் உடன் அளவு இறந்த பிறபதியும் 3296-3
பொன்புற்கு என்றிட ஒளிரும் சடையாரைத் தொழப் போவார் 3296-4
143. பரிசனமும் உடன் போதப் பாங்கு அமைந்த பதிகள் தொறும் 3297-1
கரியுரிவை புனைந்தார் தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித் 3297-2
துரிசறு நல் பெரும் தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப் 3297-3
புரிவுறு மெய்த் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு அணைந்தார் 3297-4
144. விண் தடவு கோபுரத்தைப் பணிந்து கரம் மேல் குவித்துக் 3298-1
கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து 3298-2
மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர் 3298-3
புண்டரிகச் சேவடிக் கீழ் பொருந்த நிலம் மிசைப் பணிந்தார் 3298-4
145. அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் 3299-1
மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித் 3299-2
திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து 3299-3
பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி 3299-4
146. திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின் 3300-1
பொரு வீரந்தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி 3300-2
மருஈரத் தமிழ் மலை புனைந்து ஏத்தி மலை வளத்த 3300-3
பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார் 3300-4
147. வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி 3301-1
உரை ஓசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம் 3301-2
நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம் 3301-3
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார் 3301-4
148. தேவர் பெருமான் தன்னைத் திருச்சாய்க்காட்டினில் பணிந்து 3302-1
பாவலர் செம் தமிழ் மாலைத் திருப் பதிகம் பாடிப்போய் 3302-2
மேவலர் தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி 3302-3
நாவலர் காவலர் அடைந்தார் நனி பள்ளித் திரு நகரில் 3302-4
149. நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நல் தமிழின் 3303-1
புனித நறும் தொடை புணைந்து திருச் செம்பொன் பள்ளி முதல் 3303-2
பனி மதி சேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த் 3303-3
தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார் 3303-4
150. நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி 3304-1
ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு 3304-2
என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும் 3304-3
அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்தார் 3304-4
151. அப்பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில் 3305-1
செப்ப அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் 3305-2
ஒப்ப அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் 3305-3
மெய்ப் பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் 3305-4
152. மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது 3306-1
விடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம் 3306-2
அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கி 3306-3
உடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார் 3306-4
153. அம் கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக் 3307-1
கொங்கு அலரும் மலர்ச் சோலைத் திருக் கோலக்கா அணையக் 3307-2
கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப் 3307-3
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார் 3307-4
154. திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப் 3308-1
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி 3308-2
அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப் 3308-3
பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார் 3308-4
155. மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று 3309-1
தாவாத புகழ் சண்பை வலம் கொண்டு தாழ்ந்து இறைஞ்சி 3309-2
நாவார் முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப் போய் 3309-3
மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார் 3309-4
156. உண் நீரின் வேட்கை உடன் உறுபசியால் மிக வருந்தி 3310-1
பண் நீர்மை மொழிப் பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க் 3310-2
கண் நீடு திரு நுதலார் காதல் வரக் கருத்து அறிந்து 3310-3
தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழிச் சார் கின்றார் 3310-4
157. வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரைக் குளிர் மென் 3311-1
பான் நல் மலர்த் தடம் போலும் பந்தர் ஒரு பால் அமைத்தே 3311-2
ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் 3311-3
மான் அமரும் திருக் கரத்தார் வன் தொண்டர் தமைப் பார்த்து 3311-4
158. குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த் திருப்பத் 3312-1
திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத் தொண்டர் உடன் 3312-2
வருவார் அப்பந்தர் இடைப்புகுந்து திரு மறைவர் பால் 3312-3
பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம எனப் பேசி 3312-4
159. ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச் 3313-1
சால மிகப் பசித்தீர் இப் பொதி சோறு தருகின்றேன் 3313-2
காலம் இனித் தாழாமே கைக் கொண்டு இங்கு இனிது அருந்தி 3313-3
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இனைப்பு தீரும் என 3313-4
160. வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு 3314-1
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளிப் 3314-2
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கிச் 3314-3
சென்று திருத் தொண்டருடன் திரு அமுது செய்து அருளி 3314-4
161. எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்தப் 3315-1
பண்ணியபின் அம் மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த 3315-2
உண்ணிறைந்த ஆரமுதாய் ஒருகாலும் உலவாதே 3315-3
புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால் 3315-4
162. சங்கரனார் திரு அருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து 3316-1
பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி 3316-2
அங்கு அயர் வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார் களும் துயிலக் 3316-3
கங்கை சடைக் கரந்தார் அப் பந்தரொடும் தாம் கரந்தார் 3316-4
163. சித்த நிலை திரியாத திரு நாவலுர் மன்னர் 3317-1
அத்தகுதி யினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை 3317-2
இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து 3317-3
மெய்த் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார் 3317-4
164. குருகவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு 3318-1
அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள்புக்கு 3318-2
வருகாதல் கூர வலம் கொண்டு திரு முன் வணங்கிப் 3318-3
பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகினார் 3318-4
165. கண்ணார்ந்த இன் அமுதை கை ஆரத் தொழுது இறைஞ்சிப் 3319-1
பண்ணார்ந்த திருப் பதிகம் பாடியே பணிந்து ஏத்தி 3319-2
உண்ணாடும் பெரும் காதல் உடையவர்தாம் புறத்து எய்தி 3319-3
நண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் 3319-4
166. அந் நாளில் தம் பெருமான் அருள் கூடப் பணிந்து அகன்று 3320-1
மின்னார் செஞ்சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கிக் 3320-2
கன்னாடும் எயில் புடை சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி 3320-3
தென்னாவலூர் மன்னர் திருத்தில்லை வந்து அடைந்தார் 3320-4
167. சீர் வளரும் திருத்தில்லைத் திரு வீதி பணிந்து புகுந்து 3321-1
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப் 3321-2
பார் வளர மறை வளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார் 3321-3
போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை மா நகர் புகுந்தார் 3321-4
168. திருத்தினை மா நகர் மேவும் சிவக் கொழுந்தைப் பணிந்து போய் 3322-1
நிருத்தினார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கிப் 3322-2
பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திரு நாவலூர் 3322-3
கருத்தில் வரும் ஆதரவால் கை தொழச் சென்று எய்தினார் 3322-4
169. திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப் 3323-1
பெரு நாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு 3323-2
வருநாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணையச் 3323-3
செரு நாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில் உள் அணைந்தார் 3323-4
170. மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை 3324-1
மூவுலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி 3324-2
ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக் 3324-3
கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார் 3324-4
171. நலம் பெருகும் அப்பதியில் நாடி அன்பொடு நயந்து 3325-1
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து 3325-2
சலம் பெருகும் சடைமுடியார் தாள் வணங்கி அருள் பெற்றுப் 3325-3
பொலம் புரிநூல் மணிமார்பர் பிறபதியும் தொழப் போவார் 3325-4
172. தண்டகமாந் திரு நாட்டுத் தனி விடையார் மகிழ் இடங்கள் 3326-1
தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூய நதி 3326-2
வண்டறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே 3326-3
எண் திசை யோர் பரவு திருக் கழுக் குன்றை எய்தினார் 3326-4
173. தேன் ஆர்ந்த மலர்ச் சோலை திருக்கழுக் குன்றத்து அடியார் 3327-1
ஆனாத விருப்பினொடும் எதிர் கொள்ள அடைந்து அருளித் 3327-2
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர்க் கொழுந்தைத் தொழுது இறைஞ்சி 3327-3
பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார் 3327-4
174. பாடிய அப் பதியின் கண் இனிது அமர்ந்து பணிந்து போய் 3328-1
நாடிய நல்லுணர்வின் ஒடும் திருக் கச்சூர் தனை நண்ணி 3328-2
ஆடக மா மதில் புடை சூழ் ஆலக்கோயிலின் அமுதைக் 3328-3
கூடிய மெய் அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார் 3328-4
175. அணைந்து அருளும் அவ்வேலை அமுது செயும் பொழுதாகக் 3329-1
கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை 3329-2
தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில் 3329-3
புணர்ந்த மதில் புறத்துஇருந்தார் முனைப்பாடி புரவலனார் 3329-4
176. வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் 3330-1
மின் தங்கு வெண் தலையோடு ஒழிந்து ஒரு வெற்றோடு ஏந்தி 3330-2
அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய்ப் புறப்பட்டுச் 3330-3
சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூறச் செப்புவார் 3330-4
177. மெய்ப் பசியால் மிக வருந்தி இனைத்து இருந்தீர் வேட்கைவிட 3331-1
இப்பொழுதே சோறிரந்து இங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன் 3331-2
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் எனச் 3331-3
செப்பி அவர் கச்சூர் மனை தோறும் சென்றிரப்பார் 3331-4
178. வெண் திரு நீறு அணி திகழ விளங்குநூல் ஒளி துளங்கக் 3332-1
கண்டவர்கள் மனம் உருகக் கடும் பகல் போது இடும் பலிக்குப் 3332-2
புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த மனை தொறும் புக்குக் 3332-3
கொண்டுதாம் விரும்பி ஆட் கொண்டவர் முன் கொடுவந்தார் 3332-4
179. இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும் 3333-1
அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப 3333-2
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேணி 3333-3
நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார் 3333-4
180. வாங்கிய அத்திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த 3334-1
ஓங்கு தவத் தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப 3334-2
ஆங்கு அருகு நின்றார் அவர் தம்மை அறியாமே 3334-3
நீங்கினார் எப் பொருளும் நீங்காத நிலைமையினார் 3334-4
181. திருநாவலூராளி சிவ யோகியார் நீங்க 3335-1
வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே 3335-2
பெரு நாதச் சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் 3335-3
உருநாடி எழுந்து அருளிற்று என் பொருட்டாம் என உருகி 3335-4
182. முதுவாயோரி என்று எடுத்து முதல்வனார் தம் பெரும் கருணை 3336-1
அதுவாம் என்றுஅதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவி 3336-2
புதுவார் புனலின் மயிர் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்து 3336-3
மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார் 3336-4
183. வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம் 3337-1
முந்தித் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு முக் கண் பெருமானைச் 3337-2
சிந்தித்திட வந்து அருள் செய் கழல் பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே 3337-3
அந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் 3337-4
184. அன்று வெண்ணெய் நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய 3338-1
வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து 3338-2
நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம் 3338-3
இன்று இங்கு எய்தப் பெற்றோம் என்று எயில் சூழ்காஞ்சி நகர் வாழ்வார் 3338-4
185. மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு மணித் தோரணம் நாட்டி 3339-1
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்துச் 3339-2
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிரப் 3339-3
பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம் போய் எதிர் கொண்டார் 3339-4
186. ஆண்ட நம்பி எதிர் கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி 3340-1
நீண்ட மதில்கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து 3340-2
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப 3340-3
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார் 3340-4
187. ஆழி நெடுமால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன் 3341-1
பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச் 3341-2
சூழுமணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம் கொண்டு 3341-3
வாழி மணிப் பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர் 3341-4
188. கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகிவர 3342-1
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆரத் தழுவிக் கொண்டு இருந்த 3342-2
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடுபூஞ் 3342-3
செய்ய கமலச் சேவடிக் கீழ்த் திருந்து காதலுடன் வீழ்ந்தார் 3342-4
189. வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து மெய்யன்பால் 3343-1
வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து 3343-2
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லைக் காஞ்சி நகர்த் 3343-3
தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார் 3343-4
190. சீரார் காஞ்சி மன்னும் திருக் காமக் கோட்டம் சென்று இறைஞ்சி 3344-1
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திரு மேற்றளி மேவி 3344-2
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண்சுடராம் 3344-3
பாரார் பெருமைத் திருப் பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார் 3344-4
191. ஓணகாந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன் 3345-1
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக் 3345-2
காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும் 3345-3
யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில் நிதி பெற்று இனிது இருந்தார் 3345-4
192. அங்கண் அமர்வார் அனே கதங்கா பதத்தை எய்தி உள்ளணைந்து 3346-1
செங்கண் விடையார் தமைப் பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்ததமிழ் 3346-2
தங்கும் இடமாம் எனப்பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள் 3346-3
பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்த பதியில் பொருந்தும் நாள் 3346-4
193. பாடல் இசையும் பாணியினால் பாவைத் தழுவக் குழைக் கம்பர் 3347-1
ஆடல் மருவும் சே அடிகள் பரவிப் பிரியாது அமர்கின்றார் 3347-2
நீட மூதூர்ப் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழவிருப்பால் 3347-3
மாடம் நெருங்கு வன் பார்த்தான் பனம் காட்டூரில் வந்து அடைந்தார் 3347-4
194. செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில் செம் பொன் செழும் சுடரை 3348-1
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்புபொழி கண்ணீர் 3348-2
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழப் பதிகம் 3348-3
நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார் 3348-4
195. மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கிப் பரவித் திருவல்லம் 3349-1
தன்னுள் எய்தி இறைஞ்சிப் போய்ச்சாரும் மேல்பால் கற்றைப் 3349-2
பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வனங்கிப் பெரும் தொண்டர் 3349-3
சென்னி முகில் தோய் தடம் குவட்டுத் திருக் திருக்காளத்தி மலைசேர்ந்தார் 3349-4
196. தடுக்கலாகாப் பெருங்காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர் 3350-1
இடுக்கண் களைந்து ஆட் கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி 3350-2
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பாறும் 3350-3
அடுப்பத் திருமுன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் 3350-4
197. வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து போற்றி மதுர இசை 3351-1
அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் 3351-2
மணம் கொள் மலர்ச் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி 3351-3
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில் 3351-4
198. வட மாதிரத்துப் பருப்பதம் திருக் கேதார மலையும் முதல் 3352-1
இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி 3352-2
நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து 3352-3
திரு மாம் கருத்தில் திருப் பதிகம் பாடிக் காதல் சிறந்து இருந்தார் 3352-4
199. அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார் 3353-1
தங்கும் இடங்கள் எனைப் பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப் 3353-2
பொங்கு புணிரிக் கரை மருங்கு புவியுள் சிவலோகம் போலத் 3353-3
திங்கள் முடியார் அமர்ந்த திரு ஒற்றியூரைச் சென்று அடைந்தார் 3353-4
200. அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்டநம்பி எழுந்து அருள 3354-1
எண்ணில் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர் கொள்வார் 3354-2
வண்ண வீதி வாயில் தொறும் வாழை கமுகு தோரணங்கள் 3354-3
சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்துத் தொழ எழுங்கால் 3354-4
201. வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் 3355-1
புர மங்கையர்கள் நடம் ஆடப் பொழியும் வெள்ளப் பூ மாரி 3355-2
அர மங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார் 3355-3
பிரமன் தலையில் பலியுவந்த பிரானார் விரும்பும் தொண்டர் 3355-4
202. ஒற்றி ஊரின் உமையோடும் கூட நின்றார் உயர்தவத்தின் 3356-1
பற்று மிக்க திருத் தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டிச் 3356-2
சுற்றம் அணைந்து துதி செய்யத் தொழுது தம்பிரான் அன்பர் 3356-3
கொற்ற மழவேறு உடையவர் தம் கோயில் வாயில் எய்தினார் 3356-4
203. வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர் 3357-1
கூனல் இளம் வெண் பிறைச் சடையார் கோயில் வலம் கொண்டு எதிர் குறுகி 3357-2
ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையின் உடன் 3357-3
ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர் 3357-4
204. ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் 3358-1
நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமலச் சேவடியில் 3358-2
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோதில் இசை கூடப் 3358-3
பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார் 3358-4
205. பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்றப் புறம் போந்து 3359-1
நீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்றத் 3359-2
தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திருப்பாதம் 3359-3
கூடும் காலங்களில் அணைந்து பரவிக் கும்பிட்டு இனிது இருந்தார் 3359-4
206. இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக 3360-1
அந்தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநித்திதையார் 3360-2
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் 3360-3
சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரியச் சாற்றுவாம் 3360-4
207. நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின் 3361-1
மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் 3361-2
பாலாதரவு தரும் மகளர் ஆகிப் பார் மேல் அவதரித்தார் 3361-3
ஆலாலஞ் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார் 3361-4
208. மலையான் மடந்தை மலர்ப் பாதம் மறவா அன்பால் வந்த நெறி 3362-1
தலையாம் உணர்வு வந்து அணையத் தாமே அரிந்த சங்கிலியார் 3362-2
அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு 3362-3
நிலையாயின அப் பருவங்கள் தோறும் நிகழ நிரம்புவார் 3362-4
209. சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றித் தெய்வ நிகழ் தன்மை 3363-1
பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைந்தொடியார் 3363-2
வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்தச் 3363-3
சாரும் பதத்தில் தந்தையார் தம் கண் மனைவியார்க்கு உரைப்பார் 3363-4
210. வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும் 3364-1
படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம் 3364-2
கடிசேர் மணமும் இனி நிகழும் காலம் என்னக் கற்புவளர் 3364-3
கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றாக் கொடும் என்றார் 3364-4
211. தாயாரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார் 3365-1
ஏயு மாற்றம் அன்றி எம் பெருமான் திரு அருளே 3365-2
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்(று) 3365-3
ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார் 3365-4
212. பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்துப் பரிந்து எடுத்தே 3366-1
ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது எனத் 3366-2
தாங்கிச் சீத விரைப் பனி நீர் தெளித்து தை வந்தது நீங்க 3366-3
வாங்கு சிலை நன்னுதலாரை வந்தது உனக்கு இங்கு என்? என்றார் 3366-4
213. என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார் 3367-1
இன்று என்திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது 3367-2
வென்றி விடையார் அருள் செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல் 3367-3
சென்று திரு ஒற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என 3367-4
214. அந்த மாற்றம் கேட்டவர் தாம் அயர்வும் பயமும் அதிசயமும் 3368-1
வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுகப் 3368-2
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான் 3368-3
சிந்தை விரும்பி மகள் பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார் 3368-4
215. தாதையாரும் அது கேட்டுத் தன்மை விளம்பத் தகாமையினால் 3369-1
ஏதம் எய்தாவகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் 3369-2
தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான் 3369-3
மாதராரைப் பெற்றார் மற்று அதனைக் கேட்டு மனம் மருண்டார் 3369-4
216. தையலார் சங்கிலியார் தம் திறத்துப் பேசத் தகா வார்த்தை 3370-1
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறியச் 3370-2
செய்த விதிபோல் இது நிகழச் சிறந்தார்க்கு உள்ள படி செப்பி 3370-3
நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன் படுவார் 3370-4
217. அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவரால் 3371-1
வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும் 3371-2
குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்த படியே ஒற்றி நகர்ப் 3371-3
பணம் கொள் அரவச் சடையார் சடையார்தம் பால் கொண்டு அணைவோம் எனப் பகர்வார் 3371-4
218. பண்ணார் மொழிச் சங்கிலியாரை நோக்கிப் பயந்தாரொடும் கிளைஞர் 3372-1
தெண்ணீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல்கதியும் 3372-2
கண்ணார் நுதலார் திரு அருளால் ஆகிக் கன்னி மாடத்துத் 3372-3
தண்ணார் தடம் சூழ் அந்நகரில் தங்கிப் புரிவீர் தவம் என்று 3372-4
219. பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே 3373-1
மற்றுச் செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார் தாம் 3373-2
சொற்ற வண்ணம் செயத் துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள் 3373-3
செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார் 3373-4
220. சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயிலுள் புகுந்து 3374-1
துன்னும் சுற்றத் தொடும் பணிந்து தொல்லைப் பதியோர் இசைவினால் 3374-2
கன்னி மாடம் மருங்கு அமைத்துக் கடி சேர் முறைமை காப்பு இயற்றி 3374-3
மன்னும் செல்வம் தக வகுத்துத் தந்தையார் வந்து அடி வணங்கி 3374-4
221. யாங்கள் உமக்குப் பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி 3375-1
ஓங்கு கன்னி மாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார் 3375-2
தாங்கற்கு அரிய கண்கள் நீர்த் தாரை ஒழுகத் தரியாதே 3375-3
ஏங்கு சுற்றத் தொடும் இறைஞ்சிப் போனார் எயில் சூழ் தம்பதியில் 3375-4
222. காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார் 3376-1
பூத நாதர் கோயிலினில் காலம் தோறும் புக்கு இறைஞ்சி 3376-2
நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்யச் 3376-3
சீத மலர்ப் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு பால் சென்று இருந்து 3376-4
223. பண்டு கயிலைத் திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம் 3377-1
கொண்ட உணர்வு தலை நிற்பக் குலவு மென் கொடி அனையார் 3377-2
வண்டுமருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்ப 3377-3
அண்டர் பெருமான் முடிச் சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள் 3377-4
224. அந்தி வண்ணத்து ஒருவர் திரு அருளால் வந்த ஆரூரர் 3378-1
கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக் காதல் மணம் புணர 3378-2
வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத 3378-3
முந்தை விதியால் வந்து ஒருநாள் முதல்வர் கோயிலுள் புகுந்தார் 3378-4
225. அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரைப் 3379-1
பண்டை முறைமை யால் பணிந்து பாடிப் பரவிப் புறம் போந்து 3379-2
தொண்டு செய்வார் திருத் தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார் 3379-3
புண்டரீகத் தடம் நிகழ் பூந்திருமண்டபத் தின் உள் புகுந்தார் 3379-4
226. அன்பு நாரா அஞ்சு எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே 3380-1
என்பு உள் உருக்கும் அடியாரைத் தொழுது நீங்கி வேறு இடத்து 3380-2
முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து 3380-3
மின் போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண் உற்றார் 3380-4
227. கோவா முத்தும் சுரும்பு ஏறாக் கொழு மென் முகையும் அனையாரைச் 3381-1
சேவார் கொடியார் திருத் தொண்டர் கண்டபோது சிந்தை நிறை 3381-2
காவாதவர் பால் போய் விழத் தம் பால் காமனார் துரந்த 3381-3
பூ வாளிகள் வந்துற வீழத் தரியார் புறமே போந்து உரைப்பார் 3381-4
228. இன்ன பரிசு என்று அறி அரிதால் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால் 3382-1
பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவிப்புதியமதி 3382-2
தன்னுள் நீர்மையால் குழைத்துச் சமைத்த மின்னுக் கொடிபோல்வாள் 3382-3
என்னை உள்ளம் திரிவித்தாள் யார் கொல் என்று அங்கு இயம்புதலும் 3382-4
229. அங்கு நின்றார் விளம்புவார் அவர்தாம் நங்கை சங்கிலியார் 3383-1
பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன 3383-2
இருவரால் இப்பிறவியை எம் பெருமான் அருளால் எய்துவித்தார் 3383-3
மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார் 3383-4
230. மின்னார் சடையார் தமக்காளாம் விதியால் வாழும் எனை வருத்தித் 3384-1
தன்னார் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே 3384-2
என்னாருயிரும் எழில் மலரும் கூடப் பிணைக்கும் இவள் தன்னைப் 3384-3
பொன்னார் இதழி முடியார் முடியார்பால் பெறுவேன் என்று போய்ப் புக்கார் 3384-4
231. மலர்மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா 3385-1
நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை 3385-2
உலகம் எலாம் தாம் உடையாராயும் ஓற்றியூர் அமர்ந்த 3385-3
இலகு சோதி பரம் பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார் 3385-4
232. மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீள் முடியின் கண் 3386-1
கங்கை தன்னைக் கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்(கு) 3386-2
இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த 3386-3
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும் என 3386-4
233. அண்ணாலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்திப்புறத்து அணைந்தே 3387-1
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமையாமாறு எண்ணும் என் நெஞ்சில் 3387-2
திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன்யான் 3387-3
தண்ணிலா மின் ஒளிர் பவளச் சடையீர் அருளும் எனத் தளர்வார் 3387-4
234. மதிவாண் முடியார் மகிழ் கோயில் புறத்தோர் மருங்கு வந்து இருப்பக் 3388-1
கதிரோன் மேலைக் கடல் காண மாலைக் கடலைக் கண்டு அயர்வார் 3388-2
முதிரா முலையார் தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரிவளை 3388-3
நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்து நினைந்து அழிய 3388-4
235. உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட 3389-1
தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்பால் எய்திச் சங்கிலியை 3389-2
இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்துக் 3389-3
கொம்பை உனக்குத் தருகின்றோம் கொண்டகவலை ஒழிக என்ன 3389-4
236. அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளி 3390-1
ஒன்றும் அறியா நாயேனுக்குக் உறுதி அளித்தீர் உயிர் காக்க 3390-2
இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் எனப் போற்றி 3390-3
மன்றல் மலர்ச் சேவடி இணைக்கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர் 3390-4
237. ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளிக் கருணையினால் 3391-1
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம் 3391-2
தீண்டு கன்னி மாடத்துச் சென்று திகழ் சங்கிலியாராம் 3391-3
தூண்டு சோதி விளக்கு அனையார் தம்பால் கனவில் தோன்றினார் 3391-4
238. தோன்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய் 3392-1
ஆற்ற அன்பு பொங்கி எழுந்(து) அடியேன் உய்ய எழுந்து அருளும் 3392-2
பேற்றுக்கு என் யான் செய்வது எனப் பெரிய கருணை பொழிந்து அனைய 3392-3
நீற்றுக் கோல வேதியரும் நேர் நின்று அருளிச் செய்கின்றார் 3392-4
239. சாரும் தவத்துச் சங்கிலி! கேள்; சால என்பால் அன்புடையான் 3393-1
மேரு வரையின் மேம் பட்ட தவத்தான் வெண்ணெய் நல்லூரில் 3393-2
யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை இரந்தான் 3393-3
வார் கொள் முலையாய்! நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் 3393-4
240.ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளிச் செய்த பொழுதின் கண் 3394-1
மாதரார் சங்கிலியாரும் மாலும் அயனும் அறிவு அரிய 3394-2
சீத மலர் தாமரை அடிக்கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று 3394-3
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தித் தொழுது விளம்புவார் 3394-4
241. எம் பிரானே! நீர் அருளிச் செய்தார்க்கு உரியேன் யான் இமையோர் 3395-1
தம் பிரானே அருள் தலைமேல் கொண்டேன் தக்க விதி மணத்தால் 3395-2
நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமயக் 3395-3
கொம்பின் ஆகங்கொண்டீர்க்குக் கூறும் திறம் ஒன்று உளது என்பார் 3395-4
242. பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணித் தொழுது உரைப்பார் 3396-1
மன்னும் திருவாரூரின் கண் அவர் தாம் மகிழ்து உறைவது 3396-2
என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய் 3396-3
மின்னும் புரிநூல் அணி மார் பீர் என்றார் குன்றா விளக்கு அனையார் 3396-4
243. மற்றவர் தம் உரைகொண்டு வன்தொண்டர் நிலைமையினை 3397-1
ஒற்றி நகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார் 3397-2
பொன் தொடியாய்! உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம் 3397-3
அற்றமுறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி 3397-4
244. வேய் அனைய தோளியார் பால் நின்று மீண்டு அருளித் 3398-1
தூய மனம் மகிழ்து இருந்த தோழனார் பால் அணைந்து 3398-2
நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள் பால் 3398-3
ஆயதொரு குறை உன்னால் அமைப்பதுள என்று அருள 3398-4
245. வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய 3399-1
நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்(கு) 3399-2
ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு 3399-3
சென்று கிடைத்து இவ்விரவே செய்த என அருள் செய்தார் 3399-4
246. என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு 3400-1
மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என 3400-2
முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி 3400-3
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள 3400-4
247. வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர் 3401-1
நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று 3401-2
கும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம் எனக் குறிப்பால் 3401-3
தம் பெருமான் திருமுன்பு தாம் வேண்டும் குறை இரப்பார் 3401-4
248. சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார் 3402-1
மங்கை அவள் தனைப் பிரியா வகை சபதம் செய்வதனுக்(கு) 3402-2
அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில்விடத் 3402-3
தங்கும் இடம் திரு மகிழ்க் கீழ்க் கொள வேண்டும் எனத்தாழ்ந்தார் 3402-4
249. தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டிக் கொண்டு அருள 3403-1
உமபர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய் 3403-2
நம்பி! நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள 3403-3
எம்பிரானே! அரியது இனி எனக்கு என்? என ஏத்தி 3403-4
250. அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்றுப் புறம் போதச் 3404-1
செஞ்சடையார் அவர் மாட்டுத் திரு விளையாட்டினை மகிழ்ந்தோ 3404-2
வஞ்சி இடைச் சங்கிலியார் வழி அடிமைப் பெருமையோ? 3404-3
துஞ்சிருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார் 3404-4
251. சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளி 3405-1
நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூள் உறக் கடவன் 3405-2
அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே 3405-3
கொங்கலர் பூ மகிழின் கீழ்க் கொள்க எனக் குறித்து அருள 3405-4
252. மற்றவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிய அரியீர் 3406-1
அற்றம் எனக்கு அருள் புரிந்த அதனில் அடியேன் ஆகப் 3406-2
பெற்றது யான் எனக் கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய 3406-3
வெற்றி மழ விடையார் தம் சேவடிக் கீழ் வீழ்ந்து எழுந்தார் 3406-4
253. தையலார் தமக்கு அருளிச் சடா மகுடர் எழுந்து அருள 3407-1
எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அவ்விரவின் கண் 3407-2
செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார் 3407-3
ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி 3407-4
254. நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர் 3408-1
தாம் கனவில் எழுந்து அருளித் தமக்கு அருளிச் செய்தது எலாம் 3408-2
பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும் 3408-3
தாங்கு மகிழ்ச்சியும் எய்தச் சங்கிலியார் தமைப் பணிந்தார் 3408-4
255. சேயிழையார் திருப் பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் 3409-1
தூய பணிப் பொழுது ஆகத் தொழில் புரிவார் உடன் போதக் 3409-2
கோயிலின் முன் காலம் அது ஆகவே குரித்து அணைந்தார் 3409-3
ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர் 3409-4
256. நின்றவர் அங்கு எதிர் வந்த நேர் இழையார் தம் மருங்கு 3410-1
சென்று அணைந்து தம் பெருமான் திரு அருளின் திறம் கூற 3410-2
மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார் 3410-3
ஒன்றிய நாண் ஒடு மடவாருடன் ஒதுங்கி உட்புகுந்தார் 3410-4
257. அங்கு அவர் தம் பின்சென்ற ஆரூரர் ஆயிழையீர்! 3411-1
இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும் படி இயம்பத் 3411-2
திங்கள் முடியார் திருமுன் போதுவீர் எனச் செப்பச் 3411-3
சங்கிலியார் கனவு உரைப்பக் கேட்ட தாதியர் மொழிவார் 3411-4
258. எம் பெருமான் இதற்காக எழுந்து அருளி இமயவர்கள் 3412-1
தம் பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாது என்ன 3412-2
நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே 3412-3
கொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும் 3412-4
259. மாதர் அவர் மகிழ்க் கீழே அமையும் என மனமருள்வார் 3413-1
ஈதலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்ன படி மறுக்கில் 3413-2
ஆதலினால் உடன் படவே அமையும் எனத் துணிந்து ஆகில் 3413-3
போதுவீர் என மகிழ்க் கீழ் அவர் போதப் போய் அணைந்தார் 3413-4
260. தாவாத பெருந் தவத்துச் சங்கிலியாரும் காண 3414-1
மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து 3414-2
மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார் 3414-3
பூவார் தண் புனல் பொய்கை முனைப்பாடிப் புரவலனார் 3414-4
261. மேவிய சீர் ஆரூரர் மெய்ச் சபதம் வினை முடிப்பக் 3415-1
காவியினேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கிப் 3415-2
பாவியேன் இது கண்டேன் தம் பிரான் பணியால் என்று 3415-3
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார் 3415-4
262. திருநாவலூராளி தம் உடைய செயல் முற்றிப் 3416-1
பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள்புகுந்து இறைஞ்சி 3416-2
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது எனப் 3416-3
பெரு நாமம் எடுத்து ஏத்திப் பெரு மகிழ்ச்சி உடன் போந்தார் 3416-4
263. வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின் 3417-1
தார் புனையும் மண்டபத்துத் தம் உடைய பணி செய்து 3417-2
கார் புனையும் மணி கண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி 3417-3
ஏர் புனையும் கன்னி மாடம் புகுந்தார் இருள் புலர 3417-4
264. அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆட்கொண்ட 3418-1
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள 3418-2
நின்ற புகழ்த் திரு ஒற்றியூர் நிலவு தொண்டர்க்கு 3418-3
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார் 3418-4
265. நம்பியாரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை 3419-1
இம்பர் ஞாலத்து இடை நம் ஏவலினால் மணவினை செய்து 3419-2
உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும் 3419-3
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலைமேல் கொண்டு எழுவார் 3419-4
266. மண்ணிறைந்த பெரும் செல்வத்து திரு ஒற்றியூர் மன்னும் 3420-1
எண்ணிறைந்த திருத் தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி 3420-2
உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூ மழை பொழியக் 3420-3
கண்ணிறைந்த பெரும் சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார் 3420-4
267. பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி தன் அருளாலே 3421-1
வண்டமர் பூங்குழலாரை மணம் புணர்ந்த வன்தொண்டர் 3421-2
புண்டரிகத்து அவள் வனப்பைப் புறம் கண்ட தூ நலத்தைக் 3421-3
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால் 3421-4
268. யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும் 3422-1
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து 3422-2
வீழும் அவர்க்கு இடைதோன்றி மிகும் புலவி புணர்ச்சிக் கண் 3422-3
ஊழியாம் ஒரு கணம் தான் அவ் வூழி ஒரு கணம் ஆம் 3422-4
269. இந் நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும் 3423-1
மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால் 3423-2
சென்னி மதி புனைவார் தம் திருப் பாதம் தொழுது இருந்தார் 3423-3
முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல 3423-4
270. பொங்கு தமிழ்ப் பொதிய மலைப் பிறந்து பூஞ்சந்தனத்தின் 3424-1
கொங்கு அணைந்து குளிர் சாரல் இடை வளர்ந்த கொழும் தென்றல் 3424-2
அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர் 3424-3
மங்கல நாள் வசந்தம் எதிர் கொண்டு அருளும் வகை நினைந்தார் 3424-4
271. வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதி விடங்கப் பெருமான் 3425-1
ஒண்ணுதலார் புடை பரந்த ஒலக்கம் அதன் இடையே 3425-2
பண்ணமரும் மொழிப் பரவையார் பாடல் ஆடல் தனைக் 3425-3
கண்ணுற முன் கண்டு கேட்டார் போலக் கருதினார் 3425-4
272. பூங்கோயில் அமர்ந்தாரை புற்றிடங்கொண்டு இருந்தாரை 3426-1
நீங்காத காலினால் நினைந்தாரை நினைவாரைப் 3426-2
பாங்காகத் தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார் 3426-3
ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார் 3426-4
273. மின்னொளிர் செஞ்சடையானை வேத முதல் ஆனானை 3427-1
மன்னு புகழ்த் திருவாரூர் மகிழ்தானை மிக நினைந்து 3427-2
பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் 3427-3
என்னும் இசைத் திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார் 3427-4
274. பின் ஒரு நாள் திருவாரூர் தனைப் பெருக நினைந்து அருளி 3428-1
உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றி நகர் 3428-2
தன்னை அகலப் புக்கார் தாம் செய்த சபதத்தால் 3428-3
முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார் 3428-4
275. செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார் 3429-1
மை விரவு கண்ணார் பால் சூல் உறவு மறுத்த அதனால் 3429-2
இவ்வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம் பெருமானை 3429-3
எய்திய இத் துயர் நீங்கப் பாடுவேன் என நினைந்து 3429-4
276. அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி 3430-1
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாதோர் பாகனார் மலர்பதம் உன்னி 3430-2
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர்க் கையற வினுக்கும் 3430-3
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பல பல நனைவார் 3430-4
277. அங்கு நாதர் செய் அருளது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே 3431-1
பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து 3431-2
திங்கள் வேணியார் திரு முல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம் 3431-3
சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி 3431-4
278. தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக் 3432-1
கொண்ட வெந்துயர் களை எனப் பரவிக் குறித்த காதலின் நெறிக் கொள வருவார் 3432-2
வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம் 3432-3
கண்ட தொண்டர்கள் எதிர் கொள வணங்கிக் காயும் நாகத்தார் கோயிலை அடைந்தார் 3432-4
279. அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்திக் 3433-1
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று 3433-2
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்று கோல் அருளி 3433-3
இணங்கிலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல 3433-4
280. பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்துப் பெண் பாகம் 3434-1
விழைவடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை 3434-2
இழை என மாசுணம் அணிந்த இறையானைப் பாடினார் 3434-3
மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார் 3434-4
281. முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழிமாலைப் 3435-1
பன்னும் இசைத் திருப் பதிகம் பாடியபின் பற்றாய 3435-2
என்னுடையபிரான் அருள் இங்கு இத்தனை கொலாம் என்று 3435-3
மன்னு பெரும் தொண்டர் உடன் வணங்கியே வழிக் கொள்வார் 3435-4
282. அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பர் உடன் 3436-1
பங்கயப் பூந்தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தித் 3436-2
தங்குவார் அம்மைத் திரு தலையாலே வலம் கொள்ளும் 3436-3
திங்கள் முடியார் ஆடும் திருவாலங் காட்டின் அயல் 3436-4
283. முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளிப் 3437-1
பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார் 3437-2
அந் நின்று வணங்கிப் போய்த் திருவூறல் அமர்ந்து இறைஞ்சிக் 3437-3
கன்னி மதில் மணி மாடக் காஞ்சி மா நகர் அணைந்தார் 3437-4
284. தேன் நிலவு பொழில் கச்சிக் காமக் கோட்டத்தில் 3438-1
ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால் 3438-2
ஆன திரு அறம் புரக்கும் அம்மை திருக் கோயிலின் முன் 3438-3
வானில் வளர் திருவாயில் வணங்கினார் வன் தொண்டர் 3438-4
285. தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்துப் போய் தொல் உலகம் 3439-1
முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம் 3439-2
பழுதில் அடியார் முன்பு புகப் புக்குப் பணிகின்றார் 3439-3
இழுதையேன் திருமுன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி 3439-4
286. விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட 3440-1
கண்ணாளா கச்சி ஏகம்பனே கடையானேன் 3440-2
எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள 3440-3
வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார் 3440-4
287. பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டு அருச்சித்துச் 3441-1
செங்கயற் கண் மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து 3441-2
பொங்கிய அன்பொடு பரவிப் போற்றிய ஆரூரருக்கு 3441-3
மங்கைத் தழுவக் குழைந்தார் மறைந்த இடக் கண் கொடுத்தார் 3441-4
288. ஞாலந்தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும் 3442-1
மூலந்தான் அறிய அரியார் கண் அளித்து முலைச்சுவட்டுக் 3442-2
கோலந்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து 3442-3
ஆலந்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார் 3442-4
289. பாடி மிகப் பரவசமாய்ப் பணிவார்க்குப் பாவை உடன் 3443-1
நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப்புடன் இறைஞ்சிச் 3443-2
சூடிய அஞ்சலியினராய்த் தொழுது புறம் போந்து அன்பு 3443-3
கூடிய மெய்த்தொண்டர் உடன் கும்பிட்டு இனிது அமர்வார் 3443-4
290. மா மலையாள் முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்த மதிப் 3444-1
பூ மலிவார் சடையாரைப் போற்றி அருளது ஆகத் 3444-2
தே மலர்வார் பொழில் காஞ்சித் திருநகரம் கடந்து அகல்வார் 3444-3
பாமலர் மாலைப் பதிகம் திருவாரூர் மேல் பரவி 3444-4
291. அந்தியும் நண் பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால் 3445-1
எந்தை பிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது என்று 3445-2
சந்த இசை பாடிப் போய்த் தாங்க அரிய ஆதரவு 3445-3
வந்து அணைய அன்பர் உடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார் 3445-4
292. மன்னு திருப் பதிகள் தொறும் வன்னியொடு கூவிளமும் 3446-1
சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சிப் 3446-2
பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவியே போந்து அணைந்தார் 3446-3
அன்னமலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர் 3446-4
293. அங்கணரை ஆமாத்தூர் அழகர் தமை அடி வணங்கித் 3447-1
தங்கும் இசைத் திருப் பதிகம் பாடிப் போய்த் தாரணிக்கு 3447-2
மங்கலமாம் பெரும் தொண்டை வள நாடு கடந்து அணைந்தார் 3447-3
செங்கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு 3447-4
294. அந் நாட்டின் மருங்கு திரு அரத் துறையைச் சென்று எய்தி 3448-1
மின்னாரும் படை மழுவார் விரை மலர்த்தாள் பணிந்து எழுந்து 3448-2
சொன்மாலை மலர்க் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி 3448-3
மன்னார்வத்து திருத்தொண்டர் உடன் மகிழ்ந்து வைகினார் 3448-4
295. பரமர் திரு அரத் துறையைப் பணிந்து போய்ப் பலபதிகள் 3449-1
விரவி மழ விடை உயர்த்தார் விரைமலர்த்தாள் தொழுது ஏத்தி 3449-2
உரவு நீர்த் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி 3449-3
அரவு அணிந்தார் அமர்ந்த திருவா வடு தண் துறை அணைந்தார் 3449-4
296. அங்கணைவார் தமை அடியார் எதிர் கொள்ளப் புக்கு அருளிப் 3450-1
பொங்கு திருக் கோயிலினைப் புடைவலம் கொண்டுள்ளணைந்து 3450-2
கங்கை வாழ் சடையாய் ஓர் கண்ணிலேன் எனக் கவல்வார் 3450-3
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார் 3450-4
297. திருப்பதிகம் கொடு பரவிப் பணிந்து திரு அருளால் போய் 3451-1
விருப்பினொடும் திருத்துருத்தி தனை மேவி விமலர் கழல் 3451-2
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி 3451-3
வருத்தம் எனை ஒழித்து அருளவேண்டும் என வணங்குவார் 3451-4
298. பரவியே பணிந்தவர்க்குப் பரமர் திரு அருள் புரிவார் 3452-1
விரவிய இப் பிணி அடையத் தவிப்பதற்கு வேறு ஆக 3452-2
வரமலர் வண்டறை தீர்த்த வட குளித்துக் குளி என்னக் 3452-3
கரவில் திருத்தொண்டர் தாம் கை தொழுது புறப்பட்டார் 3452-4
299. மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம் 3453-1
தொக்க வடிவாய் இருந்த துருத்தியார் தமைத் தொழுது 3453-2
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி 3453-3
அக்கணமே மணி ஒளிசேர் திருமேனி ஆயினார் 3453-4
300. கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து 3454-1
மண்டு பெரும் கதலினால் கோயிலினை வந்து அடைந்து 3454-2
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம் 3454-3
எண்திசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார் 3454-4
301. பண்ணிறைந்த தமிழ் பாடிப் பரமர் திரு அருள் மறவாது 3455-1
எண்ணிறைந்த தொண்டர் உடன் பணிந்து அங்கண் உறைந்தேகி 3455-2
உண்ணிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கிப்போய் 3455-3
கண்ணிறைந்த திருவாரூர் முன்தோன்றக் காண்கின்றார் 3455-4
302. அன்று திரு நோக்கு ஒன்றால் ஆரக்கண்டு இன்பு உறார் 3456-1
நின்று நிலமிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி 3456-2
வன் தொண்டர் திருவா ரூர் மயங்கு மாலையில் புகுந்து 3456-3
துன்று சடைத் தூவாயர் தமை முன்னம் தொழ அணைந்தார் 3456-4
303. பொங்கு திருத்தொண்டருடன் உள்ளணைந்து புக்கு இறைஞ்சி 3457-1
துங்க இசைத் திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே 3457-2
இங்கு எமது துயர் களைந்து கண் காணக் காட்டாய் என்று 3457-3
அம் கணர் தம் முன் நின்று பாடி அருந்தமிழ் புணைந்தார் 3457-4
304. ஆறணியுஞ் சடையாரைத் தொழுது புறம் போந்து அங்கண் 3458-1
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி 3458-2
ஏறுயர்த்தார் திருமூலட்டாத்து உள் இடை தெரிந்து 3458-3
மாறில் திரு அத்தயா மத்து இறைஞ்ச வந்து அணைந்தார் 3458-4
305. ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கிக் 3459-1
கோதில் இசையால் குருகுபாய எனக் கோத்து எடுத்தே 3459-2
ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம் 3459-3
காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார் 3459-4
306. சீர் பெருகும் திருத் தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சிக் 3460-1
கார் விரவு கோபுரத்தைக் கை தொழுதே உள் புகுந்து 3460-2
தார் பெருகு பூங்கோயில் தனை வணங்கி சார்ந்து அணைவார் 3460-3
ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார் 3460-4
307. வீழ்ந்து எழுந்து கை தொழுது முன் நின்று விம்மியே 3461-1
வாழ்ந்த மலர்க் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார் 3461-2
ஆழ்ந்த துயர்க் கடல் இடை நின்று அடியேனை எடுத்து அருளித் 3461-3
தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண்தாரும் எனத் தாழ்ந்தார் 3461-4
308. திரு நாவலூர் மன்னர் திருவாரூர் வீற்று இருந்த 3462-1
பெருமானைத் திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனைப் 3462-2
பருகா இன் அமுதைக் கண்களால் பருகுதற்கு 3462-3
மருவார்வத்துடன் மற்றைகண் தாரீர் என வணங்கி 3462-4
309. மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம் 3463-1
மாளமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானைத் 3463-2
தாளா தரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று 3463-3
ஆளாம் திருத் தோழமைத் திறத்தால் அஞ்சொல் பதிகம் பாடினார் 3463-4
310. பூத முதல்வர் புற்றிடங்கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர் 3464-1
காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணைத் திரு நோக்கு அளித்து அருளிச் 3464-2
சீத மலர்க் கண் கொடுத்து அருளச் செவ்வே விழித்து முகம் மலர்ந்து 3464-3
பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பர வசமாய் 3464-4
311. விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவிப் பணிந்து மிகப் பரவி 3465-1
எழுந்த களிப்பினால் ஆடிப் பாடி இன்ப வெள்ளத்தில் 3465-2
அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றின் இடை எழுந்த 3465-3
செந்தண் பவளச் சிவக் கொழுந்தின் அருளைப் பருகித் திளைக்கின்றார் 3465-4
312. காலம் நிரம்பத் தொழுது ஏத்திக் கனக மணி மாளிகை கோயில் 3466-1
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம் கொண்டு 3466-2
மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழியப் புறம் போந்து 3466-3
சீலம் உடைய அன்பர் உடன் தேவாசிரியன் மருங்கு அணைந்தார் 3466-4
313. நங்கை பரவையார் தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின் 3467-1
தங்கு மணி மாளிகையின் கண் தனிமை கூரத் தளர்வார்க்குக் 3467-2
கங்குல் பகலாய்ப் பகல் கங்குலாகிக் கழியா நாள் எல்லாம் 3467-3
பொங்கு காதல் மீதூரப் புல்வார் சில நாள் போன அதன்பின் 3467-4
314. செம்மை நெறி சேர் திரு நாவலூர் ஒற்றியூர் சேர்ந்து 3468-1
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் குலவு மணம் புணர்ந்த 3468-2
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப 3468-3
தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார் 3468-4
315. மென் பூஞ்சயனத்து இடைத்துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார் 3469-1
பொன் பூந்தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார் 3469-2
மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார் 3469-3
என்பூடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப் பட்டார் 3469-4
316. ஆன கவலைக் கை அறவால் அழியும் நாளில் ஆரூரர் 3470-1
கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் கோயில் முன் குறுகப் 3470-2
பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால் 3470-3
போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறம் நின்றார் 3470-4
317. நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவாரூரர் எதிர் 3471-1
சென்று மொழிவார் திரு ஒற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம் 3471-2
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் 3471-3
இன்று புறமும் சென்று எய்தப் பெற்றிலோம் என்று இறைஞ்சினார் 3471-4
318. மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர் 3472-1
உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு 3472-2
கற்ற மாந்தர் சிலர் தம்மைக் காதல் பரவையார் கொண்ட 3472-3
செற்ற நிலைமை அறிந்தவர்க்கு தீர்வு சொல்லச் செல விட்டார் 3472-4
319. நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது 3473-1
பைம் பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால் 3473-2
வெம்பு புலவிக் கடல் அழுந்தும் மின்னேரிடையார் முன் எய்தி 3473-3
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்துரைப்பார் 3473-4
320. பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன் 3474-1
மாதர் அவரும் மறுத்துமனம் கொண்ட செற்றம் மாற்றாராய் 3474-2
ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர் 3474-3
போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சிப்புறம் போந்தார் 3474-4
321. போந்து புகுந்த படி எல்லாம் பூந்தண் பழன முனைப்பாடி 3475-1
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர்வேலை 3475-2
நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்த சிந்தை ஆகுலம் நெஞ்சில் 3475-3
காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடையாமகக் கடலுள் 3475-4
322. அருகு சூழ்ந்தார் துயின்று திருஅந்தயாமம் பணி மடங்கிப் 3476-1
பெருகு புவனம் சலிப்பு இன்றிப் பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய் 3476-2
முருகு விரியும் மலர்க் கொன்றை முடிமேல் அரவும் இளமதியும் 3476-3
செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார் 3476-4
323. முன்னை வினையால் இவ்வினைக்கு மூலம் ஆனாள்பால் அணைய 3477-1
என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்து அருளி 3477-2
அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம் அன்றிப் 3477-3
பின்னை இல்லைச் செயல் என்று பெருமான் அடிகள் தமை நினைந்தார் 3477-4
324. அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை 3478-1
முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொற்றளிர்க் கைத் 3478-2
தொடியார் தழும்பும் முலைச் சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும் 3478-3
படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய 3478-4
325. தம் பிரானார் எழுந்து அருளத் தாங்கற்கு அரிய மகிழ்ச்சியினால் 3479-1
கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப 3479-2
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர்க்கை தலைக் குவிய 3479-3
அம்பிகா வல்லவர் செய்ய அடித் தாமரையின் கீழ் விழுந்தார் 3479-4
326. விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினேடும் எதிர் போற்றி 3480-1
எழுந்த நண்பர் தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள 3480-2
தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசி இடைப்பட்டு 3480-3
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று 3480-4
327. அடியேன் அங்குத் திருவொற்றியூரில் நீரே அருள் செய்ய 3481-1
வடிவேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்ததிறம் எல்லாம் 3481-2
கொடியேர் இடையாள் பரவை தான் அறிந்து தன்பால் யான் குறுகில் 3481-3
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து 3481-4
328. நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்குத் 3482-1
தாயின் நல்ல தோழருமாம் தம்பிரனாரே ஆகில் 3482-2
ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும் 3482-3
போய் இவ்விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாரும் என 3482-4
329. அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி 3483-1
முன்பு நின்று விண்ணப்பம் செய்தநம்பி முகம் நோக்கித் 3483-2
துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே 3483-3
பொன் செய் மணிப்பூண் பரவைபால் போகின்றோம் என்று அருள் செய்தார் 3483-4
330. எல்லை இல்லாக் களிப்பினராய் இறைவர் தாளில் விழுந்து எழுந்து 3484-1
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர் 3484-2
முல்லை முகை வெண்ணகைப் பரவை முகில் சேர் மாடத்து இடை செல்ல 3484-3
நில்லாது ஈண்ட எழுந்து அருளி நீக்கும் புலவி எனத் தொழுதார் 3484-4
331. அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம் அமுதாக 3485-1
உண்ட நீலக் கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவரியர் 3485-2
வண்டு வாழும் மலர்க் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கி 3485-3
தொண்டனார் தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்து அருள 3485-4
332. தேவாசிரியன் முறை இருக்கும் தேவர் எலாம் சேவித்துப் 3486-1
போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய 3486-2
ஓவா அணுக்கச் சேவகத்தில் உள்ளோர் பூத கண நாதர் 3486-3
மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன்போக 3486-4
333. அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அவ்விருடிகளும் 3487-1
மருவு நண்பின் நிதிக் கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த 3487-2
தெருவும் விசும்பும் நிறைந்து விரைச் செழும் பூமாரி பொழிந்து அலையப் 3487-3
பொருவில் அன்பர் விடும்தூதர் புனித வீதியினில் போத 3487-4
334. மாலும் அயனும் காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்து இறைஞ்சும் 3488-1
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்னக் கடல் விளைத்த 3488-2
ஆலம் இருண்ட கண்டத்தான் அடித்தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப 3488-3
நீல மலர்க்கண் பரவையார் திருமாளிகையை நேர் நோக்கி 3488-4
335. இறைவர் விரைவின் எழுந்து அருள எய்தும் அவர்கள் பின்தொடர 3489-1
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம் 3489-2
பிறை கொள் அருகு நறை இதழிப் பிணையல் சுரும்பு தொடர உடன் 3489-3
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது 3489-4
336. பெரு வீரையினும் மிக முழங்கிப்பிறங்கு மத குஞ்சரம் உரித்து 3490-1
மருவீர் உரிவை புனைந்தவர் தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால் 3490-2
திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வத் திருவாரூர் 3490-3
ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாமால் 3490-4
337. ஞாலம் உய்ய எழுந்து அருளும் நம்பி தூதர் பரவையார் 3491-1
கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூடத்தம் 3491-2
பாலங்கு அணைந்தார் புறம் நிற்பப் பண்டே தம்மை அர்ச்சிக்கும் 3491-3
சீலம் உடைய மறை முனிவர் ஆகித் தனியே சென்று அணைந்தார் 3491-4
338. சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு 3492-1
நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென் குழலாகும் 3492-2
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய் 3492-3
துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் எனத் துணிந்து 3492-4
339. பாதி மதி வாழ் முடியாரைப் பயில் பூசனையின் பணி புரிவார் 3493-1
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்திப் 3493-2
பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே 3493-3
பாதி மதி வாண் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார் 3493-4
340. மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயில் இடை 3494-1
முன் நின்றாரைக் கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின் கண் 3494-2
என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன 3494-3
மின்னும் மணி நூல் அணிமார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார் 3494-4
341. கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளிச் செய்வார் 3495-1
நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன 3495-2
அங்கயல் விழியினாரும் அதனை நீர் அருளிச் செய்தால் 3495-3
இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி 3495-4
342. என் நினைந்து அணைந்து என்பால் இன்னது என்று அருளிச் செய்தால் 3496-1
பின்னை அதியலும் ஆகில் ஆம் எனப் பிரானார் தாமும் 3496-2
மின்னிடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன 3496-3
நன் நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார் 3496-4
343. பங்குனி திரு நாளுக்குப் பண்டுபோல் வருவார் ஆகி 3497-1
இங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே 3497-2
சங்கிலித் தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர் 3497-3
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகிது என்றார் 3497-4
344. நாதரும் அதனைக் கேட்டு நங்கை நீ நம்பி செய்த 3498-1
ஏதங்கள் மனத்துக் கொள்ளாது எய்திய வெகுளி நீக்கி 3498-2
நோதக ஒழித்தற்கு அன்றே நுன்னையான் வேண்டிக் கொண்டது 3498-3
ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளிச் செய்தார் 3498-4
345. அரு மறை முனிவரான ஐயரைத் தையலார் தாம் 3499-1
கருமம் ஈதாக நீர் இக் கடைத் தலை வருகை மற்(று)உம் 3499-2
பெருமைக்குத் தகுவது அன்றால் ஒற்றியூர் உறுதி பெற்றார் 3499-3
வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்துச் சொன்னார் 3499-4
346. நம்பர் தாம் அதனைக் கேட்டு நகையும் உட்கொண்டு மெய்ம்மைத் 3500-1
தம் பரிசு அறியக் காட்டார் தனிப் பெரும் தோழனார் தம் 3500-2
வெம்புறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி 3500-3
வம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார் 3500-4
347. தூதரைப் போக விட்டு வரவு பார்த்திருந்த தொண்டர் 3501-1
நாதரை அறிவிலாதே நன்நுதல் புலவி நீக்கிப் 3501-2
போதரத் தொழுதேன் என்று புலம்புவார் பரவை யாரைக் 3501-3
காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உட் கொள்வார் 3501-4
348. போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ 3502-1
நாயனார் தம்மைக் கண்டால் நன் நுதல் மறுக்குமோ தான் 3502-2
ஆய என் அயர்வு தன்னை அறிந்து எழுந்து அருளினார் தாம் 3502-3
சேயிழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று 3502-4
349. வழி எதிர் கொள்ளச் செல்வர் வரவு காணாது மீள்வர் 3503-1
அழிவுற மயங்கி நிற்பர் அசைவுடன் இருப்பர் நெற்றி 3503-2
விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன் 3503-3
பொழி மலர் மாரி வீழ ஒதுங்குவார் புன்கண் உற்றார் 3503-4
350. பரவையார் தம்பால் நம்பி தூதராம் பாங்கில் போன 3504-1
அரவணி சடையார் மீண்டே அறியும் மாறு அணையும் போதில் 3504-2
இரவும்தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட 3504-3
உரவுநீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார் 3504-4
351. சென்று தம் பிரானைத் தாழ்ந்து திருமுகம் முறுவல் செய்ய 3505-1
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே 3505-2
அன்று நீர் ஆட்கொண்ட அதனுக்குத் தகவே செய்தீர் 3505-3
இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்து அருளி என்றார் 3505-4
352. அம் மொழி விளம்பும் நம்பிக்கையர் தாம் அருளிச் செய்வார் 3506-1
நம்மை நீ சொல்ல நாம் போய்ப் பரவை தம் இல்லம் நண்ணிக் 3506-2
கொம்மை வெம் முலையினாள்க்கு உன் திறம் எலாம் கூறக் கொள்ளாள் 3506-3
வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார் 3506-4
353. அண்ணலார் அருளிச் செய்யக் கேட்ட ஆரூரர் தாமும் 3507-1
துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளிச் செய்த 3507-2
வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள் 3507-3
எண்ண ஆர் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று 3507-4
354. வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை உண்டீர் 3508-1
தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்து ஆட்கொண்டீர் 3508-2
நான் மறைச் சிறுவர்க்காக காலனைக் காய்ந்து நட்டீர் 3508-3
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார் 3508-4
355. ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால் 3509-1
பாவியேன் தன்னை அன்றுவலிய ஆள் கொண்டபற்று என் 3509-2
நேவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள் பால் இன்று 3509-3
மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார் 3509-4
356. தம்பிரான் அதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த 3510-1
நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள் பால் போய் அக் 3510-2
கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா கூறுகின்றோம் 3510-3
வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார் 3510-4
357. மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை 3511-1
நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர்தாமும் 3511-2
முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடித் தொழும்பன் ஏனைப் 3511-3
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற 3511-4
358. அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்லப் 3512-1
பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார் 3512-2
முன்பு உடன் போதா தாரும் முறைமையில் சேவித்து ஏகப் 3512-3
பொன்புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார் 3512-4
359. மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போனபின்பு 3513-1
முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதவர் ஆகும் 3513-2
அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன் 3513-3
எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார் 3513-4
360. கண் துயில் எய்தார் வெய்யகை யறவு எய்தி ஈங்கு இன்று 3514-1
அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம் 3514-2
கொண்டு அணைந்த வரை யான் உட்கெண்டிலேன் பாவியேன் என்று 3514-3
ஒண் சுடர் வாயிலே பார்த்து உழைய ரோடு அழியும் போதில் 3514-4
361. வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாமாம் தன்மை 3515-1
அறிவுறு கோலத் தோடும் அளவில் பல் பூத நாதர் 3515-2
செறிவுறு தேவர் யோக முனிவர்கள் சூழ்ந்து செல்ல 3515-3
மறுவில் சீர் பரவையார் தம் மாளிகை புகுந்தார் வந்து 3515-4
362. பாரிடத் தலைவர் முன்னம் பல் கண நாதர் தேவர் 3516-1
நேர்வுறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே 3516-2
பேரருளாளர் எய்தப் பெற்ற மாளிகைதான் தென்பால் 3516-3
சீர் வளர் கயிலை வெள்ளித் திருமலை போன்றது அன்றே 3516-4
363. ஐயர் அங்கு அணைந்த போதில் அகில லோகத்து உள்ளாரும் 3517-1
எய்தியே செறிந்து சூழ எதிர் கொண்ட பரவையார் தாம் 3517-2
மெய்யுறு நடுக்கத் தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்கச் 3517-3
செய்யதாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார் 3517-4
364. அரி அயற்கு அரியர் தாமுமாய் இழையாரை நோக்கி 3518-1
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன் பால் வந்தோம் 3518-2
முருகலர் குழலாய் இன்னம் முன் போல் மாறாதே நின்பால் 3518-3
பிரிவுற வருந்து கின்றான் வரப் பெற வேண்டும் என்றார் 3518-4
365. பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி 3519-1
வருந்திய உள்ளத்தோடு மலர்க்கரம் குழல் மேல் கொண்டே 3519-2
அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த 3519-3
இரும் தவப் பயனாம் என்ன எய்திய நீரோ என்பார் 3519-4
366. துளிவளர் கண்ணீர் வாரத் தொழுது விண்ணப்பம் செய்வார் 3520-1
ஒளிவளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது 3520-2
அளிவரும் அன்பர்க்காக அங்கு ஒடிங்கி உழல் வீராகி 3520-3
எளி வருவீரும் ஆனால் என் செய் கேன் இசையாது என்றார் 3520-4
367. நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று 3521-1
மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போக 3521-2
திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார் 3521-3
எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார் 3521-4
368. ஆதியும் மேலும் மாலயன் நாடற்கு அருளாதார் 3522-1
தூதினில் ஏகித் தொண்டரை ஆளும் தொழில் கண்டே 3522-2
வீதியில் ஆடிப் பாடி மகிழ்ந்தே மிடை கின்றார் 3522-3
பூதியில் நீடும் பல் கண நாதப் புகழ் வீரர் 3522-4
369. அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த 3523-1
மின் இடையார் பால் அன்பரை உய்க்கும் விரைவோடும் 3523-2
சென்னியில் நீடும் கங்கை ததும்ப திருவாரூர் 3523-3
மன்னவனார் அம்மறையவனார் பால் வந்துற்றார் 3523-4
370. அன்பரும் என்பால் ஆவி அளிக்கும் படி போனார் 3524-1
என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூரப் 3524-2
பொன் புரி முந்நூல் மார்பினர் செல்லப் பொலிவீதி 3524-3
முன்புற நேரும் கண் இணை தானும் முகிழாரால் 3524-4
371. அந் நிலைமைக் கண் மன்மதன் வாளிக்கு அழிவார் தம் 3525-1
மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த 3525-2
முன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும் தாள் 3525-3
சென்னியில் வைத்து என் சொல்லுவார் என்றே தெளியாதார் 3525-4
372. எம் பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும் 3526-1
கொம்பு அனையாள் பால் என் கொடுவந்தீர் குறை என்னத் 3526-2
தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணி வித்தோம் 3526-3
நம்பி இனப் போய் மற்று அவள் தன்பால் நணுகு என்ன 3526-4
373. நந்தி பிரானார் வந்து அருள் செய்ய நலம் எய்தும் 3527-1
சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தித் திகழ்கின்றார் 3527-2
பந்தமும் வீடும் நீர் அருள் செய்யும் படி செய்தீர் 3527-3
எந்தை பிரானே என் இனி என் பால் இடர் என்றார் 3527-4
374. என்று அடி வீழும் நண்பர் தம் அன்புக்கு எளிவந்தார் 3528-1
சென்று அணை நீ அச் சே இழை பால் என்று அருள் செய்து 3528-2
வென்று உயர் சே மேல் வீதி விடங்கப் பெருமாள் தம் 3528-3
பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ 3528-4
375. தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார் 3529-1
எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சி யோடும் 3529-2
வம்பலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி 3529-3
நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்து அருளும் போது 3529-4
376. முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப 3530-1
மின் திகழ் பொலம் பூ மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த 3530-2
மன்றல் செய் மதுர சீதம் சிகரம் கொண்டு மந்தத் 3530-3
தென்றலும் எதிர் கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட 3530-4
377. மாலை தண் கலவைச் சேறு மான் மதச் சாந்து பொங்கும் 3531-1
கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள 3531-2
சாலும் மெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண் ஆடைவர்க்கம் 3531-3
பாலனம் பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல 3531-4
378. இவ்வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினேடும் 3532-1
மை வளர் நெடுங்கணாரும் மாளிகை அடைய மன்னும் 3532-2
செய்வினை அலங்கரத்துச் சிறப்பு அணி பலவும் செய்து 3532-3
நெய்வளர் விளக்குத் தூபம் நிறை குடம் நிரைத்துப் பின்னும் 3532-4
379. பூ மலி நறும் பொன் தாமம் புனை மணிக் கோவை நாற்றிக் 3533-1
காமர் பொன் சுண்ணம் வீசிக் கமழ் நறும் சாந்து நீவித் 3533-2
தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்தத்தாமும் 3533-3
மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார் 3533-4
380. வண்டுலாம் குழலார் முன்பு வன்தொண்டர் வந்து கூடக் 3534-1
கண்ட போது உள்ளம் காதல் வெள்ளத்தின் கரை காணாது 3534-2
கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அக் குரிசிலாரும் 3534-3
தண் தளிர் செங்கை பற்றிக் கொண்டு மாளிகையுள் சாந்தார் 3534-4
381. இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடிச் செய்த 3535-1
திரு அருள் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றி சிந்தை 3535-2
மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சிவாய்ப்ப 3535-3
ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார் 3535-4
382. ஆரணக் கமலக் கோயில் மேவிப் புற்றிடங்கொண்டு ஆண்ட 3536-1
நீரணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றி 3536-2
பாரணி விளக்கும் செஞ்சொல்பதிக மாலைகளும் சாத்தி 3536-3
தாரணி மணிப்பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில் 3536-4
383. நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று 3537-1
தம் பிரானாரைத் தூது தையல் பால் விட்டார் என்னும் 3537-2
இம்பரின் மிக்க வார்த்தை ஏயர் கோனார்தாம் கேட்டு 3537-3
வெம்பினார் அதிசயித்தார் வெருவினார் விளம்பல் உற்றார் 3537-4
384. நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால 3538-1
ஏயும் என்று இதனைச் செய்வான் தொண்டனாம் என்னே பாவம் 3538-2
பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழையினைச் செவியால் கேட்பது 3538-3
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார் 3538-4
385. காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப் 3539-1
பாரிடை நடந்து செய்ய பாததாமரைகள் நோவத் 3539-2
தேரணி வீதியூடு செல்வது வருவது ஆகி 3539-3
ஓரிரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று 3539-4
386. நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல் 3540-1
உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா 3540-2
எம்பிரான் இசைந்தால் ஏவப் பெறுவதே இதனுக்கு உள்ளம் 3540-3
கம்பியாது அவனை யான் முன் காணும் நாள் எந் நாள் என்று 3540-4
387. அரிவை காரணத்தினாலே ஆளுடைப் பரமர் தம்மை 3541-1
இரவினில் தூது போக ஏவி அங்குஇருந்தான் தன்னை 3541-2
வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம் கொல் என்று 3541-3
விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி 3541-4
388. ஈறிலாப் புகழின் ஓங்கும் ஏயர் கோன் ஆர் தாம் எண்ணிப் 3542-1
பேறிது பெற்றார் கேட்டுப் பிழை உடன்படுவர் ஆகி 3542-2
வேறினி இதற்குத் தீர்வு வேண்டுவார் விரிபூங்கொன்றை 3542-3
ஆறிடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து 3542-4
389. நாள் தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி 3543-1
நீடிய தொண்டர் தம்முள் இருவரும் மேவும் நீர்மை 3543-2
கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார் தம்பால் மேனி 3543-3
வாடுறும் சூலை தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால் 3543-4
390. ஏதமில் பெருமைச் செய்கை ஏயர்தம் பெருமான் பக்கல் 3544-1
ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன 3544-2
வேதனை மேல் மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து 3544-3
பூத நாயகர் தம் பொன் தாள் பற்றியே போற்றுகின்றார் 3544-4
391. சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி பேற்றி செய்ய 3545-1
எந்தமையாளும் ஏயர் காவலர் தம்பால் ஈசர் 3545-2
வந்துனை வருத்தும் சூலைவன் தொண்டன் தீர்கில் அன்றி 3545-3
முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள் செய்யக் கேட்டு 3545-4
392. எம்பிரான் எந்தை தந்தை தந்தை எங்கூட்டம் எல்லாம் 3546-1
தம் பிரான் நீரே என்று வழி வழி சார்ந்து வாழும் 3546-2
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை 3546-3
வம்பு என ஆண்டுக் கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து 3546-4
393. மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால் 3547-1
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே 3547-2
உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்னக் 3547-3
கற்றைவார் சடையார்தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே 3547-4
394. வன் தொண்டர் தம்பால் சென்று வள்ளலார் அருளிச் செய்வார் 3548-1
இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை 3548-2
சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள் செயச் சிந்தையோடு 3548-3
நன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவல் ஊரர் 3548-4
395. அண்ணலார் அருளிச் செய்து நீங்க ஆரூரர் தாமும் 3549-1
விண்ணவர் தம்பிரான் ஆர் ஏவலால் விரைந்து செல்வார் 3549-2
கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்காமர்க்குத் 3549-3
திண்ணிய சூலை தீர்க்க வரும்தி செப்பி விட்டார் 3549-4
396. நாதர் தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்பால் கேட்ட 3550-1
கேதமும் வருத்த மீண்டும் வன்தொண்டர் வரவும் கேட்டு 3550-2
தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும் 3550-3
ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார் 3550-4
397. மற்றவன் இங்கு வந்து தீர்பதன் முன் நான் மாயப் 3551-1
பற்றி நின்று என்னை நீங்காப் பாதகச் சூலை தன்னை 3551-2
உற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள் தன்னால் 3551-3
செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே 3551-4
398. கருதரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவியாரும் 3552-1
பொருவரும் கணவரோடு போவது புரியும் காலை 3552-2
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன்வந்தார் கூற 3552-3
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்துப் பின்னும் 3552-4
399. கணவர் தம் செய்கை தன்னைக் கரந்து காவலரை நம்பி 3553-1
அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்னப் 3553-2
புணர் நிலை வாயில் தீபம் பூரண கும்பம் வைத்துத் 3553-3
துணர் மலர் மாலை தூக்கித் தொழுது எதிர் கொள்ளச் சென்றார் 3553-4
400. செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர் கொண்டு போற்ற 3554-1
நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி 3554-2
மெய்மையாம் விருப்பின்னோடும் மேவி உள் புகுந்து மிக்க 3554-3
மொய்ம் மலர்த் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்தபோது 3554-4
401. பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த 3555-1
நான் மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு 3555-2
யான் மிக வருந்து கின்றேன் ஏயர் கோனார் தாம் உற்ற 3555-3
ஊன வெஞ்சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார் 3555-4
402. மாதர் தம் ஏவலாலே மனைத் தொழில் மாக்கள் மற்று இங்கு 3556-1
ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளி கொள்கின்றார் என்னத் 3556-2
தீது அணை வில்லை ஏறும் என் மனம் தெருளாது இன்னம் 3556-3
ஆதலால் அவரைக் காண வேண்டும் என்று அருளிச் செய்தார் 3556-4
403. வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மைக் காட்டத் 3557-1
துன்றிய குருதி சோரத் தொடர் குடர் சொரிந்து உள்ளாவி 3557-2
பொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின் புகுந்தவாறு 3557-3
நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார் 3557-4
404. கோளுறு மனத்தர் ஆகிக் குற்று உடைவாளைப் பற்ற 3558-1
ஆளுடைத் தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து 3558-2
கேளிரே ஆகிக் கெட்டேன் என விரைந்து எழுந்து கையில் 3558-3
வாளினைப் பிடித்துக் கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார் 3558-4
405. மற்றவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர் 3559-1
கொற்றவனாரும் நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார் 3559-2
அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர் 3559-3
பொன் தட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற 3559-4
406. இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே 3560-1
பொருவரும் மகிழ்சி பொங்கத் திருபுன் கூர் புனிதர் பாதம் 3560-2
மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார் 3560-3
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி 3560-4
407. சில பகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர் 3561-1
மலர் புகழ்த் திருவாரூரில் மகிழ்ந்துடன் வந்த ஏயர் 3561-2
குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில் 3561-3
நிலவினார் தம்மைக் கும்பிட்டு உறைந்தனர் நிறைந்த அன்பால் 3561-4
408. அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து 3562-1
பொங்கிய திருவின் மிக்க தம்பதி புகுந்து பொற்பில் 3562-2
தங்கு நாள் ஏயர் கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே 3562-3
செங்கண் மால் விடையார் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினேடும் 3562-4
409. நள்ளிருள் நாயனாரைத் தூது விட்டு அவர்க்கே நண்பாம் 3563-1
வள்ளலார் ஏயர் கோனார் மலர் அடி வணங்கிப்புக்கேன் 3563-2
உள்ளுணர்வான ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை 3563-3
தெள்ளு தீந்தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப 3563-4
30 திரு மூல நாயனார் புராணம்
1. அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில் 3564-1
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி 3564-2
இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும் 3564-3
நந்தி திருவருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர் 3564-4
2. மற்றவர் தாம் அணி மாதி வரும் சித்தி பெற்று உடையார் 3565-1
கொற்றவனார் திருக் கயிலை மலை நின்றும் குறு முனிபால் 3565-2
உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு 3565-3
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் 3565-4
3. மன்னு திருக் கேதாரம் வழி பட்டு மா முனிவர் 3566-1
பன்னு புகழ்ப் பசுபதி நேபாளத்தைப் பணிந்து ஏத்தித் 3566-2
துன்னு சடைச் சங்கரனார் ஏற்ற தூ நீர்க் கங்கை 3566-3
அன்ன மலி அகன் துறை நீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார் 3566-4
4. கங்கை நீர்த் துறை ஆடிக் கருத்துறை நீள் கடல் ஏற்றும் 3567-1
அங்கணர் தாம் மகிழ்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி 3567-2
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி 3567-3
திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் 3567-4
5. நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி 3568-1
ஆடு திரு அரங்கான ஆலவனம் தொழுது ஏத்தித் 3568-2
தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து 3568-3
மாடுயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் 3568-4
6. நற்பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய்க் 3569-1
கற்புரிசைத் திருவதிகை கலந்து இறைஞ்சிக் கறை கண்டர் 3569-2
அற்புதக் கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திருவீதிப் 3569-3
பொற்பதியாம் பெரும் பற்ற புலியூர் வந்து அணைந்தார் 3569-4
7. எவ்வுலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரைச் 3570-1
செவ்விய அன்புற வணங்கிச் சிந்தை களிவரத் திளைத்து 3570-2
வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்தக் கூத்தை 3570-3
அவ்வியல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் 3570-4
8. தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய் 3571-1
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே 3571-2
விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே 3571-3
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார் 3571-4
9. காவிரி நீர்ப் பெரும் தீர்த்தம் கலந்து ஆடிக் கடந்து ஏறி 3572-1
ஆவின் அரும் கன்று உறையும் ஆவடு தண் துறை அணைந்து 3572-2
சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து 3572-3
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் 3572-4
10. அந்நிலைமைத் தானத்தை அகலாத ஒருகருத்து 3573-1
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்தப் 3573-2
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோக்குலங்கள் 3573-3
பொன்னி நதிக் கரைப் புறவில் புலம்புவன எதிர் கண்டார் 3573-4
11. அந்தணர்தம் சாத்தனூர் ஆமேய்பார் குடித் தோன்றி 3574-1
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயருடையான் 3574-2
வந்து தனி மேய் கின்றான் வினைமாள வாழ்நாளை 3574-3
வெந்தொழில் கூற்றுவன் கூற்று உண்ண வீடி நிலத்து இடை வீழ்ந்தான் 3574-4
12. மற்றவன் தன் உடம்பினை அக்கோக் குலங்கள் வந்து அணைந்து 3575-1
சுற்றி மிகக் கதறுன சுழல்வன மோப்பனவாக 3575-2
நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ 3575-3
உற்றதுயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் 3575-4
13. இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று 3576-1
அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும் 3576-2
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற 3576-3
பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார் 3576-4
14. பாய்த்திய பின் திரு மூலராய் எழலும் பசுக்கள் எலாம் 3577-1
நாத் தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப் பொடு நயந்து 3577-2
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின் 3577-3
நீத்த துயரினவாகி நிரைந்து போய் மேந்தனவால் 3577-4
15. ஆவின் நிரை மகிழ்வுறக் கண்ட அளிகூர்ந்த அருளினராய் 3578-1
மேவியவை மேய் விடத்துப் பின் சென்று மேய்ந்தவை தாம் 3578-2
காவிரி முன் துறைத் தண்ணீர் கலந்து உண்டு கரை ஏறப் 3578-3
பூவிரி தண் புறவின் நிழல் இனிதாகப் புறங்காத்தார் 3578-4
16. வெய்ய சுடர்க் கதிரவனும் மேல் பாலை மலை அணையச் 3579-1
சைவ நெறி மெய் உணந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் 3579-2
பைய நடப்பன கன்றை நினைந்து படர் வன வாகி 3579-3
வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்தப் பின் போனார் 3579-4
17. போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை தோறும் புகநின்றார் 3580-1
மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று 3580-2
ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள் 3580-3
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய்தீண்ட அதற்கு இசையார் 3580-4
18. அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள் 3581-1
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் எனத்தளர 3581-2
இங்கு உனக்கு என்னுடன் அணை ஒன்று இல்லை என எதிர்மறுத்துப் 3581-3
பொங்கு தவத்தோர் ஆங்கோர் பொது மடத்தின் உட்புகுந்தார் 3581-4
19. இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் 3582-1
சொல் ஆடாது இருந்தவர் பால் அணையாது துயிலாதாள் 3582-2
பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப 3582-3
நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் 3582-4
20. பித்து உற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று 3583-1
சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில் 3583-2
வைத்த கருத்தினர் ஆகி வரம்பில் பெருமையில் இருந்தார் 3583-3
இத்தகைமை அளப்பு அரிதால் யாராலும் என உரைப்பார் 3583-4
21. பற்று அறுத்த உபதேசப் பரமர் பதம் பெற்றார் போல் 3584-1
முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள் 3584-2
சுற்றம் இயல் பினுக்கு எய்தார் என்று உரைப்பத் துயர் எய்தி 3584-3
மற்றவளும் மையலுற மருங்குள்ளார் கொண்டு அகன்றார் 3584-4
22. இந் நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் 3585-1
வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த 3585-2
முந்தை உடல் பொறைகாணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞானச் 3585-3
சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் 3585-4
23. தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை 3586-1
மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக் 3586-2
கண்ணிய அத்திரு அருளால் அவ்வுடலைக் கரப்பிக்க 3586-3
எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் 3586-4
24. சுற்றிய அக் குலத்துள்ளார் தொடர்ந்தார்கு தொடர்வு இன்மை 3587-1
முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின் 3587-2
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்துப் பெருகு ஆர்வச் 3587-3
செற்றம் முதல் கடிந்தவர்தாம் ஆவடுதண் துறை சேர்ந்தார் 3587-4
25. ஆவடு தண் துறை அணைந்து அங்கு அரும் பொருளை உறவணங்கி 3588-1
மேவுவார் புறக் குடபால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்த் 3588-2
தேவிருக்கை அமர்ந்து அருளிச் சிவயோகம் தலை நின்று 3588-3
பூவலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்து இருந்தார் 3588-4
26. ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோய் உய்ய 3589-1
ஞானம் முதல் நான்கு மலர் நல் திரு மந்திர மாலை 3589-2
பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம் பொருளாம் 3589-3
ஏன எயிறு அணிந்தாரை ஒன்றவன்தான் என எடுத்து 3589-4
27. முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி 3590-1
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து 3590-2
சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை 3590-3
தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார் 3590-4
28. நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியை யெலாம் 3591-1
மலர்ந்த மொழித் திருமூலத் தேவர் மலர்க் கழல் வணங்கி 3591-2
அலர்ந்த புகழ்த் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட 3591-3
தலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம் 3591-4
31 தண்டியடிகள் புராணம்
1. தண்டி அடிகள் திரு ஆரூர் பிறக்கும் பெருமைத் தவம் உடையார் 3592-1
அண்ட வாணர் மறை பாட ஆடும் செம் பொன் கழல் மனத்துக் 3592-2
கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றிப் புற நோக்கும் 3592-3
கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார் 3592-4
2. காணும் கண்ணால் காண்பது மெய்த் தொண்டே ஆன கருத்து உடையார் 3593-1
பேணும் செல்வத் திருவாரூர்ப் பெருமான் அடிகள் திரு அடிக்கே 3593-2
பூணும் அன்பினால் பரவிப் போற்றும் நிலைமை புரிந்து அமரர் 3593-3
சேணும் அறிய அரியதிருத் தொண்டில் செறியச் சிறந்து உள்ளார் 3593-4
3. பூவார் சடிலத் திருமுடியார் மகிழ்ந்த செல்வப் பூங்கோயில் 3594-1
தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாரய் செம்மை புரி 3594-2
நாவால் இன்பம் உறும் காதல் நமச்சிவாய நற்பதமே 3594-3
ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில் 3594-4
4. செம் கண் விடையார் திருக்கோயில் குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு 3595-1
எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால் 3595-2
அங்கு அந்நிலைமை தனைத் தண்டி அடிகள் அறிந்தே ஆதரவால் 3595-3
இங்கு நான் இக் குளம் பெருகக் கல்ல வேண்டும் என்று எழுந்தார் 3595-4
5. குழி வாய் அதனில் குறி நட்டுக் கட்டும் கயிறு குளக் குலையின் 3596-1
இழிவாய்ப் புறத்து நடுத் தறியோடு இசையக் கட்டி இடை தடவி 3596-2
வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவிப் போய் 3596-3
ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்தஞ்சுடன் உய்ப்பார் 3596-4
6. நண்ணிநாளும் நல்தொண்டர் நயந்த விருப்பால் மிகப் பெருகி 3597-1
அண்ணல் தீர்த்தக் குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி 3597-2
எண்ணித் தண்டி அடிகள் பால் எய்தி முன் நின்று இயம்புவார் 3597-3
மண்ணைக் கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் 3597-4
7. மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம் 3598-1
தேசு பெருகும் திருத் தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள் 3598-2
பூசு நீறு சாந்தம் எனப் புனைந்த பிரானுக்கு ஆன பணி 3598-3
ஆசிலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் 3598-4
8. அந்தம் இல்லா அறிவு உடையார் உரைப்பக் கேட்ட அறிவு இல்லார் 3599-1
சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன 3599-2
மந்த உணர்வும் விழிக்குருடும் கேளாச் செவியும் மற்று உமக்கே 3599-3
இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார் 3599-4
9. வில்லால் எயில் மூன்று எரித்தபிரான் விரையார் கமலச் சேவடிகள் 3600-1
அல்லால் வேறுகாணேன் யான் அதுநீர் அறிதற்கார் என்பார் 3600-2
நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு 3600-3
எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் 3600-4
10. அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் 3601-1
பெருகும் இவ்வூரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று 3601-2
கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கிக் கருத்தின் வழித் 3601-3
தருகைக்கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் 3601-4
11. வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டி அடிகள்தாம் 3602-1
மைகொள் கண்டர் பூங்கோயில் மணிவாயிலின் முன் வந்து இறைஞ்சி 3602-2
ஐயனே இன்று அமணர்கள் தாம் என்னை அவமானம் செய்ய 3602-3
நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு எனவீழ்ந்தார் 3602-4
12. பழுது தீர்ப்பார் திருத் தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து 3603-1
தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப் பெறாது 3603-2
அழுது கங்குல் அவர் துயிலக் கனவில் அகில லோகங்கள் 3603-3
முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளிச் செய்கின்றார் 3603-4
13. நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழித் தந்த 3604-1
வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் 3604-2
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர் பால் நீங்கி அவ்விரவே 3604-3
துஞ்சும் இருளில் அரசன் பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார் 3604-4
14. தண்டி நமக்குக் குளம் கல்லக் கண்ட அமணர் தரியாராய் 3605-1
மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டான் அவன்பால் நீ மேவிக் 3605-2
கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளித் 3605-3
தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்து அருளினார் அத்தொழில் உவப்பார் 3605-4
15. வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்பப் 3606-1
பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப் போற்றிப் புலரத் தொண்டர்பால் 3606-2
சார்ந்து புகுந்த படி விளம்பத்தம் பிரானார் அருள் நினைந்தே 3606-3
ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார் 3606-4
16. மன்ன! கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்லத் 3607-1
துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லிப் 3607-2
பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்ததறிகள் அவை வாங்கி 3607-3
என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டைப் பறித்தார் என்று இயம்பி 3607-4
17. அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு 3608-1
எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன 3608-2
இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இதுமேல் 3608-3
வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் 3608-4
18. அருகர் தம்மை அரசனும் அங்கு அழைத்துக் கேட்க அதற்கு இசைந்தார் 3609-1
மருவும் தொண்டர் முன்போக மன்னன் பின்போய் மலர்வாவி 3609-2
அருகு நின்று விறல் தண்டி அடிகள் தம்மை முகம் நோக்கிப் 3609-3
பெருகுந் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் எனப் பெரியோர் 3609-4
19. ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று 3610-1
வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார் 3610-2
ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்செழுத்தை 3610-3
வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணிநீர் மூழ்கினார் 3610-4
20. தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர்க்கண் பெற்று எழுந்தார் 3611-1
பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண்பூமாரி 3611-2
இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாறக் கண்டு 3611-3
பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் 3611-4
21. தண்டி யடிகள் தம்முடனே ஒட்டிக் கெட்ட சமண் குண்டர் 3612-1
அண்டர் போற்றும் திருவாரூர் நின்றும் அகன்று போய்க் கழியக் 3612-2
கண்ட அமணர் தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என 3612-3
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி 3612-4
22. குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை- என உரைப்பார் 3613-1
வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பாமதி-கெட்டீர் 3613-2
அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார்-அரசனுக்கு 3613-3
பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர்-பறிதலையார் 3613-4
23. பீலி தடவிக் காணாது பெயர்வார் நின்று பேதுறுவார் 3614-1
காலினோடு கை முறியக் கல் மேல் இடறி வீழ்வார்கள் 3614-2
சால நெருங்கி எதிர் எதிரே தம்மில் தாமே முட்டிடுவார் 3614-3
மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார் 3614-4
24. அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம் 3615-1
சொன்ன வண்ணமே அவரை ஓடத் தொடர்ந்து துரந்து அதன்பின் 3615-2
பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளம் சூழ் கரைபடுத்து 3615-3
மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடிபணிந்தான் 3615-4
25. மன்னன் வணங்கிப் போயின பின் மாலும் அயனும் அறியாத 3616-1
பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே 3616-2
உன்னும் மனத்தால் அஞ்சு எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே 3616-3
மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார் 3616-4
26. கண்ணின் மணிகள் அவை இன்றிக் கயிறு தடவி குளம்தொட்ட 3617-1
எணில் பெருமைத் திருத் தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி 3617-2
விண்ணில் வாழ்வார் தாம் வேண்டப் புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர் 3617-3
உள் நிலாவும் புகழ்த் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம் 3617-4
32 மூர்க்க நாயனார் புராணம்
1. மன்னிப் பெருகும் பெரும் தொண்டை வளநாடு அதனில் வயல் பரப்பும் 3618-1
நல் நித்திலம் வெண் திரைப்பாலி நதியின் வடபால் நலம் கொள் பதி 3618-2
அன்னப் பெடைகள் குடை வாவி அலர் புக்காட அரங்கின் இடை 3618-3
மின்னுக் கொடிகள் துகில் கொடிகள் விழவில் காடு வேற்காடு 3618-4
2. செம் பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடைக் கற்றை 3619-1
நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு 3619-2
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் 3619-3
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் 3619-4
3. கோதில் மரபில் பிறந்துவளர்ந்து அறிவு கொண்ட நாள்தொடங்கி 3620-1
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார் 3620-2
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்யக்கண்டு உண்ணும் 3620-3
நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார் 3620-4
4. தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவைஅமைத்து 3621-1
மேய அடியார் தமைப் போற்றி விருப்பால் அமுது செய்வித்தே 3621-2
ஆய பொருளும் அவர் வேண்டும் படியால் உதவி அன்பு மிக 3621-3
ஏயுமாறு நாள் தோறும் இனைய பணி செய்து இன்புற்றார் 3621-4
5. இன்ன செயலின் ஒழுகுநாள் அடியார் மிகவும் எழுந்து அருள 3622-1
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன் 3622-2
மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே 3622-3
அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார் 3622-4
6. அங்கண் அவ்வூர் தமக்கு ஒருபால் அடியார் தங்கட்கு அமுத ஆக்க 3623-1
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்துஅயர்வார் 3623-2
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நற்சூதால் 3623-3
பொங்கும் பொருள் ஆக்கவும் அங்குப் பொருவார் இன்மை இனில் போவார் 3623-4
7. பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள் 3624-1
உற்ற அன்பால் ¦ச்ன்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து 3624-2
கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதாரூர் 3624-3
செற்ற சிலையார் திருக் குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் 3624-4
8. இருளாரும் மணிகண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்கப் 3625-1
பொருளாயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தே 3625-2
உருளாயச் சூது ஆடி உறுபொருள் வென்றன நம்பர் 3625-3
அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார் 3625-4
9. முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ளப் 3626-1
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கிச் 3626-2
சொல் சூதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி 3626-3
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால் நிலத்தில் 3626-4
10. சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில் 3627-1
தீது அகல அமுது ஆக்குவார் கொள்ளத் தாம் தீண்டார் 3627-2
காதல் உடன் அடியார்கள் அமுது செயக் கடைப் பந்தி 3627-3
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் 3627-4
11. நாதன் தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்தோறும் 3628-1
ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே 3628-2
ஏதங்கள் போய் அகல இவ் உலகைவிட்டு அதன்பின் 3628-3
பூதங்கள் இசைபாட ஆடுவார் புரம் புக்கார் 3628-4
12. வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள் 3629-1
அல்லாரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும் 3629-2
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச் 3629-3
சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம் 3629-4
33 சோமாசி மாற நாயனார் புராணம்
1. சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை 3630-1
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர் 3630-2
ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால் 3630-3
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார் 3630-4
2. யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம் 3631-1
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன 3631-2
ஏழும் உவப்பப் புரிந்து இன்புறச் செய்த பேற்றால் 3631-3
வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல் என்பார் 3631-4
3. எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால் 3632-1
அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார் 3632-2
சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை 3632-3
நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார் 3632-4
4. சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி 3633-1
ஆரம் திகழ் மார்பின் அணுக்கவன் தொண்டர்க்கு அன்பால் 3633-2
சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கிப் 3633-3
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார் 3633-4
5. துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் 3634-1
வென்று இங்கு இது நல்நெறி சேரும் விளக்கம் என்றே 3634-2
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப 3634-3
என்றும் நிலவும் சிவலோ கத்தில் இன்பம் உற்றார் 3634-4
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
1. பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்தோர் 3635-1
துணையும் தாமும் பிரியாதார் தோழத்தம் பிரானாரை 3635-2
இணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென்பணை தோள் எய்துவிக்க 3635-3
அணையும் ஒருவர் சரணமே அரணமாக அடைந்தோமே 3635-4
திருச்சிற்றம்பலம்
வம்பறா வரிவண்டு சருக்கம் முற்றிற்று.
This webpage was last updated on 13 July 2004
See Also:
1. Stories of the nAyanmAr in English with Pictures
Back to periya purANam Page
Back to thirumuRai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
|